பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மழையும் நீயே வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே


ஒரு உரை நடையை இனிய பாடலாக்கி இருக்கிறார் பாடும் நிலா பாலு. M S விஸ்வனாதனின் இசை பாணியை மரகதமணியிடம் கொண்டு வந்திருக்கிறார் பாலசந்தர். அழகுப் பாடல்

திரைப் படம்: அழகன் (1991)
நடிப்பு: மம்முட்டி, பானுப்ரியா
இயக்கம்: K பாலசந்தர்
இசை: மரகதமணி
















மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய் சுடுமா
தனிமை நினைவில் அனலாய் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளி சேர்த்தாளே
அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாக சாலையா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்
பருவம் பருவம்
கடலின் அலைபோல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும்
பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரரிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரரிவார்
முதலாய் முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா


புதன், 29 ஆகஸ்ட், 2012

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா


மனோ பாடல்களில் ஒரு அழகானப் பாடல். சித்ரா பற்றி சொல்லவே வேண்டாம்.
அரபி இசையின் பின்னனி இனிமை.

திரைப் படம்: மேட்டுகுடி (1996)
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, K S சித்ரா
நடிப்பு: கார்த்திக், நக்மா
இயக்கம்: சுந்தர் C
பாடல்: வாலி அல்லது G தூயவன்



http://www.divshare.com/download/19446192-2df



லல ல ல லல ல ல ஹா  ஹா
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

பனி ரோஜா தோட்டம்தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

என் சேலை சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளிக் குடித்தாயே

முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா
இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா

அட இன்னும் தெரியலையா
நான் உந்தன் துணையில்லையா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

ஒரு சிற்பியில் முத்தைப் போல் என்னை மூடிக் கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா

உன் கனவில் நனைகின்றேன் நீ கொடிகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையனை ஆவாயா

நீ காதல் ஓவியனா
ஒரு கவிதை நாயகனா
நான் தேடும் மன்மதனா
என் அழகின் காவலனா

அட போதும் அம்மம்மா நாம் கைகள் இணைவோமா
ஓ ஓ ஓ ஓ

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

பனி ரோஜா தோட்டம்தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

என் உள்ளம் அழகான வெள்ளித் திரை


ஒரு சினிமா பைத்தியம் எப்படி சினிமா, சினிமா என்று அலைந்து கேடு கெட்டு போனாள் என்பது இந்த படம் பார்த்தால் புரியும். அழகானப் பாடல்.

திரைப் படம்: சினிமா பைத்தியம்
இசை: சங்கர் கணேஷ் (விஸ்வனாதன்???)
நடிப்பு: ஜெய்ஷங்கர், கமல், ஜெயசித்ரா
இயக்கம்: முக்தா வீ ஸ்ரீனிவாசன்
குரல்: வாணி ஜெயராம்



http://www.divshare.com/download/19446054-05f




என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை

கண்ணாடி திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்து பாராமல் துயர் கொண்டது
கண்ணாடி திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்து பாராமல் துயர் கொண்டது
பொன் மஞ்சள் பூந்தேகம் பொன் போன்றது
அது பொழிகின்றது உன்னை வலம் வந்தது
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை

இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே

பனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
பனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி

என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை

சனி, 25 ஆகஸ்ட், 2012

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் கலையோ


நல்லதொரு இனிமையான பாடல்.

திரைப் படம்: பன்னீர் நதிகள் (1986)
நடிப்பு: சிவகுமார், அமலா, ஜெயஸ்ரீ
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்:  M பாஸ்கர்
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: K J யேஸுதாஸ்




http://www.divshare.com/download/19433117-5f0


பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ

மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
ரோஜா செண்டுகள் ராஜா வண்டுடன் சேர்ந்திடும் நேரம் இது
நாளோர் சிற்றிடை காதல் முத்திரை காண்பது எப்பொழுது
அடடா மெல்ல தொடவா என்னை அழைக்கிறதே உயிரோவியம்

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ

கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்க கண்டேன் குமரியின் உதட்டிலே
கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்க கண்டேன் குமரியின் உதட்டிலே
பாதம் பட்டதும் பாறைக் கற்களும் பூமழை சிந்துமடி
பார்வை பட்டதும் பாலை மண்ணிலும் தென்றலும் வீசுமடி
மயிலே அந்தி வெயிலே உந்தன் மலர் உடலோ பிருந்தாவனம்

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

யாரது யாரது தங்கமா... பேரெது பேரெது வைரமா


நல்ல கவித்துவமான பாடல். மேற்கத்திய இசையை தேவையான இடத்தில் புகுத்தி இனிமையான குரல்களைக் கொண்டு பாடவைத்து இனிமைக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்.

திரைப் படம்: என் கடமை (1964)
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி
இயக்கம்: எம் நடேசன்
இசை:  M S விஸ்வனாதன், T K ராம மூர்த்தி
பாடல்: இந்த படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசனால் எழுதப் பட்டவை. இதுவும் அவராகத் தான் இருக்கனும். திரு நாகராஜன் தெளிவுபடுத்தவேண்டும்.

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MjI4NV9pc2o0cl81MGMy/yaarathu%20yaarathu.mp3







யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்கமா
ஊறிடும் தேன் அது வெட்கமா

யாரது யாரது சிங்கமா
ம்
பேரெது பேரெது செல்வமா
ஆஹா
ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேன் அதன் சாரமா

யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா

1 2 3 1 2 3
ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்

ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்


கல்லூறும் மலரென்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

கல்லூறும் மலரென்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

தள்ளாடி தள்ளாடி நடை போடுதோ
தனியாத சுகம் என்னும் தடை போடுதோ

ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ


யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது சொர்கமா
ஊறிடும் தேன் அதன் சாரமா
யாரது யாரது தங்கமா
123 123

முதிராத கனியென்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
முதிராத கனியென்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
சிதராத முத்தென்ன நகையானதோ
சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

யாரது யாரது தங்கமா

அனைத்தாலும் அனையாத தீபம் என்ன
அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன
மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
மழைப்போல பொழிகின்ற இன்பம் என்ன
ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்
அடங்காது அடங்காது காதல் உள்ளம்

தீராது தீராது சேரும் இன்பம்

தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
யாரது யாரது தங்கமா

புதன், 22 ஆகஸ்ட், 2012

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

10 நாட்கள் திடீர் சென்னை பயணம். கல்யாண வேலைகள், அலைச்சல் காரணமாக இந்த நீண்ட இடைவெளி. அடுத்தவாரம் தொடர்ந்து சந்திப்போம். புதிதாக இணைந்த அன்பர்களுக்கும் தொடர்ந்து பாடல்களை ரசித்து கருத்துகளை வழங்கி வரும் அன்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

இன்றும் ஒரு இனிமையான பாடல்.  முழு படமும் இன்று கிடைத்து முழு பாடலையும்  இங்கே  பதிவேற்றி இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

திரைப் படம்: புத்திசாலிகள் (1968)
நடிப்பு:  ஜெயஷங்கர், M A ராதிகா, மனோரமா
இயக்கம்: அருண்
இசை: V குமார்
பாடியவர்கள்: T M S, Y ஸ்வர்னா
பாடல்: வாலி


Listen Music Files - Embed Audio Files -








முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகமென்ன

கன்னம் கன்னம் புண்ணானதென்ன

இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

முத்தம் முத்தம்

இதயத்திலே ஒரு கதவிருக்கும்

இரவு பகல் அது திறந்திருக்கும்

விழிகளிலே வரும் வழி இருக்கும்

வாவெனவே மனம் அழைத்திருக்கும்

இதழ்ச் சுவையோ இல்லை மதுச் சுவையோ

ஓ  ஓ  ஓ  ஓ  ஓ  ஓ

இதழ்ச் சுவையோ இல்லை மதுச் சுவையோ

பிடி இடையோ இல்லை மலர் கொடியோ

குறு நகையோ அது சிறு கதையோ

குறு நகையோ அது சிறு கதையோ

காலமெல்லாம் வரும் தொடர் கதையோ

முதன் முதலாய் என்ன அறிமுகமோ

ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ

முதன் முதலாய் என்ன அறிமுகமோ

கலைகளிலே நல்ல அனுபவமோ

ரஸிப்பதிலே இது புது விதமோ

ரகஸியமாய்த் தொட சுகம் வருமோ

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகம் என்ன

கன்னம் கன்னம் புண்ணானதென்ன

இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

லலா லாலா  லாலா








புதன், 15 ஆகஸ்ட், 2012

பொன்னான மனமெங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே


இனிமையான பாடல். வசந்த மாளிகைக்கு பின் இந்த படம் தயாரித்த விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் அதே செட்டிங்க்ஸில் இந்த படத்தை குறைந்த செலவில் எடுத்ததாக நினைவு.

திரைப் படம்: திருமாங்கல்யம் (1974)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதா
குரல்கள்: S P B, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MzU4M19GYzMyQl9hNzFm/Ponnana%20manam%20engu.mp3





பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஹே ம் ம் ம்
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்

சொந்தமென்று வந்த பின்னே
சொர்கமொன்று கேட்கிறது நெஞ்சம்
அது மஞ்சம்

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

ஹே ஹே ஹே ஆஹாஹா
ஆஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா

எங்கோ ஒரு நாதம் அதில் ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது
அது ஆசைகள் தாளாமல் நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது
அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன மானே
சுகம்தானே
இன்று வேண்டுமென்று எண்ணிவிட்டேன்
வெட்கம் கொண்டு மாறியது பெண்மை
அது உண்மை
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள்


அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வளவு மாற்றங்கள்? அன்றைக்கு என்ன தெளிவான குரல்கள், இசை மற்றும் பாடல் வரிகள்? இரவு நேரம் கேட்டால் என்ன இனிமை. இப்போதைய பாடல்கள்...Nightmare...

திரைப் படம்:  போக்கிரி ராஜா (1984)
குரல்கள்: S P B, P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S P முத்துராமன் என நினைக்கிறேன்
நடிப்பு: ரஜினி, ஸ்ரீதேவி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2Mzc3N19maVJkMF9hZTA2/Vidiya%20Vidiya.mp3





விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்

மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை
ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்

வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கிடக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காத பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
ல ல ல ல ல ல லலலல

பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்

சனி, 11 ஆகஸ்ட், 2012

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு, ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு 2 பாடல்கள்

வைதேகி காத்திருந்தாள் படத்திற்காக இளையராஜா இசையில் இரு  ஜாம்பவானின் பாடல்கள் இங்கு தனித் தனியே உள்ளது


திரைப் படம்: வைதேகி காத்திருந்தாள் (1984)
இசை: இளையராஜா
நடிப்பு: விஜயகாந்த், ரேவதி
இயக்கம்: R சுந்தர்ராஜன்
பாடியவர்: பி. ஜெயசந்திரன்

http://youtu.be/SEMdkRsrZ_Y




பாடியவர்: சுசீலா

http://youtu.be/nhpo86rMDlQ





ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வென்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது


*****************************************

ல ல ல ல ல ல
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது


வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மேகமே மேகமே பால்நிலா தேயுதே


இனிமையான ஒரு சோக கீதம். மனதை நெருடும் ஒரு பாடல்.

திரைப் படம்: பாலைவன சோலை (1981)
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல் :வைரமுத்து
நடிப்பு: சந்திரசேகர், சுஹாஸினி
இயக்கம்: ராபர்ட் ராஜசேகரன்


மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
தமரிஸ திம ததரின தமித தமித
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?பாவையின் ராகம் சோகங்களோ

பாவையின் ராகம் சோகங்களோ?நீரலை போடும் கோலங்களோ? மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தூரிகை எரிகின்றபோது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்றபோது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம்கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
அது எதற்கோ ஓ ஓ ஓ 
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

வருக வருக திருமகளின் முதல் மகளே


மீண்டும் ஒரு சுற்றில் புரட்சி தலைவரின் பாடலுக்கு வந்திருக்கிறோம். இவரது பாடல்களில் P சுசீலா அம்மா மற்றும்  டி எம் ஸ் அவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. இது போன்ற பல, மனதை வருடும் இதமான அழகானப் பாடல்கள் அவரின் திரைப் படங்களை அலங்கரித்தன.

திரைப் படம்: தொழிலாளி (1964)
இயக்கம்: M A திருமுகம்
இசை: K V மகாதேவன்
பாடல்: மாயவ நாதன்
நடிப்பு: எம் ஜி யார், ரத்னா, K R விஜயா





http://www.divshare.com/download/15019299-768


இந்த படத்தின் நாயகி ரத்னா அவர்களின் சமீபத்திய படம். இவர்  பழம்பெரும் நடிகை G வரலக்ஷ்மியின்  (மயக்கும் மாலை பொழுதே நீ போ போ- குலேபகாவலி நினைவிருக்கிறதா) மகளாவார். நன்றி-சுக்ரவதனீ.



வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே

நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே

தென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்
தென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்

ஆ ஆ ஆ ஆ ஆ
தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதைய்யா நானம்
தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதைய்யா நானம்

வருக வருக திருமகளின் முதல் மகளே

கையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்
கையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்

ஆ ஆ ஆ ஆ ஆ
செம்பவள இதழ் வெடித்து சிந்துகின்ற மலரெடுத்து
சேர்த்து வைத்து தொடுப்பதுவும் அழகுதான்

வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை


கோவை ரவிஜியின் விருப்பப் பாடல் அருமை.
மேடையில் ஆடிடும் என்ற அழகான பாடலை இந்த தளத்தில் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.
இந்தப் பாடலில் வரிகள், அற்புதமான மெட்டு, SPBன் இனிமையான குரல், பாடிய விதம், அவரின் அசத்தலான கிளாமர் குரல் சிரிப்பு, உண்மையிலேயே பாடல் அசத்துகிறது..

திரைப் படம்வண்டிக் காரன் மகன் (1978)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: அமிர்தம்



கார்த்திகை மாதம் கார்காலம்
கங்குளி எங்கும் பனிமூட்டம்
உடல் வேர்த்திட ஸ் ஸ் நின்றாள்
பருவச்சிலை
அதை வேடிக்கை பார்த்தது
ஹ் ஹ் ஹ ஹா ஹா ஹா ஆ

ஏன் சிரிக்கறே ஏன் சிரிக்கறே
பள்ளியறை  ஹ ஹ ஹா ஆ ஆ
ம் ம்
பள்ளியறை
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை ஸ் ஸ் ஹா
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தனில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தனில்லை

மடல் கொண்ட வாழை
உடல் கொண்ட காவல்
இடை கொள்ளவில்லை
அவள் கொண்ட சேலை

அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை
ஹ அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை
வந்தாள் சென்றேன் தந்தாள் 
செவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினாள்
வண்ணம் கொஞ்சும் அன்னம்
தன் தோளேறி போதைகள் கொண்டாடினால்

படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் நடுக்கமில்லை ஹா
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர
அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற
கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற
முன்னும் பின்னும் மின்னும் 
பொன்மானோடு ஆனந்த நீராடினாள்
மெத்தை கத்தும் தத்தை தன்
தாளங்கள் தாளாமல் போராடினாள்

ஆ ஆ ஆ ஆ ஹோ
குடம் கொண்ட வீணை
ஆ ஆ ஆ ஆ லா லா
அவன் கொண்டு மீட்ட
ஹா ஆ ஆ ஆ ஆ லா லா
குடம் கொண்ட வீணை
அவன் கொண்டு மீட்ட
சுகமிங்கு என்று ஸ்வரஸ்தானம் காட்ட
ம் ம் ம் ம் ம்
உறவென்ற ராகம் அரங்கேற்றமாக
இன்பம் என்னும் சந்தம்
தன் பாட்டாக பூங்கோதை தாலாட்டினாள்
இன்னும் இன்னும் என்று 
தன் காதார தான் கேட்டு பாராட்டினாள்
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் தடுக்கவில்லை
ம் ம் ம் ம் ஹா ஆ ஆ ஆ ம் ம் ம் ம் ஹா ஆ ஆ