பின்பற்றுபவர்கள்

புதன், 24 ஜூன், 2015

திங்கள் மாலை வெண்குடையான்...thingal malai venkudaiyaan...


இளங்கோவடிகள், தம் காப்பியத்தில், நாட்டியம், இசை ஆகிய இரு கலைகளையும் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கின்றார். முப்பது காதைகளுடைய காப்பியத்தில், நான்கு காதைகள் மக்களின் ஆடல் பாடல்களைப் பற்றியே அமைந்துள்ளன. அவை கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை ஆகிய பகுதிகளாகும். 
கானல்வரியில் கடற்கரைச் சோலையிலுள்ள மீனவர்களின் பாடல்களும், காவிரி ஆறு பற்றிய பாடல்களும் அமைந்துள்ளன.  வேட்டுவவரியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்களை அமைத்துள்ளார்.  ஆய்ச்சியர் குரவையில் கண்ணனை வழிபடும் இடையர் மகளிரின் ஆடலும் பாடலும் உள்ளன.குன்றக்குரவையில் மலைப்பகுதியில் வாழும் மக்களின் ஆடல் பாடல்கள் உள்ளன. இவை நான்கும் தவிர,  இருபத்தொன்பதாவது காதையில் பலவகை நாட்டுப் பாடல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளார். பெண்கள் கூடியிருந்து விளையாடும் அம்மானைப் பாடல், பந்தடித்துப் பாடும் கந்துகவரி, ஊசலாடிப்பாடும் ஊசல்வரி, நெல்குற்றும்போது பாடும் வள்ளைப்பாட்டு என்பவற்றை அமைத்துள்ளார்.  இவையெல்லாம் இளங்கோவடிகளின் கலையுள்ளத்தையும்,  மக்களின் ஆடல் பாடல்களைப் போற்றி மதித்த பண்பையும் வெளிப்படுத்துகின்றன. 
தமிழர்களின் இசை இலக்கண நூலாகவும் சிலப்பதிகாரம் விளங்குகிறது.  வாழ்த்துப்பாடல், அரங்கேற்றுகாதை, கானல்வரி, வேனிற்காதை, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, துன்பமாலை, ஊர் சூழ்வரி, வஞ்சினமாலை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன அக்கால இசைக்கலையைப் பற்றியும் இசைப்பாடல் அமைதி பற்றியும் விளக்குகின்றன.
மாதவி,  தன் நாட்டியக் கலையை நாட்டிய ஆசிரியனிடம் மட்டும் பயிலவில்லை. அவ்வாசிரியனுடன், இசை, தண்ணுமை, குழல், யாழ் ஆசிரியர்களும் அவளுக்குப் பயிற்சி அளித்தனர். இச்செய்தி,

 நன்றி: srmuniv.ac.in/tamilperayam

The singer is KJ Yesudoss (MalayAlee), the other version is sung by P Susheela (Telugu) tuned by Salil (Bengali), for a movie to be directed by Ramu Kariat (a MalayAlee). Yet, the song has perfectly captured the forlorn spirit of kANalvari and the grand epic. Yesudoss has come up with an impeccable rendition. The song is loosely based in chakravaaham (one the generic carnatic raaga).
The variation of this by P Susheela is missing the emotional undercurrent of kANalvari and has a more celebration mood to it, with chorus in the interludes. I guess Salil should have been briefed about kANalvari, that it takes places in a beach and during a carnival atmosphere. He has attempted two variations, one manifesting the emotions and the other the locale. But kANalvari lyrics have more emotive desolateness to them and Yesudoss' version stands out easily, bringing out the emptiness of kOvaln's heart.
நன்றி: www.salilda.com


இங்கே பாடல் வரிகள் சுசீலா அம்மா பாடியுள்ள பாடலில் இருந்து பதியப் பெற்றது. 1973களில் வழக்கம் போல சிலோன்  வானொலி இந்தப் பாடலை பிரபலப் படுத்தியது. பாடல் காட்சிக் கிடைக்கவில்லை. இந்தப் படம் வெளியானதா என்பதிலேயே பல கருத்து வேறுபாடுகள். நம்ம நாகராஜன் சார்தான் விளக்கம் சொல்லணும்
படம் : கரும்பு படம் : கரும்பு (1973)
குரல் : P சுசீலா மற்றும் K J யேசுதாஸ் தனித் தனியே பாடிய பாடல்கள்.
பாடல் : இளங்கோ அடிகள்
இசை : சலீல் சௌத்ரி
இயக்கம்: ராமுகாரியத் 












திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி 
புலவாய் வாழி காவேரி 

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் 
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி 

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி 
புலவாய் வாழி காவேரி

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி 
புலவாய் வாழி காவேரி 

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் 
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி 

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி 
நடந்தாய் வாழி காவேரி 

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி 

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி 
நடந்தாய் வாழி காவேரி 

பாடல் : இளங்கோ அடிகள் இசை : சலீல் சௌத்ரி பாடலைக் கேட்க இங்கே திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி ! புலவாய் வாழி காவேரி ! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் ! மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி ! மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி ! புலவாய் வாழி காவேரி ! கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் ! மன்னும் மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி ! உழவர் ஓதை மதகோதை உடை நீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி ! நடந்தாய் வாழி காவேரி ! விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்ததெல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி !

வியாழன், 18 ஜூன், 2015

வான் நிலா நிலா அல்ல..vaan nila nila alla..


எப்படி எல்லாமோ எதிர்பார்த்த சிவச்சந்திரன் எப்படியோ ஆகிப் போனார். நல்லது. இந்தப் பாடல் வரிகளை எடுத்து எழுதும் போதே ஒரு இதமான இன்பம். சுகமான பாடல். மெல்லிய இசையில் மென்மையான கவிதை வரிகள். அழகான வயலின்.
முக்கியமாக எஸ் பி பி.....


திரைப் படம்: பட்டினப் பிரவேசம் (1977)
இசை: M.S.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம் மற்றும் வயலின்.....!!!???
நடிப்பு: ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், மீரா, ஸ்வர்ணா
இயக்கம்: K பாலசந்தர்












லா ல ல லாலா லலல லா ல லா
லா ல ல லாலா லலல லா ல லா
லா ல ல லாலா லலல லா ல லா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

மானிலாத ஊரிலே
சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே
சாயல் கண்ணிலா

பூவிலாத மண்ணிலே
ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா
புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா
அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா
அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா
ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா

சொந்தம் இருளிலா
ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா
ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள்
என்னிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா


வெள்ளி, 12 ஜூன், 2015

துள்ளாத மனமும் துள்ளும்...thullaatha manamum thullum...

பாடலின் தன்மையை உணர்ந்து இனிமையாகப் பாடியிருக்கும் திருமதி ஜிக்கி    அவர்களுக்கும்  சாகா வரம் பெற்ற பிறவிக் கவிஞன் பட்டுக்கோட்டையாரின்  பாடலை எந்த வகையிலும் சிதைக்காமல் இசையமைத்த ஜிககியின் கணவர் A M ராஜா அவர்களுக்கும்  இங்கு நன்றி கூறுகிறோம்.


திரைப்படம்: கல்யாணப் பரிசு (1957)

பாடியவர்: ஜிக்கி


இயற்றியவர்: பி. கல்யாண சுந்தரம்


இசை: ஏ.எம். ராஜா


நடிப்பு: ஜெமினி,  சரோஜா தேவி 

இயக்கம்: சி வி ஸ்ரீதர் 













ம் ம் ம ம் ம் ம் ம ம் ம் ம் ம ம்

துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும் 

இன்பத்தேனையும் வெல்லும்

இசை இன்பத் தேனையும் வெல்லும்


துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும் 

இன்பத்தேனையும் வெல்லும்

இசை இன்பத் தேனையும் வெல்லும்


துன்பக் கடலைத் தாண்டும் போது 

தோணியாவது கீதம்

துன்பக் கடலைத் தாண்டும் போது 

தோணியாவது கீதம்

அன்புக் குரலில் அமுதம் கலந்தே 

அருந்தத் தருவதும் கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும் 

இழுத்து வருவதும்  கீதம்

இணைத்து மகிழ்வதும் கீதும் 

துயர் இருளை மறைப்பதும் கீதம்


துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும் 

இன்பத்தேனையும் வெல்லும்

இசை இன்பத் தேனையும் வெல்லும்


சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் 

தோகை விரித்தே வளர்ந்திடும்

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் 

தோகை விரித்தே வளர்ந்திடும்

சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்

தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன் 

வரவு கண்டே மகிழ்ந்திடும்

உறவு கொண்டால் இணைந்திடும் 

அதில் உண்மை இன்பம் விளைந்திடும்


துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும் 

இன்பத்தேனையும் வெல்லும்

இசை இன்பத் தேனையும் வெல்லும்

திங்கள், 8 ஜூன், 2015

வண்ணப் பூஞ்சோலை வாழ்க்கை...vanna poonjolai...


நன்றி: Subramanian Krishnaswamy manian [spbfans] மற்றும்  கோவை ரவி 
அவர்கள்.


1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது, "இதுதான் பதில்'' என்றொரு படத்தை அவரே தயாரித்து இயக்குவதாக இருந்தார். அப்போது அவரைப் பார்க்கச் சென்றேன்.

"படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை அமைக்கிறார். நாளை மறுநாள் பாட்டு எழுதவேண்டும். சத்யா ஸ்டூடியோவுக்கு காலை 8 மணிக்கு வந்து விடுங்கள்'' என்றார். அதன்படி நான் சென்றேன்.

எம்.எஸ்.வி. அவர்கள் போட்ட டிïனுக்கு நான் பல்லவி எழுதினேன்.

"வண்ணப் பூஞ்சோலை; வாழ்க்கை பொன் மேடை. வளமோடு நீ வாழலாம்'' என்று ஆரம்பமாகும் அந்தப் பாட்டு.

சரணத்திற்கான டியூனை மட்டும் வாசித்துக் காட்டுங்கள், என்றார், எம்.ஜி.ஆர். எம்.எஸ்.வி. வாசித்துக் காட்டினார். "இந்தப் பாடல் நாளைக்கு ரிக்கார்டிங் ஆகவேண்டும். அதனால் இன்று இரவு 10 மணிக்கே எனக்குப் பாடலை எழுதிக்காட்டு என்றார், எம்.ஜி.ஆர்.

இரவு 10 மணிக்கு எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ'', "விக்கிரமாதித்தன்'' முதலிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம்தாஸ் என் வீட்டிற்கு வந்து எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்குக் கூட்டிச்சென்றார். அங்கிருந்து தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம் சரணங்களைப் படித்துக் காட்டினேன். நான் எழுதியது சரியில்லை என்று சொல்லி அவரே சில கருத்துக்களைக் கூறினார். அதற்கேற்ப சரணங்களை எழுதி அவரிடம் வாசித்துக் காட்டி ஒப்புதல் பெற்றபோது இரவு இரண்டு மணி ஆகிவிட்டது.

மறுநாள் பாடல் ஒலிப்பதிவின்போது ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்திருந்து ஒலிப்பதிவு முடியும் வரை இருந்து பாடலை மிகவும் பாராட்டினார்.

எம்.ஜி.ஆர். சென்ற பிறகு டைரக்டர் நீலகண்டனிடம், "இந்தப் பாடலை பதிவு செய்தது வீண் வேலை'' என்றேன். `என்னய்யா இப்படிச் சொல்கிறாய்?'' என்று கேட்டார், நீலகண்டன்.

"ஆம். தேர்தல் அறிவிப்பு நாளையோ நாளை மறுநாளோ வரப்போகிறது. தேர்தலில் ஜெயித்து மீண்டும் தலைவர் ஆட்சிக்கு வரப்போகிறார். அதனால் இந்தப் படத்தில் அவர் நடிக்கப் போவதில்லை. அதனால் பாடலுக்காக செய்யும் செலவும் வீண்'' என்றேன்.

அதை எம்.ஜி.ஆரிடம் அப்போதே போய் அவர் சொல்லிவிட்டார்.

"முத்துலிங்கம் அப்படியா சொன்னார்? தேர்தல் வரும்போது வரட்டும். இப்போது வேலையைப் பார்ப்போம். நாளை சந்திப்போம்'' என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆனால், அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது!


படம் தயாரிப்பதை ஒத்திவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நான் சொன்னதைப் போலவே, அமோகமான வெற்றி பெற்று ஆட்சியில் மீண்டும் கம்பீரத்துடன் அமர்ந்தார். "இதுதான் பதில்.'' படம் கைவிடப்பட்டது.

அதற்குப் பிறகுதான், எனக்கு "கலைமாமணி விருது'', "பாரதி தாசன் விருது'' ஆகிய விருதுகளை வழங்கினார்.

அதற்குப் பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அதற்கடுத்து அரசவைக் கவிஞராகவும் என்னைப் பதவியில் அமர்த்தினார்.''

இவ்வாறு கூறினார், கவிஞர் முத்துலிங்கம்14/04/11212935/cinema-history.html
cinema.maalaimalar.com


படம்  : இதுதான் என் பதில் [1980]
எழுதியவர் :    அ. முத்துலிங்கம் 
இசையமைப்பாளர்    :   எம். எஸ். விஸ்வநாதன் 
பாடியவர்   : எஸ். பி. பாலசுப்ரமணியன் 
நடிப்பு: எம் ஜி யார்.



வண்ணப் பூஞ்சோலை 
வாழ்க்கை பொன்மேடை
வண்ணப் பூஞ்சோலை 
வாழ்க்கை பொன்மேடை
வளமோடு நீ வாழலாம்
புள்ளி மயில் போல நீ ஆடலாம்
குயில் போலவே இன்ப வான்மீதிலே
மகிழ்வோடு இசை பாடலாம்
வண்ணப் பூஞ்சோலை 
வாழ்க்கை பொன்மேடை
வளமோடு நீ வாழலாம்
புள்ளி மயில் போல நீ ஆடலாம்

வையக வாழ்க்கை ஒரு சாலை அல்லவோ
பள்ளமும் மேடும் ஒரு பாடம் அல்லவோ
வையக வாழ்க்கை ஒரு சாலை அல்லவோ
பள்ளமும் மேடும் ஒரு பாடம் அல்லவோ
விழுகிற அடிக் கூட விழுப்புண் ஆகலாம்
வியர்வைகள் விதையானால் பலன் சிறக்கலாம்
வளமோடு நீ வாழலாம்
புள்ளி மயில் போல நீ ஆடலாம்
வண்ணப் பூஞ்சோலை 
வாழ்க்கை பொன்மேடை
வளமோடு நீ வாழலாம்
புள்ளி மயில் போல நீ ஆடலாம்

வளைவுகள் திருப்பங்கள் வழியை மாற்றலாம்
வழி சொல்வோர் வேறொரு திசையை காட்டலாம்
வளைவுகள் திருப்பங்கள் வழியை மாற்றலாம்
வழி சொல்வோர் வேறொரு திசையை காட்டலாம்
கலங்கரை விளக்காக நீ மாற வேண்டும்
கரை சேர நினைப்போர்க்கு ஒளியாக வேண்டும்
வண்ணப் பூஞ்சோலை 
வாழ்க்கை பொன்மேடை
வளமோடு நீ வாழலாம்
புள்ளி மயில் போல நீ ஆடலாம்

சத்திய பயணத்தில் குறுக்கீடு செய்வார்
துணிவுடன் நாம் சென்றால் தோற்றோடிப் போவார்
கொள்கையில் மலைப் போல நிலையாக இருப்போம்
வெற்றிக் கொடியேற்றி புகழ் நாட்டி வரலாறு படைப்போம்
கொடியேற்றி புகழ் நாட்டி வரலாறு படைப்போம்
வண்ணப் பூஞ்சோலை 
வாழ்க்கை பொன்மேடை
வளமோடு நீ வாழலாம்
புள்ளி மயில் போல நீ ஆடலாம்