பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஏப்ரல், 2014

மார்கழி பனியில் மயங்கிய நிலவில்

விஸ்வனாதனும் எஸ்பி பி யும் சேர்ந்தாலே பாடல் ஓஹோதான். பாடலில் கொஞ்சம், நினைத்தாலே இனிக்கும் வாடை வருவது எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் இனிமை.
நடிகர் ஜெய் கணேஷ் நாடக நடிகர். பின்னர் திரைக்கு வந்தார். சிவாஜி போல ஓவர் act கொடுத்ததால் ஒதுக்கப் பட்டார். நடுமையான வயதில் இறந்து போனார்.


திரைப் படம்: முத்தான முத்தல்லவோ (1976)
குரல்: S P பாலசுப்ரமணியம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: R விட்டல்
நடிப்பு: ஜெய் கணேஷ் , சுஜாதா
 


http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU5ODAyNF9Gc0NqRV82MTE4/Maargazhi%20Paniyil-Muthaana%20Muthalavoo.mp3








மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
/>ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

கார்க்குழல் தடவி
கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன்
இசை பாடி

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

வானத்தில் ஆயிரம்
தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே
வானத்தில் ஆயிரம்
தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே

கானத்தில் நாங்கள் கலந்திருந்தோம்
இனி வேறென்ன வாழ்கையிலே
இனி வேறென்ன வாழ்கையிலே
மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

நான் ஒரு கண்ணில்
நீ ஒரு கண்ணில்
நீந்தி வர
மாங்கனி தன்னை
பூங்கொடி என்று
ஏந்தி வர
நான் ஒரு கண்ணில்
நீ ஒரு கண்ணில்
நீந்தி வர
மாங்கனி தன்னை
பூங்கொடி என்று
ஏந்தி வர

ஆசை நாடகம்
ஆடி பார்க்கவும்
ஓசை கேட்குமோ
பேச கூடுமோ

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஆ ஆ ஆ ஆ ஆ

ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

கோமகள் என்னும் பூமகள் நெஞ்சில்
சாய்ந்து வர
தாமரைப் போலே ஒரு வைகை
பாய்ந்து வர
தேவ லோகமும்
தெய்வ கீதமும்
ராஜ யோகமும்
சேர்ந்து வந்ததோ

கார்க்குழல் தடவி
கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன்
இசை பாடி
இசை பாடி
இசை பாடி

திங்கள், 28 ஏப்ரல், 2014

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா

Gun படுமே பிறர் gun படுமே என்று தொடங்கி பாடினாலும் இனிமையான பாடல்.
கவிஞரின் கற்பனைக்கு எல்லையே இல்லை. இன்றைய இந்தியாவிற்கு .பொருத்தமான பாடலாக இருக்கும்.  பெண்கள்தான் தனியாக நடமாட முடியவில்லையே?

திரைப் படம் : காத்திருந்த கண்கள் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjEwMzMzNl9OZ2JRQV8xZTRk/Kan%20Padumey%20pirar.mp3









கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா


புண்படுமே புண்படுமே
புன்னகை செய்யலாமா

பூமியிலே தேவியைப் போல்
ஊர்வலம் வரலாமா

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா


ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே

ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே

காரிருள் போலும் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு

தமிழ் காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துகுள்ளே ஓடு

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா


கண்ணாடி முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும் உன்னைக் காணாதே

கண்ணாடி முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும் உன்னைக் காணாதே

மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம்

இந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

இப்பாடலுக்கு சிவாஜியுடன் இணைந்திருப்பவர் பல படங்களில் இதற்கு முன் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்த ஆலம் எனும் நடிகை. இதற்கு பிறகு அவருக்கு குத்தாட்ட வாய்ப்பும் கிடைக்கவில்லை. கதாநாயகி போன்று டூயட் பாடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இதற்கு பிறகோ அல்லது முன்னரோ மன்மத லீலையில் கமலுடன் கதாநாயகியாக நடித்தார். அத்துடன் காணாமல் போனார்.

இந்தப் பாடலில் டி எம் எஸ் அவர்களின் சற்று மிகையான குரலைத் தவிர  மற்றபடி அழகான பாடல். அதுவும் சிவாஜி என்பதற்காக குரலை சற்று உயர்த்திப் பாடியிருப்பார்.

சிவாஜியின் புகழுக்கு ஒரு அங்கமாக திகழ்ந்த இவரின் இறப்புக்கு சிவாஜி குடும்பத்தினர் ஒருவரும் வரவில்லை என்பதாக இணையத்தில் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறாரே? உண்மையா?

திரைப் படம்: என்னைப் போல் ஒருவன் (1978/1976??)
பாடியவர்கள்: டி  எம் எஸ், P சுசீலா
பாடல்: வாலி


இசை: M S விஸ்வனாதன் 
இயக்கம்: T R ராமண்ணா 
நடிப்பு: சிவாஜி, உஷாநந்தினி,




http://asoktamil.opendrive.com/files/Nl8zNjIwNjc2NF9KTExYcF9mYWQ2/Velaale%20Vizhigal.mp3













வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ஆ ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ
நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய
பூப்போன்ற மங்கை இங்கே
ஆ ஆ ஆ
பூப்போன்ற மங்கை இங்கே
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

வேலாலே விழிகள் 
இன்று ஆலோலம் இசைக்கும்

பட்டுச்சேலையில் மின்னும் பொன்னிழை
பாவை மேனியில் ஆடும்
தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்
கட்டுக் காவலை மீறும்

ஆ ஆ ஆ ஆ
கட்டும் கைவளை தொட்டும் மெல்லிசை
மொட்டும் உன்னுடன் ஓடும்
சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும்
பட்டம் போல் விளையாடும்

பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்

நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

வேலாலே விழிகள் 
இன்று ஆலோலம் இசைக்கும்

தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன்
சங்கமம் ஆவது என்று
திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன்
பொங்கும் நாடகம் என்று

ஓஓஓ...ஓ...
தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம்
தத்தைக்கே தரவென்று
சித்தம் சொன்னது வேகம் வந்தது
நித்தம் ஆயிரம் உண்டு

பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும்

கூடுங்கள் என்றோ பெண்ணுள்ளம் சொல்லும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ம் ம் ம் ம் 
வேலாலே விழிகள் 
இன்று ஆலோலம் இசைக்கும்

சிறு நூலாலே இடையில்
 
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்



புதன், 23 ஏப்ரல், 2014

மாதா பிதா குரு தெய்வம்

இப்போது இதெல்லாம் போல பாடல்கள் வருவதில்லை. அப்படியே வந்துவிட்டாலும் நம் குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. இந்தப் பாடலில் வரும் பல சொற்கள் இன்றைக்கு வழக்கத்தில் இல்லை. மாதா பிதா குரு தெய்வம் என்பது மம்மி டாட்டி டீச்சர் காட் என்றால்தான் புரியும். காலத்தின் கோலம். நாம் தாய் மொழியை மறந்து அடுத்த மொழியை வளர்க்க தலைப்பட்டுவிட்டோம். அடுத்தவன் குழந்தையை ஊட்டி வளர்த்தால் நம் குழந்தை தானாக வளரும் என்பதை தப்பாக எடுத்துக் கொண்டுவிட்டோம்.


திரைப்படம்: நான் பெற்ற செல்வம் (1956)
பாடியவர்: ஏ.பி. கோமளா
இயற்றியவர்: K M ஷெரிஃப்
இசை: G. ராமநாதன்
இயக்கம்: K சோமு 
நடிப்பு: சிவாஜி, G வரலக்ஷ்மி
  -



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjI5MzM3Ml9kNHJkT19mMDA0/Maata%20Pita%20Guru%20Deivam%20-%20Naan%20Petra%20Selvam.mp3









மாதா பிதா குரு தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்
 
ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது 
நாம் ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது 
நாம் ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதி உணர்ந்தது போலே
ஓதி உணர்ந்தது போலே 
என்றும் உண்மையாய் நடந்து உயர்வோம் மண்மேலே
 
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்
 
காலையில் எழுந்ததும் படிப்பு
காலையில் எழுந்ததும் படிப்பு 
பின்பு காலைக் கடனையும் உணவையும் முடித்து
காலையில் எழுந்ததும் படிப்பு 
பின்பு காலைக் கடனையும் உணவையும் முடித்து
நூலைக் கையிலே எடுத்து
நூலைக் கையிலே எடுத்து 
பள்ளி நோக்கி நடந்து கற்பது சிறப்பு
 
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்
 
தெய்வம் தொழுதிட வேண்டும் 
நம் தேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்
கைத்தொழில் பழகிட வேண்டும் 
மஹாத்மா காந்தியின் சொற்படி நடந்திட வேண்டும்
 
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்