பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

ரொம்ப சிரமமான பாடலிது. பாடிய இருவரும் வெற்றிகரமாக பிரமாதமாக்கிவிட்டார்கள் . இவர்களின் வயதில் இப்படி பாடுவது ஒரு சாதனைதான்.
ஆனால் பாடலுக்கேற்ற உடையமைப்பில்லை. கர்னாடக இசையின் அடிப்படையில் அமைந்த பாடலுக்கு இந்த மாதிரி உடைகள்.
தமிழ் திரைப் படக் கனவுக் காட்சி. அப்படித் தான் இருக்கும்.

திரைப்படம்: சிரித்து வாழ வேண்டும் (1974)
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் , S.ஜானகி
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
நடிப்பு: எம்.ஜி,ஆர் , லதா
இயக்கம்: S S பாலன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MzkzMF91N2ZKdF85MmFh/Konja%20Neram%20Ennai%20Marandhen.mp3






ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்  
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஸ்  ஆ

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
ஸ் ஆ
 

 செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ...
செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும் போது
காணிக்கை ஏது நான் தரும் போது
காதலில் சுவை ஏது நான் வழங்காது

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன் ஸ்...ஆ...

நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
 நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஆ...ஆ...ஆ...

வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே
நான் ஒரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே
மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி
மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி

கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
கொஞ்ச நேரம் நம்மை மறந்தே ஸ்...ஆ....

சனி, 29 டிசம்பர், 2012

வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா

மீண்டும் இனிமை சேர்க்க வருகிறார்  P சுசீலா அம்மா. பாடலை செவி வழி கேட்கும் போது சோகத்திலும் ஒரு இனிமையான தாலாட்டு என்று தோன்றியது. ஆனால் படக் காட்சியில் யாரும் குழந்தைகள் இல்லை. அப்புறம் ஏன் கவிஞர் பாடலில் போகுதடா வருகுதடா என் 'தடா' போட்டார் என்பது விளங்கவில்லை.
மனதை மயக்கும் பாடல்.

திரைப் படம்: காதல் படுத்தும் பாடு (1966)
நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ
இசை:  T R பாப்பா
இயக்கம்: ஜூனியர் ஜோசப் தளியத்
பாடல்: ஆலங்குடி சோமு










வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

அது வந்து போன சுவடு
அந்த வானில் இல்லையடா
வானில் இல்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
ஆ ஆ ஆ ஆ ஆ
கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
அது ஊஞ்சல் போட்ட சுவடு
அந்தக் கொடியில் இல்லையடா
கொடியில் இல்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
ஆ ஆ ஆ ஆ ஆ
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
அந்த ஊர்வலத்தின் சுவடு மட்டும் மறைவதில்லையடா
என்றும் மறைவதில்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

வெள்ளி, 28 டிசம்பர், 2012

சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா

அருமையான பாடல். ஒரு தந்தையின் அபிலாஷைகளை அழகாக சொல்லி இருக்கிறார் கவிஞர்

திரைப்படம்: அழகு நிலா (1962)
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்


http://asoktamil.opendrive.com/files/Nl80OTAyMTAwX0VVY1pQXzM3N2Y/Chinna%20chinna%20roja%20singara.mp3




சின்னச் சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா

கண்மணியே நீ வளர்ந்து
படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய்
விளங்கிட வேண்டும்
கண்மணியே நீ வளர்ந்து
படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய்
விளங்கிட வேண்டும்
ஷெண்பகமே பலரும்
புகழ்ந்திட வேண்டும்
ஷெண்பகமே பலரும்
புகழ்ந்திட வேண்டும்
செல்வத்திலே திருமகளாய்த்
திகழ்ந்திட வேண்டும்
நீ செல்வத்திலே திருமகளாய்த்
திகழ்ந்திட வேண்டும்
சின்னச் சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா

கன்னியராம் தாரகைகள்
கூட்டத்திலே
நீ வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும்
நாள் வரவேண்டும்
கன்னியராம் தாரகைகள்
கூட்டத்திலே
நீ வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும்
நாள் வரவேண்டும்
கண்கவரும் கணவன்
கிடைத்திட வேண்டும்
கண்கவரும் கணவன்
கிடைத்திட வேண்டும்
காணும் ஆசைக் கனவெல்லாம்
பலித்திட வேண்டும்
நான் காணும் ஆசைக் கனவெல்லாம்
பலித்திட வேண்டும்
சின்னச் சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா 

வியாழன், 27 டிசம்பர், 2012

முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லை பூ விரிப்பல்லவோ

நல்ல இனிமையான பாடல்,இசையமைப்பிலும் கவிதை வரிகளிலும், பாடும் குரல்களினாலும்.  ஆனாலும் படக் காட்சி என்னவோ ஒரு மெச்சூரிடி இல்லாத நடனத்துடன் ஏனோதானோவென இருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் எம் ஜி யாரும் முத்துவும் நடித்தால் மக்கள் எப்படி இருந்தாலும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.

திரைப் படம்: பூக்காரி (1973)
நடிப்பு:  மு க முத்து, மஞ்சுளா
இசை:  M S விஸ்வனாதன்
இயக்கம்: பஞ்சு கிருஷ்ணன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: T M சௌந்தர்ராஜன், P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NDA3OV9vSjA0T181NWQy/Muththu%20pal%20siripennavo.mp3







முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தொட்டுப் பேசும் நாள் அல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
கண்ணா உன் தோள் தொட்டு
கதை சொல்லும் நாள் தொட்டு
காணாத ஆனந்தம் வேறென்னாவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ
சந்தங்கள் வரும் அல்லவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ
சந்தங்கள் வரும் அல்லவோ
இந்த மோகம் யார் தந்ததோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ

தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ
ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ
அங்கங்கே நான் தொட்டு
அடையாளம் தானிட்டு
ஆசைகள் ஆயிரம் வேர்விட்டதோ
கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
வண்ணத் தோகை என் சொந்தமோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்
கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்

முப்பாலில் மூன்றாம் பால்
உருவாகும் உன் அன்பால்
மோகங்கள் காட்டு உன் புன் சிரிப்பால்

அம்மம்மா துடிப்பென்னவோ
அப்பப்பா நடிப்பென்னவோ
அம்மம்மா துடிப்பென்னவோ
அப்பப்பா நடிப்பென்னவோ
இந்த வேகம் ஏன் வந்ததோ

முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ




திங்கள், 24 டிசம்பர், 2012

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ

காதலில் ஒரு நிமிடப் பிரிவைக்கூட தாங்கி கொள்ளமுடியாது. அந்தப் பிரிவின்  வலியை அழுத்தமாக பதிவு செய்த பாடல் . கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட சிறந்த பாடலிது .

திரைப் படம்: படகோட்டி (1964)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
குரல்கள்: T M S, P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NDcxOV80eldEWV9lMGFk/Paatukku%20Pattu-Padagotti.mp3





பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீ போய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீ போய்
தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக
எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு
இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில
என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே
ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே
நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே
நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு மீன் புடிக்க
வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே
போய் எழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரி எடுத்து
வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே
ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே
என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க

தாமரை அவளிருக்க இங்கே
சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே
நீதான் ஓடிப்போய் தூது சொல்லு

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே
நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

சனி, 22 டிசம்பர், 2012

சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு

பாடல்   முழுவதும் ஒரு கிணற்றுக்குள்ளேயே எடுத்திருப்பார்கள். (அதுதான் கிணற்றுத் தவளைக்கும் வேண்டும்?) இந்த பாடலின் டெம்ப்போ மற்றும் இனிமை குறையாமல் இருக்க 
T K ராமமூர்த்தியின் இசையும் அழகான பாரதியும் வழக்கமான தொந்தியும் தொப்பையுமாக இல்லாத சிவாஜியும் காரணமாக இருக்கலாம்.

திரைப் படம்: தங்க சுரங்கம் (1969)
குரல்கள்: T M S, P. சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, பாரதி

இயக்கம்: T R ராமண்ணா 

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NTY3NF94MXhlRl81ZTZl/Sandana%20kudathukkulle%20bandhugal.MP3





சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது


சந்தனக் குடத்துக்குள்ளே 
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது

சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன
மனமோ இது

மனமோ இது
என்ன சுகமோ இது



சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன
மனமோ இது

மனமோ இது
என்ன சுகமோ இது 



ஆடுது குலுங்குது
ஆடையிட்டு மூடுது
பழமோ இது

கொஞ்சம் பதமோ இது

ஆசை நடுவில் காதல் எழுதும்
படமோ இது
தேன் குடமோ இது


இங்கு ஏறும் 
ஒரு மயக்கம்
நெஞ்சில் இறங்கும் 

ஒரு கலக்கம்
ம் ம் ம் ம் ம் ம்

சந்தனக் குடத்துக்குள்ளே 
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது

காற்றினில் நடுங்குது
கதகதப்பாகுது
கனலோ இது
இன்பக் கனவோ இது


கன்னம் இரண்டும் நெஞ்சில் பொழியும்
மழையோ இது
இன்பச் சுவையோ இது


இதழ் மேலே ஒரு படிப்பு

அதனாலே ஒரு துடிப்பு


அம்மா  அப்பா  ஆ

சந்தனக் குடத்துக்குள்ளே 
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது

வியாழன், 20 டிசம்பர், 2012

அதி காலை நேரம் கனவில் உன்னை

அழகானப் பாடல். இசையின் ஆதிக்கம் அதிகமில்லாமல் மென்மையாக பாடப் பட்ட ஒரு பாடல்.
இதே மெட்டில் சித்ரா பாடியிருக்கும் மற்றும் ஒரு பாடலும் இங்கே இருக்கிறது தவற விடாதீர்கள்.
அபூர்வமான பாடல்களில் ஒன்று.

திரைப் படம்: நான் சொன்னதே சட்டம் (1988)
குரல்கள்: ஆஷா போன்ஸ்லே,
 S P  பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
பாடல் எழுதியவர், இயக்குனர் விபரங்கள் கிடைக்கவில்லை
நடிப்பு: ரேகா, சரண் ராஜ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NjExM19xNFg4UF80NzI3/Athi%20Kaalai%20Nera.mp3






http://www.mediafire.com/?jk7urcd51c3pyqu



இந்தப் பாடலின் பின்னனியில் நீங்கள் பார்த்துகொண்டிருப்பது டோஹா கடற்கரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் லைட்டிங்க் அமைப்புகள்.



அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னை சேர்த்தேன்

அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னை சேர்த்தேன்

விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே
ஹோய்
உன்னை சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்றிலே
ஹோய்

ல ல ல ல ல ல லா

முல்லை பூவை
மோதும்
வெண் சங்கு போல
ஊதும்

காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு

வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை

நூறு ராகம் கேட்கும்
நோயை கூட தீர்க்கும்

பாதி பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றி தந்தாள்
என்னை ஏற்றுக் கொண்ட மாது

தேவியை மேவிய ஜீவனே
நீ தான்
நீ தரும் காதலில் வாழ்பவள் நான் தான்

நீ இல்லாமல் நானும் இல்லயே

அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னை சேர்த்தேன்
விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே
ஹோய்
உன்னை சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்றிலே
ஹோய்

அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்

மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆறும் சூடு

மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு

வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்

நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்

காடு மேடு ஒடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து
வாடும்

வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல் தான்
பார்க்கலாம் நாளை

பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ

அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னை சேர்த்தேன்

விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே
ஹோய்
உன்னை சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்றிலே
ஹோய்

ல ல ல ல ல ல ல லலாலா
ல ல ல ல ல ல ல லலாலா

திங்கள், 17 டிசம்பர், 2012

நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்

மலேஷியா வாசுதேவனின் இனிய குரலில் ஒரு இனிய இளையராஜாவின் பாடல். பெண் குரல் சுஜாதாவா ஜென்ஸியா என்று தெரியவில்லை. திரு நாகராஜன் தான் சொல்ல வேண்டும். காணொளி சுஜாதா மோகனின் தொடர்பில் இருப்பதால் அவராக இருக்கலாம். எனிவே...பாடல் அருமை.

திரைப்படம் : இளமைக்கோலம் (1980)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சுஜாதா
பாடல் வரிகள் : கங்கை அமரன்
இசை : இளையராஜா

நடிப்பு: ப்ரதாப், சுமன், ராதிகா
இயக்கம்:N வெங்கடேஷ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NjM2Nl9rWXU1RF85YzRm/Nee%20Illatha%20pothu%20-Ilamai%20Kolam.mp3





நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

முதன்முதலில் தொடும் வரை
தினம் நான் எங்கோ
விரல் நுனிகள் படும் வரை
விழி தான் தூங்க

காவியம் பாடும் காதல் பூங்காற்று
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

எது வரையில் சுகம் என
அதை காண்பேன்
இதழ் முழுவதும் சுவை என
அதை நான் சேர்வேன்

ஏங்கிடும் போது எண்ணம் தானாட
இருமேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
லா ல ல ல ல ல ல ல ல லலலலலா

சனி, 15 டிசம்பர், 2012

தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க

இன்னுமொரு அழகானப் பாடல் சுசீலா அம்மாவிடமிருந்து. மனதிற்கினிய மெல்லிசை இரட்டையர்கள் இசையில் ஆஹா என்ன சுகம் என்கிறது பாடல்.
இது மாயவனாதனின் மற்றுமொரு பாடல்.

http://www.mediafire.com/?v6apqrd65ykt92e



திரைப் படம்: படித்தால் மட்டும் போதுமா (1962)
பாடியவர்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: மாயவனாதன்
இயக்கம்: பீம்சிங்க்
நடிப்பு: சிவாஜி, பாலாஜி, சாவித்திரி

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்ச மலர் அடி கலங்க
நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்ச மலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள்
அங்கு அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
நினைந்து நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

விண்ணளந்த மனம் இருக்க
மண்ணளந்த அடி எடுக்க
விண்ணளந்த மனம் இருக்க
மண்ணளந்த அடி எடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்
ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

ஆஹ ஹா  ஆ ஆ ஆஹ ஹா  ஹோ ஹோ ஹோ ஹோ 

பொட்டிருக்க பூவிருக்க
பூத்த மலர் மணமிருக்க
பொட்டிருக்க பூவிருக்க
பூத்த மலர் மணமிருக்க
கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள்
இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்

வியாழன், 13 டிசம்பர், 2012

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

பாடலாசிரியர் மாயவ நாதன்....இவர் குறைந்தளவே பாடல்களை (மொத்தமாகவே 15 பாடல்கள் இருக்கலாம்) தமிழ் திரையில் எழுதி இருக்கிறார். ஆனாலும் அத்தனை பாடல்களும் சிறப்பானவை. தாலாட்டு என்ற படத்தில் மல்லிகை பூ போட்டு, தன் நிலவு தேனிறைக்க மற்றும் பூம்புகார் படத்தில் சில பாடல்கள் என சிறந்த வரிகளைக் கொண்ட பாடல்கள். தமிழ் திரை அரசியல் தெரியாதவர். ஆகையால் ஏழையாகவே இறந்து போனார். அவருடைய பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலை கேட்டு மகிழ்வோம்.
பாடலின் ஆரம்பத்தில், உண்மையிலேயே மழையில் நனைந்து குளிரில் நடுங்கும் ரெண்டு இளம் ஜோடிகளாக  பாடியவர்கள் உருவகப் படுத்தியுள்ளது பிரமாதம்.

திரைப்படம்: தேர்த்திருவிழா (1968)

இசை: கே.வி. மஹாதேவன்

பாடகர்கள்: டி.எம்செளந்தராஜன், பி.சுசீலா

இயற்றியவர்: மாயவநாதன்

நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா

இயக்கம்: எம் ஏ திருமுகம்








மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

ஹோ

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

ஹோ

என்னம்மா பண்ணுது

உள்ளதைச் சொல்லு

என்னமோ பண்ணுது

என்னத்தை சொல்ல

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

கட்டுக் குலையாத அரும்பைத்

தொட்டு விளையாட

நெருங்கி ஒட்டி உறவாட

வந்தது காத்து

மொட்டுச் சிரிப்பாட இடையில்

பட்டு விரிப்பாட

அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி

குலுங்குது பூத்து

கட்டுக் குலையாத அரும்பைத்

தொட்டு விளையாட

நெருங்கி ஒட்டி உறவாட

வந்தது காத்து

மொட்டுச் சிரிப்பாட இடையில்

பட்டு விரிப்பாட

அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி

குலுங்குது பூத்து

பூ வாகிப்பிஞ் சாகிக்கா யாகிக்கனியாச்சி

அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சி

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

வெத்திலை பாக்கு வச்சி

விருந்து வீட்டுலே கூட்டிவச்சி

தாலிகட்டியே கைபுடிச்சி

கலந்திட வேண்டும்

குத்துவிளக்கு வச்சி

குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சி

இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி

சுகம் பெறவேண்டும்

வெத்திலை பாக்கு வச்சி

விருந்து வீட்டுலே கூட்டிவச்சி

தாலிகட்டியே கைபுடிச்சி

கலந்திட வேண்டும்

குத்துவிளக்கு வச்சி

குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சி

இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி

சுகம் பெறவேண்டும்

கா லாடமே லாடக் கையாடமுகம் சிவக்கும்

என் கைகளில் உன் பூ உடல் மிதக்கும்

மழை முத்து முத்துப்

பந்தலிட்டு கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது


செவ்வாய், 11 டிசம்பர், 2012

கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி காளைக் கண்ணுக்குட்டி


கிராமத்து தமிழ் பாடல் கேட்டு ரொம்ப நாள் ஆகிறது. T M Sம், P சுசீலா அம்மாவும் கிராமத்தானாகவே மாறி பாடி இருக்கிறார்கள். இனிமையில் மெய் மறந்து போகும்.
மறந்து போன பாடல்.

திரைப்படம்: கண் கண்ட தெய்வம்  (1967)
பாடியவர்கள்:   P சுசீலா, T M சௌந்தர்ராஜன் 
இசை:  K V மகாதேவன்
இயக்கம் கே எஸ் கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: பத்மினி, S V சுப்பையா

http://www.mediafire.com/?7c6869v77ug2oyn












கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி
காளைக் கண்ணுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லு குட்டி
கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி
காளைக் கண்ணுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லு குட்டி


கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி
காளைக் கண்ணுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லு குட்டி
கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி
காளைக் கண்ணுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லு குட்டி


கல்லான மனசு கொண்ட
பொல்லாத ஆளு - என்ன
கண்ணெடுத்தும் பாக்கலியே
என்னான்னு கேளு

கல்லான மனசு கொண்ட
பொல்லாத ஆளு - என்ன
கண்ணெடுத்தும் பாக்கலியே
என்னான்னு கேளு


நாலு கண்ணு பாத்துக்கிட்டா
காதலுன்னு பேரு
அத  ஊரு கண்ணு பாத்துப்புட்டா
வரும் அக்கப்போரு
அம்புட்டுதான்

நாலு கண்ணு பாத்துக்கிட்டா
காதலுன்னு பேரு
அத  ஊரு கண்ணு பாத்துப்புட்டா
வரும் அக்கப்போரு


ஆட்டுக்கும் மாட்டுக்கும்
ரெண்டு கொம்பு
இந்த ஆம்பிளைக்கென்னாடி அக்குறும்பு
தானா ந தானா ந தானனனன தானனனன தானன

ஆட்டுக்கும் மாட்டுக்கும்
ரெண்டு கொம்பு
இந்த ஆம்பிளைக்கென்னாடி அக்குறும்பு


கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி
காளைக் கண்ணுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி

நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லு குட்டி


சின்னஞ்சிறு இடையைக்
கண்டா தெரியுது வயசு
அம்மாடியோ


சின்னஞ்சிறு இடையைக்
கண்டா தெரியுது வயசு
ஹும்
சிங்கார நடையைக்
கண்டா தளும்புது மனசு

முத்தான சிரிப்பைக்
கண்டா தெரியுது துடிப்பு
ஹா
மூடி வச்சு மறைச்சதெல்லாம்
ஆத்தாடி நடிப்பு


முத்தான சிரிப்பைக்
கண்டா தெரியுது துடிப்பு
ஹா
மூடி வச்சு மறைச்சதெல்லாம்
ஆத்தாடி நடிப்பு


பட்டதை இன்னிக்குக்
கொட்டிப் புட்டேன்
மீதி உட்டதை நாளைக்குத்
 தொட்டுக்குவோம்

தானா ந தானா ந தானனனன தானனனன தானன


பட்டதை இன்னிக்குக்
கொட்டிப் புட்டேன்
மீதி உட்டதை நாளைக்குத்
 தொட்டுக்குவோம்


கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி
காளைக் கண்ணுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லு குட்டி


நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லு குட்டி
அட

நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லு குட்டி

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

ஆசை அன்பு இழைகளினாலே

இனிமையான பாடல். ஏதோ ஹிந்தி பாடலின் காப்பி போல தெரிந்தாலும் நன்றாக இருக்கும். அமைதியான மென்மையான இசை பின்னனியில் அருமையாக இருக்கிறது.

நடிப்பு: சிவகுமார், ஜெயசித்ரா (1974???)
பாடகர்கள்: P.சுசீலா, T M. சௌந்தரராஜன்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: கண்ணதாசன்???

http://www.mediafire.com/?29ezdgkdy4kv3gh



ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளை போலவே
வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளை போலவே

எண்ணிப் பார்க்க  ரெண்டு போதும்
நம்மை போலவே
எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மை போலவே

மன கண்கள் அந்த கனவே காணுதே

நாம் காணும் இன்பம் நினைவாய் தோணுதே

ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னை பற்றியே
எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னை பற்றியே

அது இன்பம் இன்பம் என்று
ஆடும் உன்னை சுற்றியே
அது இன்பம் இன்பம் என்று
ஆடும் உன்னை சுற்றியே

அதன் சின்னம் தோன்றி
உருவம் காட்டுதே
அது உன்னை போல சிரிப்பை மூட்டுதே

ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை


ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

ஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா
ஹா ஹாஹா ஹா ஹா ஹாஹா

வெள்ளி, 7 டிசம்பர், 2012

நான் போகிறேன் மேலே மேலே

எச்சரிக்கை! சமீபத்திய ஒரு "தமிழ்" திரைப் படத்திலிருந்து ஒரு "தமிழ்" பாடல்!!!!!

 புதிய பாடலானலும் இனிமையான S P B, K S சித்ரா குரல்களுக்காக மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல தமிழ் பாடலைக் கொடுத்ததற்கு நன்றி திரு ஜேம்ஸ் வசந்தன்.

திரைப் படம்:நாணயம் (2010)
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
இசை:ஜேம்ஸ் வசந்தன்
இயக்கம்: ஷக்தி S ராஜன்
நடிப்பு: ப்ரசன்னா, ரம்யா ராஜ்
கவிதை வரிகள்: தாமரை

http://www.mediafire.com/download.php?u2q79faclparc1f


  நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து
நேரத்தை நேசிக்கும்

ந ந ந ந ந ந ந ந ந ந ந ந ந நா

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து
நேரத்தை நேசிக்கும்

ல ல லலல்லால ல ல லல்லா ந ந ந ந நா

கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி
பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன்
காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும்
காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை
யாவும் சேலை ஆகாதோ
வாராதோ அந்நாளும்
இன்று ஹா ஹா

ர ர ர ர ல ல ல ர ர ர ல ல

ம் ம் ம் ம் ந ந ந ந ந ந ந ந ந ந ந ந ந நா

என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி
கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி
நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை
நீதான் தந்தாய்

அன்றாட போகும் பாதை
யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன்
பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய்
என்று இங்கேயே
கால் நோக கால் நோக
நின்றேனே

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே

ஆ ஆ ஆ ஆ ஆ
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் வந்து
நேரத்தை நேசிக்கும்

ல ல ல லல்லா ல ல ல லல்லா

ந ந ந ந நா

ல ல ல லல்லா ல ல ல லல்லா

ந ந ந ந நா

ல ல ல லல்லா

புதன், 5 டிசம்பர், 2012

நீலமாம் கடல் அலையில் கோலமிடும் மீனினங்கள்

அழகான இருகுரலில் அருமையானப் பாடல்.
இனிமை, இளமை, வழக்கமான மென்மை என எல்லாம் இணைந்த பாடல்.

திரைப் படம்: மலை நாட்டு மங்கை (1973)

இயக்கம்: P சுப்ரமணியன்
நடிப்பு: ஜெமினி, விஜயஸ்ரீ
இசை: விதபால் வர்மா
பாடியவர்கள்: K J யேஸுதாஸ், P சுசீலா

http://www.divshare.com/download/15371596-f27




நீலமாம் கடல் அலையில்
கோலமிடும் மீனினங்கள்
துள்ளுவதென்ன
சொல்லுவதென்ன

ஆழமாம் உன் மனதில்
ஆசை வைத்த என் கனவு
துள்ளுவதென்ன
சொல்லுவதென்ன

பச்சை மலை பூ மரத்தில்
பாரிஜாத பூ பறித்தேன்

பச்சை மலை பூ மரத்தில்
பாரிஜாத பூ பறித்தேன்

பெண்ணழகு கூந்தல் தனில்
பின்னிவிட சம்மதமோ

நானமாம் திரையெடுத்து
பூவையென்னும் வெண்ணிலவு
துள்ளுவதென்ன
சொல்லுவதென்ன

முத்து முத்து நீர்த்துளிப் போல்
மூடி வைத்த தேன் துளிகள்

முத்து முத்து நீர்த்துளிப் போல்
மூடி வைத்த தேன் துளிகள்

எந்த நாள் பார்ப்பதென்று
ஏங்கியதோ உன் விழிகள்

காதலோ கரைக் கடக்க
கண்ணம் ரெண்டும் பளபளக்க
துள்ளுவதென்ன
சொல்லுவதென்ன

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க...

மறந்து போன பாடல். மறந்து போன இசையமைப்பாளர். மறந்து போன இனிமை நினைவுகள்.


திரைப் படம் சத்தியம் தவறாதே (1968)
இயக்கம்: பாண்டி செல்வராஜ்
இசை: C N பாண்டுரங்கன்
நடிப்பு: ரவிசந்திரன், விஜயநிர்மலா, ஷீலா??
குரல்கள்: T M S, P சுசீலா


http://www.mediafire.com/download.php?4mp98y4pedbhjfu





முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க

முக்கனிச் சாறெடுத்து எங்க கிண்ணத்திலே தாங்க

முக்கனிச் சாறெடுத்து எங்க கிண்ணத்திலே தாங்க

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க


மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன் ஹா

மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

மனதில் பூட்டி வைப்பேன்
என் உயிரை காவல் வைப்பேன்

மனதில் பூட்டி வைப்பேன்
என் உயிரை காவல் வைப்பேன்

மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

உறக்கம் வராமல் என்னைத் தடுப்பதென்ன

உறக்கம் வராமல் என்னைத் தடுப்பதென்ன

பொறுக்க விடாமல் உள்ளம் தவிப்பதென்ன

பொறுக்க விடாமல் உள்ளம் தவிப்பதென்ன

காற்று வந்து முத்தமிட்டால்
கார்மேகம் நீர் பொழியும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

காற்று வந்து முத்தமிட்டால்
கார்மேகம் நீர் பொழியும்

காதல் வெள்ளம் பொங்கி வந்தால்
காவியத்தில் தேன் பாயும்

காதல் வெள்ளம் பொங்கி வந்தால்
காவியத்தில் தேன் பாயும்

மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன

இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன

இனம் புரியாத சுகம் பிறப்பதென்ன

இனம் புரியாத சுகம் பிறப்பதென்ன

நெருங்கி வந்து நின்றுவிட்டால்
நினைவும் மயங்கி வரும்

நெருங்கி வந்து நின்றுவிட்டால்
 நினைவும் மயங்கி வரும்

மயக்கம் வந்து தெளியும் முன்னே
மறு நாளும் விடிந்து விடும்

மயக்கம் வந்து தெளியும் முன்னே
மறு நாளும் விடிந்து விடும்

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க

முக்கனிச் சாறெடுத்து எங்க கிண்ணத்திலே தாங்க

மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

வெள்ளி, 30 நவம்பர், 2012

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்

வீரியமிக்க, நாம் கற்பனை செய்ய முடியாத பாடல் வரிகள், கம்பீரமான குரல், அதற்கேற்ற தேவையான அளவு, எந்த விதத்திலும் எரிச்சலை ஏற்படுத்தாத இசை. ஒரு திரை இசை பாடலுக்கு இலக்கணம் வகுத்தப் பாடல். புத்துணர்ச்சியூட்டுகிறது.

திரைப்படம்: படகோட்டி (1964)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்

http://www.mediafire.com/?czp4zppi85he495



கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று
வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

புதன், 28 நவம்பர், 2012

நிலவோ அவள் இருளோ ஒளியோ அதன்

T M சௌந்திரராஜன் நடித்த சில படங்களில் இது ஒன்று. ஆனால் பாடலை எழுதியவர் அருணகிரி நாதர் என்று போட்டிருக்கிறார்கள். 15ஆம் நூற்றாண்டில் இது போல தமிழ் இல்லை. மேலும் அருணகிரி நாதர் எழுதிய மற்றைய பாடல்களிலும் இது போன்று இன்றைய தமிழ் வழக்குச் சொல்லில் இல்லை. (உதாரணமாக முத்தை திரு பத்தி என்ற திருப் புகழ் பாடல்.) அவரது இந்தப் பாடலை யாரோ எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்றால் அவருக்கு நன்றி.
இப்பாடலை எழுதியவரும் இந்த திரைப்படத்தின் கதை வசனகர்த்தாவும் ஷக்தி கிருஷ்ணசாமி என்கிறார் திரு நாகராஜன். நன்றி ஸார்.
திரைப்படம்:அருணகிரிநாதர் (1964)
பாடியவர்:T M சௌந்தரராஜன், பி.சுசீலா

இசை:டி.ஆர்.பாப்பா

Nilavo Aval Irulo - Arunagirinathar Tamil Song - Tm Soundararajan :: Mp3-For.Me










நிலவோ அவள் இருளோ

ஒளியோ அதன் நிழலோ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை எங்கே

இனி நானா அவள் தானா

நிலவோ அவள் இருளோ

நிலவே அதன் ஒளியே ஆஆஆஆ

மலரே அதன் மணமே ஆஆஆஆ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை இங்கே

இனி நீயே அவள் ஏனோ

நிலவே அதன் ஒளியே

பாடும் கண்ணோடு ஆடுவேன்

பாவமே மறந்து பரதவிப்பாய்

பாடும் கண்ணோடு ஆடுவேன்

பாவமே மறந்து பரதவிப்பாய்

சேர்ந்தது சுகமே மறந்தது சொகமே

சேர்ந்தது சுகமே மறந்தது சொகமே

யாரினி உறவாகும்

நிலவோ அவள் இருளோஆஆஆஆ

ஒளியோ அதன் நிழலோஆஆஆஆ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை எங்கே

இனி நானா அவள் தானா

நிலவோ அவள் இருளோ

தேடும் கண்ணாலே பேசுவோம்

பேசியே இணைந்து சுகித்திருப்போம்

காதலின் சுகமே கனியிதழ் மோகமே

காவியம் வரைவோமே

நிலவே அதன் ஒளியே

மலரே அதன் மணமே

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மையிங்கே

இனி நாமே மகிழ்வோமே


நிலவே அதன் ஒளியே

திங்கள், 26 நவம்பர், 2012

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

மீண்டும் விமர்சிக்கத் தேவை இல்லாத ஒரு பாடல். P சுசீலா அம்மாவின் குரலினிமையே இங்கே முதலிடம். அவருடன் கூட M S V அவர்களின் ஹும்மிங்க். பாடலை எங்கோ கொண்டு செல்கிறது. மனம் காற்றில் அலை பாய்கிறது.

திரைப் படம்: பாவ மன்னிப்பு
இசை : M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா, M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்

http://www.mediafire.com/?58cfo33yecsekjf






பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
ம் ம் ம்
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும்
ம் ம் ம்
ஆசை விடாது
ம் ம் ம் ம் ம்
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
ஹும் ஹும் ஹூ ஹூ ஹூம் ஹு ஹூ ஹூம்
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறைப் பெண் மனதில் போர்க்களமாகும்
ஹூ ஹூ ஹூம் ஹூம் ஹூம்
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
ஹும் ஹும் ஹூ ஹூ ஹூம் ஹு ஹூ ஹூம்
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
தூக்கம் வராது
பாலிருக்கும்
பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது

சனி, 24 நவம்பர், 2012

புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே

அழகான தமிழிலில் கடந்த கால தமிழன் காதலை இலை மறை காய் மறையாக எடுத்துரைக்கும் பாடல். பாட்டுக்கான குரல் தேர்வு இனிமை.

படம் : பராசக்தி (1952)
இசை : R. சுதர்சனம்
குரல் : M S ராஜேஸ்வரி
பாடல் வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு
இயக்கம்:  கிருஷ்ணன் பஞ்சு
நடிப்பு: சிவாஜி, பண்டரிபாய்

http://www.mediafire.com/?523u251pmp57kk2




புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
படம் : பராசக்தி (1952)
இசை : R. சுதர்சனம்
பாடியர்கள் : MS ராஜேஸ்வரி
வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு

புதன், 21 நவம்பர், 2012

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை



பாடியவரின் இனிமையான குரலா? பின்னனி இசையில் இல்லாத ஒரு மேதாவித்தனமா? எது இந்தப் பாடலை வசீகரிக்க வைக்கிறது?
இரவுக்கு நிலவால் அழகு வரும்
இந்தப் பாடலால் மனதுக்கு அமைதி வரும்.
ரொம்பவும் அபூர்வ பாடலாகிப் போனது.

திரைப் படம்: எதையும் தாங்கும் இதயம்
இசை: T R பாப்பா
பாடியவர்: சூலமங்கலம் S ராஜலக்ஷ்மி
எழுதியவர்: ஆத்ம நாதன்

http://www.mediafire.com/?uvuu0w71dhbabvs






உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

இனிக்க இனிக்க நீ பேசவில்லை
என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

செல்வ பரம்பரையில் பிறந்தாலும்
அதன் சிங்கார பிடியில் வளர்ந்ததில்லை
செல்வ பரம்பரையில் பிறந்தாலும்
அதன் சிங்கார பிடியில் வளர்ந்ததில்லை
உல்லாச உலகத்தில் இருந்தாலும்
நான் உழைப்பவர் துயரத்தை
மறந்ததில்லை மறந்ததில்லை

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை


இரவுக்கு நிலவால் அழகு வரும்

என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
இரவுக்கு நிலவால் அழகு வரும்
என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
உயிருக்கு உடலால் பெருமை வரும்
நம் உறவும் ஒரு நாள்
புதுமை பெறும் புதுமை பெறும்

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

செவ்வாய், 20 நவம்பர், 2012

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்


நல்ல கருத்து செறிந்த பாடல். ஒரு நல்ல மனிதரை நினைத்து பாடும் அழகான தெளிவான குரல்.

படம்: அரச கட்டளை (1967)
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா, சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
இயக்கம்:  எம் ஜி சக்கரபாணி
குரல்: P சுசீலா
பாடல் வரிகள்: வாலி

http://www.mediafire.com/?5dovmy3m6q3na6b



என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்
விரிவான்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்
வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

சனி, 17 நவம்பர், 2012

இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்


S P Bயின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று மீண்டும் மீண்டு வருகிறது. ஆட்டுவித்தவரே  (அதான்  M S V அவர்கள்) வித்தகர். இனிமை பாடல்.

திரைப் படம்: சூதாட்டம் (1971)
இயக்கம்: மதுரை திருமாறன்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, L R ஈஸ்வரி














இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

தொட்டு துடிக்க நான் கட்டிப்பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன் தொட்டு பிடிக்க
கொட்டி கிடக்க தட்டி பறிக்க

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

தேரோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
பெண்மை வண்ணம் மேனி தாலாட்ட

தேரோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
பெண்மை வண்ணம் மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா பசி தீருமா
அந்த சொர்க்கம் எங்கே கொண்டே செல்லும்மா

தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடைகளிலே நின்று
கண்ணம் கொஞ்சும் நேரம் தனியாதா
சுவை தோன்றலாம் பசி தீரலாம்
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

பூச்சூடும் கூந்தனிலினால் கண்கள்
பாராதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் இன்றி வென்னில் என்னை நீராட??

பூச்சூடும் கூந்தனிலினால் கண்கள்
பாராதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் இன்றி வென்னில் என்னை நீராட??

மலர் வாடையோ சொல்லும் போதையோ
இந்த மங்கை சொல்லும் இன்பம் ஒன்றல்ல

நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்ல கேட்பேன் சொல்லலாம்

தொட்டு துடிக்க நான் கட்டிப்பிடிக்க

உன் நெஞ்சில் விழுந்தேன் தொட்டு பிடிக்க

கொட்டி கிடக்க தட்டி பறிக்க

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்