பின்பற்றுபவர்கள்

புதன், 30 அக்டோபர், 2013

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

அருண்மொழியின் குரலில் மீண்டும் ஒரு இனிமையான பாடல். கமலுக்கு கொஞ்சமும் ஒத்து வராத குரல். பாடலை தனியாகக் கேட்கும் பொழுது நல்ல இனிமை. மென்மையான பாடல்.

திரைப் படம்: சூர சம்ஹாரம் (1988)
நடிப்பு: கமலஹாசன், நிரோஷா
இயக்கம்:சித்ரா லக்ஷ்மணன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி,  K S சித்ரா
பாடல்: கங்கை அமரன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzE1OTEwOV9Eam9FQV9jMDlm/NaanEnbathu.mp3






லா ல லா ல லா லா ல லா ல லா லா

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும் போது
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது

பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை
காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை

கூடினேன் கொண்டாடினேன் என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்

பாலும் தெளிதேனும் பறிமாற நேரம் வந்ததே

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

ஆசை கொண்ட காதல் கண்கள் பாட வந்த பாடல் என்ன
ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன

நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது

தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது

அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண

போதும் இது போதும் இளம் பூவை மேனி தாங்குமா

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

தேவலோகம் வேறு ஏது

தேவன் இங்கு உள்ள போது

வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

திங்கள், 28 அக்டோபர், 2013

மங்கை ஒரு திங்கள்

வெளிவராத இந்தத் திரைப் பட பாடல் அபூர்வமானப் பாடல். மிகச் சொற்பமான இசைக் கருவிகளைக் கொண்டு S P B அவர்களுக்கு முழு சுதந்திரத்துடன் பாட செய்தது போல தோன்றுகிறது. இது போல எத்தனை பாடல்கள்  வந்தாலும் அ லுக்காமல் கேட்கலாம்.

திரைப் படம்: முன் ஒரு காலத்திலே (1980 வாக்கில்)
பாடல்: வாலி???
இசை:  M S விஸ்வனாதன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzUxMzE0Nl9QSEhsUF9iODc5/MangaiOruThingal.mp3



மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்

துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
பாவை முகக்கலைகள்
தமிழ் கோவில் கொண்ட சிலைகள்
வங்கக்கடல் அலைகள்
பனி வழங்கும் வண்ண மலைகள்
பொங்கும் நதி நிலைகள்
அந்தப் பூவை நகை வலைகள்
மங்கை ஒரு திங்கள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
போதை மொழி பணங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
போதை மொழி பணங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்
போதை மொழி பணங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்

ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடை பல விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
காட்டும் அவள் அசைகள்
அவள் கால கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் ரெண்டு கதைகள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்

சனி, 26 அக்டோபர், 2013

சிங்காரப் பைங்கிளியே பேசு

மெகா ஹிட் படம். பெரிய பாடலானாலும் இனிமையான பாடல். ஆரம்பத்தில் தமிழை மிக சுத்தமாக உபயோகித்திருக்கிறார் பாடலாசிரியர். வீசுதே... பேசுதே... என்று பாடலின் இறுதியில் பேச்சு மொழியை உபயோகப் படுத்திவிட்டார். பாடலின் வரிகள் அவ்வளவு தெளிவாக இல்லையாதனால் தவறுகள் இருக்கலாம்.

திரைப் படம்: மனோகரா (1954)
நடிப்பு: சிவாஜி, S S ராஜேந்திரன், கண்ணாம்பா, T R ராஜகுமாரி, கிரிஜா
இயக்கம்: L V பிரசாத்
பாடல்: உடுமலை நாராயணக் கவி
பாடியவர்கள்: A M ராஜா, ராதா S ஜெயலக்ஷ்மி
இசை: S V வெங்கடராமன் உதவி T R ராமனாதன்
வசனம்: மு கருணாநிதி

http://asoktamil.opendrive.com/files/Nl8yMjkyMzE5Ml9HVFZST19iZWY5/singarapaingiliye--manogara.mp3







சிங்காரப் பைங்கிளியே பேசு
சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
சிங்காரப் பைங்கிளியே பேசு

சங்கம் புகழ் முரசுக் கொண்ட தனியரசு
என் தமிழ் மொழிக்கே எதுவோ நீர் தரும் பரிசு
சங்கம் புகழ் முரசுக் கொண்ட தனியரசு
என் தமிழ் மொழிக்கே எதுவோ நீர் தரும் பரிசு

திங்கள் நிறை மலர் முகத்தில்
செவ்விதழ் சேர்த்து நிற்கும்
திங்கள் நிறை மலர் முகத்தில்
செவ்விதழ் சேர்த்து நிற்கும்
திருவே தருவேன் மனம் போல்
குறையாதொரு நூறு மட்டும்
சிங்காரப் பைங்கிளியே பேசு

நீரே சொந்தம் ஆனீர் பேச்சிலே
எதிரி நீரே சொந்தம் ஆனீர் பேச்சிலே

அந்த நினைவே மறந்தேன் உன் கண் வீச்சிலே

இந்த வீரர் எங்கள் நாட்டுக்கினி அதிபதியே

விஜயாள் ஒன்றே போதும் வெகுமதியே

ஹா
ம்

சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
சிங்காரப் பைங்கிளியே பேசு

பாண்டிய நாட்டு பூங்குயில் பேடு
ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே
பாண்டிய நாட்டு பூங்குயில் பேடு
ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே

அது வேண்டிடும் சோழ மண்டல தென்றல்
ஓடி வீசுதே ஓடோடி வீசுதே
அது வேண்டிடும் சோழ மண்டல தென்றல்
ஓடி வீசுதே ஓடோடி வீசுதே

ஆசை குடிதனிலே விளைந்தாடிடும் வேளையிலே
ஆசை குடிதனிலே விளைந்தாடிடும் வேளையிலே
ஆணோடும் பெண்ணும் கண்ணோடு கண்ணால்
ஜாடை பேசுதே ரெண்டும் ஊடல் பேசுதே
ஆணோடும் பெண்ணும் கண்ணோடு கண்ணால்
ஜாடை பேசுதே ரெண்டும் ஊடல் பேசுதே

பளிங்கு போலே தெளிந்த நீரில்
மீன்கள் துள்ளி ஆடுதே
இரு மீன்கள் துள்ளி ஆடுதே
பளிங்கு போலே தெளிந்த நீரில்
மீன்கள் துள்ளி ஆடுதே
இரு மீன்கள் துள்ளி ஆடுதே

விளங்கும் எந்தன் விஜயாளின்
கண் மீன்கள் ரெண்டும் ஆடுதே
விழி மீன்கள் ரெண்டும் ஆடுதே
விளங்கும் எந்தன் விஜயாளின்
கண் மீன்கள் ரெண்டும் ஆடுதே
விழி மீன்கள் ரெண்டும் ஆடுதே

அலையோடு அலை தாவி
ஒன்று சேர்ந்ததே
அலையோடு அலை தாவி
ஒன்று சேர்ந்ததே

ஆம் அது போலும் இரண்டு
உள்ளம் ஒன்று சேர்ந்ததே
உள்ளம் ஒன்று சேர்ந்ததே
ஆம் அது போலும் இரண்டு
உள்ளம் ஒன்று சேர்ந்ததே
உள்ளம் ஒன்று சேர்ந்ததே

பளிங்கு போலே தெளிந்த நீரில்
மீன்கள் துள்ளி ஆடுதே
இரு மீன்கள் துள்ளி ஆடுதே






வியாழன், 24 அக்டோபர், 2013

சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

சில பல இசை வடிவங்களும் சிலரின் குரல் வளமும் சில நோய்களை தீர்க்கும் என்பார்கள். ஆனால் இது போன்ற பல  பாடல்கள் நிச்சயமாக சில மனக் கவலைகளை மறக்கச் செய்வது உண்மை. அனுபவித்தால்தான் தெரியும்.
நடமாடும் குழந்தை பெயர் பேபி கஞ்சனா என்கிறார்கள்.

திரைப் படம்: வீர பாண்டிய கட்டபொம்மன் (1959)
நடிப்பு: சிவாஜி, வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி
இயக்கம்: B R பந்துலு
இசை: G ராமனாதன்
பாடல்: கு மா பாலசுப்ரமணியம்
பாடியவர்: S வரலக்ஷ்மி

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzE2NTQ0NF9odUM4Z181ZTM5/SINGARA%20KANNE%20UN.mp3





சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறாத இன்பங்கள் சேர்ப்பாயடி

சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி
துள்ளி ஆடாதே வா சின்ன ராணி

பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே
நீ சீராட வாராய் செந்தேனே
இந்த பாராளும் மாமன்னர் மார் மீதிலே
நீ சீராட வாராய் செந்தேனே
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

செவ்வல்லி கை வண்ணம் காட்டி
செவ்வல்லி கை வண்ணம் காட்டி
எங்கள் சிந்தை எல்லாம் இன்பம் மூட்டி
நீ ஆடாதே கண்ணே
யாரேனும் உன்னை கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்த பூங்காவிலே
நீ பண்பாட வாராய் செந்தேனே
அன்பென்னும் ஆனந்த பூங்காவிலே
நீ பண்பாட வாராய் செந்தேனே

சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்த்தாயடி 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பேசியது நானில்லை கண்கள்தானே நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே


ஈடில்லா  பாடல். வேறொருத்தர் பாடியிருந்தால் இந்த அளவு இனிமை இருந்திருக்குமா என்பது சந்தேகமே.
ஆனாலும் பாடலாசிரியர் பாடலின் ஆரம்பத்தில், தொட்டு விட்டார், ஒட்டி கொண்டார், காதல் நினைவெல்லாம் அவர் மீதே.... என்று எழுத ஆரம்பித்து பாடலின் பின் பாதியில் வட்ட நிலவு எனக்கு புது வானம் அவன்..., இன்பம் அவன்... என முடிப்பதுதான் கொஞ்சம் முரணாக இருக்கிறது.
எப்படியும் பாடல் சுகம்தான்.


திரைப் படம்: செங்கமலத்  தீவு (1962)
குரல் : M S ராஜேஸ்வரி
இசை: K V மகாதேவன்
பாடல்:ஏகலைவன்
இயக்கம்: ராஜேந்திரன்
நடிப்பு: ஆனந்தன், ராஜ்யஸ்ரீ




பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

தொட்டு விட்டார் என்னுடலில் தென்றல் பாய்ந்தது

ஒட்டி கொண்டார் என் மனதில் காதல் பிறந்தது

தொட்டு விட்டார் என்னுடலில் தென்றல் பாய்ந்தது

ஒட்டி கொண்டார் என் மனதில் காதல் பிறந்தது

அணை போட்டு பார்த்தேன் நிற்கவில்லை

அணை போட்டு பார்த்தேன் நிற்கவில்லை

காதல் நினைவெல்லாம் அவர் மீதே

உறக்கமில்லை உறக்கமில்லை

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

வாவென்று எவரும் அழைக்கவில்லை

எதையும் தாவென்று நானும் கேட்கவில்லை

வாவென்று எவரும் அழைக்கவில்லை

எதையும் தாவென்று நானும் கேட்கவில்லை

தானொன்று செய்தார் தீமை இல்லை

தானொன்று செய்தார் தீமை இல்லை

தோன்றி மறைந்து விட்டார்

மின்னலைப் போல்

காணவில்லை காணவில்லை

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

எட்ட நின்றேன் பார்வை தனில் உள்ளம் கலந்தது

கிட்ட சென்றேன் எனை தாவி நாணம் அணைத்தது

வட்ட நிலவு எனக்கு புது வானம் அவன்

வட்ட நிலவு எனக்கு புது வானம் அவன்

காலம் கூட்டி வந்த என் வாழ்வின்

இன்பம் அவன் இன்பம் அவன்

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

சனி, 19 அக்டோபர், 2013

பேசாத மொழி ஒன்று உண்டு

குறுகிய காலத்தில் அடங்கி போன கோவை சௌந்தர்ராஜன் அவர்களும், சிறந்த குரல் வளம் இருந்தும் தமிழிலில் சிறப்படையாத B S சசிரேகா, இவர்களுக்கு மிகுந்த புகழ் தேடித் தந்த பாடல். 

ஏதும் புதுமை இல்லாத வழக்கமான இசை:சங்கர் கணேஷ்
திரைப் படம்:பந்தாட்டம் 
மற்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.







ல ல லா ல ல லா ஹே ஹே ஹே ஹே


ல ல லா ல ல லா ஹா ஹா ஹா ஹா


பேசாத மொழி ஒன்று உண்டு

அதை பேச விழி நான்கு உண்டு

முதல் பார்வை

முதல் வார்த்தை


அதை சொன்னால் தன்னால் மலரும்

வண்ண தங்கமதில் வந்து விழும்

செந்தமிழில் தேனொழுகும்

சொந்தமதை கொண்டுவரும்


பேசாத மொழி ஒன்று உண்டு

அதை பேச விழி நான்கு உண்டு


செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ

தொட்டு தாலாட்ட பாராட்ட வரவோ

செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ

தொட்டு தாலாட்ட பாராட்ட வரவோ


கொஞ்சம் பொழுதாகட்டும் நெஞ்சம் துணிவாகட்டும்

பின்பு ஒரு கோடி புது பாடல் உருவாகட்டும்


கட்டு பூங்குழலில் மூடிவரும்


பெண்ணழகு தேடி வரும்


வந்த சுகம் கோடி பெறும்


அதை பேச விழி நான்கு உண்டு


முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ

மெல்ல நானாட இடம் கொஞ்சம் தருமோ

முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ

மெல்ல நானாட இடம் கொஞ்சம் தருமோ


மங்கை ஒரு பாதியும்

மன்னன் மறு பாதியும்

தந்து மடி மீது குடியேறி விளையாடலாம்


அந்தப் பொன்னுலகம் என்று வரும்

சொன்னவுடன் நின்று வரும்

இன்று முதல் என்று வரும்


பேசாத மொழி ஒன்று உண்டு

அதை பேச விழி நான்கு உண்டு

முதல் பார்வை

முதல் வார்த்தை


அதை சொன்னால் தன்னால் மலரும்

வியாழன், 17 அக்டோபர், 2013

நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்

K பாக்கியராஜ் இந்தப் படத்தில் நடித்தப் பின் இதே படத்தின் கதாநாயகி பிரவீனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அடுத்த வருடமே பிரவீனா இறந்து போனார். மஞ்சள் காமாலையால் இறந்தார் என சொல்லப் படுகிறது. அதற்கு அடுத்த வருடமே பூர்ணிமா ஜெயராமனை திருமணம் செய்துக் கொண்டார். இந்தப் படத்திலும் பாக்கியராஜ் இரண்டு பெண்டாட்டிக் காரராக நடித்திருப்பார்!

இனிமையான இசையும் வழக்கமான இனிய குரல்களும் கொண்ட பாடல்.

திரைப்படம்: பாமா ருக்மணி(1980)
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் M S. விஸ்வநாதன்
பாடியவர்கள்: S. ஜானகி, S B. பாலசுப்ரமணியம்
நடிகர்கள்: K. பாக்யராஜ், பிரவீணா
இயக்கம்: R பாஸ்கரன்
கதை: K பாக்கியராஜ்.

 http://asoktamil.opendrive.com/files/Nl8yMjU0MzgxOV9uVFVNRF8zNGM4/Nee%20Oru%20Kodi%20Malar%20Koodi.mp3






ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹாஹாஹாஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்


நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்

கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்

உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல
உண்மையில் உன்னாலே

கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல
உன் புகழ் சொன்னாலே

நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம்
நீராடத் துடிக்கும் நிலை காண்பாய்

கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில்
 நினைத்தாலே நலமாகும் கொஞ்சம்

அலைக்கடல் நெஞ்சில் நதியென ஓடி
சங்கமம் ஆகட்டுமே

அவசரம் என்ன அறுவடை காலம்
வருவதும் அறியாயோ


நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இயற்கை எழில் கொஞ்சுகின்ற


ஜெயசித்ரா நடித்த இப்பாடலின் காணொலி இதுவரை சிக்காமல் இருந்தது.
P சுசீலா அம்மா வழக்கம் போல தூள் பரத்தியிருக்கும் மற்றுமொரு பாடல். இசை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் என நினைத்தேன். ஆனால் V குமார் என்பது எனக்கு ஆச்சரியம்தான். அருமையான பாடல்.

திரைப் படம்: தேன் சிந்துதே வானம் (1975)
குரல்: P சுசீலா
இசை: V குமார்
நடிப்பு : ஜெயசித்ரா, சிவகுமார்
இயக்கம்: R A சங்கரன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMjQxNjk2N19JVzM0SV9lZjJh/iyarkai%20ezhil%20konsuginra%20nila%20madanthai.mp3







லா ல ல ல லா ல ல லா ல ல ல லா ல ல 
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
இந்த நீரோடை
அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 

பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்

இந்தப் பாவைக்கு சூட்டி வைத்த மணி மகுடம்
பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்

இந்தப் பாவைக்கு சூட்டி வைத்த மணி மகுடம்
கொச்சை மொழி பேசுகின்ற பறவையினம்

இவள் கொலுவிருக்கும் மண்டபத்தில் புலவரினம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
லா ல ல ல லா ல ல லா ல ல ல லா ல ல 

மலை மேல் தவழ்ந்த மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லார்க்கும்
தீரும் தாகங்களே
மலை மேல் தவழ்ந்த மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லார்க்கும்
தீரும் தாகங்களே
நீங்களும் நானும் ஒன்று 
என் நினைவுகள் பறப்பது உண்டு
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 

அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
நான் ஒரு சுதந்திரப் பறவை
அந்த ஆண்டவன் எழுதிய கவிதை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
இந்த நீரோடை
அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
லா ல ல ல லா ல ல


ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

குருவி உட்கார பனம்பழம் விழுந்தக் கதையாக இந்தப் பாடலை இணையத்தில் தவழவிட  நான் முடிவு செய்த இன்று நவராத்திரி காலம் ஆனது.  
அகர முதலியாக வரும் இந்தப் பாடலை போன்று வேறொரு பாடல் தமிழ் திரையுலகில் உண்டா என்பது தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் முழுமையாக இல்லாமல் அ, ஆ, இ, ஈ என்பதோடு முடிந்து மற்ற கதைகளை பேச ஆரம்பித்துவிடலாம்.
என்ன ஒரு இசை? 
என்னவொரு ஆண்மைக் குரலில் ஒரு பாடல்? 
என்னவொரு நடிப்பு?

திரைப்படம்: சரஸ்வதி சபதம் (1966)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெமினி, சாவித்திரி, K R விஜயா, தேவிகா

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTU1MTcwNl96UXVTdl9lYzI1/Agara%20muthala%20ezhuthellaam.mp3






அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்
அம்மா பேச வைத்தாய் 
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து
அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை

அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென
அருளும் தமிழும் திகழும் கடலென

கற்றவரும் கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்

உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர்
யானை சேனை படையுடன் வேந்தரு

பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி

தாயில்லாத பிள்ளையென்று
வாயில்லாத ஊமையென்று
ஆயிரங்களான கல்வி
வாய் திறந்து தந்த செல்வி

அன்னை உன்னை சரணமடைந்தேன்
தேவி

வெள்ளி, 11 அக்டோபர், 2013

உன்னைக்காணாமல் நான் ஏது

உங்களைக் காணாமல் நான் ஏது, உங்களைக் எண்ணாத நாள் ஏது என்றாகிவிட்டது. அன்பர்கள் அனைவரும் நலமா? வாழ்க வளமுடன்.

ஒரு குறுகிய விடுமுறையில் சென்னை வந்து தஞ்சையின் வெளிவட்டப் பகுதியில் இணைய இணைப்பு கிடைக்காமல் 5 நாட்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து இன்று மீண்டும் பரபரப்பான சென்னை வாழ்க்கையில் மீண்டும் உங்களை சந்திக்கும் போது மகிழ்ச்சியே.

இன்றும் ஒரு இனிமையான இசை, குரல்களில்...பாடல் வரிகளில் என்று சொல்ல முடியவில்லை. இளையராஜா அனுசரித்து பாடல்வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார். கங்கை அமரன் புலவர் இல்லையே ஆகையால் பொறுத்துக் கொண்டு பாடலை ரசிப்போம். அருண்மொழி ஒரு நல்ல பாடகர். அவ்வளவாக தமிழ் படவுலகம் அவரை கவனிக்கத் தவறிவிட்டது.

திரைப்படம் : கவிதை பாடும் அலைகள் (1990)
நடிப்பு: ராஜ் மோகன், ஜனனி
இயக்கம்: T K போஸ்
பாடல்: கங்கைஅமரன்
பாடியவர்கள் : K S சித்ரா , அருண்மொழி
இசை: இளையராஜா

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTYzODUwNF9yaDZpNV85MDBm/UnnaiKaanaamal.mp3







ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக் கரையெல்லாம்
காலடி தேடி நின்றேன்

கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்

வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்

ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டு காலம்

இனி எந்நாளும்
பிரிவேது அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்

பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது

காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்

காலங்கள் போன போதும்
வானத்தைப்போல வாழும்

இது மாறாது
மறையாது அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது


வெள்ளி, 4 அக்டோபர், 2013

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

நல்ல மனிதனாக வாழ கீழ்கண்ட பல வழிகள் இருக்க இந்த இனிய உலகில் நமது பல நண்பர்கள் வாழ மாயமான எவ்வழிகளையெல்லாம் கடைபிடிக்கிறார்கள் என்பதை பார்த்துகொண்டுதானே இருக்கிறோம். 
நல்ல கருத்துள்ள பாடல்.

படம் : சுமைதாங்கி (1962)
பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்
இசை : M S விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

இயக்கம்: ஸ்ரீதர்
நடிப்பு: ஜெமினி, முத்துராமன், தேவிகா







மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
தெய்வமாகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
தெய்வமாகலாம்


புதன், 2 அக்டோபர், 2013

மேகமே தூதாக வா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்ட வா இளமை முந்தாணையை...

அழகான இளமைப் பாடல். SPBக்கும் இளையராஜாவுக்கும் கிட்டத்தட்ட ஆரம்பக் கால பாடல் எனலாம். SPB தமிழில் பாட ஆரம்பித்து சில வருடங்கள் ஆகியிருந்தாலும் குரல் அதே ஆரம்பக் கால இளமையை கொண்டிருக்கிறது.

திரைப் படம்: கண்ணன் ஒரு கைக் குழந்தை (1978)

இயக்கம்: N வெங்கடேஷ்
நடிப்பு: சிவகுமார், சுமித்ரா
குரல்கள்: S P B, P சுசீலா
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/16125275-755




மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

மஞ்சள் நீர் வண்ணமே
கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்

புள்ளி மான் கூட்டமே
கொஞ்சம் துள்ளுங்களேன்
கன்னன் தேரோடும் சமயம்

நாங்கள் கண்ணம் தொட்டு
பின்னலிட்டு விளையாடும் வரையில்

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

சின்ன வாழைத் தண்டு
என்னும் காலைக் கண்டு
வண்ண மீன் கூட்டம் தழுவ
அன்பு தேனைச் சிந்தி
என்னைக் காணச் சொல்லி
அந்த தேன் கூடு மலர
நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு
இதழாலே இணைய

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

கொஞ்சும் மாணிக்கங்கள்
சிந்தும் மணி முத்துக்கள்
உந்தன் செவ்வாயின் அழகு

அந்த காணிக்கைகள்
உந்தன் கண்ணங்களின்
தங்கும் பொன்னென்னும் நிலவு

இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
ஹ ஹ ஹா ஹா ஹா ஹா