பின்பற்றுபவர்கள்

சனி, 30 ஜூன், 2012

மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி மன்னிக்க மாட்டாயா


மனதை கொள்ளைகொள்ளும் K J யேஸுதாஸின் இனிய குரலில் அழகான பாடல் ஒன்று. சுசீலா அம்மா குரலிலும் இதே பாடல் சிறிது மாற்றிய கவிதை வரிகளுடன்.

திரைப்படம்: ஜனனி (1985)
இசை: M S V
நடிப்பு: உதயகுமார், பாவ்யா

K J Y


P சுசீலா:


மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும் 
போதும்
மன்னிக்க மாட்டாயா 
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும் 
போதும்
மன்னிக்க மாட்டாயா 

என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்
என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்

உன்னடிமை உன்னருளை
பெற ஒரு வழி இல்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும் 
போதும்
மன்னிக்க மாட்டாயா 


என் மனதில் 
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில் 
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் மனதில் 
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில் 
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் இதயம் உன் உடமை
உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால் 
உனக்கது வலிக்காதா
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும் 
போதும்
மன்னிக்க மாட்டாயா 


வெள்ளி, 29 ஜூன், 2012

வரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்


நல்ல தமிழிலில் சுவையான இசையில் அழகான குரலில் ஒரு நல்ல வேகமான பாடல்.

திரைப் படம்: பாதுகாப்பு
குரல்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: A பீம்சிங்க்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா



http://asoktamil.opendrive.com/files/Nl8zNzYxNTQ0OF9BZmJ6TF83MjRk/varacholladi%20anthi%20maalai.mp3








வரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி  
அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி 
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி

தெய்வானை போல் என்னை நினைத்தாலென்ன
என் செந்தூரம் கரைந்தோட அணைத்தாலென்ன
கையோடு கைகொஞ்சம் கலந்தாலென்ன
கையோடு கைகொஞ்சம் கலந்தாலென்ன
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன
நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன
வரச் சொல்லடி
அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி

மலைக்கோவில் குமரேசன் அறியாததா
என் மடியென்ன கதை சொல்ல தெரியாததா
கலைக்கோவில் அவன் காண முடியாததா
அது கனிவானதா கொஞ்சம் பதமானதா

வந்தானை சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
வந்தானை சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
பக்தி சுவையுடன் தித்திதொரு இதழ்
முத்துத் தருமென நின்றானை
வள்ளிக் குறமகள் அள்ளிப் பருகிட
பள்ளித் தலம் வரை சென்றானை
முருகனை குமரனை கந்தனை வேலனை
முருகனை குமரனை கந்தனை வேலனை
வசந்தம் நிறைந்து மயங்கும் இரவில்
மானிவள் ஆனந்த சாலைக்கு
வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
அவனை வரச்சொல்லடி

செவ்வாய், 26 ஜூன், 2012

பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஒரே ஒரு பாட்டு


புரட்சி தலைவர் அவரது ஆஸ்தான கதாநாயகியுடன் இணைந்த பின் அந்த பாடலின் மகிமையே தனிதான். கவிஞர் இந்தப் பாடலில் காதல் படுத்தும் பாட்டை தெளிவாக்கி உள்ளார்.

திரைப் படம்: தாய் சொல்லைத் தட்டாதே (1961)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: M M A சின்னப்ப தேவர்



http://www.divshare.com/download/18478954-a19



ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும் போது மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும் போது மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு

தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு

பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு

தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு

பாய் விரித்துப் படுக்கும் போதும் ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும் போதும் ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு

பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு

உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
நம் இருவருக்கும் தெரிந்ததுதான் காதலென்னும் பாட்டு

பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
காதல் பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு

ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

ஞாயிறு, 24 ஜூன், 2012

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்


இந்தப் பாடலை பற்றிய விளக்கம் ஏதும் தேவை இல்லை என் நினைக்கிறேன். எவர் கிரீன் (Ever Green) பாடல் என்பார்கள். படகாட்சியாக இரண்டு வகை பாடல்களை இணைத்துள்ளேன். கேட்டு பார்த்து மகிழுங்கள்.

திரைப் படம்: புதிய பறவை (1964)
இயக்கம்: தாதா மிராஸி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி
பாடல்: கண்ணதாசன்



http://www.divshare.com/download/18405161-910

பாடல் 1



பாடல் 2



உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

தாலாட்டு பாட தாயாகவில்லை

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

நிலவில்லா வானம் நீரில்லா மேகம்

பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

தனிமையில் காணம் சபையிலே மௌனம்

உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்

அன்பு தந்த நெஞ்சில் அனுபவம் இல்லை

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

வெள்ளி, 22 ஜூன், 2012

உன் அழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்

ஒரு அழகானப் பெண்ணை பற்றிய வர்ணனை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு அளவுகோல்.
என்ன அழகான பாடல் இது?

திரைப் படம்: பூவும் பொட்டும் (1968)
இசை: R கோவர்த்தன்
குரல்: P B ஸ்ரீனிவாஸ்
இயக்கம்: தாதா மிராஸி
நடிப்பு: A V M ராஜன், பாரதி, முத்துராமன்
  


உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

நின்றால் கோவில் சிலையழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு

நடந்தால் அன்னத்தின் நடையழகு
நாடகமாடும் இடையழகு

நின்றால் கோவில் சிலையழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு

நடந்தால் அன்னத்தின் நடையழகு
நாடகமாடும் இடையழகு

அழகில் இது புதுவிதமே
இறைவனுக்கே ரகசியமே

இறைவனுக்கே ரகசியம்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்ல

வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்ல

மலர் பறிக்கும் நேரமிதே
பொழுது சென்றால் வாடிவிடும்

பொழுது சென்றால் வாடிவிடும்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

செவ்வாய், 19 ஜூன், 2012

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா


நல்ல அழகான அபூர்வ பாடல். இனிமையான குரல்களில் ஒலிக்கின்றது.

படம்: அம்மா பிள்ளை (1990)
பாடியவர்கள்: வாணி ஜெயராம், மனோ
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: ராம்கி, சீதா
இயக்கம்: R C சக்தி



http://www.divshare.com/download/18397027-893

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள கூடாதா மல்லிகையும் வாடாதா
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
நல்ல பதில் நீ உரைத்தாய் நன்றி நான் எப்படி சொல்ல

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

மச்சமுள்ள தாமரை என் மார்பில் தோளில் வந்தாடுதே
மிச்சம் உள்ள பெண்மையை உன் கையில் அள்ளி தந்தாடுதே
வானத்தை பார்த்திருந்தேன் முத்துக்கள் வீழ்ந்ததம்மா
நட்டது பூச்செடிதான் நட்சத்திரம் பூத்ததையா
ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை ஒன்றாய் நின்றதம்மா

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

உன்னை கண்ட நாள் முதல் என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது
பெண்ணைக் கண்ட நாள் முதல் என் நெஞ்சில் ஏதோ போர் மூண்டது
பெண் மயில் உன் பெயரை உச்சரிக்க நாணம் வரும்
பெண்மையே உன் புகழை உச்சரிக்க ஞானம் வரும்
கண்ணா உன்னை காணா விட்டால் கண்ணில் ரத்தம் வரும்

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
நல்ல பதில் நான் உரைத்தேன் நன்றியை முத்தத்தில் சொல்லு

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

ஞாயிறு, 17 ஜூன், 2012

இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள்


இனிமையான கர்னாடக இசை. அழகான குரல்கள் மற்றும் கவிதை வரிகள். அசத்தும் பாடல். அபூர்வ பாடல்.

திரைப் படம்: சவுந்தர்யமே வருக வருக
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர்கள்: சுசீலா, வாணி ஜெயராம், ஜாலி ஆப்ரகாம்
பாடல்: வாலி
நடிப்பு: சிவசந்திரன், ஸ்ரீப்ரியா.








இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அவள் அவனது அணைப்பில்
அவன் அவளது இணைப்பில்
மோகம் அமோகம்
அம்மாடி இத்தேகம் துயில் கொள்வதேது
தலைவன் தலைவியில் மடியிலே
தலைவி தலைவனின் பிடியிலே
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

சரிகம பமக தமக சனிதப
பமமமமம
இதழ் இதழொடு படிக்க
அதில் சுதிலயம் பிறக்க
கீதம் சங்கீதம்
உண்டாகும் வினோதம்
இசை வெள்ளம் ஓடும்
ஒருவர் ஒருவராய் நனைந்திட
உலகம் முழுவதும் குளிர்ந்திட
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பறிக்காமல் மணக்க
பனித் தாமரை சிரிக்க
அவள் வந்து மயக்க மயக்க
மயக்க மயக்க
அவன் தன்னை மறக்க மறக்க
மறக்க மறக்க
ஒரே போதையில் லயிக்க
ஒரே பாதையில் நடக்க
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அவள் கன்னம் சிவக்க
அவன் முத்திரை பதிக்க
அவள் ஒன்று கொடுக்க கொடுக்க
கொடுக்க கொடுக்க
அவன் ஒன்று எடுக்க எடுக்க
எடுக்க எடுக்க
அதே ஆசைகள் வளர்ந்து
அதில் ஓசைகள் விளைந்து
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

சனி, 16 ஜூன், 2012

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே அழகிய ராணி


M S விஸ்வனாதன் T K ராமமூர்த்திக்கு  அமைந்த பல சிறந்த பாடல்களில் இந்தப் பாடல் தனி இடம் எடுத்துக்  கொண்டது. எப்படி இத்தனை நாட்கள் இந்த பாடலை தரம் ஏற்றாமல் விட்டேன் என்பதில் எனக்கே ஆச்சர்யம்தான். மிக அருமையான பாடல்.

திரை படம்: வீர திருமகன் (1962)
குரல்கள்: P B S, P சுசீலா
நடிப்பு: C L ஆனந்தன், சச்சு
இயக்கம்: A C திருலோகசந்தர்
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/18380764-21f





ல ல லல லா ல ல ல லல ல ல ல
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரி தானா

உறவும் முறை தானா



வாராய் அருகே மன்னவன் நீயே

காதல் சமமன்றோ ஹோய்

பேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ ஹோய்

உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ



வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ


ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ



மன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழ்வும் தோழியரும்

பஞ்சனை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே


ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ



ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரி தானா

உறவும் முறை தானா

பாடும் பறவைக் கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழி கண்டோம் ஒரு மனம் ஆனோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ஓர் வழி கண்டோம் ஒரு மனம் ஆனோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ரோஜா மலரே ராஜகுமாரி

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

உண்மை இதுவன்றோ ஹோய்

உலகின் முறை அன்றோ

என்றும் நிலை அன்றோ


ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா
ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹாஹா

புதன், 13 ஜூன், 2012

அல்லித் தண்டு கால் எடுத்து அடி மேல் அடி எடுத்து


தன் குழந்தைச் செல்வத்தை தாயும் தந்தையும் கொஞ்சும்  விதம் இங்கே தத்ரூபமாகவும் அற்புதமாகவும் பாடலாக்கி காட்டி இருக்கிறார்கள்.

திரைப் படம்: காக்கும் கரங்கள் (1965)
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
இயக்கம்: A C திருலோகசந்தர்
இசை: K V மகாதேவன்
குரல்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்



http://www.divshare.com/download/14998474-868



அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

அல்லித் தண்டு கால் எடுத்து
 அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும் சொல்லாத
கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும்
 சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

முத்து நவரத்தினங்களை
அவன் மோகன புன்னகை வெல்லும்

முத்து நவரத்தினங்களை
 அவன் மோகன புன்னகை வெல்லும்

அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

நீரோடை போலே
 நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ

ஊராரின் கண் படலாமோ

நீரோடை போலே
 நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ

ஊராரின் கண் படலாமோ

அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருபோமோ

அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருபோமோ

அல்லித் தண்டு கால்
 எடுத்து அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்


அல்லித் தண்டு கால்
 எடுத்து அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

திங்கள், 11 ஜூன், 2012

பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு


இந்த படத்திற்கு இசை V குமார் அல்லது M S விஸ்வனாதன். யாரென்று தெரியவில்லை. ஆனால் இசையமைப்பு விதத்தை பார்த்தால் குமார் போலவே தெரிகிறது. நல்லதொரு பாடல்.

திரைப் படம்: கண்ணாமூச்சி (1978)
குரல்: S P B
நடிப்பு: சிவகுமார், லதா
இயக்கம்: R பட்டாபிராமன்




http://www.divshare.com/download/17927663-f6c




பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

இந்த பூமியின் இந்த தேவதை
அன்பு ராகம் நீயே தான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்
காதல் தீபம் நீயே தான்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா
தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா

எனது கைவீணை ராகங்களே
என்னுயிரே உன் வார்த்தைகளே
பாடுவது என் மனது
ஆடுவது உன் மனது

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்க்கோலப் பொன்னாள் எது
மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்க்கோலப் பொன்னாள் எது
குங்குமச் சாந்து கோலமிட்டு
நீ வரும் காலம் நேரம் எது
வாழியவே ஓவியங்கள் ஏழை நெஞ்சின் காவியங்கள்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

சனி, 9 ஜூன், 2012

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்


இனிமையான S ஜானகி அம்மாவின் குரலில் இது தணிக்கையில் வெட்டுபடாத அசல் பாடல்.

திரைப் படம் : திருவிளையாடல்
குரல்கள்:P B S, S.ஜானகி
கவிதை: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்
இயக்கம்: A P நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, முத்துராமன்



http://www.divshare.com/download/18232190-7b6




பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

கார் குழலை நீராட்டி கண்ணிரண்டை தாலாட்டி
கார் குழலை நீராட்டி கண்ணிரண்டை தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்
வண்ண தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்
போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்யும் தளிர் மணி தென்றல்

அது வான் திறந்த போது வந்த வாலிப தென்றல்
வான் திறந்த போது வந்த வாலிப தென்றல்

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
தன்னுடலைக் காட்டாத தந்திர தென்றல்
ஆளும் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்
தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

புதன், 6 ஜூன், 2012

உறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறு கதை


தமிழ் திரை உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிய இந்தப் படத்திலிருந்து ஒரு இனிய பாடல்.
பாடல் வரிகள் கங்கை அமரன்  என வலையில் சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

திரைப் படம்: அவள் அப்படித்தான் (1978)
இயக்கம்: ருத்ரையா
இசை: இளையராஜா
நடிப்பு: கமல், ஸ்ரீப்ரியா, ரஜினி



http://www.divshare.com/download/17934318-4ec

உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

வாழ்வென்பதோ கீதம்
வளர்க்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துண்பம்
இனி வாழ்வெலாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே

திங்கள், 4 ஜூன், 2012

நிலவோடு வான் முகில் விளையாடுதே

திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் வளம் சொல்லவே வேண்டாம். தமிழ் உச்சரிப்பும் எப்போதும் தெள்ளத்தெளிவாக இருக்கும். அவரது பாடலுக்கு முன்னுரையே தேவை இல்லை.


திரைப் படம்: ராஜராஜன் (1957)
நடிப்பு:  M G R, பத்மினி
இயக்கம்: T V சுந்தரம்
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி S கோவிந்தராஜன், A P கோமளா
பாடல்: கு சா கிருஷ்ண மூர்த்தி
 


http://www.divshare.com/download/18185367-175


நிலவோடு வான் முகில் விளையாடுதே

அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே

அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே


எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே

எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே

இனிதாகவே இன்ப கதை பேசுதே

இனிதாகவே இன்ப கதை பேசுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே

அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே


புது பாதைத் தனை காண மனம் நாடுதே

உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

புது பாதைத் தனை காண மனம் நாடுதே

உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே


மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்

மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா

மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்

மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா


இதயம் ஒன்றாகி உறவாடுவோம்

என்னாளும் பிரியாத நிலை காணுவோம்

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்


என்னாலும் பிரியாத நிலை காணுவோம்

ஓ ஓ ஓ ஓ

நிலவோடு வான் முகில் விளையாடுதே

அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே

ஞாயிறு, 3 ஜூன், 2012

வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது


T M S அவர்களின் இனிமையான குரல் S S R அவர்களுக்கு பொருந்தும்படி பாடி இருக்கிறார். அதற்கு இணையாக P சுசீலா அம்மாவின் குரல். ஓர் அழகானப் பாடல்.

திரைப் படம்: காட்டு ரோஜா
பாடல்: கண்ணதாசன்
இசை: மகாதேவன்
நடிப்பு: S S ராஜேந்திரன், பத்மினி



http://snd.sc/K67Vkn

வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது

கண்ணொன்று வந்தது
காண் என்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
கண்ணொன்று வந்தது
காண் என்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது

பாட்டொன்று வந்தது
பருவத்தைக் கேட்டது
காட்டுக்குள் நான் போனேன்
கனியங்கே நின்றது
பாட்டொன்று வந்தது
பருவத்தைக் கேட்டது
காட்டுக்குள் நான் போனேன்
கனியங்கே நின்றது

கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது

வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது

யாரென்று கண்டது
யார் சொல்லி வந்தது
நீர் கொண்ட மேகம் போல்
நெஞ்சத்தில் நின்றது

நெஞ்சத்தில் நின்றது
கொஞ்சத்தில் மாறுமோ
வஞ்சிக்கு வாழ்வெல்லாம்
தஞ்சம் உன் பாதமே

வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
ம் ம் ம் ம்

வெள்ளி, 1 ஜூன், 2012

வரவேண்டும் மகராஜன் தரவேண்டும் சுகராகம்


இது தெலுங்கு டப்பிங்க் படம் என நினைக்கிறேன். பாடலில் அந்த வாடை தெரிகிறது.
நல்ல பாடலாக இருக்கின்றது.

திரைப் படம்: பகடை பன்னிரண்டு
இசை:  சக்ரவர்த்தி
குரல்கள்: பாலசுப்ரமணியம், சுசீலா
நடிப்பு: கமல், ஸ்ரீபிரியா

 

http://www.divshare.com/download/18021526-4fa

வரவேண்டும் மகராஜன்
தரவேண்டும் சுகராகம்

வரவேண்டும் மகராஜன்
தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டி
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டி

மகராணி நெஞ்சில் ஊஞ்சலாடு

வரவேண்டும் மகராணி
தரவேண்டும் சுகராகம்
வரவேண்டும் மகராணி
தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டு
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டு
மகராஜன் நெஞ்சில் ஊஞ்சலாடு

கையோடு கை சேர்த்த கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே ஆனந்த ஜாலம்
கையோடு கை சேர்த்த கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே ஆனந்த ஜாலம்

இதழில் சொல்லும் மந்திரம் ஒன்று
இனிக்க வைத்தது பூவையை இன்று
கண்ணா எந்தன் கன்னங்கள் கண்டு
கதை படித்திடு காதலுக்கென்று
காணாதன கண்டேன் இன்ப கண்ணா
வரவேண்டும் மகராணி
தரவேண்டும் சுகராகம்

பூப்போட்ட மஞ்சங்கள் பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டு நெஞ்சங்கள் கூட
பூப்போட்ட மஞ்சங்கள் பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டு நெஞ்சங்கள் கூட

இரவு என்பது இன்பங்கள் துள்ள
உறவு என்பது ஊடலுக்கல்ல
நிலவு என்பது சாட்சியம் சொல்ல
நெருக்கிக் கொள்ளுங்கள் தென்றலை வெல்ல
ராதை போல் ஆனேன் கிருஷ்ண தேவா

வரவேண்டும் மகராணி
தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டு
மகராணி நெஞ்சில் ஊஞ்சலாடு
வரவேண்டும் மகராஜன்
தரவேண்டும் சுகராகம்