பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 ஜனவரி, 2017

வானும் மண்ணும் ஒன்றாய்


திரைப்படம்: வரம் (1989)
இயக்கம்: R C சக்தி
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வநாதன்
நடிப்பு: பிரபு, அமலா


இனிமையான அமைதியான பாடல். மீண்டும்.. "தைமாதம் கல்யாணம் அங்கே காதல் ஊர்கோலம்" என்னும் பாடலை நியாபகப்படுத்தும் பாடல். காட்டில் கல்யாணம் நடந்தால்? விதிவசத்தால் தேடப்படும் குற்றவாளியாகி காட்டில் மறைந்து வாழும் பிரபுவுக்கு அவரது நண்பர்கள் அவரது காதலி அமலாவை அங்கேயே அழைத்து வந்து மணமுடித்து வைக்கிறார்கள். அச்சூழலில் இப்பாடல். இத்தகவலை அறிந்த பின் இப்பாடல் பதிவினை கண்ணுற்றால் சுவை கூடும்.

Play Music - Upload Audio Files -






வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்
வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்

காதல் மாலை  சூடும் வேளை
கண்ணில் கார்க்காலம்
காதல் மாலை  சூடும் வேளை
கண்ணில் கார்க்காலம்

கண்ணே  உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே  உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
வானிலிருந்து பூக்கள் தூவ  
தேவர் வரவில்லையே
வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே
வாழ்த்தும் கொடி முல்லையே

வானிலிருந்து பூக்கள் தூவ  
தேவர் வரவில்லையே
வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே
வாழ்த்தும் கொடி முல்லையே

வரம்பு கடந்து நரம்பு துடிக்கும்
இங்கே  சுவரில்லையே
வளர்ந்த கொடிகள் சிறைகள் ஆனால்
ஒன்றும் தவறில்லியே
வளர்ந்த கொடிகள் சிறைகள் ஆனால்
ஒன்றும் தவறில்லியே

வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி
லாலி படிக்கின்றது

அருவிப் பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது
மேளம் அடிக்கின்றது
காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி
லாலி படிக்கின்றது

அருவிப் பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது
மேளம் அடிக்கின்றது

பாலும் பழமும் பருகவில்லை
பந்தி நடக்கின்றது
நாளும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது
நாளும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது

வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்

காதல் மாலை  சூடும் வேளை
கண்ணில் கார்க்காலம்
கண்ணே  உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே  உந்தன் கன்னம் ரெண்டில்

கண்ணீர் ஊர்கோலம்

சனி, 14 ஜனவரி, 2017

நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும்

இந்த படத்துக்கு இசை இப்ராஹீம் என்பவர் என்பது கவனிக்கப்பட வேண்டியது. இனிமையாகத்தான் உள்ளது. மலை விழுங்கி இசையமைப்பாளர்கள் அப்போது இருந்த போது இவர் ஜொலிக்க முடியாதது  புதிதல்ல.

திரைப்படம்: வழிகாட்டி (1965)
இயக்கம்: விபரங்கள் இல்லை.
நடிப்பு: எஸ் எஸ் ஆர், விஜய குமாரி
இசை: இப்ராஹீம்
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், சுசீலா






Music podcasts - Listen Audio -










நிலவில்லாமல் வானிருக்கும்
நீயில்லாமல் நானில்லை –உன்
நினைவில்லாமல் வேறில்லை
நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்

முன்னும் பின்னும் நடை
பின்னி பின்னி வரும் பாவையே
காதல் தோற்றம் தோற்றம் என்ன
சொல்வேன் என்னை மயக்குதே

அழகே அருகே வருவாயே
இன்னுமா
ஹும்
வெட்கமா
ஹும்
நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்

அள்ளி அள்ளி செல்ல
மெல்ல மெல்ல வந்த மன்னவா
சுகம் தேடி தேடி வரும் அல்லவா
இன்னும் சொல்லவா

அருகே அருகே வருவேனே
அச்சமா
ஹும் 
இன்னுமா
ஹும்
நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்

தங்க திருமுகம் தேனாறோ
நீ தரையில் தவழும் பூந்தேரோ
மன்னவன் என்பதும் நீதானோ
ஒரு மாளிகை என்பது மனம் தானோ

ஏழை அங்கே வருவேனே
என்னை உனக்கு தருவேனே
நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்