பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2013

வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்


கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன் அவர்கள் மிகக் குறைந்த பாடல்களே தமிழ் திரைப் படங்களுக்கு எழுதியிருக்கிறார். கந்தன் கருணையில் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், அகத்தியரில் தாயிற் சிறந்த கோவிலுமில்லை, ராஜ ராஜ சோழனில் ஏடு தந்தானடி தில்லையிலே போன்ற பல அற்புதமான பாடல்களை எழுதியவர். 'தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாக புகழ் பெற்றவர்களுக்காக பல பாடல்களை இயற்றியவர்
தனிப் பாடல்கள் பலவற்றை அவர்களுக்காக எழுதியவர். அவைகளுள் இந்தப் பாடலும் ஒரு தலை சிறந்த பாடல். 
திரைப் படம்: கற்பூரம் 1967



பாடல்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: D B ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
இயக்கம்: சி. என். சண்முகம்
நடிப்பு: . வி. எம். ராஜன், புஷ்பலதா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjI5NTgxMl9iMUNzR18wY2Fk/vanangidumkaigilil.mp3






வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் 
வேல் போல் இருக்குதடி

வேல் போல் இருக்குதடி
வேல் கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால்
பால் போல் தெரியுதடி

பால் போல் தெரியுதடி
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடி
வேல் போல் இருக்குதடி

கூவிடும் சேவல் கொடிமேலிருந்து
விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்று  அவன் 
சொல்வது தெரியுதடி
சொல்வது தெரியுதடி

கந்தனின் கருணை மழைவரும் என்றே
மாமயில் ஆடுதடி
கந்தனின் கருணை மழைவரும் என்றே
மாமயில் ஆடுதடி
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
வேலனைத் தேடுதடி
வேலனைத் தேடுதடி

முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
முத்தமிழ் பிறந்ததடி
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
முத்தமிழ் பிறந்ததடி
அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
திருமுகம் தோன்றுதடி
திருமுகம் தோன்றுதடி

எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும்
அது ஆறு முகங்களடி
எப்போது பார்த்தாலும்சிரித்திருக்கும்
அது ஆறு முகங்களடிஎப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
அது பன்னிரு கைகளடி
அது பன்னிரு கைகளடி

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

வேகமான இசையில் வரும் பாடல். மிக கச்சிதமாக பாடியிருக்கிறார்கள். வாணி அம்மாவின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் சற்றும் தொய்வில்லாமல் அதே சுருதியுடன் அவரது குரலிலேயே முடிகிறது. இது போன்று ஒரு பாடல் இன்று வருமா என மனம் எதிர்பார்க்கிறது.

திரைப் படம்: சாவித்திரி (1980)
இயக்கம்: பரதன்
இசை: M S விஸ்வநாதன்
குரல்கள்: வாணி ஜெயராம், P ஜெயச்சந்திரன்
நடிப்பு: மேனகா, மனோரமா
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjE4MzI2NF9kSWpBS19mMWMy/Mazaikalamum%20Panikalamum.mp3







ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்

காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்

பரவசம் அடைகின்ற இதயங்களே

மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்

காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்

பரவசம் அடைகின்ற இதயங்களே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மேகம் செல்லும் பாதை தினம் மாறும் என்ற போதும்

மேகம் செல்லும் பாதை தினம் மாறும் என்ற போதும்

தாகம் எங்கு போகும் கடல் நீரை தேடி ஓடும்

தாகம் எங்கு போகும் கடல் நீரை தேடி ஓடும்

தினம் மயங்கி மயங்கி நெருங்கி நெருங்கி

வளர்ந்திடும் புதிய உறவும் புதிய இரவும் சுகமல்லவா

சுகமல்லவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூந்தோட்ட மேடை அழகான இளமை சுதி பேதம் என்ன பேதம்

பூவோடு தேனும் தேனோடும் வண்டும் ஐந்தாவதான வேதம்

பூந்தோட்ட மேடை அழகான இளமை சுதி பேதம் என்ன பேதம்

பூவோடு தேனும் தேனோடும் வண்டும் ஐந்தாவதான வேதம்

ஒரு வீணை தன்னில் எவர் மீட்டினானும் புதிதாக தோன்றும் ராகம்...

ஊர்க்கோலத் தென்றல் யார் மேனி மீதும் இதமாக வந்து மோதும்...

இதமாக வந்து மோதும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை...

சா நித நீ சனி சா நித நீ நீ சா நீ சா சா ப பா

சா நித நீ சம பா மக மா கா மா பா நீ சா ரி கா

கார் காலம் பார்த்து கனி மாமரத்தில்

கல்யாணம் செய்த கிளிகள்

பூர்வீகச் சொந்தம் பூர்வீக பந்தம்

புரியாத காதல் மொழிகள்

இது வேறு கோவில் இது வேறு பூசை

இதற்கான தீபம் விழிகள்

இளங்காலை இன்பம் இதமாக வேண்டும்

இவையன்றி ஏது வழிகள்

இவையன்றி ஏது வழிகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்

காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்

பரவசம் அடைகின்ற இதயங்களே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி, 26 ஜூலை, 2013

ஞாயிறு ஒளி மழையில்

கமல் தனது சொந்தக் குரலில் திரைக்காக பாடிய முதல் தமிழ்ப் பாடல். நன்றாகவே இருக்கின்றது.

திரைப் படம்: அந்தரங்கம்
இசை: P தேவராஜன்
நடிப்பு: கமல், தீபா
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
குரல்: கமல்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjQ3NjM5Ml8waDN5RV8xZjhk/gnAyiruoli-andharangam.mp3





ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு ஒளி மழையில்

உலகெங்கும் பொங்கித் ததும்பும்
அழகெந்தன் ஆணைக்கடங்கும்
அங்கங்கு மெருகு படியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்

மன்மதனும் ரதியும் உன்னால்
பொன் வதனம் பெற்றதென்னாள்
ஊர்வசியும் இங்கு வந்தாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்

தங்கங்கள் இங்கு வருக
தரம் இன்னும் அதிகம் பெறுக
வைரங்கள் நம்பி வருக
புது வடிவம் தாங்கிப் பொலிக
புது வடிவம் தாங்கிப் பொலிக

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு ஒளி மழையில்

பட்டத்து யாணை

பட்டத்து யாணை

சந்தானம் கதாநாயகனாகவும் வில்லன்கள் காமெடி நடிகர்களாகவும் வரும் பட்டத்து யாணை கலகலப்புக்கு பஞ்சமில்லாத படம். இன்றைய தமிழ் பட இலக்கணப் படி இண்ட்ரோடெக்ஷன் பாடலோடு விஷால் வருவதால் அவரையும் ஹீரோவாகவே பார்க்க வேண்டியுள்ளது. வழக்கம் போல அவர் மட்டுமே வில்லன்களை துவம்சம் செய்கிறார். பாய்ந்து பாய்ந்து பிதுக்குகிறார் வில்லன்களை. (என்றைக்கு ஒழியுமோ இந்த வதை நமக்கு?) இது காமெடி படமா சீரியஸ் என்பது கடைசி வரை புரியவில்லை. காமெடி படம் என்றால் பல இடங்களில் லாஜிக் பார்க்கவேண்டாம். கதாநாயகி என்று சொல்லப் படும் நடிகர் அர்ஜுன் மகள் ஐஷ்வரியா வராத காட்சிகள் மட்டுமே நன்றாக உள்ளது. ஒரு காட்சியில் அவர் விஷால் கையை பிடித்துக் கொண்டு திருச்சி நகரத் தெருக்களில் அழைத்து போகும் போது ஆயாவும் அவரது பேரன் விஷாலும் போவது போல தெரிவது தவிர்க்க முடியவில்லை. அவரை விட அந்தப் படத்தில் சந்தானத்தின் பாட்டியாக வருபவர் கொஞ்சம் இளமையாக இருப்பது போலத் தெரிகிறது. இடைவெளி விடாத அரபு நாட்டு திரையரங்கங்களில் அவ்வப்போது பாத்ரூம் போய்வர வசதியாக இடையிடையே பாடல் காட்சிகள் நம் டென்சனை குறைக்கின்றன. இசையமைப்பாளர்கள் தமன் மற்றும் சபேஸன் முரளிக்கு நன்றி. (பட்டத்து யாணை என்ற படத்தின் டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் அவர்களை (இவர் சமீபத்தில்தான் தே மு தி க விலிருந்து அ தி மு க வந்தார்) கேட்ட போது அப்படியா சம்பந்தமே தெரியவில்லையா. பட்டத்து யாணை 2 என்று படம் எடுத்து அதில் சம்பத்தப் படுத்திவிட்டால் போகிறது. என்னை வாழவைக்கும் தமிழ் நெஞ்சங்கள் என்ன அதை பார்க்கமாட்டேன் என்றா சொல்லிவிடப் போகிறார்கள் என்று கூலாக சொன்னார்) ஆக சந்தானம் இல்லையென்றால் இனி தமிழ் படங்கள் விளங்காது என்பது இந்த படத்திலும் நம் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் மீண்டும் ஒரு முறை விளக்கிவிட்டார்கள். நாம்தான் புரிந்துக் கொள்ளவில்லை. சந்தானம் இல்லாத மற்ற பகுதிகளை நீக்கிவிட்டு படம் பார்த்தால் படம் பிரமாதம்.

https://www.facebook.com/asoktamil


புதன், 24 ஜூலை, 2013

கடலோரம் வாங்கிய காத்து


நடிகை மஞ்சுளா அவர்களுக்கு நமது அஞ்சலி.
ரொம்பவும் பெரிதாக பேசப் படவேண்டியவர் இல்லை என்றாலும், தமிழ் திரையுலகில் ஒரு சிறு துறும்பை கிள்ளி போட்டவர். இளம் வயதில் அழகான நடிகை. பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக சொற்ப காலம் வலம் வந்தவர். (நான் கூட இதில் அடக்கம்)

டி எம் எஸ் தனித்துப் பாடிய இனிமை நிறைந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
மெரினா கடற்காற்றுப் போல பாடலும் மென்மையாக வீசுகிறது. அழகான படப்பிடிப்பு.

திரைப்படம்: ரிக்க்ஷாகாரன் (1970)
பாடல்: வாலி
இசை: M S விஸ்வனாதன்
குரல்: T M S
இயக்கம்: M கிருஷ்ணன் நாயர்
நடிப்பு: எம் ஜி யார், மஞ்சுளா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjQ4MzIzOF85WERQal81OTEy/kadaloram%20vaangiya.mp3





கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

சிறு மணல் வீட்டில் குடி ஏறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
பொங்கும் நுரையோடு கரை ஏறும் அலையானது
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போட்டதோ
இரு விழி கொண்டு எனை பார்த்து எடை போட்டதோ
ஒரு துணை வந்து விலை கொள்ளத் தடை போட்டதோ
அதை நான் வாங்க அவள் நானம் தடை போட்டதோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து 

திங்கள், 22 ஜூலை, 2013

நல்ல இடம் நீ வந்த இடம்

ஒரு காதலைச் சொல்ல  இவ்வளவு இலக்கணத் தமிழ் தேவையா எனதான் தோன்றுகிறது. ஆனால் தமிழ் தேவை இங்கு இனிமையான இசையோடு கூடி வருவதால் மேலும் இனிமை சேர்க்கிறது. அனுபவிப்போம்.
பாடலை எழுதியவர் கண்ணதாசன் என நினைத்திருந்தேன். வாலியும் அவருக்கு இளைத்தவரில்லைதான்.
பாடிய குரல்களும் அருமை.

திரைப்படம்: கலாட்டா கல்யாணம் (1968)
நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெயலலிதா
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
இயக்குநர்: சி.வி.ராஜேந்திரன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NjI0MF8yZmczVF9mNGZh/Nalla%20idam%20nee%20vantha%20idam.MP3






நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி

நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி

எங்கே உன் ஜாடை விழும்
அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும்
கண் பார்வை நாள் முழுதும்

நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா


நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட
பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட
பொங்கிடும் வெள்ளம் எங்கும்

மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய
செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக
ஒத்திகை பார்ப்பதென்ன

தழுவாதோ கைகள் தானாக

உன்னால் கனிந்தேன் கனியாக

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

லலல லலலா... லா... லலல லலலலா... லா...

ஆஹஹாஹ ஹாஹஹஹா...
ஆஹஹாஹ ஹாஹஹஹா...

கட்டழகானது ஒட்டுறவாடிட
எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட
எத்தனைக் காலம் ஆகும்

முத்து மொழிக் கிளி கொத்து மலர்க் கொடி
தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில்
சந்திக்க வேண்டும் என்பாள்

இதமான இன்பம் சேராதோ

இன்றே இதயம் குளிராதோ

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

ஞாயிறு, 21 ஜூலை, 2013

யாரிது தேவதை ஓராயிரம் பூ மழை

இந்தப் பாடலின் மெட்டு "வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே"
http://asokarajanandaraj.blogspot.com/2012/04/blog-post.html
என்ற பாடலை ஞாபகப்படுத்துகிறது.
என் ப்ரியமே என்னும் இந்தப் படத்தினைப் பற்றிய எந்த விபரங்களும் எனக்கு கிடைக்கவில்லை. பாடல் மட்டுமே வெளியானப் பின் படம் எடுக்கப் படவில்லையா அல்லது எடுத்த படம் பெட்டியில் தூங்கிவிட்டதா? விபரம் தெரிந்தவர்கள் இங்கே கூறலாம்.

S P B குரலில் பாடல் நிமிர்ந்து நிற்கிறது.

திரைப் படம்: என் ப்ரியமே  (2010)
பாடல்: ந.காமராசன்
இயக்கம்: சிவகுமார்



யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 
யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 

சுகம் தரும் நிலா 
வரும் திரு விழா 
இதோ என் காதல் தேசம் இங்கே 
யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 

நி ச நி ச நி ச நி ச நி ச நி ச க ரி ச 
நி ச நி ச நி ச நி ச நி ச நி ச ப ம க 
க ம க த த த ம த ம த த த 
நி நி நி ச நி நி நி ச சரி ரி ரி ரி ரி 

காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ 
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ 
ஹோய்

ஆ ஆ

காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ 
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ 
பொன் வீணையே
புது பாடகன் தொடும் நேரமோ? 
கண்மணியே என் உயிரே 
பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட 
யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 

மேகங்கள் பூ தூவும் செவ்வானம் நீ 
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ 
ஆ ஆ ஆ
மேகங்கள் பூ தூவும் செவ்வானம் நீ 
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ 

இதழ் ஒசைகள் 
புது ஆசைகள் 
பரிபாஷைகள்

ஆ ஆ ஆ ஆ

பூ முகமோ 
பால் நிலவோ 
பார்த்ததும் பூத்திடும் 
யாத்திரை இரவினில் 
யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 

சுகம் தரும் நிலா 
வரும் திரு விழா 
இதோ என் காதல் தேசம் இங்கே 

யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 






வெள்ளி, 19 ஜூலை, 2013

தொடங்கும் தொடரும் புது உறவு


நேற்று மறைந்த திரு வாலி அவர்கள் நினைவாகவும்  இனிமையாய் பாடலை அனுபவித்து பாடி வழங்கி இருக்கும் பாடகர்களுக்காகவும் இந்தப் பாடல்.
உண்மையில் இந்தப் பாடல் M S விஸ்வனாதன் இசையில் வந்ததாக நான் நினைத்திருந்தேன். ஆனால் தெலுங்கு பட உலக இசையமைப்பாளர் சத்யம் என்று தெரிந்த போது நம்பமுடியவில்லை. அருமையான படைப்பு.


திரைப் படம்: முடிசூடா மன்னன் (1978)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
இசை: சத்யம்  (நான் நினைத்தது போல் M S விஸ்வனாதன் இல்லை)
இயக்கம்: R விட்டல்
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீதேவி, தீபா
பாடலாசிரியர்: மறைந்த திரு வாலி அவர்கள்
கதை: தூயவன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTkzMDA5Nl9PMEo3Yl81YjZh/ThodangumThodarum.mp3






தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு
தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

மாளிகை மாடம் மணிமுடி க்ரீடம்
என்னிடம் கிடையாது கண்ணே
மன்னவன் மகளே மல்லிகை மலரே
உன்னிடம் உறவாட வந்தேன்

ஆ ஆ ஆ ஆ
ஆயினும் என்ன அழகிய மேனி
உன் வசம் வரும் அல்லவா

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு
தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

அரண்மனை தோட்டம் காவியர் கூட்டம்
ஆயிரம் அலங்காரம் இருக்க
அதை விட இன்பம் அணைத்திடும் நீதான்
அங்கங்கள் எங்கெங்கும் இனிக்க

மாதுளங்கனியே மரகத சிலையே
மந்திரம் நான் சொல்லவா

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

பொன் எழில் கொஞ்சும் புன்னகை ராணி
என்னுடன் வர வேண்டும் பவனி
பூந்தளிர் மாது புரவியின் மீது
வருகையில் மயங்காதோ அவனி

ஒஹ் ஒஹ்
ஓவியம் இரண்டு ஊர்வலம் செல்லும்
காவியம் இது அல்லவோ

தொடங்கும்
ஆஹ்

தொடரும்
ஆஹ்

புது
உறவு
ஆஹ்

மயங்கும்
ஆஹ்

மலரும்
ஆஹ்

பல
இரவு
ஆஹ்

மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

புதன், 17 ஜூலை, 2013

அன்ன நடை சின்ன இடை எப்படி

பெண்ணின் பெருமையும், புதுமை பெண்ணியமும் கலந்து வரும் பாடல் வரிகள்.
இந்தப் பாடலில் நான் கவனித்த ஒரு வித்தியாசம் என்னவெனில் சாதாரணமாக ஆணும் பெண்ணும் பாடும் பொழுது ஒருவர் மாற்றி ஒருவர் ஒரு வரியை பாடுவார்கள். அதே போல ஜமுனா ராணி அவர்களும் குழுவினரும் எதிரெதிர் குழுவினராக மாற்றி மாற்றி அடுத்தடுத்த வரிகளை டூயட் போல பாடியிருக்கிறார்கள்.
திருமதி ஜமுனா ராணி அவர்களின் கம்பீரமான குரல் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது

திரைப்படம்: சித்ராங்கி (1964)
பாடியவர்கள்: ஜமுனா ராணி குழுவினருடன்
நடிப்பு: A V M ராஜன், புஷ்பலதா, ஷீலா
பாடல்: கு மா பாலசுப்ரமணியம் என நினைக்கிறேன்
இசை: வேத்பால் வர்மா (நம்ம வேதா தான்)
இயக்கம்: R S மணி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTgxMzY2N19iNTFlaV8xNzgy/anna%20nadai%20chinna%20idai%20eppadi.mp3






ஹ ஹ ஹ ஹ ஹ ஹா    
லா ல ல லா லா
ஹ ஹ ஹ ஹா  
ஹ ஹ ஹா
அன்ன நடை சின்ன இடை எப்படி
அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
காதலுக்கு தூது செல்லடி

அன்ன நடை சின்ன இடை எப்படி
 ஹ ஹ ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
ஹோ ஓஹோ  ஹோ
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
ஹ ஹா
காதலுக்கு தூது செல்லடி
அன்ன நடை சின்ன இடை எப்படி

ஆசைகளை
ஹ ஹா
அள்ளி வரும்
ஹ ஹா
அல்லி விழி
ஹ ஹா
துள்ளி விழும்


கன்னமொரு
 ஹ ஹா
கிண்ணமடி
ஹோ ஹோ
துன்பம் மட்டும்  வண்ணமடி

கொஞ்சி கொஞ்சி வரும்
பெண்ணழகை பார்

அன்ன நடை சின்ன இடை எப்படி
 ஹ ஹ ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
ஹோ ஓஹோ  ஹோ
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
ஹ ஹா
காதலுக்கு தூது செல்லடி
அன்ன நடை சின்ன இடை எப்படி

பருவம் வரும்
ஹஹா
உருவம் வரும்
ஹாஹா
பக்கம் வந்தால்
ஹாஹா
வெட்கம் வரும்
ஹோ ஹோ

தென்றல் வந்து
ஹாஹா
தொட்டு விடும்
ஹோ ஹோ
வட்ட நிலா
சுட்டு விடும்

கொஞ்சி கொஞ்சி வரும்
பெண்ணழகை பார்

அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
காதலுக்கு தூது செல்லடி

அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
காதலுக்கு தூது செல்லடி
அன்ன நடை சின்ன இடை எப்படி.



திங்கள், 15 ஜூலை, 2013

புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு தனது அண்ணன் அறிவுரை கூறுமாறு அமைந்துள்ள அருமையான பாடல்.

அந்த காலத்தில், ஒரு குடும்பத்திற்கு புதியதாக திருமணமாகிச் செல்லும் பெண்கள் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பது  பற்றி விளக்கிக் கூறும் அருமையானப் பாடல் இது.

உண்மையில் இது தான் ஒரு தமிழ்நாட்டு பெண்ணின் வாழ்வு முறை. ஆனால்  இதை பெண்ணடிமைப் பாடல் என்று சிலர் சொல்வர். 

ஆனாலும் மனிதன் இப்படித்தான் வாழனும், மிருகங்கள் எப்படியும் வாழலாம் என்கின்ற விதி முறைகளை நாம் மீறினால், நாம் சமீபத்தில் பார்த்த டில்லி வன்முறைதான் நடக்கும்.

திரைப் படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)
நடிப்பு: நாகேஸ்வரராவ், பாலாஜி, T S துரைராஜ், சாவித்திரி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயக்கம்: T S துரைராஜ்

 



புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே 
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

மாமனாரை மாமியாரை மதிக்கனும்
உன்னை மாலையிட்ட கணவரையே துதிக்கனும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கனும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு சமையல் வேலை துவக்கனும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே 
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வாக்கைத் தள்ளாதே
நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே 
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

புருசன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவுக ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒன்னுதான்
ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒன்னுதான்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே 
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

தாலிக் கட்ட போகையிலே தாய் தகப்பன் இல்லையினு
சன்ஜலப்படாதே அம்மா தங்கச்சி
தாலிக் கட்ட போகையிலே தாய் தகப்பன் இல்லையினு
சன்ஜலப்படாதே அம்மா தங்கச்சி
தார வார்க்க நானிருக்கேன்
சீர் கொடுக்க நான் இருக்கேன்
தாயைப் போல நானிருக்கேன் தங்கச்சி
தாயைப் போல நானிருக்கேன் தங்கச்சி

புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நிறைஞ்சிக்கிட்டு
மக்களைப் பெத்து மனையை பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல பிள்ளையை பெத்து
நோய் இல்லாம நொடி இல்லாம நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு
சாமி துணையிருக்கு தங்கச்சி


சனி, 13 ஜூலை, 2013

அலையே கடல் அலையே

அபூர்வமான பாடல். அற்புதமான, கவித்துவமான பாடல்வரிகள். பாடல்வரிகளை நசுக்காத மென்மையான இனிய இசை, மனதைக் கொள்ளையிடும் பாடல்.

திரைப் படம்: திருக் கல்யாணம் (1978)
இசை: இளையராஜா
குரல்கள்: S ஜானகி, P ஜெயச்சந்திரன்
பாடல்: கங்கை அமரன்
நடிப்பு: விஜய குமார், ஸ்ரீவித்யா

  http://asoktamil.opendrive.com/files/Nl8xNTY3ODEyOF9wdnY0N18wYzRl/alaye%20kadal%20alaye%20ennanvo.mp3












அலையே கடல் அலையே
ஏன் ஆடுகிறாய்

என்ன தேடுகிறாய்
இன்ப நினைவினில் பாடுகிறாய்
என்னென்னவோ 

உன் ஆசைகள்

பொன்மணல் மேடை மீதினிலே
வெண்பனி வாடை காற்றினிலே
மயக்கும் மாலை பொழுதினிலே
காதலி இந்த நாயகி
பல நாள் வரை காத்திருக்க
என்னென்னவோ உன் ஆசைகள்

அலையே கடல் அலையே
நீ உருகாதே 

மனம் கலங்காதே
உன் அருகினில் நான் இருப்பேன்
என்னென்னவோ உன் ஆசைகள்

வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே
வாடையில் வாடும் பனி மலரே
நெஞ்சினில் என்றும் உன் நினைவே
கண்மணி உயிர் காதலி
என் கைகளில் தவழ்ந்திருக்க
என்னென்னவோ 

என் ஆசைகள்

கோவிலைத் தேடி தவமிருக்க
தேவியின் நாயகன் துணையிருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
தெய்வமே இளம் தென்றலே
எங்கள் காதலை வாழ வைப்பாய்
என்னென்னவோ 

நம் ஆசைகள்

அலையே கடல் அலையே
நீ உருகாதே மனம் கலங்காதே
உன் அருகினில் நான் இருப்பேன்
என்னென்னவோ நம் ஆசைகள்
என்னென்னவோ நம் ஆசைகள்

வியாழன், 11 ஜூலை, 2013

கலை வந்த விதம் கேளு கண்ணே

இந்தப் பாடலை எழுதியவர் P K சுந்தரம் என்றால் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமா?
ஏன் இந்தப் பாடலுக்கு மட்டும் அவரது முழுப் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது? அவரும் மிகச் சில திரைப் பட பாடல்களையே இயற்றி இருப்பதால் பாடல் நடையைக் கொண்டும் தீர்மானிக்க முடியவில்லை.
விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அழகான தமிழ் பாடல். குழந்தைகள் இந்தப் பாடலை பாடி பழக்கப் பட்டால் தமிழ் அச்சர சுத்தமாக பேசலாம். நல்ல நாவன்மை தரும் பாடல் வரிகள்.

திரைப் படம்: தொழிலாளி
நடிப்பு: எம் ஜி யார், K R விஜயா, ரத்னா
இசை: K V மகாதேவன்
இயக்கம்: M A திருமுகம்
குரல்: P. சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTQ3NDQ3M18wcEVTSl85NjMz/Kalai%20vantha.mp3






கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே

காற்றினிலே பிறந்து ஒலியானது
அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது
காற்றினிலே பிறந்து ஒலியானது
அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது

மாட்டிடையன் கையில் குழலானது
குழந்தை வாயினிலே நுழைந்து மொழியானது
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே

உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது
உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது
உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது
உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது

தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது
தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது
அதன் தித்தித்தை தித்தித்தை
தித்தித்தை என்ற நடை சதிரானது
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே



செவ்வாய், 9 ஜூலை, 2013

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி

திருமணம் நிச்சயமான காதலர்களின் இறை நன்றி. சுகமான பாடல். இனிமை குரல்களில். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பாடல். ஷ்யாமின் இசையில் மற்றுமொரு அழகானப் பாடல்.

திரைப் படம்: குழந்தை யேஸு (1984)
இசை: ஷ்யாம்
குரல்கள்: , வாணி ஜெயராம்
பாடல்: வைரமுத்து
இயக்கம்: ராஜன்
நடிப்பு:, சரிதா, ராஜேஷ், விஜயகாந்த்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTQ0NjM4OF92eFg2dF84NjM1/devan%20koil%20mani[128].mp3





தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
குழந்தை யேஸூவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்.
ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
இதழிலிருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ
இளமை தாங்குமோ
ல ல ல ல லலலலலா
இதழிலிருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ
இளமை தாங்குமோ

இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது
இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது

இவள் கண்ணில் இன்று இரு சந்த்ரோதயம்
இந்த தேவன் மகள் ஒரு தேவாலயம்

அரும்புகள் விரிகின்ற ஆசை நேரம்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
லலலா லாலாலலலல
லலலலலலாலலா

திரிகள் இருந்தும் இருளில் அணைந்து தனிமையில் கிடந்தேனே
குழந்தை யேஸுவே
ல ல ல ல ல ல

திரிகள் இருந்தும் இருளில் அணைந்து தனிமையில் கிடந்தேனே
குழந்தை யேஸுவே

அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற
அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற

எந்தன் மார்பில் விழும் ஒரு ரோஜா மலை
இது கண்ணீர் இல்லை ஒரு காதல் மழை
இரு நதி ஒரு நதி ஆகும் வேளை

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
குழந்தை யேஸூவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்.
ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி

ஞாயிறு, 7 ஜூலை, 2013

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

அழகான கவிதையில் அருமையானப் பாடல்.

திரைப் படம்: பனித்திரை (1961)
இயக்கம்: முக்தா V ஸ்ரீநிவாசன்
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTM5NTg4M18zbDY1Yl8xNWEx/ore%20kelvi.mp3






ஒரே கேள்வி

ம் ம் ம்

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில்

ஹா ஹா

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே

நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே

மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே

நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே

சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா

கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா

சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா

கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா

கண்ணைப் பறித்துக் கொள்ளவா

ஏன் எடுத்துச் செல்லவா

கண்ணைப் பறித்துக் கொள்ளவா

ஏன் எடுத்துச் செல்லவா

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

குழி விழுந்த கண்ணத்தை என் இதழில் மூடவா

உன்னைக் குழந்தையாக்கி மடியில் வைத்துப் பாட்டு பாடவா

குழி விழுந்த கண்ணத்தை என் இதழில் மூடவா

உன்னைக் குழந்தையாக்கி மடியில் வைத்துப் பாட்டு பாடவா

மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா

அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா

மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா

அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா

கையில் அள்ளி அணைக்கவா

கதை சொல்லி முடிக்கவா

நான் சேர்த்து அணைக்கவா

முகம் பார்த்து சிரிக்கவா

கையில் அள்ளி அணைக்கவா

கதை சொல்லி முடிக்கவா

நான் சேர்த்து அணைக்கவா

முகம் பார்த்து சிரிக்கவா

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதி எந்தன் நெஞ்சிலே

வெள்ளி, 5 ஜூலை, 2013

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல நானும் வருவேன் மீதியைச் சொல்ல

தமிழ் திரைப் பட வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. ஹாலிவூட் காமேடி படங்களுக்கு  இணையானது என சொல்லலாம். இன்றைய  இளைஞர்கள் பார்த்தால் நிச்சயம் ரசிப்பார்கள்.

இந்தப் பாடல் வழக்கம் போல சுசீலா அம்மாவுக்கு மிக ஈஸியானப் பாடல். ஆனால் நமக்கு தேனாக இனிக்கும்.

அவர் நெஞ்சே.... என ஆரம்பிக்கும் போதே நம்மை எங்கோ  கொண்டு போய்விடுகிறார்.

திரைப் படம்: தேன் மழை (1966)
இயக்கம்: முக்தா ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி,  K R விஜயா
இசை: T K ராமமூர்த்தி
குரல்: சுசீலா
பாடல்: வாலி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTMzNTAyNV92WnExY185MTQ4/nenje%20nee%20po.mp3






ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

வாழ்வே நீ வா வாசலில் மெல்ல

கால்களும் இங்கே கண் வழி செல்ல

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

மாலை வராமல் இரவு வராதோ

மாலையிடாமல் உறவு வராதோ

தூது விடாமல் ஆசை விடாதோ

துணைவன் இல்லாமல் தூக்கம் வராதோ

ஆயிரம் கேள்வி உன்னிடம் கேட்பேன்

விடை கிடைக்காமல் உறங்கிட மாட்டேன்

பூவிழி சிவக்க செவ்விதழ் வெளுக்க

நூலிடை இளைக்க நாடகம் நடக்க

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

மாளிகை வெளியில் ஜானகி நின்றாள்

மாமணி மன்னன் ராமனைக் கண்டாள்

பார்வைகள் வழியே வார்த்தைகள் ஆட

பாவலன் கம்பன் பாட்டினில் பாட

நான் அது போலே காதலில் விழுந்தேன்

நாயகன் பெயரால் காவியம் வரைந்தேன்

நால்விழி ஒன்றாய் பொருந்திடும் தேதி

நான் ஒரு பாதி அவன் ஒரு பாதி

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

புதன், 3 ஜூலை, 2013

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ

படு தோல்வி அடைந்த AVMஇன் படம். ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை. அண்ணாதுரையின் கதை வசனத்தில் நாடகமாக வெற்றியடைந்த இந்தக் கதை திரைப்படமாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

சுத்த தமிழ் பாடல். இன்றைக்கு பலருக்கு யாழும் தெரியாது, இந்தத் தமிழும் புரியாது.

திரைப்படம்: ஓர் இரவு (1951)
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இயக்கம்: P நீலகண்டன்
திரைக் கதை: C N அண்ணாதுரை
நடிப்பு : K R ராமசாமி, A நாகேஸ்வர ராவ், லலிதா, T P முத்துலட்சுமி
இசை: R சுதர்சனம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMDczMzE5MV9Mdmxhdl80YmI5/THUNBAM-ms.rajeeswari%20-%20vs.varma-OR%20IRAVU-barathidasan.mp3





திரு நாகராஜன்   உதவியுடன் இந்த காணொளி  எம் எம் தண்டபாணி தேசிகரின் பாடல்.




துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா

எப்படி எப்படி மாட்டாயா
ஓஹோ
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
ஓஹோ
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
அப்புறம்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா
கண்ணே அல்லல்

ஆஹாஹா
அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே கண்ணே
சரி தானா கண்ணே

கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்

இது இல்லை பாடு
கண்ணே சரிதானான்னு கேட்டேன்

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா

அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
அருகிலாத போதும்
யாம் அருகிலாத போதும்
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா
நீ இயம்பிக் காட்ட மாட்டாயா
நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா
கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா



திங்கள், 1 ஜூலை, 2013

ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம்

இந்தத் திரைப்படத்தை பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் சுகம். அதிகம் அறியப்படாத இசையமைப்பாளர்.

திரைப் படம்: யாரோ எழுதிய கவிதை (1986)
இசை: ஆனந்த் ஷங்கர்
பாடல்: வைரமுத்து
நடிப்பு: சிவகுமார், ஜெயஸ்ரீ
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்கள்: K J யேசுதாஸ், வாணிஜெயராம்

 
ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நான் எழுதும் கவிதை வந்ததோ 

ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவன் முகமோ
இளமை பாடும் காதலின் கதை

நீ எழுதும் கவிதை வந்ததோ 
உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
 
பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்
 

தூது போகும் பேதை மனங்களில் பாடும் வானம்பாடி நீயோ 
ராக தேவன் கோயில் மணிகளில் சூடும் காதல் கிரீடம் நீயோ 
மீன்...வலை...விழியோ 

ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ 
இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ 

பாதம் வந்து போகும் வழிகளில் பூவில் பாதை போடலாமா 
போகும் பாதை யாவும் அழகிய தேகமாக மாறலாமா 
நான்...துணை...வரவோ 

காதல் நோயில் வாடும் மனதினை கைகள் வந்து காக்க வேண்டும் 
கைகள் வந்து காக்கும் இடங்களை நானும் இங்கு பார்க்க வேண்டும் 
தேன்...மழை...விழுமோ 

ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ 
இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ 
வந்ததோ...லால லா லால லா லால லா லால லா லால லா லால லா