பின்பற்றுபவர்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

வேறென்ன நினைவு உன்னைத் தவிர....verenna niaivu unnai thavira..


மூன்று குரல்களில் இரண்டு ஜோடிகள் பாடும் பாடல்கள் அப்போது பிரசித்தம். இனிமையாகப் பாடப் பட்ட பாடல். பி.சுசீலா அம்மா, இரு பெண்களுக்கும் அழகாக குரல் கொடுத்திருக்கிறார்.

திரைப் படம் : சுபதினம்  (1969) 
பாடலாசிரியர்: வாலி          
இசை : கே.வி.மகாதேவன்                     
பாடியவர்:  டி.எம்.,எஸ்,  பி.சுசீலா,  ஏ.எல்.ராகவன்     
நடிப்பு: முத்துராமன், புஷ்பலதா










வேறென்ன நினைவு 

உன்னைத் தவிர 
இங்கு வேறேது நிலவு 

பெண்ணைத் தவிர

வேறென்ன நினைவு 

உன்னைத் தவிர
 
இங்கு வேறேது நிலவு

பெண்ணைத் தவிர

வேறென்ன வேண்டும் 

நெஞ்சைத் தவிற
இதில் வேறேது தோன்றும்

அன்பைத் தவிர

நான் சொல்லியா உன்னை மனம் பார்த்தது
அது தான் வந்து  உறவாட இடம் பார்த்தது
தேன் சொல்லியா வண்டு சுவை பார்ப்பது 
அது தான் கொண்ட பசியாற இரைத் தேடுது

விழியே மனதின் கதவாக

நுழைந்தேன் ஒருநாள் மெதுவாக
வேறென்ன நினைவு 

உன்னைத் தவிர 
இங்கு வேறேது நிலவு 

பெண்ணைத் தவிர

ஒரு நாளிலே எண்ணம் ஓராயிரம்
நெஞ்சில் உருவாகி உனை தேடி போராடிடும்

அலை மோதிடும் உந்தன் மன ஓடையில் 
இந்த இளமாது மலர் மேனி நீராடிடும்

நெடு நாள் கனவை கலைப்பாயோ
நிழல்தான் எனக்கே கொடுப்பாயோ 

வேறென்ன நினைவு
 
உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு 
பெண்ணைத் தவிர

வேறென்ன வேண்டும் 

நெஞ்சைத் தவிற
இதில் வேறேது தோன்றும்
அன்பைத் தவிர

உயிர் வாழ்வதே உந்தன் ஒரு பார்வையில்
என்னை அன்பென்று நீ சொல்லும் ஒரு வார்த்தையில்
மறந்தால் என்ன அன்பு மறைந்தா விடும்
உந்தன் கால் மீது தலை வைத்து கண் மூடிடும்

தொட்டுத்தான் தொடர்ந்தேன் துணையோடு

அள்ளித்தான் அணைத்தேன் துணிவோடு

வேறென்ன நினைவு 
உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு 
பெண்ணைத் தவிர





செவ்வாய், 21 ஏப்ரல், 2015

வெள்ளை மலரில் ஒரு வண்டு..vellai malaril oru vandu..

1971 ஆம் ஆண்டு திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் மாதிரி வேடமணிந்து பிரச்சார நாடகங்களில் நடித்தார் முதலமைச்சர் கருணாநிதி யின் மகன் மு.க.முத்து. 1972 ஆம் ஆண்டு அவர் கதாநாயகனாக நடித்த "பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தை கலைஞரின் அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரித்தது. கதை, வசனம் கருணாநிதி. படத்தை இயக்கினார்கள் கிருஷ்ணன்பஞ்சு.


இந்தப் படத்தில் மு.க.முத்து, எம்ஜிஆர் போலவே நடை, உடை பாவனையுடன் நடித்தார். பாடினார். சண்டை போட்டார். அதுவும் முதல் படத்திலேயே எம்ஜிஆர் போல இரட்டை வேடம்.
நன்றி: www.maalaisudar.com/

நமக்கு வரலாறு முக்கியம் தான்.. அதைக்காட்டிலும் இனிமையான பாடல்கள் நமக்குத் தேவை. எங்கிருந்து வந்தாலும் ரசிப்போம்...வாருங்கள்.

திரைப்படம்: பிள்ளையோ பிள்ளை (1972)
குரல்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன் (வாலி???)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: மு க முத்து, லக்ஷ்மி
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு









வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு


கத்தும் கடலில் மணி முத்து
கலையில் வளரும் தமிழ்ச் சொத்து
பருவம் இதுதான் இரு பத்து
படிப்பேன் இளமை மனம் தொட்டு

வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு

ஹா ஹா ஹா ஹாஹாஆ ஹாஆ ஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஹா ஹா ஹா ஹா

கண்கள் அவனைப் பிரியாது
கைகள் என்றும் விலகாது
கண்கள் அவனைப் பிரியாது
கைகள் என்றும் விலகாது
நெஞ்சம் அவனை மறவாது
மஞ்சம் என்றும் உறங்காது
உறங்காது

வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு

எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக் கோலம்
எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக் கோலம்
அன்பால் வளரும் புது உலகம்
அகமும் புறமும் இனி மலரும்

வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு

புதன், 15 ஏப்ரல், 2015

என்ன தவம் செய்தனை...enna thavam seithanai..

இந்த பாடலும் கருத்தும் copy and pasteதான். என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் ஆதலால் இதை எனக்கு பகிர்நதவர்க்கு எனது மனமார்ந்த நன்றி. 
ஆயர் பெண்கள் யசோதாவை பார்த்து பாடுவதை போல் அமைந்த நெகிழ்வான பாடல்.
இயற்றியவர் பாபநாசம் சிவன் அவர்கள்.
ஆதி தாளம், காபி ராகத்தில் அமைந்த பாடல்.





என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்யதனை யசோதா

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
நீ என்ன தவம் செய்தனை
உன் கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
நீ என்ன தவம் செய்தனை
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறமை
கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி
கெஞ்ச வைத்தாய் கண்ணனை
தாயே என்ன தவம் செய்தனை

சனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை, புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை
யசோத எங்கும் நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க என்ன தவம்
செய்தனை 

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை..oru brinthavanaththinil nandha kumaranin...

ஒரு அபூர்வமான பாடல்...இந்தத் திரைப்படம் வெளி வந்ததா என்பதே தெரியவில்லை. இணையத்தில் எங்கும் இதைப் பற்றி விபரங்கள் இல்லை. நாகராஜன் சார் உதவுவார் என எதிர்ப்பார்க்கிறேன். இந்தப் பாடல் தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். இனிமையாக, மனதிற்கு இதமான இசையில் பாடல் அழகாக பாடப்பட்டிருக்கிறது.

திரைப்படம்: கங்கைக் கரைக் காற்றே
பாடியவர்கள்: எஸ் பி பி, சித்ரா
பாடல்: தெரியவில்லை
இசை: தெரியவில்லை
இயக்கம்: விபரம் இல்லை





ஹரே ராமா ஹரே கிருஷணா ஹரே ராமா ராமா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ராமா ஹரே கிருஷ்ணா
ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை
அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை
ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை
அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை

காதலின் ராகமே கேட்குதா மேகமே
காதலின் ராகமே கேட்குதா மேகமே

கண்மணி

 என்ன
இந்த நேரம் வானம் பூத் தூவுமே
ம்
ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை
அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை
காலை செந்தூரம் பாவைக் கண்ணோரம் காதல் சந்தோஷமே

ஆசையின் தேர்வலம் போகுதே ஊர்வலம்
சேலை செண்டோடு வாழ்வைக் கொண்டாடும் யோகம்
என் யோகமே

ஊஞ்சல் போல் ஆடலாம் ஓடி வா கண்மணி
இளமையின் கனவு மலர்கின்ற பொழுது இது ஒரு கார் காலம்
இதழ்களை விரித்து மதுரத்தை தெளித்து சிரித்தது பூக் கோலம்
அள்ளும் கை மீது முல்லை பந்தாக ஆடும் என் தேகமே

ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை
அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை

காலம் கொண்டாடும் காதல் சங்கீதம் வாழ்வின் உல்லாசமே தேவரும் மூவரும் தேவி உன் சரணமே

பூஜை இல்லாமல் போதை பண்பாடு கோவில் உண்டானதே

கண்களில் தாமதம் கொண்டதே பெண் இனம்

இடையினில் தொடங்கி இதழ்களில் வழியும் இளமையை ருசிக்கட்டுமா

படிகளை ஒதுக்கி தலைவனின் மடியில் தனிமையை ரசிக்கட்டுமா

ஒன்னில் ஒன்னாகி மின்னல் உண்டாக்கி உன்னை மயக்கட்டுமா

ஓ ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை

வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை

காதலின் ராகமே கேட்குதா மேகமே
காதலின் ராகமே கேட்குதா மேகமே

ரியலி

ஓடி பாடி கூடும் நேரம் மௌனப் பூ தூவுமே

ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை

அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை

சனி, 4 ஏப்ரல், 2015

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி...rani maga rani...

இசை, பாடிய விதம், பாடிய குரல், பாடல் வரிகள், படப்பிடிப்பு எல்லாவற்றிலும் ஒரு பிடிப்புடன் ஈடுபாடுடன் குறையேதும் சொல்ல முடியாத வகையில் அமைந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.


திரைப்படம்: சரஸ்வதி சபதம் (1966)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெமினி, சாவித்திரி, K R விஜயா, தேவிகா



Podcast Hosting - Listen Audio -













ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
 வேக வேகமாக வந்த நாகரீக ராணி 
ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
 வேக வேகமாக வந்த நாகரீக ராணி 
ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
 வேக வேகமாக வந்த நாகரீக ராணி
 வேக வேகமாக வந்த நாகரீக ராணி

நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி

ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
நாகரீக ராணி

அங்கமெங்கும் தங்கம் வைரம் போட்டுவிட்டதால்
அறிவினோடு படையெடுத்து போரிட வந்தாள்
அங்கமெங்கும் தங்கம் வைரம் போட்டுவிட்டதால்
அறிவினோடு படையெடுத்து போரிட வந்தாள்
பொங்கி வந்த செல்வத்தாலே புத்தி போனதால்
பொங்கி வந்த செல்வத்தாலே
புத்தி போனதால்
புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தாள்
புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தாள்
போரிட வந்தாள்

ராணி மகாராணி
 ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா
கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா
கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு
சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு

ராணி மகாராணி
ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி

ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி