பின்பற்றுபவர்கள்

சனி, 31 மார்ச், 2012

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்


மிக மென்மையான இசையில் அழகாக பாடி இருக்கிறார்கள் பாடகர்கள்.

திரைப் படம்: சலங்கை ஒலி (1984)
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
இயக்கம்: K விஸ்வனாத்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: கமல், ஜெயபரதா




http://www.divshare.com/download/17052605-1ee



http://www.divshare.com/download/17052811-dbc

ஆ ஆ ஆ ஆ
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்


இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
ஆ ஆ ஆ
இதழில் மௌனங்கள்
ஆ ஆ ஆ
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
ம் ம் ம்
இள மனதில் என்ன பாரம்
ம் ம் ம்

புதன், 28 மார்ச், 2012

இந்த இரவில் நான் பாடும் பாடல்


தெரியாத படம், தெரியாத புதிய நடிகர்கள். ஆனால் பாடல் இனிமைதான்.


திரைப் படம்: யாரோ அழைக்கிறார்கள் (1985)


இசை: ஷங்கர் கணேஷ்

இயக்கம்/பாடல்: ராஜன் ஷர்மா (யாரிவர்?)

குரல்: P ஜெயசந்திரன்

நடிப்பு: குரு, அனுராதா (எல்லோரும் புதுசு)



ஹும்ம்.. ம்ம்... ம்ம்... ம்ம்... ஆஹா... ஹா

ஹா... ஹா.... ஓஹோ ....ஹோ.... ஹோ




இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உந்தன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராகம் கொண்டு பாடி

என் பக்கம் பறந்து வாடி



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்



கண்ணே என்று உன்னை அழைக்க

ஒரு காலம் வருமோடி அணைக்க

கண்ணே என்று உன்னை அழைக்க

ஒரு காலம் வருமோடி அணைக்க

பெண்ணே பூவை உனை நினைத்து

படும் பாட்டை எங்கு நான் உறைக்க



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உந்தன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராகம் கொண்டு பாடி

என் பக்கம் பறந்து வாடி



தொட்டால் சுடுவதிந்த நெருப்பு

நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு

தொட்டால் அடங்குமென் கொதிப்பு

நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு

அடி தோழி இன்னுமேன் மிதப்பு

அடி தோழி இன்னுமேன் மிதப்பு



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்



நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு

நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு

நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு

நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு

காயம் அழிவதற்குள் கண்ணே

உன் அழகை கண்கள் பார்த்து வந்த காயம் போக்கிவிடு



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உந்தன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராஹம் கொண்டு பாடி

என் பக்கம் பறந்து வாடி



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்



அஹஹா ..ஹா ...ஹா.. ஹா ...ஒஹோ

ஹோ ...ஹும்ம்.... ஹும்ம்

திங்கள், 26 மார்ச், 2012

முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா

இசையாலும் பாடும் குரல்களாலும் சிறப்பாகிய பாடல்.


திரைப் படம்: மனசுகேத்த மகராசன் (1989)
பாடியவர்கள்: S P B, K S சித்ரா
நடிப்பு: ராமராஜன், சீதா
இசை: தேவா
இயக்கம்: K தீனதயாளன்



முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா
அடி பூவை சூடும் பூவே
இடம் கொடு

முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா

ஒரு பூவை சூடும்
பூவின் இதழ் தொடு
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

காமன் கோவிலில் ஏற்றும் ஒளி தீபம் மணி விழிகள்
காதல் நோயினை மாற்றும் என் மன்னன் கனி மொழிகள்
மேனியில் பொன் வீணையின் சுக நாதம் கேட்குமோ
கூடலில் விளையாடலில் உனை ஆடை கேட்கவோ
இருவரின் இதயம் இணைகிற சமயம்
சுகமென்னும் மழை வரும்
இளமைகள் நனையும்
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

காலம் எத்தனை தூரம் தினம் நாமும் போய் வரலாம்
வாழ்வில் எத்தனை இன்பம் அதை நாளும் நாம் பெறலாம்
மார்பிலும் இரு தோளிலும் நான் மாலை ஆகிறேன்
மாலையும் இளங்காலையும் சுக ராகம் கேட்கிறேன்
அறுபது கலைகள் பழகிடும் நிலையில்
எதுவரை சுகம் வரும் அது வரை பயணம்

முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா

ஒரு பூவை சூடும்
பூவின் இதழ் தொடு
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

சனி, 24 மார்ச், 2012

நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று. உண்மையிலே ஒரு மெல்லிசை.


திரைப் படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)
குரல்கள்: S P B, S ஜானகி,
இசை: இளையராஜா
பாடல் : கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீபிரியா
இயக்கம்: தேவராஜ்-மோகன்



நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய் மொழி மணி வாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
பட பட படவென வரும் தாபங்கள்

ஆலிலை மீது தழுவிடும் காற்று
சல சல சல வென வரும் கீதங்கள்

குலமகள் நானம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஆ ஆ ஆ...
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை


கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கல கல கல என வரும் எண்ணங்கள்

ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பள பள பள என வரும் கிண்ணங்கள்

செல் என கண்ணும் நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
விடுகதை ஓர் நாள் தொடர் கதை ஆனால்
அது தான் ஆனந்த எல்லை ஆ ஆ ஆ..
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

வியாழன், 22 மார்ச், 2012

இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்


மிக மென்மையான சாதாரணமான இசை கருவிகளுடன் இசையும் அழகான குரல்களும் அலங்கரிக்கும் அபூர்வமாகிப் போன இனிமைப் பாடல்.

திரைப் படம்: வைரம் (1974)
இசை: T R பாப்பா
குரல்கள்: S P B, ஜெயலலிதா
இயக்கம்: T R ராமண்ணா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெயலலிதா, ஜெய்ஷங்கர்





http://www.divshare.com/download/17016096-578



http://www.divshare.com/download/17016174-ca9

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா
பொங்குது நாணம் பார்த்தது போதும்

ஹோ ஹோ ஹோ பார்வைக்கு யோகம்
மங்கல மேளம் குங்கும கோலம் மணவரை மகிமை
ஹா ஹா ஹா அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
அதில் ஓடும் ஜாடையிலே போதையும் பார்த்தேன்
சிரிப்பால் என்னை மாணிக்க பதுமை அழைத்தது கண்டேன்
எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பது கண்டேன்
இன்றே நான் பார்க்கவோ இல்லை நாள் பார்க்கவா
ஹா அவசரம் என்ன
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
அதை காமன் வேண்டும் என்றான் அவனிடம் தந்தேன்
கடை கண் வீசும் பனிமொழியாகும் பால் அபிஷேகம்
இடை எனும் பதுமை நடை எனும் தேரில் ஊர்வல கோலம்
மாலை பொன் மாலையா இல்லை பூ மாலையா
ஆ ஆ ஆ ஆ ஆ
கோவிலில் பார்ப்போம்
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
ஓ ஓ ஓ
ஏங்குது மோகம்
ஆ ஆ ஆ
பாடுது ராகம்
ல ல ல
ஏங்குது மோகம்
ம் ம் ம்
பாடுது ராகம்

செவ்வாய், 20 மார்ச், 2012

ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

வழக்கம் போல் T ராஜேந்திரனின் கலக்கல் பாடல் ஒன்று. ஈடு இணை இல்லாத  இசையும் பாடலும். S P B யும் கலக்கி இருக்கிறார்.

திரைப் படம்:  மைதிலி என்னை காதலி
நடிப்பு: அமலா
இசை, இயக்கம், பாடல் வரிகள்: T ராஜேந்தர்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்
தா குஜ ஜம் தரி தா
தத குத ஜம் தரி தை
தா குஜ ஜம் தரி
தத குத ஜம் தரி
தத்ததீங்கனத்த
ததீங்கனத்த
ததீங்கனத்த தா
தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ
இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து இரு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனமெங்கும் மணம் வீசுது
எந்தன் மனமெங்கும் மணம் வீசுது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
தித்தா திகி திகி தித்தா திகி திகி
தித்தா திகி திகி தித்தா திகி திகி
ரிக தான தானதா ரிக தான தானதா
ரிக தான தான

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

ஞாயிறு, 18 மார்ச், 2012

தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை


கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல். பாடும் நிலா பாலுவும் பின்னர் நாளில் தனிப் பாடலாக அதே வீரியம் குறையாமல் பாடி இருக்கிறார். பலர் கேட்டிருக்கலாம். இதுவரை கேட்காதவர்களுக்காக இதோ இரு பாடல்களும்.

திரைப் படம்: மணியோசை (1963)
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: கல்யான் குமார், விஜயகுமாரி
இயக்கம்: P மாதவன்



http://www.divshare.com/download/16972903-980

S P B குரலில்



http://www.divshare.com/download/16972910-c0b

தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணியோசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சின் மணியோசை
இது உறவினை கூறும் மணியோசை
இவன் உயிரினை காக்கும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

அருமை மகனே என்றொரு வார்த்தை
வழங்கும் கோவில் மணியோசை
அண்ணா அண்ணா என்றோர் குரலில்
அடங்கும் கோவில் மணியோசை
இது ஆசை கிழவன் குரலோசை
அவன் அன்பினை காட்டும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

வெள்ளி, 16 மார்ச், 2012

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்சை உசுப்புது


மென்மையான இசையும் குரல்களும் பாடலுக்கு பக்க பலமாக உள்ளன.

திரைப் படம்: திருமதி பழனிச்சாமி (1992)
பாடியவர்கள்: S P B, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சத்யராஜ், சுகன்யா
இயக்கம்: R சுந்தர்ராஜன்





http://www.divshare.com/download/17015687-682



http://www.divshare.com/download/17015699-e5b

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவதில் நாணம் விட்டு
நான் ஒரு கிறக்கத்திலே
கதை படிக்கிற நேரம்
சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிஷமும் நானும் பண்ண
ஆனந்த குளத்தினிலே
அலை அடிக்கிற காலம்
உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்
கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில்வரை காத்து கிடந்தேன்
வாலிபம் தவம் இருந்த வேளை வந்ததையா
இள மனசு இனி உன்னைத்தான் விடுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
முன் கதவை தாப்பா போட
மல்லியப்பூ வாசம் கூட
மாப்பிள்ளை மனசுக்குள்ளே
மடை திறந்தது ஆசை
அங்கே இங்கே கிள்ளக் கிள்ள
ஆசையிலே துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் செல்லும்
வளை குலுங்கிடும் ஓசை
என்ன செய்ய வேகம் வருது
உன்னை அள்ள மோகம் வருது
வஞ்சிப் பொண்ணு வாழ குருத்து
வித்தைகளை கட்டு படுத்து
போதையை கிளப்புதடி பூவே உன் வனப்பு
விரல் நுனி தான் உடல் முழுதும் படுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது

ஞாயிறு, 11 மார்ச், 2012

உலகமெங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசையின்றி பேசும் மொழி


மக்கள் திலகத்துடன் அழகான பாரதி இணைந்து இனிமையான பாடலை, காதலுக்கு உண்மையான மரியாதையை கொடுத்திருக்கிறார்கள்.

திரைப் படம்: நாடோடி (1966)
இயக்கம்: B R பந்துலு
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: T M S, P சுசீலா




http://www.divshare.com/download/16998773-80c



http://www.divshare.com/download/16998777-4cf

உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு

கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடி சென்ற ஆண்டுகள் கோடி
ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடி சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கலைகள் தேடி கலந்தவர் கோடி
கோடி மனிதர் பேசிய பின்பும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடி சென்று சேர்வது காதல்
தேடி சென்று சேர்வது காதல்
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

வெள்ளி, 9 மார்ச், 2012

காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு


எப்போதுமே திருமதி ஜமுனாராணியின் பாடல்களில் அவரது குரல் கம்பீரமாக ஒலிக்கும். அதுவும் இந்தப் பாடலில் கம்பீரமும் காதலும் இழைந்தோடும் அற்புதம் இனிமை.

திரைப் படம்:  தெய்வப்பிறவி (1960)
பாடியவர்: K ஜமுனாராணி
இசை: R ஸுதர்சனம்
நடிப்பு:  சிவாஜி, பத்மினி
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு









ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
எங்கள் காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு

காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
பொல்லாதது 
பொல்லாதது  மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு

மாலை பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
மாலை பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
பொல்லாதது
பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு 

புதன், 7 மார்ச், 2012

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்டச் சொல்லித்தந்தாரு.


மென்மையான பின்னனி இசையில் அழகான குரல்கள் இசைக்கும் பாடல்

திரைப் படம்: ஒருவர் வாழும் ஆலயம் (1988)
இசை: இளையராஜா
குரல்கள்: மலேசிய வாசுதேவன், சித்ரா
பாடல்: பொன்னடியான்
நடிப்பு: பிரபு, அம்பிகா
இயக்கம்: ஷண்முகப் பிரியன்




http://www.divshare.com/download/15733769-d48




http://www.divshare.com/download/15733428-2db

மலையோரம்
விளையாடும்
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்த
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத்தானே சேரனும் நீயே
ஆ ஆ ஆ ஆ

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

தந்த தனதனதந்தந்ததன தானனா
திகிட தகிததித தகிடதோம் தகிடதோம்
தக்கி திம்மி தக்க ஜனு தக்க திம்மி தக்க ஜனு
தந்த தனதனதந்ததந்த தானாதானா
தக்க திம்மி தக்க ஜனு தகிடதோம் தகிடதோம்
தகிட தகிட தகிட தகிட தகிட

காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆடிடும் பூவும் ஆசையைத்தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
ஆ ஆ ஆ ஆ

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

திங்கள், 5 மார்ச், 2012

கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி


இனிமைத் தமிழிலில் அழகானக் குரல்கள்.

திரைப் படம்: மன்னாதி மன்னன் (1960)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர்கள்:P சுசீலா, T M S
நடிப்பு: பத்மினி, M G R
இயக்கம்: எம். நடேசன்




http://www.divshare.com/download/16945139-1bd



http://www.divshare.com/download/16945221-b9f

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ
சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ
இந்த பத்தரை மாற்று பாவை மேனி பங்கையம் ஆகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
புது பண் பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா


காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கலந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா


அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ
உயர் செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனயோ
மந்தளிர் போலும் எழில் மேனி மின்னுவதெப்படியோ
ம்
ம்
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

நீல வானும் நிலவும் போல கூடுவோம்
நல்ல இன்பமென்னும் படகிலேறி ஆடுவோம்
நீல வானும் நிலவும் போல கூடுவோம்
நல்ல இன்பமென்னும் படகிலேறி ஆடுவோம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். (ஏமாறும் முன்)


நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!! இணைத்துள்ள விளம்பரத்தை பாருங்கள்.

தொலைபேசியில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஜாதகம் பார்க்க ரூபாய் 100, ஆனவர்களுக்கு ரூபாய் 150 என்கிறார்கள். ஆனால் நேரில் போனால் 5 மணி நேர காத்திருப்புக்கு பின் ஜோசியரின் உதவியாளர் லிஸ்ட் போடுகிறார் ரூபாய் ஆயிரத்துக்கு. இது 10 நிமிடங்கள்தான். முன் பணம் கொடுத்துவிட்டால் நாளை மீண்டும் வந்து 5 மணி நேரம் காத்திருந்து பார்த்தால் எல்லாவற்றையும் விரிவாக விளக்கிவிடுவாராம். இதையே நாங்கள் காத்திருக்காமல் வந்த உடன் உதவியாளர் சொல்லி இருந்தால் எங்களுக்கு நேரமாவது மிச்சமாகி இருக்குமே என்றால் அதெல்லாம் நடுவில் யாரையும் கூப்பிடக்கூடாது. பக்திமயமாக சாமிகள் இருக்கும் அறையில்தான் ஏமாற்றலாம் என்கிறான்கள். பொதுவாக நாம் போனவுடன் கூட்டததை பார்த்தவுடன் நமக்கு தோன்றுவது இவர் நன்றாக பார்ப்பார் போலிருக்கு அதான் இவ்வளவு கூட்டம் என்பதுதான். அதற்காகவே யாரையும் வீட்டுக்கு அனுப்பாமல் இப்படி சோதித்து அனுப்புகிறார்கள். நானும் 5 மணி நேரம் வீணாக போனாலும் பரவாயில்லை. இவனிடம் ஜோசியம் பார்க்க வேண்டாம் என்று சத்தம் போட்டு விட்டு வந்தேன். நாம் சத்தம் போடுவதையும் இரண்டு வேளையாட்க்கள் லாவகமாக அடுத்த ஏமாளிகளுக்கு கேட்காத வண்ணம் வேளியில் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆக திட்டமிட்டுதான் ஏமாற்றுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். அப்புறம் உங்கள் பாடு.

சனி, 3 மார்ச், 2012

சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம்


P சுசீலா அம்மாவின் சுகமான ஒரு பாடல்.

திரைப் படம்: தங்கை (1967)
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: A C திருலோகசந்தர்




http://www.divshare.com/download/16924027-d85



http://www.divshare.com/download/16925801-a78

சுகம் சுகம்
சுகம் சுகம்
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது

நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது

உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
பூவாகிக் காயாகி கனியானது
நீயாகி நானாகி நாமானது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
ஆ ஆ ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ

வியாழன், 1 மார்ச், 2012

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா



அழுத்தமான பெண்குரலில் இனிமையான இரு குரலிசை. நல்ல தமிழிலில்.

திரைப்படம்: இரும்புத் திரை (1960)
இசை: S V வெங்கடராமன்
பாடியவர்கள்: T M S, P லீலா
இயக்கம்: S S வாசன்
நடிப்பு: சிவாஜி, வைஜெயந்திமாலா




http://www.divshare.com/download/16877765-c9a

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து ஆ ஆ ஆ ஆ
என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன

ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு ஆ ஆ ஆ
ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ
ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ

இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா