மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய் சுடுமா
தனிமை நினைவில் அனலாய் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளி சேர்த்தாளே
அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாக சாலையா
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்
பருவம் பருவம்
கடலின் அலைபோல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும்
பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரரிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரரிவார்
முதலாய் முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
லல ல ல லல ல ல ஹா ஹா
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
பனி ரோஜா தோட்டம்தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
என் சேலை சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளிக் குடித்தாயே
முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா
இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா
அட இன்னும் தெரியலையா
நான் உந்தன் துணையில்லையா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
ஒரு சிற்பியில் முத்தைப் போல் என்னை மூடிக் கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா
உன் கனவில் நனைகின்றேன் நீ கொடிகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையனை ஆவாயா
நீ காதல் ஓவியனா
ஒரு கவிதை நாயகனா
நான் தேடும் மன்மதனா
என் அழகின் காவலனா
அட போதும் அம்மம்மா நாம் கைகள் இணைவோமா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
பனி ரோஜா தோட்டம்தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
கண்ணாடி திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்து பாராமல் துயர் கொண்டது
கண்ணாடி திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்து பாராமல் துயர் கொண்டது
பொன் மஞ்சள் பூந்தேகம் பொன் போன்றது
அது பொழிகின்றது உன்னை வலம் வந்தது
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
பனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
பனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
ரோஜா செண்டுகள் ராஜா வண்டுடன் சேர்ந்திடும் நேரம் இது
நாளோர் சிற்றிடை காதல் முத்திரை காண்பது எப்பொழுது
அடடா மெல்ல தொடவா என்னை அழைக்கிறதே உயிரோவியம்
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
நல்ல கவித்துவமான பாடல். மேற்கத்திய இசையை தேவையான இடத்தில் புகுத்தி இனிமையான குரல்களைக் கொண்டு பாடவைத்து இனிமைக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்.
திரைப் படம்: என் கடமை (1964)
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி
இயக்கம்: எம் நடேசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராம மூர்த்தி
பாடல்: இந்த படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசனால் எழுதப் பட்டவை. இதுவும் அவராகத் தான் இருக்கனும். திரு நாகராஜன் தெளிவுபடுத்தவேண்டும்.
அனைத்தாலும் அனையாத தீபம் என்ன
அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன
மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
மழைப்போல பொழிகின்ற இன்பம் என்ன
ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்
அடங்காது அடங்காது காதல் உள்ளம்
10 நாட்கள் திடீர் சென்னை பயணம். கல்யாண வேலைகள், அலைச்சல் காரணமாக இந்த நீண்ட இடைவெளி. அடுத்தவாரம் தொடர்ந்து சந்திப்போம். புதிதாக இணைந்த அன்பர்களுக்கும் தொடர்ந்து பாடல்களை ரசித்து கருத்துகளை வழங்கி வரும் அன்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.
இன்றும் ஒரு இனிமையான பாடல். முழு படமும் இன்று கிடைத்து முழு பாடலையும் இங்கே பதிவேற்றி இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.
திரைப் படம்: புத்திசாலிகள் (1968)
நடிப்பு: ஜெயஷங்கர், M A ராதிகா, மனோரமா
இயக்கம்: அருண்
இசை: V குமார்
பாடியவர்கள்: T M S, Y ஸ்வர்னா
பாடல்: வாலி
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஹே ம் ம் ம்
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
சொந்தமென்று வந்த பின்னே
சொர்கமொன்று கேட்கிறது நெஞ்சம்
அது மஞ்சம்
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஹே ஆஹாஹா
ஆஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா
எங்கோ ஒரு நாதம் அதில் ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது
அது ஆசைகள் தாளாமல் நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது
அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன மானே
சுகம்தானே
இன்று வேண்டுமென்று எண்ணிவிட்டேன்
வெட்கம் கொண்டு மாறியது பெண்மை
அது உண்மை
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வளவு மாற்றங்கள்? அன்றைக்கு என்ன தெளிவான குரல்கள், இசை மற்றும் பாடல் வரிகள்? இரவு நேரம் கேட்டால் என்ன இனிமை. இப்போதைய பாடல்கள்...Nightmare...
திரைப் படம்: போக்கிரி ராஜா (1984)
குரல்கள்: S P B, P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S P முத்துராமன் என நினைக்கிறேன்
நடிப்பு: ரஜினி, ஸ்ரீதேவி
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை
ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கிடக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காத பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
ல ல ல ல ல ல லலலல
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
தூரிகை எரிகின்றபோது - இந்த தாள்களில் ஏதும் எழுதாது தினம்கனவு எனதுணவு நிலம் புதிது விதை பழுது எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும் எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும் அது எதற்கோ ஓ ஓ ஓ மேகமே மேகமே பால்நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே மேகமே மேகமே பால்நிலா தேயுதே
மீண்டும் ஒரு சுற்றில் புரட்சி தலைவரின் பாடலுக்கு வந்திருக்கிறோம். இவரது பாடல்களில் P சுசீலா அம்மா மற்றும் டி எம் ஸ் அவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. இது போன்ற பல, மனதை வருடும் இதமான அழகானப் பாடல்கள் அவரின் திரைப் படங்களை அலங்கரித்தன.
திரைப் படம்: தொழிலாளி (1964)
இயக்கம்: M A திருமுகம்
இசை: K V மகாதேவன்
பாடல்: மாயவ நாதன்
நடிப்பு: எம் ஜி யார், ரத்னா, K R விஜயா
இந்த படத்தின் நாயகி ரத்னா அவர்களின் சமீபத்திய படம். இவர் பழம்பெரும் நடிகை G வரலக்ஷ்மியின் (மயக்கும் மாலை பொழுதே நீ போ போ- குலேபகாவலி நினைவிருக்கிறதா) மகளாவார். நன்றி-சுக்ரவதனீ.
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே
தென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்
தென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்
ஆ ஆ ஆ ஆ ஆ
தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதைய்யா நானம்
தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதைய்யா நானம்
வருக வருக திருமகளின் முதல் மகளே
கையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்
கையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்
ஆ ஆ ஆ ஆ ஆ
செம்பவள இதழ் வெடித்து சிந்துகின்ற மலரெடுத்து
சேர்த்து வைத்து தொடுப்பதுவும் அழகுதான்
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே