பின்பற்றுபவர்கள்

புதன், 27 ஜனவரி, 2016

தெரியாதோ நோக்கு தெரியாதோ

பெண் சிவாஜி என்றழைக்கப் பட்ட, ஒரு பெண் சிங்கம் பாடி நடித்தது. என்னவொரு குரல், நடிப்பு.
இன்றைக்கும் பெண் நடிகைகள் அழகாகத்தான் இருக்கிறார்கள். தங்களை திரைப்படத்துறையில் நிலை நிறுத்த நடிப்பு கலையை விட தாராளமான முத்தக் கலையே அவர்களுக்கு கைக் கொடுக்கிறது. என்ன பண்ணுவது அவர்களுக்கு தெரிந்ததைதானே செய்ய முடியும்?



திரைப்படம்: சூர்ய காந்தி (1973)
பாடியவர்: மனோரமா
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: வாலி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதா











தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கும்
தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா பேசிண்டே இருப்பா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பூஜைக்காக போறவம்போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
அந்த சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
வந்த மூர்த்தியக்கண்டாளா பையன் மூஞ்சியக்கண்டாளா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

படத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
சினிமாபடத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடி பாக்கறா
மனமோகனா....
அங்கே வாடுதே கனவெனும் என் மனம்
தரையில் உருள
அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா
அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை அவ அம்பலமாக்குறா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ


ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சங்கத்தில் பாடாத கவிதை உன்

விஜயகாந்தின் ஆரம்பக் கால படங்கள் கொஞ்சம் சூடாகவும்,  இருந்தன. பின்னர்தான் பப்ளிசிடிக்காக  ஆரம்பித்தார். பாடல்கள் இயற்கையாகவே கவனிக்கப்பட தக்க வகையில் இருந்தன. அதில் இதுவும் ஒன்று.

படம்: ஆட்டோ ராஜா (1982)
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன் (புலமைபித்தன் ??)
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
இயக்கம்: K விஜயன்







சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

கையின்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்
பொய் கொஞ்சம்
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா அ
கொஞ்சம் தா ஆ
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே அனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு ஆ
மெய் தொட்டு ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


திங்கள், 11 ஜனவரி, 2016

பெண் மானே சங்கீதம் பாடி வா

இன்று வரை இந்தப் பாடலை பதிவேற்றிவிட்டேன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது கிணற்றுத்தவளையில் எங்கு தேடினாலும் இல்லை இல்லை என்கிறது.
இளையராஜ, SPB, ஜானகி கூட்டணியில் ஒரு மகா அருமையான பாடலை உங்களுக்கு வழங்குவதில் miss பண்ணப் பார்த் தேன்..



திரைப்படம்: நான் சிவப்பு மனிதன் (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
நடிப்பு: ரஜினி, அம்பிகா
இயக்கம்: S A சந்திரசேகர்
பாடல்: வாலி (சரியா?)




Download Music - Play Audio - Pen Mane Sangeetham-naan siv...






ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா  ஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா  ஹா

பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

தேன் மழை நீ ஹோய்
மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய்
நான் தினம் தேடவோ

கையருகில் பூமாலை
காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே
வாழ்கிறாய் ஓர் புறம்

என் காதல் வானிலே
வெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை
கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதம்  பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம்  பாடவா

லாலால்ல லாலா லாலால்ல லாலா
யாத்திரை ஏன் ஹோய்
ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய்
பூக்களின் தேகமே

தேக மழை நான் ஆகும்
தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக
மேனியை மூடுவேன்

கண்ணோரம் காவியம்
கை சேரும் போதிலே
வானமும் தேடியே
வாசலில் வாராதோ

பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா


சனி, 9 ஜனவரி, 2016

அங்கே மாலை மயக்கம் யாருக்காக


இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை... இந்த இரண்டு வரிகளில் காதலை சொல்லிவிட்டார் கவிப்பேரரசு கண்ணதாசன். அந்தக் காலத்தில் BOXHIT படமும் பாடலும். இன்றைய தலைமுறைக்கு பிடிக்காதுதான்...



திரைப்படம்: ஊட்டி வரை உறவு (1967)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P சுசீலா, டி எம் எஸ்
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
















அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

லாலா
ஆஹா

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

வெள்ளி, 1 ஜனவரி, 2016

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....


திரைப்படம்: குடும்பத்தலைவன் (1962)

இசை: கே. வி. மகாதேவன்
நடிப்பு: எம். ஜி. ஆர் சரோஜா தேவி
இயக்கம்: எம். ஏ. திருமுகம் 
பாடியவர்:டி எம் எஸ்

பாடல்: கண்ணதாசன்


உலகில் வாழும் மிருகங்களுக்கும் பிற உயிரினங்களும் இயற்கையாகவே சில குணங்கள் அமைகின்றன. புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இயல்பாகவே சினத்துடன் சீறும் குணமுள்ளது. யானை அனைத்து விலங்குகளிலும் அதிக பலம் கொண்டதாக விளங்கினாலும் அது பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறது. புதிய நபர்களையோ வேறு நாய்களையோ கண்டால் குரைக்கும் குணம் எல்லா நாய்களுக்கும் உண்டு. கூடி வாழும் இயல்பு காக்கைகளிடம் அமைந்துள்ளது.  இவ்வாறாக அனைத்து உயிரினங்களுக்கும் பிரத்தியேகமான குணங்களைப் படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டும் மாறுபட்ட குணங்களைக் கொடுத்தது ஏனோ?


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்

என்றாள் ஔவைப் பிராட்டி. இங்கே குலம் என்பது ஒருவர் பிறந்து வளரும் சூழ்நிலையைக் குறிப்பதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர் என்று எடுத்துக் கொள்வது தவறு. ஒருவன் இளம் வயது முதலே கல்வியிலும் தர்ம நெறிகளிலும் சிறந்து விளங்கும் நல்லோரின் சேர்க்கையைப் பெற்று வளர்வானாகில் அவன் நல்ல குணங்களையே பெறுதலும், தீய குணங்களும் தீய பழக்க வழக்கங்களும் நிறைந்தவருடன் பழகும் சூழ்நிலையில் வளர்கையில் தீய குணங்களைப் பெறுதலும் இயல்பு.
இயல்பாகவே அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, பொய் நீக்கி உண்மையே உரைத்து வாழும் உத்தமர்கள் என்றும் தீய வழியில் செல்வதில்லை, எத்தகைய துன்பங்கள் நேரிட்டாலும் தீய குணங்களைப் பெறுவதுமில்லை.
இயல்பாகவே காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் முதலிய தீய குணங்களை வளர்த்துக்கொண்ட மனிதர்கள் பொதுவாகத் தம் வாழ்நாளில் என்றும் திருந்துவதில்லை. அவர்களது தீய குணத்தாலும், தீய செயல்களாலும் விளைந்த தீமைகள் அவர்கள் இறந்து அவர்களது உடல்களைக் கட்டையில் வைத்து எரிக்கையிலும் மறைவதில்லை.

www.thamizhisai.com







மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

ஓஹோஹோஹோஹொஹொஹோ
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்