பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை


இனிமையான் பாடல் வரிகளுடன் இசை கோர்த்து குரல்கள் அழகாக கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்தி பாடலின் தழுவல்தான்.

திரைப் படம்: நீயா (1979)
பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடிப்பு: விஜயகுமார், மஞ்சுளா, கமல்
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: துரை
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/16670460-d77



http://www.divshare.com/download/16670624-d51

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்க சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்க சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எது வரை என்றாலும் இன்னும் இன்னும் கொஞ்சம் என்பேனே

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன இன்னும் சொல்வேனோ

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

இதமா சரி தான் காதல் கனி நீ
கனி நீ பதமா காமன் கனி நீ
இதமா சரி தான் காதல் கனி நீ
கனி நீ பதமா காமன் கனி நீ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவென சொன்னாலும் இன்பம் இன்பம் என்னைத் தந்தேனே

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

வெள்ளி, 27 ஜனவரி, 2012

கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்


மென்மையான பாடல். காணொளியில் மலையாள வரிகளை நீக்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது. முழுமையாக இல்லை. ஆனாலும் இனிமையானப் பாடல்.

திரைப் படம்: அந்த 7 நாட்கள்
குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: K பாக்கியராஜ், அம்பிகா
இயக்கம்: K பாக்கியராஜ்









சசக நிசபானி ச ச
சச சமகனிச பனி ச ச
நி ச  ச ப ப ப ப பதம  ம ம ம
கமக கம கம நிப க ரி ச நி

ஸப்தஸ்வர தேவியுணரு
இனி என்னில் வரகானமருளு
நீ அழகில் மமனாவில் வாழு-என்
கருவில் ஒளிதீபம் ஏற்று
ஸப்தஸ்வர தேவியுணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன்பாதம் தேடி வரும்
பாவை என்னாசை கோடி
பார்வை உன்பாதம் தேடி வரும்
பாவை என்னாசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்

உன் அங்கம் தமிழோடு சொந்தம்-அது
என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு

மனம் கங்கை நதியான உவமை
இனி எங்கே இமை மூடும் நிலைமை

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்தால் காயும்  இந்த
நிலைமை எப்போது மாறும்

என் இளமை மழை மேகம் ஆனால்  உன்
இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது


பாடல் காட்சி வழக்கம் போலதான் என்றாலும் பாடல் வரிகளும் பின்னனி இசையும் இனிமை.

திரைப் படம்: இசை பாடும் தென்றல் (1986)
குரல்கள்: K J யேஸுதாஸ், S ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: மு மேத்தா
இயக்கம்: S தேவராஜன்
நடிப்பு: சிவகுமார், அம்பிகா




http://www.divshare.com/download/16644926-1ee



http://www.divshare.com/download/16644976-219

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சின்ன சின்ன நூல்களில் பூக்கள் வரைந்தேன்
ஆஹா என்னை வைத்து நான் அதில் பின்னி இருந்தேன்
கைக்குட்டையில் சின்னம் ஒன்று கண்டு பிடித்தேன்
நீ பின்னி வைத்த பூவுக்கு முத்தம் கொடுத்தேன்
காதல் இதயம் கண்டு முடித்தேன்
கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்
பின்னி முடித்த நூல்களுக்குள் நான் சிக்கி தவித்தேன்
சிக்கி தவித்தேன் சிக்கலெடுத்தேன்

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா

கைக்குட்டையில் வேர்வையை துடைத்ததில்லை அதற்கு
வலித்திடும் என்று நான் மடித்ததில்லை
உந்தன் கையில் தந்தது துணியும் இல்லை என்
இதயத்தைதான் தந்தேன் வழியும் இல்லை
உன்னை நினைத்தால் உறக்கமில்லை
இன்ப கிளியே இரக்கமில்லை
வாய் திறந்து என் பெண்மை சொல்வது வழக்கமில்லை
பழக்கமில்லை விளக்கமில்லை

அந்த கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் இந்த காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் இந்த காதலி தந்தது
அந்த கைக்குட்டையை யார் எடுத்தது
நான்தான் நான்தான் நான்தான் நான்தான்

புதன், 25 ஜனவரி, 2012

மாலை என்னை வாட்டுது மண நாளை மனம் தேடுது

இன்று மீண்டும் T ராஜேந்தரின் இனிமையானப் பாடல் ஒன்று.

திரைப் படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
பாடியவர்கள்: S P B, S ஜானகி
இசை: T ராஜேந்தர்




http://www.divshare.com/download/16638892-ae1



http://www.divshare.com/download/16642412-5a5

மாலை என்னை வாட்டுது

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னை தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை
இதையமும் தூங்காதா
தாகமும் தனியாதா எந்தன்
மோகமும் தீராதா

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

உன் கோவில் சேர பூத்திட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால்
உன் கோவில் சேர பூத்திட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா மடியை
தலையணை ஆக்கிடவா
இருகரம் சேர்த்திடவா இல்லை
என்னையே ஏற்த்திடவா

மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது
மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

திங்கள், 23 ஜனவரி, 2012

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


நல்ல பாடல். மறைந்த  திரு மலேஷியா வாசுதேவன் இனிமையாக பாடி இருக்கிறார். கதா நாயகன் ஏதோ தப்பான எண்ணத்துடன் பாடுவது போல படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

திரைப் படம்: விடியும் வரைக் காத்திரு (1981)
இயக்கம்: K பாக்கியராஜ்
நடிப்பு: K பாக்கியராஜ், சத்யகலா
இசை: இளையராஜா
குரல்கள்: மலேஷியா வாசுதேவன், S ஜானகி
பாடல்: வாலி



http://www.divshare.com/download/16611560-4f4




நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ம்...என்னாங்க அது
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்

மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அது போலவே உன்னை காண நான் அலைபாய்கிறேன்
ல ல ல ல ல ல ல
மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உன்னை தினம் அனுபவிப்பேன்

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
ஆ ஆ ஆ ஆ ஆ
என்னென்ன சொல் இன்னாளிலே நிறைவேற்றுவேன்
ல ல ல ல ல ல ல
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்


மீண்டும்  S  P B யின்  ஒரு ஆரம்பக் காலப் பாடல். இனிமை. நல்ல அர்த்தம் மிக்க கவிதை வரிகளும் இசையும். 70களில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்.

திரைப் படம்: ஏன் (1970)
இசை: T R பாப்பா
குரல்: S P B
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ரவிசந்திரன், லக்ஷ்மி
இயக்கம்: T R ராமண்ணா




http://www.divshare.com/download/16611993-ae2



http://www.divshare.com/download/16611996-08e

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியை போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர் கதை உண்டு
முடிக்க வேண்டும் என்று முடிப்பதும் உண்டு

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான்

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

வெள்ளி, 20 ஜனவரி, 2012

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ


இளையராஜாவின் இசை மழையில் ஒரு நினைவு, ஒரு நனைவு. அட்டகாசமான S P B யின் குரல் வளம்.

திரைப் படம்: பயணங்கள் முடிவதில்லை.
நடிப்பு: மோகன், பூர்ணிமா
இயக்கம்: R சுந்தரராஜன்
பாடல்: வைரமுத்து




http://www.divshare.com/download/16583577-523



http://www.divshare.com/download/16583693-5cf

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாலும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோலம் போடும் நானங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்னமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுதாகி
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாலும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

வியாழன், 19 ஜனவரி, 2012

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து


புல் புல் தாரா போன்ற இசை கருவிகள் அருகி வரும் இன்னேரத்தில் இந்தப் பாடல் இனிமை தருகிறது. யோக்கியமான கவிதை வரிகளுடன் இசைவான
P B  ஸ்ரீனிவாஸ் குரலில்.

திரைப் படம்: பொன்னித் திரு நாள் (1960)
குரல்: P B ஸ்ரீனிவாஸ்
நடிப்பு: வளையாபதி முத்துகிருஷ்ணன், ராஜசுலோசனா
இசை: K V மகாதேவன்
இயக்கம்: A K வேலன்



http://www.divshare.com/download/16605376-955



ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
பயின்றதெல்லாம் உன்னிடம்தானா

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா
சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரி மான் என்பதும் உன் இனம்தான

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

செவ்வாய், 17 ஜனவரி, 2012

வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பருவம்


இந்தப் பாடலை இவரால்தான் சிறப்பிக்க முடியும் என்று மீண்டும் ஒரு முறை நம்ப வைக்கிறது.

திரைப் படம்: காத்திருந்த கண்கள் (1962)
இசை: M S விஸ்வனாதன்,T K  ராமமுர்த்தி
பாடல்:  கண்ணதாசன்
பாடும் குரல்: P சுசீலா
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்




http://www.divshare.com/download/16590142-375




http://www.divshare.com/download/16590326-e1f


ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்

கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்

மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் - அவர்
யார் என்றது இதயம்

மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன

ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்

ஏதோ ஒரு வகை எண்ணம்
அதில் ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறை கண்டேன்
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்

திங்கள், 16 ஜனவரி, 2012

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்


இளையராஜாவின் வழக்கமான வயலின் இசைக் கூட்டத்துடன் ஒரு இனிய பாடல்.

திரைப் படம்: வெள்ளை ரோஜா (1983)
நடிப்பு: சிவாஜி, பிரபு, சுரேஷ், ராதா
இயக்கம்: A ஜெகன் நாதன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
குரல்கள்:S P B, S ஜானகி




http://www.divshare.com/download/16552403-77c



http://www.divshare.com/download/16552444-777

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஒரு நானம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது
மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே
விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே
லலலல லலலல லலலல லலலல

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் தஞ்சம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு
கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது
மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது
உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது
லலலல லலலல லலலல லலலல

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஒரு நானம் கொள்ளாமல்
பபப்பே
ஒரு வார்த்தை இல்லாமல்
பபப்பே
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தை மாதப் பொங்கலுக்கு தாய்


அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இன்று மீண்டும் P சுசீலா அவர்களின் குரலில் இனிய தை பொங்கல் தாலாட்டு பாடல் ஒன்று.

திரைப் படம்: நிலவே நீ சாட்சி (1970)
பாடியவர்: P சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா
இயக்கம்: P மாதவன்



http://www.divshare.com/download/16576934-ba1

தை மாதப் பொங்கலுக்கு தாய்
தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
தை மாதப் பொங்கலுக்கு தாய்
தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே

மையாடும் பூவிழியில் மானாடும் நாடகத்தை
மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
நீ என்னைத் தேடுவதும்
காணாமல் வாடுவதும்
கடவுள் தந்த காதலடி வாடி
ஆரீராரீராரோ சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

தை மாதப் பொங்கலுக்கு தாய்
தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே

பூந்தென்றல் ஊரெங்கும் உன் முகத்தைத் தேடி
புது வீடு கண்டதடி வாடி
தேனூறும் தாமரையைப்
பார்த்தாக வேண்டுமென்று
நூறு கண்கள் வாடுதடி வாடி
ஆரீராரீராரோ சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

தை மாதப் பொங்கலுக்கு தாய்
தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே

தாயாக நான் மாறி தங்க மகள் வாழ
தந்து விட்டேன் என்னையடி வாடி
யாரோடு யார் என்று
காலமகள் எழுதியதை
யார் மாற்ற முடியுமடி வாடி
ஆரீராரீராரோ சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

வெள்ளி, 13 ஜனவரி, 2012

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்


மென்மையான பாடல். எந்தக் கட்டுக்கும் அடங்காத இசையமைப்பு. பாடும் குரல்களால் பாடலுக்கு சிறப்பு.

திரைப் படம்: ஆத்மா (1993)
நடிப்பு: ராம்கி, கௌதமி
இசை: இளையராஜா
இயக்கம்: பிரதாப் போத்தன்
பாடல்: வாலி
குரல்கள்: K J யேஸுதாஸ், S ஜானகி

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/WhU76M3Ggws?rel=0" frameborder="0" allowfullscreen></iframe>




http://www.divshare.com/download/16557507-1e0

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

கடற்கரை தனில் நீயும் நானும் உலவும் பொழுது
பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர் வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம் மேனி உன் வசமோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே, என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

வியாழன், 12 ஜனவரி, 2012

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி


இசையமைத்தவர் கீரவாணி அல்லது மரகத மணி யாரென்று சரியாகத் தெரியவில்லை.இன்றைய காலகட்டத்திற்க்கு உதவாத நல்ல கருத்துக்கள் கொண்ட ஒரு அழகு பாடல்.

திரைப் படம்: அழகன் (1991)
நடிப்பு: பானு பிரியா, கீதா, மதுபாலா, மம்மூட்டி
இசை: கீரவாணி
இயக்கம்: K பாலசந்தர்
பாடல்: வாலி
குரல்: S P B




http://www.divshare.com/download/16552309-c86



http://www.divshare.com/download/16552447-124

சாதி மல்லிப் பூச்சரமே
சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு


சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என
இல்லோரும் அதில் இன்பத்தை தேடனும்

சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி

உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத நினைச்சி  நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு
சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி

புதன், 11 ஜனவரி, 2012

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே


ஆண்குரல் K J யேஸுதாஸ் குரல் போல் தெரிகிறது. நல்ல பாடல் குரல்களின் இனிமையால்.

திரைப் படம்: கை நாட்டு (1998)
குரல்கள்: ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
நடிப்பு: ரகுவரன், நிஷாந்தி
இசை: சந்த்ர போஸ்
இயக்கம்:  V C குக நாதன்



http://www.divshare.com/download/16488926-da4

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே
அந்த நாளின் ஞாபகம்
எங்கள் அன்பின் தாயகம்
ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்
உன் வீணைதான் பொன் வீணைதான்
நீ இல்லையேல் ஊமை நான்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே

கூவும் காதல் கோகிலம்
இங்கு எந்தன் கோகுலம்
கண்ணன் என்னும் கள்வன்
கண்ணும் கால் தடம்
செந்தாமரை ஏன் வேர்த்ததோ
என் தாமரை பூத்ததோ
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே

செவ்வாய், 10 ஜனவரி, 2012

மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம்


நல்ல இனிமையான சோக கீதம்

திரைப் படம்: ஆட்டோ ராஜா (1982)
குரல்: S P B
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: விஜயகாந்த்,  வனிதா
இயக்கம்: K விஜயன்




http://www.divshare.com/download/16544532-23d






மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ
இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலை உதிர் காலத்தில்
இங்கே பூ வேது காயேது
நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்

திருச் சபை ஏறிடும்
அர்ச்சனை மலரே
நீ எங்கே நான் இங்கே
திருச் சபை ஏறிடும்
அர்ச்சனை மலரே
நீ எங்கே நான் இங்கே

நீ எங்கே நான் இங்கே

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா மலரே நலமா

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு

அழுதிடும் குழந்தையின்
அம்புலி பருவம் என்னோடு
நான் கண்டேன்

இருக்கும் வர்கங்கள் ரெண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை
தழுவிட நினைத்தால்

சமவெளி மலைகளை
தழுவிட நினைத்தால்
வழியேது முடியாது
வழியேது முடியாது
வழியேது முடியாது
மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி கண்ணாடி பார்த்தால் தாங்கதடி


இந்தப் பாடலின் ஆண் குரலில் அழகானப் பூக்கள் அசைந்தாடுமே... முன்னரே இந்த தளத்தில் இணைக்கப் பட்டுள்ளது. இது பெண் குரலில் மாறுபட்ட பாடல். படக் காட்சி என்னவோ ஆண் குரல் பாடல்தான். இரண்டுமே இனிமைதான்.

திரைப் படம்: அன்பே ஓடி வா (1984)
குரல்: ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
இயக்கம்: ரஞ்சித் குமார்
நடிப்பு: மோகன், ஊர்வசி







http://www.divshare.com/download/16533100-d8a











http://www.divshare.com/download/16529985-0c6




ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணாடி பார்த்தால் தாங்கதடி
ஓ ஓ ஓ ஓ ஓ
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணாடி பார்த்தால் தாங்காதடி
என் மௌனம் என் எண்ணம் சொல்லாதோ
சொல்லாமல் என் பெண்மை தள்ளாடாதோ
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணடி பார்த்தால் தாங்காதடி

காலங்களே சொல்லுங்களேன் காதல் ஒரு மாயம்
காணாமலும் ஆறாமலும் நெஞ்சில் ஒரு காயம்
நேற்று வரை என் வாசலில் நான் போட்டதே கோலம்
நீராடும் நினைவுகளே நெஞ்சின் பாரமா
ஆடை கொண்டு மூடும் நிலா யாரது நானா
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணாடி பார்த்தால் தாங்கதடி

என் ஜன்னலின் ஓரம் வந்து தென்றல் என்னை பார்க்கும்
என்னை கண்டு பாவம் என்று தென்றல் முகம் வேர்க்கும்
நீந்தி செல்லும் மேகம் ஒன்று ஏதோ என்னை கேட்கும்
கனவில் வரும் ரோஜாக்கள் வாசம் வீசுமா
கார்க்காலத்தில் பாடும் குயில் யார் அது நானா
கனவோடு எங்கும் இளம் பூங்கோடி
கண்ணடி பார்த்தால் தாங்கதடி
என் மௌனம் என் எண்ணம் சொல்லாதோ
சொல்லாமல் என் பெண்மை தள்ளாடாதோ
கனவோடு எங்கும் இளம் பூங்கோடி
கண்ணடி பார்த்தல் தாங்கதடி
ஓ ஓ ஓ ஓ ஓ

சனி, 7 ஜனவரி, 2012

பனி மழை விழும் பருவ குளிர் எழும்


திரைப் படம்: எனக்காகக் காத்திரு (1981)
குரல்கள்: சைலஜா, தீபன் சக்ரவர்த்தி
நடிப்பு: சுமன், சுமலதா
இயக்கம்: நிவாஸ்
இசை: இளையராஜா




http://www.divshare.com/download/16460664-cdc



http://www.divshare.com/download/16530011-beb

பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
சில்லென்ற காற்றாட
சேர்ந்த மனம் தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமே
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
மாறாத காதலுக்கு தூது செல்லுதே
பூ மேகமே
பூவான காதலிக்கு சேதி சொல்லுதே
என் மோகமே
வா வா அன்பே
தா தா என்பேன்
நீர் ஓடை போல ஓடும்
நெஞ்சோடு காதல் ராகம்
காதில் கேட்கும்
கல்யாண தாளம்
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
நீங்காமல் வாழுகின்ற காலம் என்னுதே
என் உள்ளமே
நெஞ்சோடு சேருகின்ற ஆசை கொண்டதே
பெண் உள்ளமே
வா வா இன்று
நீ தா ஒன்று
எங்கெங்கும் தேவ கானம்
என்னுள்ளில் காணும் மோனம்
வாழும் காலம்
உன்னோடு சேரும்
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
சில்லென்ற காற்றாட
சேர்ந்த மனம் தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

வெள்ளி, 6 ஜனவரி, 2012

சந்தனத்தில் நிறமெடுத்து செண்பகத்தில் மணம் குங்குமத்தில் பொதிந்த உடல் எடுத்து


இன்று ஒரு இனிமையான பழைய S ஜானகியின் குரலில் ஒரு பாடல். எனக்கென்னவோ சமீபத்திய S ஜானகி அவர்களின் குரலைவிட அவரது ஆரம்பகாலக் குரலே ரொம்பவும் பிடிக்கிறது. ஆனால் இந்த பாடல் எத்தனை பேருக்கு பிடித்திருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் சந்தேகமே.

திரைப் படம்: தென்றல் வீசும் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: S ஜானகி, G K வெங்கடேஷ்
நடிப்பு: கல்யாண் குமார், கிருஷ்ண குமாரி
இயக்கம்: B S ரெங்கா



ஆ ஆ ஆ ஆ ஆ  தாம சரி தாப காம சரிகம ஆ ஆ ஆ ஆ ஆ
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 
கம பா நிதப ரிகம சரி மக ரி         

வண்ணமலர் இதழ் அணைத்து 
வைத்திருக்கும் தேன் எடுத்து 
வண்ணமலர் இதழ் அணைத்து 
வைத்திருக்கும் தேன் எடுத்து 
உண்ண இன்னும் தயங்குவதேன் 
நீர் உறக்கத்தில் மயங்குவதேன் 
உண்ண இன்னும் தயங்குவதேன் 
நீர் உறக்கத்தில் மயங்குவதேன் 
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 
கம பா நிதப ரிகம சரி மக ரி         

மின்னலதில் இழை எடுத்தே 
கருமேகமதில் குழல் பதிக்க
என்னழகு கசந்திருந்தால்
இனி யார் அழகில் கரும்பிருக்கும் 
என்னழகு கசிந்திருந்தால்
இனி யார் அழகில் கரும்பிருக்கும் 
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 

கம பா நிதப ரிகம சரி மக ரி         
கண் சிவக்கும் முகம் சிவக்கும் 
கால் கட்டைவிரல் கோலமிடும் 
பொன் சுமக்க உடல் தவிக்கும்
இந்தப் பெண் இருக்கும் இடம் இனிக்கும் 
பொன் சுமக்க உடல் தவிக்கும்
இந்தப் பெண் இருக்கும் இடம் இனிக்கும் 
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 



வியாழன், 5 ஜனவரி, 2012

நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன் கனவு காணும் கண்ணிரெண்டும் கண்ணான கண்ணா


மிக நல்ல இனிமையான பாடல்

திரைப் படம்: புண்ணிய பூமி (1978)
இசை:  M S விஸ்வனாதன்
குரல்: S ஜானகி
நடிப்பு: சிவாஜி, வாணிஸ்ரீ
இயக்கம்: K விஜயன்



http://www.divshare.com/download/16518335-061

நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும் கண்ணிரெண்டும் கண்ணான கண்ணா உன் கண்களே
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

என் வீடு என் வாசல் உன் கோவிலே
ஐயா உன் செல்வங்கள் என் கையிலே
தாய் வீட்டுச் சீரென்ன என் வாழ்விலே
என்னாளும் தலைமாட்டில் உன் காவலே
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

கண்ணீரும் உனக்கான அபிஷேகமே
நான் பார்க்கும் பஞ்சாங்கம் மாங்கல்யமே
என் பூஜை எப்போதும் நீ வாழவே
என் ஆசை என்றேனும் உனைக் காணவே
என் ஆசை என்றேனும் உனைக் காணவே
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

மேய்ப்போனை பார்க்காத மந்தைகளே
வேண்டாத தெய்வத்தை வேண்டுங்களேன்
காப்பாரை காணாத பறவைகளே
அவர் காதோரம் என் சேதி சொல்லுங்களேன்
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்