பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 ஜனவரி, 2013

அம்மா என்பது தமிழ் வார்த்தை


இந்தப் பாடல் எனது இளம் வயது நினைவுகளை கொண்டு வருகிறது. அப்போது 1969/70 இருக்கும். நான் 4 வது வகுப்பில் இருந்தேன். அப்போது என்னுடன் படித்த ஒருவர் பெயர் கனிமொழி. நல்ல நண்பராக (நண்பி?) இருந்தார். வேறு நண்பர்கள் யாரும் நினைவில் இல்லை இவர் மட்டும் நினைவில் இருக்கிறார் என்றால் காரணம் எங்கள் குடும்பம் அப்போதுதான் மலேயாவிலிருந்து எங்கள் சொந்த ஊரான இப்போதைய திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் மன்னார்குடிக்கு குடி வந்தோம். எனக்கு தமிழ் பேசத்தான் தெரியும் எழுதப் படிக்கத் தெரியாது. அந்த வருடம் முழுவதும் எனக்கு வகுப்பில்  உதவியவர் அவர்தான் என்பதால் எனக்கு அவரை நல்ல ஞாபகம் இருக்கிறது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவரை பாடச் சொன்ன போது இந்தப் பாடலை அந்த வயதிலேயே மிக அருமையாகப் பாடினார். அவருக்கே இது ஞாபகம் இருக்குமா என்பது தெரியவில்லை.
அதன் பிறகு எங்களுக்கு சந்திக்க வாய்பில்லாமல் போனது. இப்போழுதும் இதை பார்க்க வாய்ப்பிருந்தால் அவர் என்னை தொடர்பு கொள்ளலாம். இந்தியா வரும் பொழுது சந்திக்க முடிந்தால் சந்திக்கலாம். அவரும் இன்னேரம் பேரன் பேத்தி எல்லாம் எடுத்திருக்கலாம். வாழ்க வளமுடன்.
சரி பாடலுக்கு வருவோம். சொல்ல வேண்டியதில்லை.T R பாப்பாவும், P சுசீலாவும் இணைந்தால் இனிமைக்கு பஞ்சம் ஏது? அதுவும் ஆழமான கருத்து கொண்ட பாடல்.


திரைப் படம்: டீச்சரம்மா (1968)
இயக்கம்: S R புட்டனா கனகல்
நடிப்பு: ஜெயஷங்கர், வாணிஸ்ரீ, விஜயகுமாரி
இசை: T R பாப்பா
குரல்: P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl81ODc2MzczX1AybVU3XzFjNzk/Amma%20Enbathu-Teacheramma.mp3






அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை



அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை



அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை



அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை



கவலையில் வருவதும் அம்மா அம்மா

கருணையில் வருவதும் அம்மா அம்மா



கவலையில் வருவதும் அம்மா அம்மா

கருணையில் வருவதும் அம்மா அம்மா



தவறு செய்தாலும் மன்னிப்புக்காக

தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா



அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை



பூமியின் பெயரும் அம்மா அம்மா

புண்ணிய நதியும் அம்மா அம்மா

தாய் மொழி என்றும் தாயகம் என்றும்

தாரணி அழைப்பதும் அம்மா அம்மா



அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை



அம்மா இருந்தால் பால் தருவாள்

அவளது அன்பை யார் தருவார்

அனாதை என்னும் கொடுமையை தீர்க்க

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்



அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

நமது தலை சிறந்த பாடகர்கள் இளமையில் அல்லது ஆரம்பத்தில் பாடிய பாடல்களும் இனிக்கும் இளமை வகையை சார்ந்தது. இங்கே K J யேஸுதாஸ்.


திரைப் படம்: நம்ம வீட்டு லக்ஷ்மி (1966)
பாடியவர்கள்: K J யேஸுதாஸ், L R ஈஸ்வரி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு : முத்துராமன், பாரதி, A V M ராஜன், வாணிஸ்ரீ

http://asoktamil.opendrive.com/files/Nl81NzA4OTYwX05seTNEX2QyYzY/Alangaram%20kalayamal.mp3



அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ



அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ

அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ



அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ



பதமாகக் கொஞ்சம் மெதுவாக

இதமாகக் காதல் மிதமாக

பதமாகக் கொஞ்சம் மெதுவாக

இதமாகக் காதல் மிதமாக



பல விதமாக உள்ளம் வசமாக

பழகுவதென்ன சுகமாக



நடமாடும் தங்க குடமாக

நதியோடும் செல்லும் படகாக

நடமாடும் தங்க குடமாக

நதியோடும் செல்லும் படகாக

தொட்டு வரும் காற்றில் கட்டி ரதமாக

தொடருவதென்ன துணையாக

தொடருவதென்ன துணையாக



அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ



மனம் வேண்டும் ஆசை குணம் வேண்டும்

மலராடும் வண்ணக் குழல் வேண்டும்

பட்டு முகம் வேண்டும் சிட்டு விழி வேண்டும்

பழ ரசம் ஊறும் இதழ் வேண்டும்



மண மாலை ஒன்று தர வேண்டும்

மலர் தூவும் பெண்கள் வர வேண்டும்

சிந்து நடைப் பாட்டும் பள்ளி விளையாட்டும்

திருமணம் கண்டே பெற வேண்டும்

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க

வழக்கமான இனிய குரலில் பாடலில் கலக்கி இருக்கிறார்கள் S P Bயும் ஜானகி அம்மாவும். நாங்கள் என்றோ வழங்கிவிட்டோம் அம்மாவுக்கு பத்ம பூஷன்.

படம்: சாவி
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்
இயக்கம்: கார்த்திக் ரகுநாத்
நடிப்பு: சத்யராஜ், சரிதா

http://asoktamil.opendrive.com/files/Nl81NzEwNjMyX0Y4ZEZNXzNkOTI/NeengathaGnanyabagam-Saavi.mp3






ம் ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆஹா ல ல ல

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

மாலை சுமந்தது மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே
பாதச்சுவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே
நான் உன்னை
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ


 நீ என்னை வாழ்த்திட
வாழ்க்கையும் பூத்திட
நன்றி கூறும் நேரந்தான்
விழியோரம் ஈரம் தான்

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும்
காதல் தலைவனும் உன் பக்கம் இருக்கட்டும்
நான் உன்னை
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

நீ என்னை தேற்றினாய்
பாதையை மாற்றினாய்
மாலை மஞ்சள் குங்குமம்
மனைவி காணும் மங்களம்

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

மாலை சுமந்தது மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

வெள்ளி, 25 ஜனவரி, 2013

தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத் துயர்

சில பாடல்கள் என்னை ஸ்தம்பிக்க வைக்கும். அதுவும் இது போன்ற பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்களை ஆண் கவிஞர்கள் எப்படி அப்படியே பெண்களின் உள்ளத்தை பிரதிபலிக்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் ஒரு ஆச்சர்யம். இந்த மாதிரி பாடல்களுக்கு கண்ணதாசனும், வாலியும் திறமைசாலிகள்.

திரைப் படம்: பச்சை விளக்கு (1964)
குரல்கள்: P சுசீலா, L R ஈஸ்வரி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, S S ராஜேந்திரன், விஜயகுமாரி, புஷ்பலதா,
இயக்கம்:A  பீம்சிங்க்


http://asoktamil.opendrive.com/files/Nl81NjY4NjI3X2QydEc3X2ZiZTY/Thoodhusella.mp3






தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடி
திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
ஆஹா
தென்றல் தொட்டதடி
திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி

ஆஹா
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி

வெண்ணீர் நதியைப் பன்னீர் எனவே
பேசலாகுமோ தோழி

இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி

கடையிருந்தும் பொருள் கொள்வாரில்லையே
கலக்கம் வராதோ தோழி

ஆஹா
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி

முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி

காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி

காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி

ஆஹா
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

ஆஹா ஆஹா ஆஹா

தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

ஆஹா ஆஹா ஆஹா 

திங்கள், 21 ஜனவரி, 2013

பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம்

இனிமையான குரல் மற்றும் இசையில் புரட்சி தலைவரின் ஒரு நல்ல பாடல்.

திரைப் படம்: பாசம் (1962)
பாடியவர்கள்: P சுசீலா, P B S
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: T R ராமண்ணா
நடிப்பு:  எம் ஜி யார், சரோஜா தேவி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி 



Upload Music - Upload Audio Files -








பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


கண்ணம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா..

கண்ணம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா..

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ வண்ண பாடம் சொல்ல எண்ணமில்லையா..


பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..


மஞ்சள் வண்ண வெயில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்போது ஆசையில்லையா..

மஞ்சள் வண்ண வெயில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்போது ஆசையில்லையா..

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா என்று அள்ளி கொண்ட மங்கையில்லையா..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை பட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா..


நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசையில்லையா..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..

வெள்ளி, 18 ஜனவரி, 2013

முத்து முத்து தேரோட்டம்

நல்ல இனிமையான பாடல்களில் ஒன்று.


திரை படம்: ஆணி வேர் (1981)
நடிப்பு: சிவகுமார், சரிதா 
இயக்கம்: கே விஜையன் 
இசைசங்கர் கணேஷ் 
பாடல்: வாலி அல்லது புலவர் புலமைபித்தன் 
பாடியவர்வாணி ஜெயராம் 

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

நெஞ்ச வானத்தில் நினைவு மேகங்கள்
நாளும் ஊர்கோலம் போகும்
இன்ப ராகத்தில் இரவு நேரத்தில்
பாடும் பாட்டொன்று தேடும்
அதன் பெயர்தான் விரகம்
எந்த தினம்தான் விலகும்
பதில் நீதான் கேளாயோ
பதில் நீதான் கேளாயோ

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

கடலில் சேராத கங்கை எங்குண்டு
இன்னும் ஏனிந்த மௌனம்
உறவு தேடாத உள்ளம் எங்குண்டு
என்னதான் உந்தன் எண்ணம்
என்றும் இளமை இனிமை
இந்த தனிமை கொடுமை
எந்தன் ஏக்கம் தீராயோ
எந்தன் ஏக்கம் தீராயோ

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
இதை நீ கேட்டு வா தென்றலே
இதை நீ கேட்டு வா தென்றலே

புதன், 16 ஜனவரி, 2013

தூவானம் இது...தூவானம் இது தூவானம் thoovanam ithu thoovanam

இனிமை, மென்மை, கவிதை, காதல் ரசம் ததும்பும் பாடல்.

திரைப் படம்: தாழம்பூ(1965)
நடிப்பு: எம் ஜி யார், K R விஜயா
இயக்கம்: S ராம்தாஸ்
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
பாடிய குரல்கள்: T M சௌந்தர்ராஜன், P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl81MjI0Njg5X0JXSnQ2Xzc2ODY/thoovanam-thazampoo.mp3






தூவானம் இது தூவானம் இது தூவானம்
தூவானம் இது தூவானம் இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது

தூவானம் இது தூவானம் இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது  

தூவானம் இது தூவானம் இது தூவானம்

பூவாடும் இளம் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது

மேலாடை தனில் மழை விழுந்து
நனைந்து நனைந்து மூடுது

பூவாடும் இளம் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது

மேலாடை தனில் மழை விழுந்து
நனைந்து நனைந்து மூடுது

மானோடும் சிறு விழியில் இட்ட மையும்
கரைந்து ஓடுது

தேனூறும் இதழ் மீது வந்து
பனிதுளிப் போல் தேங்குது

தூவானம் இது தூவானம் இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது

தூவானம் இது தூவானம் இது தூவானம்

உக்காரச் சொல்லி நான் அழைக்கும் போது
ஓட்டம் என்ன முன்னாலே

என் பக்கா மனசே இந்த வெட்கம் வந்து
பாய்ந்திழுக்குது பின்னாலே

உக்காரச் சொல்லி நான் அழைக்கும் போது
ஓட்டம் என்ன முன்னாலே

என் பக்கா மனசே இந்த வெட்கம் வந்து
பாய்ந்திழுக்குது பின்னாலே

தக்க நேரம் வந்துவிட்டது
தையல் போடு கண்ணாலே

இந்த சரசம் ஆடக் கூடாது
ஒரு தாலி கட்டும் முன்னாலே

தூவானம் இது தூவானம் இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது

தூவானம் இது தூவானம் இது தூவானம்

திங்கள், 14 ஜனவரி, 2013

சங்கீதம் ராகங்கள் இல்லாமலா

நல்லதொரு இளமையான பாடல். பாடிய குரல்களிலும், இசையிலும் இளமைத் துள்ளுகிறது.
இந்தப் படத்தின் கதை ஆனந்த விகடனில் தொடர்க்கதையாக வந்து சக்கை போடு போட்டது. திரு மணியன் அவர்கள் எழுதியது.

திரைப் படம்: மோகம் 30 வருஷம் (1976)
இசை: விஜயபாஸ்கர்
பாடிய குரல்கள்:  , வாணி ஜெயராம்
இயக்கம்: மகேந்திரன்
நடிப்பு: கமல், ஸ்ரீபிரியா, சுமித்திரா


http://asoktamil.opendrive.com/files/Nl81MDYwODMxX3RjVmFDX2RkMzQ/sangeetham%20%20raagangal.mp3





சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

காதல்
மோகம்
இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

சீதையிடம் ராமன் காணாததா
தேவியரின் வாழ்வில் இல்லாததா
ராதையிடம் கண்ணன் நாடாததா
ராசலீலை என்ன கூடாததா

உலகில் ஒரு பாகம்
உறவு கொள்ளும் தாகம்
புண்ணியமா புருஷார்த்தமா

சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

என்னழகை நானே தான் சொல்வதா
ஏக்கம் என்னவென்று நான் சொல்வதா
ஓவியத்து பெண்மை உயிர் கொள்ளுமா
உறவு இல்லா பெண்மை துயில் கொள்ளுமா
கூட்டுறவு இன்பம்
கேட்டுப் பெறும் துண்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
ஹு ஹு ம்
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

காதல்
ம் ம்

மோகம்
நோ நோ

இன்பம்
அடடா

புண்ணியமா புருஷார்த்தமா

ஆண் மனது இங்கே அனல் கொண்டது
அந்தரங்கம் எல்லாம் யார் சொல்வது

பெண் மனது இங்கே தனல் கொண்டது
தேன் சிரித்த நானம் தடைக் கொண்டது

நீந்தி வரும் வெள்ளம்
சாந்தி பெறும் உள்ளம்

புண்ணியமா புருஷார்த்தமா
ம் ம்

சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

காதல்
மோகம்
இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
ம் ம்
ஹா 

பொங்கல் திருநாள்



எமது பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
- அசோகராஜ் குடும்பத்தினர், தோகா 

சனி, 12 ஜனவரி, 2013

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

பாடலின் ஆரம்ப இசையில் ஆரம்பித்து பாடல் இறுதி வரை இசை இன்பம்தான். கவிஞரும், பாடும் குரல்களும்  தன் பங்கிற்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்.

திரைப் படம்: பார் மகளே பார் (1963)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா
இயக்கம்: A பீம்சிங்க்
நடிப்பு: சிவாஜி,  சௌகார் ஜானகி,  விஜயகுமாரி, முத்துராமன்












என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

முள்ளில் நிறுத்தி போனது வெட்கம்

முத்து சரமே வா இந்த பக்கம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஹா ஹா தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன்

ஹோ ஹோ தள்ளாடி உள்ளத்தை தழுவக் கண்டேன்

எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன்

வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஹா ஹா வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன்

ஹோ ஹோ வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன்

ஹா ஹா பிஞ்சுக் கொடியிடை கெஞ்சக் கண்டேன்

பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஹா ஹா ஹா ஹா ஹா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஹா ஹா மாலைக்கு மாலை மாயம் கண்டோம்

ஹோ ஹோ வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம்

ஹோ ஹோ சோலைக் கிளி என்று மாறுகின்றோம்

சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

வியாழன், 10 ஜனவரி, 2013

ஆசைக்கு பிள்ளையென்று ஆண்டவனைக் கேட்டதுண்டு


P சுசீலா அம்மாவின் குரலில் ஒரு குழந்தையை தாலாட்டி, நடக்க வைத்து, பின்னர் அந்தக் குழந்தையும் பட்டம் விட்டு விளையாடும் வரை ஒரே பாடலில் கதையை வடித்துவிட்டார்கள். கொஞ்சம் இந்த பாடலின் சாயல் சிவகாமியின் செல்வன் படப் பாடலான என் ராஜாவின் ரோஜா முகம் என்ற பாடலில் தெரியும். இரண்டுமே அழகானப் பாடல்கள்தான். இந்தப் பாடலின் இறுதியில் குழந்தைக்காகப் பாடும் குரல் யார் என்பது தெரியவில்லை.
பாடலின் கவிதை வரிகள் கண்ணதாசனை பிரதிபலிக்கின்றது. எழுதியது யாரென்று தெரியவில்லை.
இது ஒரு அபூர்வமான பாடல். பாடலின் இறுதி வரிகள் கிடைக்கவில்லை

திரைப் படம்: விளையாட்டு பிள்ளை (1970)
பாடல்: கண்ணதாசன் ???
இசை: கே வி மகாதேவன்
இயக்கம்:A P நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி, காஞ்சனா

http://asoktamil.opendrive.com/files/Nl81MDYwODYxXzJiMWl4X2QxNDc/aasaikku%20pillai-vilaiyaattu%20pillai.mp3




ஆசைக்கு பிள்ளையென்று
ஆண்டவனைக் கேட்டதுண்டு
பிள்ளை வந்த நேரத்திலே
தாலேலோ
உன்னை பெற்ற மனம் வாடுதடா
தாலேலோ

ஆசைக்கு பிள்ளையென்று
ஆண்டவனைக் கேட்டதுண்டு
பிள்ளை வந்த நேரத்திலே
தாலேலோ
உன்னை பெற்ற மனம் வாடுதடா
தாலேலோ

நீ பிறந்த நேரமென்பார்
இந்த நிலை வந்ததென்பார்
நான் பிறந்த நேரமடா
தாலேலோ
அதில் வீண் பழியை நீ சுமந்தாய்
தாலேலோ

நாளை பொழுது வரும்
நல்லவர்க்கு வாழ்வு வரும்
ஏழை அழுதக் கண்ணீர்
தாலேலோ
அந்த ஈசனுக்கு புரியுமடா
தாலேலோ

முத்துத் தமிழ் பாடு
சிட்டு நடைப் போடு
தத்தி தத்தி விளையாடு
நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு

தந்தையிடம் நேசமா
அன்னையிடம் ஆசையா
எவரிடம் பாசமென்றால்
கைகள் இருபக்கம் காட்டுமடா

முத்துத் தமிழ் பாடு
சிட்டு நடைப் போடு
தத்தி தத்தி விளையாடு
நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு

பட்டம் மேலே போகுது பாரு
பறவைப் போலே பறக்குது பாரு
வட்டமிட்டு ஆடுது பாரு
ஆடுது பாரு
மேலே வாலை நீட்டி பறக்குது பாரு
பறக்குது பாரு

பட்டம் மேலே போகுது பாரு
பறவைப் போலே பறக்குது பாரு
வட்டமிட்டு ஆடுது பாரு
ஆடுது பாரு
மேலே வாலை நீட்டி பறக்குது பாரு
பறக்குது பாரு

நூலை இழுத்தால் மேலே போகும்
வாலை அறுத்தால் கரணம் போடும்
காற்று அடித்தால் நிமிர்ந்து நிற்கும்
கயிறு அறுந்தால் குனிஞ்சி போகும்



செவ்வாய், 8 ஜனவரி, 2013

தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன்

சுசீலா அம்மாவின் இனிமை குரலில், நல்லதொரு இன்னிசையில் அழகான பாடல் மீண்டும் மலர்கிறது.

திரைப் படம்: கலைகோவில் (1964)
குரல்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: C V ஸ்ரீதர்

http://asoktamil.opendrive.com/files/Nl80OTUyODEyX0d5SHZhX2E4ZjM/deviyar%20iruvar%20muruganukku.mp3





தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்

தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஒரு முகம் அவனை உணர்ந்ததடி
இரு முகம் ஒன்றாய் கலந்ததடி
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அன்னேரம் தன்னை மனம் மறந்ததடி

தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்


இனிமையானப் பாடல்கள் நிறைந்த இந்தப் படத்தில் அனைத்து பாடல்களுக்கான காட்சிகளும் ஒரு காவியமான படப்பிடிப்பு. அப்போதைய வண்ணப் படமாக வெளிவந்து சக்கை போடு போட்டது. உண்மையான இன்னிசை மழை என்று இந்தப் படப் பாடல்களைச் சொல்லலாம்.

திரைப் படம்: வெண்ணிற ஆடை (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
பாடல்: இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசன் எழுதியது என நினைவு.
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: ஸ்ரீகாந்த், ஜெயலலிதா


http://asoktamil.opendrive.com/files/Nl80OTgwODg4X2N3NG5sX2VhZGQ/Ammamma%20kaatru.mp3







அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி
கன்னம் கொஞ்சம் வாடும்

அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்

யாரோ வந்து நேரே என்னை
மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ
நீரில் நின்று தேனும் தந்து
அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ
தள்ளாடி தள்ளாடி
செல்லும் பெண்ணை தேடி
சொல்லாமல் கொள்ளாமல்
துள்ளும் இன்பம் கோடி

அம்மம்மா ஆ ஆ ஆ
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டு பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி
கன்னம் கொஞ்சம் வாடும்

ஏதோ இன்பம் ஏதோ தந்து
என்னை தொட்டு செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளி தள்ளி செல்லும் உள்ளமே
அந்நாளில் என்னாலும்
இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே
அங்கம் மின்னும் வண்ணம்

அம்மம்மா ஆ ஆ ஆ
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டு பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
ஆசை வெள்ளம் ஓடும்



வியாழன், 3 ஜனவரி, 2013

புது முகமே சிறு மது குடமே


இசையமைப்பாளர் G தேவராஜனின் அபூர்வ பாடல். கமல் இந்தப் படத்தில்தான் முதன் முதலாக சொந்தக் குரலில் ஞாயிறு ஒளி மழையில் என்ற பாடலைப் பாடினார் என நினைக்கிறேன்.

திரைப் படம்: அந்தரங்கம் (1975)
இசை: G தேவராஜன்
பாடியவர்கள்:  K J யேஸுதாஸ், P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: கமல், தீபா என நினைக்கிறேன்
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl80OTM2NDc3X2lpeGVCX2NiMDM/puthu%20mugame%20siru.mp3







புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என் முகமே
என் முகமே

புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

கால்களின் அழகினை கவிஞர் கண்டால்
ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே
தீபா தீபா

காவியம் பிறந்து லாபமில்லை
உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை
காந்தா காந்தா

சங்கு முழங்கிடும் கோவிலிலே
அது வந்தது எப்படி மேனியிலே

கண்டதில்லை இது மழலையிலே
இது கனியாய் கனிந்தது பருவத்திலே

ஒருவரும் இதுவரை தொட்டதில்லை
அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை

காயம் படாதது உன் இதழே
அதை கண்டதும் புரிந்தது என் மனமே
தீபா தீபா

காயம் படா இதழ் காய்கின்றது
உனை கண்டதும்தான் இன்று கனிகின்றது

கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன்
அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

சித்திரப் பூ சேலை சிவந்த முகம்

தெளிவான பாடல் வரிகள், அழகான S P Bயின் குரல், மென்மையான இசை, இலக்கியவாதி ஜெயகாந்தனின் சில சிறந்த பாடல்களில் ஒன்று. பாடல் வரிகளை சிறப்பித்துக் காட்டும் பின்னனி இசை. மனம் லயித்து போகிறது. ரசிக்க தெரிந்தவர்களுக்கு இது அருமையான பாடல். இந்த திரைப் படம் வெளிவரவில்லை.

திரைப் படம்: புது செருப்பு கடிக்கும் (1978)
இசை:  M B ஸ்ரீனிவாசன்
இயக்கமும் பாடலும்: ஜெயகாந்தன்





Podcast Hosting - Listen Audio -






சித்திரப் பூ சேலை
சிவந்த முகம்
சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும்
முழு நிலவோ
மூடிவரும்
முழு நிலவோ
சித்திரப் பூ சேலை
மீன் கடிக்கும் மெல்லிதழை
நான் கடித்தால் ஆகாதோ
தேனின் ருசி
தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனா
சித்திரப் பூ சேலை
மஞ்சள் பூசும்
இடமெல்லாம்
என் மனம் பூசல்
ஆகாதா
கொஞ்சம் என்னை
குங்குமமாய்
குழைத்தெடுத்தால் வாரேனா
சித்திரப் பூ சேலை
படிக் கட்டில் ஏறி வரும்
பாதத்தெழில் பார்ப்பதற்கு
படிக் கட்டின்
இடையிலே ஓர்
பலகையாய் மாறேனா
சித்திரப் பூ சேலை
முக்காலும் துணி மறைத்து
நீ மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில் நான்
சொக்காகி மூலைச் சுவராகி
முன்னின்று பாரேனா
சித்திரப் பூ சேலை
சிவந்த முகம்
சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும்
முழு நிலவோ
மூடிவரும்
முழு நிலவோ
சித்திரப் பூ சேலை

கிணற்றுத் தவளை அன்பர்கள் அனைவருக்கும் எங்களது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.