பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 ஜூன், 2012

இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள்


இனிமையான கர்னாடக இசை. அழகான குரல்கள் மற்றும் கவிதை வரிகள். அசத்தும் பாடல். அபூர்வ பாடல்.

திரைப் படம்: சவுந்தர்யமே வருக வருக
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர்கள்: சுசீலா, வாணி ஜெயராம், ஜாலி ஆப்ரகாம்
பாடல்: வாலி
நடிப்பு: சிவசந்திரன், ஸ்ரீப்ரியா.








இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அவள் அவனது அணைப்பில்
அவன் அவளது இணைப்பில்
மோகம் அமோகம்
அம்மாடி இத்தேகம் துயில் கொள்வதேது
தலைவன் தலைவியில் மடியிலே
தலைவி தலைவனின் பிடியிலே
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

சரிகம பமக தமக சனிதப
பமமமமம
இதழ் இதழொடு படிக்க
அதில் சுதிலயம் பிறக்க
கீதம் சங்கீதம்
உண்டாகும் வினோதம்
இசை வெள்ளம் ஓடும்
ஒருவர் ஒருவராய் நனைந்திட
உலகம் முழுவதும் குளிர்ந்திட
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பறிக்காமல் மணக்க
பனித் தாமரை சிரிக்க
அவள் வந்து மயக்க மயக்க
மயக்க மயக்க
அவன் தன்னை மறக்க மறக்க
மறக்க மறக்க
ஒரே போதையில் லயிக்க
ஒரே பாதையில் நடக்க
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அவள் கன்னம் சிவக்க
அவன் முத்திரை பதிக்க
அவள் ஒன்று கொடுக்க கொடுக்க
கொடுக்க கொடுக்க
அவன் ஒன்று எடுக்க எடுக்க
எடுக்க எடுக்க
அதே ஆசைகள் வளர்ந்து
அதில் ஓசைகள் விளைந்து
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

1 கருத்து:

கருத்துரையிடுக