பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 ஜூலை, 2012

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

மெல்லிய பூங்காற்றுடன் மெல்லிய இசையும், மென்மை குரல்களும் அலுக்காமல் கேட்கலாம்.

திரைப் படம்: வண்டிக் காரன் மகன் (1978)

பாடல்: வாலி
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: அமிர்தம்



Embed Music Files - Free Audio -







http://youtu.be/FOTZBmDgARo









மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேனகை போலொரு புன்னகை புது பாட்டே

உன் மேனியின் சாயலோ ஆனந்த நீரூற்றே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம்

உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம்

உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க தினம்

வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ

ஓடை மீனாட

ஓடை நீர் வேண்டும்

உறவில் நான் ஆட

ஒருவன் நீ வேண்டும்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



லா லா ல ல ல ஹா ல ல ல ல ல ல் ல் ல ல ல ல
லா லா ல ல ல

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை

உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை

உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ

நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க இன்னும்

ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ

மாலை இடலாமோ

மஞ்சம் வரலாமோ

சேலை தொடலாமோ

கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



நழுவ நழுவ என்னை தழுவ தழுவ வரும்

வித்தைகள் கன்னா உன் வெள்ளோட்டமோ



மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து வைத்தல்

அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ



காதல் விளையாட

காவல் கிடையாதோ

காவல் தடைப்போட்டால்

ஆவல் மீறாதோ



மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

சனி, 28 ஜூலை, 2012

அழகெனும் ஒவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே


இரு குரல்களும் போட்டியில் பாடி இருப்பது போல ஒரு தோற்றம். இந்தப் பாடலைப் பொருத்தவரை சுசீலா அம்மா முந்திக் கொள்கிறார். என்ன குரலினிமை? என்னவொரு நெளிவு சுளிவு பாடலில். இசையும் பாடல் வரிகளும் அற்புதம். புரட்சித் தலைவரின் படங்களில் பாடலுக்கும் இசைக்கும்  முக்கியத்துவம் கொடுப்பார். அதே போல இதிலும் எந்தக் குறையும் இல்லை.

ஹம்ஷகல் என்ற ஹிந்தி படத்தின் தழுவல் இது. அதில் ராஜேஷ் கன்னா நடித்திருப்பார்.

சமீபத்தில் பில்லா 2 பார்க்க நேர்ந்தது. கதையும் இல்லை இசையும் உருப்படி இல்லை. பாடல்களும் எல்லாம் மேல் நாட்டு இசையின் காப்பி. சொந்தமாக எதையும் யோசிக்கும் தன்மையை இழந்து போனான் தமிழன்.

யுவன் ஷங்கர் ராஜா புரட்சி தலைவர் காலத்தில் இருந்திருந்தால் திரைப் படத் துறையை விட்டே ஓடிப் போயிருப்பார்.
தமிழ் பட உலகின் மூத்த நடிகர் என்ற முறையில் அஜித் போன்றவர்கள் இது போன்ற உப்பு சப்பில்லாத படங்களை ஒப்புக் கொள்ளாமல் கதையும் இசையும் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டால் தமிழ் பட உலகம் கொஞ்ச நாள் உயிர் வாழ வாய்ப்புள்ளது.

பில்லா 2 போன்ற படங்களும் கமர்ஷியல் வெற்றி பெறவில்லை. 2/3 நாட்களில் சவப் பெட்டியில் அடக்கமானது. தவறான பல கருத்துக்களை அஜித் என்னும் ஒரு பெரிய நடிகரின் வாயால் (இவர்கள் எல்லோருமே அடிப்படையில் முட்டாள்கள்) சொல்ல வைத்து, இருக்கும் ஒரு சில புத்திசாலி தமிழனையும் முட்டாளாக்கும் முயற்சியில் தோற்று போனார்கள்.
நேற்று நான் கடவுள் தொலைக் காட்சியில் பார்த்தேன். அதுவும் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை எனக் கேள்விபட்டேன். ஒரு நல்ல படம் எடுத்தோம் என்ற நிறைவை இயக்குனருக்கும், ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தியை ரசிகனுக்கும் வழங்கியது.
காப்பி அடிக்க பல ஆங்கிலப் படங்களை பார்த்து சொதப்பும் நமது கமர்ஷியல் பட இயக்குனர்கள், படம் எப்படி எடுப்பது என்பதை தெரிந்துக் கொள்ள இந்த மாதிரி திரைப் படங்களையும் கொஞ்சம் பார்த்தால் அவர்களுக்கும் நன்மை, நமக்கும் கொண்டாட்டம்.

திரைப்படம்: ஊருக்கு உழைப்பவன் (1976)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: புலமைபித்தன் (முத்துலிங்கம் என்பது என் யூகம்.)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், P சுசீலா
நடிப்பு: எம் ஜி யார்,  வாணிஸ்ரீ , வெண்ணிற ஆடை நிர்மலா
இயக்கம்: M.கிருஷ்ணன்

http://youtu.be/aYqD50mDPQQ



அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே

இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே

காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில்
கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிந்தும் குறு நகையில்
நான் மூன்றாம் தமிழை பார்க்கின்றேன் கண்ணே உந்தன் இடையசைவில்

அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே

என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே
நீ எந்தன் தலைவன் என்றென்னும் எண்ணம் இனித்திடுமே
நீ எந்தன் தலைவன் என்றென்னும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை

இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே

ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்

நான் ஆடத் துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்

நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்

நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்

அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே

இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே

வியாழன், 26 ஜூலை, 2012

அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை

திரு கோவை ரவி அவர்களுடன் நாமும் இந்த இனிய பாடலை கேட்டு மகிழ்வோம்.


திரைப் படம்: நட்சத்திரம் (1980)
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: வாலி
இயக்கம்: தாசரி நாராயண ராவ்
நடிப்பு: கமல், ஸ்ரீபிரியா





அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்
ரஞ்சனி சிவரஞ்சனி சிவரஞ்சனி

கரும்புகள் தென்மொழி, அரும்புகள் புன்னகை
கரும்புகள் தென்மொழி, அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ் சங்க கீதம்
ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ் சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள ராகம்
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்
தேனுலாவிடும் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் வேகம்
தாமரை பூவின் சூரிய தாகம்
காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
மொழியோ ஆலய சங்கொலி
இடையோ அசைந்திடும் கிங்கிணி
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
ஆ ஆ ஆ ஆ
அவள் தஞ்சை தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவள் பக்தனன்றோ
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

செவ்வாய், 24 ஜூலை, 2012

இந்த மான் உந்தன் சொந்த மான்


மறக்க முடியாத இளையராஜாவின் பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. அழகான படபிடிப்பு. அருமையான குரலினிமை.

திரைப் படம்: கரகாட்டக்காரன் (1989)
குரல்கள்: இளையராஜா, K S சித்ரா
இயக்கம்: கங்கை அமரன்
பாடல்: கங்கை அமரன் என்று நினைக்கிறேன்
நடிப்பு: ராமராஜன், கனகா

http://youtu.be/GyVWskYKsAg



இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என் உயிரே
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்

வேல் விழி போடும் தூண்டிலிலே
நான் விழலானேன் தோளிலே
நூல் இடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே அ ஆ ஆ ஆ ஆ ஆ
அன்னமே எந்தன் ஸ்வர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கண்ணமே மதுக் கிண்ணமே
அதில் பொன் மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே
என் உயிரே

பொன் மணி மேகலை ஆடுதே
உன் விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நானுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தால் ஆ ஆ ஆ ஆ
எண்ணத்தால் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான்
வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை
கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகம் தான் சிந்தும் வேகம் தான்
தாகத்தில் நான் நிற்க அனந்தம் தான்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என் உயிரே

ஞாயிறு, 22 ஜூலை, 2012

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ

சங்கர் கணேஷ் இசையமைப்பில்  ஒரு சில அருமையானப் பாடல்களில் இதுவும் ஒன்று. பாடியவர்களே இந்தப் பாடலின் வெற்றிக்கு முக்கியமானவர்கள். தங்கள் அனுபவங்களை நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

திரைப் படம்: நட்சத்திரம் (1980)
பாடியவர்கள்: P சுசீலா, S P B
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: கமல் ஹாசன், ஸ்ரீபிரியா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: தசரி நாராயண ராவ்


http://www.mediafire.com/?qh7vd99pp4apsy44tp4pmduppsfs7ml

http://www.mediafire.com/?pxnmd7umypn6ksg


பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது கண்ணா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது கண்ணா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

காதலிக்கு வீடு கட்டி கண்ணாலே மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா

சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா

காதலிக்கு வீடு கட்டி கண்ணாலே மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா

சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா

கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும்
என்னோட நீ வந்தா நல்லாருக்கும்
கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும்
என்னோட நீ வந்தா நல்லாருக்கும்

வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேல நான்
வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேல நான்

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத்த விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்
ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்

எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு
எழுதாமே சேராது தாலிகட்டு
எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு
எழுதாமே சேராது தாலிகட்டு

அட நல்லா சொன்னே சாமி மனச விட்டு
அட நல்லா சொன்னே சாமி மனச விட்டு

அட ட ட
பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
ஹா ஹா ஹா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
லலலல லலலலல லலல லலலல

வெள்ளி, 20 ஜூலை, 2012

கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை


இந்த திரைப் படம் வெளிவரவில்லை என நினைக்கிறேன். இசையமைப்பாளரும் புதுசு. பாடலும் அரிதானது.

திரைப் படம்: பொம்பள மனசு (1980)
இசை: ரத்னா சூரியன்
குரல்: P ஜெயசந்திரன்




Upload Music - Audio Hosting - Kadal Alai kaalgalai



கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

காதலென்னும் ஒரு ஆல விதை
கருகியே போவது நியாயமில்லை
காதலென்னும் ஒரு ஆல விதை
கருகியே போவது நியாயமில்லை
ஏங்கியே கேட்கிறேன் கோடி முறை
ஏங்கியே கேட்கிறேன் கோடி முறை
ஏனடி நமக்குள்ளே வெட்க திரை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

உள்ளத்தில் நினைக்கையில் இனிப்பு தந்து
உதட்டினில் மட்டும் ஏன் உப்பு தந்தாய்
உள்ளத்தில் நினைக்கையில் இனிப்பு தந்து
உதட்டினில் மட்டும் ஏன் உப்பு தந்தாய்
தித்திக்கும் தேன் தமிழ் புதுக் கவிதை
தித்திக்கும் தேன் தமிழ் புதுக் கவிதை
நீயே சொல்லடி ஓர் பதிலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

கன்னத்தில் நான் இட்ட முத்தங்களை
கை கொண்டு நீயோ துடைத்து விட்டாய்
கன்னத்தில் நான் இட்ட முத்தங்களை
கை கொண்டு நீயோ துடைத்து விட்டாய்
உன் எண்ணத்தில் நான் இட்ட முத்தங்களை
உன் எண்ணத்தில் நான் இட்ட முத்தங்களை
எது கொண்டு நீயும் துடைத்திடுவாய்

கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

புதன், 18 ஜூலை, 2012

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்


76களில் இளையராஜாவின் வரவு M S விஸ்வனாதனின் இசையமைப்பில் பல மாற்றங்களை கண்டது. அதில் இந்தப் பாடல் போல வசன நடையில் பல பாடல்கள் உருவாகின. சில நன்றாகவே இருந்தன. அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று.

திரைப் படம்: நூல் வேலி (1979)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: S P பாலசுப்ரமணியம்
நடிப்பு: சரத் பாபு, சுஜாதா, சரிதா, கமல் ஹாசன்
இயக்கம்: K பாலசந்தர்



Music File Hosting - Audio Hosting -








ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்  போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹ
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
ஹா ஹா ஹா ஹா ஹா
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்

திங்கள், 16 ஜூலை, 2012

ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு


திரைப் படம்: நங்கூரம் (1979)
பாடியவர்கள்: S P B, ஸ்வர்னா
பாடல்: கண்ணதாசன்
இசை : V குமார் & காமதாசா
இயக்கம்: திமோதி வீரரத்னே
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி


Embed Music Files - Play Audio -











ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆ ஆஹா
ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு
ஆஹா ஆஹஹ .ஹா ஆ ஆ.ஹா
ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

கோடி வார்த்தைகளை சேர்த்து
வைத்துக் கொண்ட உள்ளம்
ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நினைக்கிறேன் சொல்ல மொழி இல்லை
எனக்குத்தான் என்ன நாணமோ
நீயும் மௌனராகம்
நானும் மௌனகீதம்
நீயும் மௌனராகம்
நானும் மௌனகீதம்
சொன்னால் ஏற்றுக்கொள்வாய்
என்னால் முடியவில்லை

 ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

அந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனிதனைக்
கண்டு இந்த நெஞ்சில் அணை போல வந்த சுகம் உண்டு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மழையிலே கொஞ்சம் நனைகிறேன்
வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன்
பனியே அதிகமானால் அதுவே அனலுமாகும்
பனியே அதிகமானால் அதுவே அனலுமாகும்
இல்லை என்று சொல்ல நீயும் வேறு அல்ல

 ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது மனம்
ஓடும் கேள்வி கேட்டு
 மனம் ஓடும் கேள்வி கேட்டு

சனி, 14 ஜூலை, 2012

பொங்கியதே காதல் வெள்ளம்


இனிமை. இசை, பாடல் வரிகள், குரல்கள் எல்லாமே. இசையமைப்பாளருக்கு இது முதல் திரைப் பாடல்

திரைப் படம்: மண்ணுக்குள் வைரம் (1986)
இசை: தேவேந்திரன்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: ரஞ்சனி, முரளி
இயக்கம்: மனோஜ் குமார்




http://www.divshare.com/download/18815499-891



ஆ ஆ ஆ ஆ
ஆ அ ஆ ஆ
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பள்ளிப்பாடம் வாசித்தால் பள்ளிப்பாடம் வாசித்தால்
நீதானே கண்ணில் வந்தாய்
பொன்மேகம் விண்ணோடு
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு
உன்னோடு உன்னோடு உன்னோடு
எந்த சொந்தம் யாரோடு
யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும்
கன்னிப்பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும்
பண்பாடு என்னோடு என்னோடு என்னோடு என்னோடு
கடல் கூட குளமாகும் என் காதல் மாறாது
பொங்கியதே காதல் வெள்ளம்
..ஹா..துள்ளியதே ஆசை உள்ளம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஏழை முல்லை பெண் பிள்ளை ஏழை முல்லை பெண் பிள்ளை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது
என்றாலும் இப்போது சொல்லாது
சொல்லாது சொல்லாது சொல்லாது
கண்ணால் பாரு பெண் பூவே
வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப்பற்றி கவி பாட
ஊமைக்கு ஞானம் இல்லை
நீரின்றி மீனில்லை அம்மாடி
நீயின்றி நானில்லை நானில்லை நானில்லை நானில்லை
உனக்காக என் பெண்மை தவம் செய்தால் தப்பில்லை
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பொங்கியதே காதல் வெள்ளம்
ம்
துள்ளியதே ஆசை உள்ளம்

வெள்ளி, 13 ஜூலை, 2012

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி


ஏதோ  ஒரு இசையில் ஏதோ ஒரு பாட்டு ஆனால் பாடியவர்கள் மிகப் பொறுப்பாக பாடி இருக்கிறார்கள். கங்கை அமரன் இசையில் அவர் எழுதிய பாடல். அது ஒரு காலம்.

திரைப்படம்: இளங்கன்று
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா







பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

மானே நாலாம் மாசம் கேட்டேன் உன் சேதி
தேனே கேட்டா பேசி தீரேன் என் வியாதி
காதோரம் ரோசாப்பூவை நீ மோதி நாளாச்சு
பூவாசம் வீசும் காத்து அடடா உன் பெருமூச்சு
பத்து விரலும் உன்னைக் கொத்த வருமே
நெஞ்சுக்குள்ள அந்தப்புரம் வஞ்சிக்கொடி தந்த வரம்

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

ஏதோ ஏதோ சேதி நானோ பெண் ஜாதி
தானே நூலாய் மாறும் ஆஹா என் மேனி
மேலோடு பார்த்தால் போதும் திகட்டாத அனுபந்தம்
நீ தீண்டும் நேரம்தானே பொருள் மாறும் தலையங்கம்
சின்ன வயசு கொஞ்சம் மெல்லப் பழகு
தன்னனானா என்று வரும் பெண்ணுக்குள்ளே இன்பஸ்வரம்

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

ஞாயிறு, 8 ஜூலை, 2012

தென்றல் தாலாட்டும் நேரம் காற்றில் தேனூற்றும் ராகம்



இது வெளிவராத ஒரு திரைப் படப் பாடல். நல்ல சில பாடல்கள் இது போல மறைந்து போயின. திரைப் படத்தின் பெயர் என்னவோ வசந்தம் வரும் ஆனால் திரைப் படம்தான் வரவில்லை.

திரைப் படம்: வசந்தம் வரும் (1981)
குரல்கள்: கே. ஜே யேஸுதாஸ், பி. சுசீலா.
பாடல்: மு. பவணன்.
இசை: வி.குமார்.
இயக்கம்: கே. சோமசுந்தரேஸ்வர்
நடிப்பு: சரத்பாபு, விஜயன்




http://www.divshare.com/download/18591840-d33

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்
எங்கே உன் எண்ணம் ஓடும்
பட்டும் படாத தூரம்
தொட்டும் தொடாத மாயம்
பொன் மேகம்

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்
எங்கே உன் எண்ணம் ஓடும்
பட்டும் படாத தூரம்
தொட்டும் தொடாத மாயம்
பொன் மேகம்

கார் மேகக் கூந்தல் வீணை
மீட்டும் சங்கீதம் தேவை
கார் மேகக் கூந்தல் வீணை
மீட்டும் சங்கீதம் தேவை

வழியோடு சென்ற மானை
தடுக்கின்றதே உன் பார்வை

பொன் வண்ணக் கண்ணில்
உன் சொல்லில்
என் நெஞ்சை இணைப்பேன்

தோட்டத்துப் பூவை
உன் வானில் நீ அள்ளி பதித்தாய்

தேடும் என் ஆசை செல்வம்
பாயும் சங்கீத வெள்ளம்

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்

ஓடைத் தண்ணீரின் மேலே
ஆடும் பூந்தென்றல் போலே
ஓடைத் தண்ணீரின் மேலே
ஆடும் பூந்தென்றல் போலே

நின்றேன் எண்ணங்கள் கோடி
ஒன்றும் சொல்லாமல் வாடி

ஆசைகள் கொண்டு வந்தாலும் தள்ளாடுவதோ
அன்புக்கு வாடும் உன் வாசல் நான் தேடுவதோ

தேடும் என் ஆசை செல்வம்
பாயும் சங்கீத  வெள்ளம்

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்
எங்கே உன் எண்ணம் ஓடும்
பட்டும் படாத தூரம்
தொட்டும் தொடாத மாயம்
பொன் மேகம்

வெள்ளி, 6 ஜூலை, 2012

தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது...

பாடல் தரம் சற்று குறைவுதான். L R ஈஸ்வரி அவர்களின் குரல் சில பாடல்களில் மட்டும் மென்மையை பூசிகொண்டு  கேட்க அருமையாக இருக்கும் அந்த வகையில் இந்த பாடலும் ஒன்று.


திரைப்படம்: ரத்தத் திலகம் (1963)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
இயக்கம்: தாதா மிராஸி
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி


Embed Music Files - Free Audio -







தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது
ம் ம் ம்
தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது

அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய் கனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய் கனிகிறது

பாடல் சுவையே பனி வாய் மலரே
பயம் ஏன் வருகிறது
பாடல் சுவையே பனி வாய் மலரே
பயம் ஏன் வருகிறது

இளம் பருவத்தின் ஆசை உருவத்தில்
ஏறி பயம் போல் தெரிகிறது
இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி பயம் போல் தெரிகிறது

ஏலங்குழலால் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது
ஏலங்குழலால் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது

அது நாளும் பழகும் நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது
அது நாளும் பழகும் நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது

பூரண நிலவின் தோரணம்
ஏனொ புன்னகை புரிகிறது

அதில் காரணம் பாதி காரியம் பாதி
பதிலாய் வருகிறது

அதில் காரணம் பாதி காரியம் பாதி
பதிலாய் வருகிறது

இளமை திரண்டு தனிமை நிறைந்து
இதயம் மலர்கிறது

அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே உறவும் புரிகிறது

தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது

அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய் கனிகிறது

புதன், 4 ஜூலை, 2012

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்


மீண்டும் வருகிறார் நமது T ராஜேந்தர். இப்போதும் ஒரு இனிய தமிழிலில் மனதை மயக்கும் இசையில் வளமையான குரல் கொண்ட ஒரு பாடலுடன்.

திரைப் படம்: ரயில் பயணங்களில் (1981)
இயக்கம், பாடல், இசை: T ராஜேந்தர்
பாடியவர்: P ஜெயசந்திரன்
நடிப்பு: ஸ்ரீ நாத்,  ஜோதி




http://www.divshare.com/download/18549245-52f





ல ல ல ல ல ல ல
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ல ல ல ல ல ல ல ல லலா

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழினமோ
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழினமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேககுழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ல ல ல ல ல ல ல ல லலா

மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா
மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா அம்மம்மா
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை இடைவரை கண்டவளே
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தை போலே தேகத்தை ஆக்கி குழல்கட்டே  ஜாலம்
பாவை சூடும் ஆடை கூட பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி இதழ்கள் ஊறுமடி
இதழ் கள் ஊறுமடி

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்

திங்கள், 2 ஜூலை, 2012

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்


வெங்கலக் குரல் என ஒலிக்கும் இந்த இரண்டு பேருமே பாடலின் சிறப்புக்கு கவிஞருடனும் இசையமைப்பாளருடனும் இணைந்து வெற்றிக்கண்டுள்ளார்கள். அழகான பேச்சுத் தமிழிலில் ஆசை மனதை தாய் தந்தையர் பாடுவதாக அமைந்த மிக அருமையான பாடல்.

திரைப்படம்: பிள்ளைக்கனியமுது (1958)
பாடியவர்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
இசை: கே.வி. மஹாதேவன்
நடிப்பு: S S ராஜேந்திரன், E V சரோஜா
இயக்கம்: M A திருமுகம்






பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒன்று பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்
நாம் செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்
நாம் செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை

கலந்துணவாய் நாம் அதற்கு ஊட்டிட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்

உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்

நம் கனவும் நினைவாகி நலம் தர வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்