பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 செப்டம்பர், 2013

மாடு மேய்க்கும் கண்ணே- நீ

thenkinnam.blogspot.com
இந்தத் தளத்தில் கீழ்கண்ட பாடலை கேட்ட/பார்த்த உடன் நமது நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்பினேன். பலர் இதற்கு முன் இந்தப் பாடல் காட்சியை பார்த்திருக்கலாம். ஆனாலும் மறுமுறையும் இதை பார்ப்பதில் அலுப்பிருக்காது என நம்புகிறேன்.

இது போன்ற ஜன ரஞ்சகமான பாடல்களும் இந்த உற்சவத்தில் பாடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் ரொம்பவும் ரசித்து கேட்ட/பார்த்த பாடல். பாடிய அம்மையாருக்கு அவ்வளவாக தமிழ் வாராதோ? ஆனாலும் இனிமைதான். என்ன ஒரு முக பாவம்? அருமை.

நாளை மீண்டும் நமது வழமையான திரைப் பாடல்களுடன் சந்திப்போம்.




மாடு மேய்க்கும் கண்ணே
நீ போக வேண்டாம் சொன்னேன்
மாடு மேய்க்கும் கண்ணே
நீ போக வேண்டாம் சொன்னேன்
காய்ச்சின பாலு தரேன்
கல்கண்டுச் சீனி தரேன்
காய்ச்சின பாலு தரேன்

கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணை தரேன்
வெய்யிலிலே போக வேண்டாம்
மாடு மேய்க்கும் கண்ணே
நீ போக வேண்டாம் சொன்னேன்

காய்ச்சின பாலும் வேண்டாம்
கல்கண்டுச் சீனி வேண்டாம்
காய்ச்சின பாலும் வேண்டாம்

கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து
ஒரு நொடியில் திரும்பிடுவேன்
உல்லாசமாய் மாடு மேய்த்து
ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

யமுனா நதிக் கரையில் 
எப்பொழுதும் கள்வர் பயம்
யமுனா நதிக் கரையில் 

எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் 
கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே
நீ போகவேண்டாம் சொன்னேன்

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ
கண்டதுண்டோ சொல்லும் அம்மா
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ

கண்டதுண்டோ சொல்லும் அம்மா
கள்வர் வந்து எனை அடித்தால் 
கண்ட துண்டம் செய்திடுவேன்
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

கோவர்த்தன கிரியில் 
கோரமான மிருகங்கள் உண்டு
கோவர்த்தன கிரியில் 

கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் 
கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே 
நீ போகவேண்டாம் சொன்னேன்

காட்டு மிருகமெல்லாம் 
என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் 
வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


பாசமுள்ள நந்தகோபர் 
பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா 
என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே 
நீ போகவேண்டாம் சொன்னேன்

பாலருடன் வீதியிலே 
பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே 
ஓடி வந்து நின்றிடுவேன்

போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சனி, 28 செப்டம்பர், 2013

வானம் எனும் வீதியிலே

பத்மஸ்ரீ K J யேஸுதாஸ், P மாதுரி, இசையமைப்பாளர் G தேவராஜன் எல்லோரும் மலையாள நாட்டை சேர்ந்தவர்கள். இசைக்கு ஏது மொழி என்னும் வண்ணம் இனிமையானப் பாடல். ஜெயலலிதா அவர்களுக்கு ஏற்ற குரல். ஜெயலலிதாவுக்கே இந்த வகையானக் குரல் வளம்தான்.
சர்ச்சில் இசைக்கப் படும் இசையை அடிப்படையாக வைத்து இந்தப் பாடலை  மிக மென்மையாக உருவாக்கியிருக்கிறார்.

திரைப் படம்: அன்னை வேளாங்கண்ணி (1971)
இசை: G தேவராஜன்
பாடியவர்கள்: K J யேஸுதாஸ், P மாதுரி
இயக்கம்: K தங்கப்பன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, ஜெயலலிதா, பத்மினி

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTYzNzA1OV9HMW5xc19iYTVl/Vaanamennum%20Veethiyile%20வானமெனும்%20வீதியிலே.mp3






வானம் எனும் வீதியிலே
குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டு சொல்லுங்கள்
மாதாவை கேட்டு சொல்லுங்கள்

வானம் எனும் வீதியிலே
குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவி என்று கேட்டு சொல்லுங்கள்
 மாதாவை கேட்டு சொல்லுங்கள்

தாமரையின் இத‌ழ் தடவ
காலை வரும் கதிர் போலே
பூ மக‌ளின் கரம் தழுவ
சோலை வந்த மன்னவனே
யாருக்கு யார் என்று
சேர்த்து வைக்கும் தேவன் இன்று
நீ எந்தன் உரிமை என்று
நெஞ்சோடு சொன்னதென்ன‌
சொன்னதென்ன

 ஆ ஆ ஆ ஆ

வானம் எனும் வீதியிலே

தட்டினால் திறப்பதன்றோ தேவன் கோவில் மணிக்கதவு
தட்டினாள் பாவை என்று
திறந்ததம்மா மனக் கதவு
நான் படித்த வேதம் எல்லாம்
வான் வரையில் கேட்டதனால்
தாய் மனது இரங்கி வந்தாள்
தக்க துணை தேடித்தந்தாள்
தேடித்தந்தாள்

ஆ ஆ ஆ ஆ

வானம் எனும் வீதியிலே

மாதுளையின் வாய் திறந்து முத்துக்களை நான் எடுத்து
காதல் என்னும் பசியாற உண்ணுகின்ற காலமெது
மாலை உண்டு மேடை உண்டு நாளை மணம் முடிப்பதுண்டு
சோலை உண்டு தென்றல் உண்டு சொன்னபடி நடப்பதுண்டு
நடப்பதுண்டு

ஆ ஆ ஆ ஆ

வானம் எனும் வீதியிலே
குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
எங்கள் உறவு என்றும் வாழ்க என்று வாழ்த்து சொல்லுங்கள்
நெஞ்சார வாழ்த்து சொல்லுங்கள்

வியாழன், 26 செப்டம்பர், 2013

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

இந்த பாடலின் ராகம் யமுனா கல்யாணி என்கிறார்கள் வித்வான்கள். இன்றைக்கும் ஒரு சினிமா பாடலாக இல்லாமல் பக்தி ரசம் குறையாத, மக்கள் மனதில் முணுமுணுக்க வைக்கும் ஒரு பாடல். ஒரு முறை கேட்டுவிட்டால் நீண்ட நாள் மனதை விட்டு அகலாத பாடல்.
மிகப் பெரிய வெற்றிக் கண்ட படமாம். MKTயின் நடிப்பும் பாடல்களும் இந்த படத்தில் அவ்வளவு பிரசித்தம் என்பார்கள். நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் இந்த படத்தில் ஓரிரு காட்சியில் தோன்றுகிறார்.
63 நாயனார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் அவர்களின் வாழ்க்கையை பற்றிய படம்.

திரைப் படம்: திருநீலகண்டர்  (1939)
இசை: காருக்குறிச்சி  மோகனரங்கம் (சரிதானா?)
நடிப்பு: M K தியாகராஜ பாகவதர், திருநெல்வேலி பாப்பா லக்ஷ்மி காந்தம், NSK, T A மதுரம், T S துரைராஜ்.
இயக்கம்: ராஜா சாண்டோ ஜம்புலிங்கம் (சரியா)

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTQzMDM1NF9zbFpsc19hMTI4/Deenakaruna%20mp3.mp3





தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி அருளும்
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி அருளும்
மௌன குருவே கரனே எனையாண்ட நீலகண்டனே
மௌன குருவே கரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே


 மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே
கரனே எனை ஆண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

ஆதி அந்தமில்லா கரனே
ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ யே யே யே யே
ஆதி அந்தமில்லா கரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
ஆதி அந்தமில்லா கரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நல்ல தமிழ் விளக்கே

நல்ல இனிமையான அமைதியானப் பாடல். பாடியவர்கள் இருவரும் நன்கு ரசித்து பாடி பாடலுக்கு மேலும்  இனிமை சேர்த்திருக்கிறார்கள்.

திரைப் படம்: எல்லோரும் வாழ வேண்டும் (1962)
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, மாலினி
குரல்கள்: A M ராஜா, ஜிக்கி
இயக்கம்: B V ஆச்சார்யா
இசை: K V மகாதேவன்


http://asoktamil.opendrive.com/files/Nl8yMTA2OTI2OF8zMFVocF80Y2Ex/Nalla%20thamil%20vilakke.mp3






வான் முகத்தில் வைர நிலா இருக்குதென்று
தேன் மலர்கள் சிரிப்பதைப் பார் இன்பம் கொண்டு
நான் விரும்பும் நங்கையவள் வந்துவிட்டாள்
வான் நிலவும் தேன் மலரும் வணக்கம் சொல்லும்
ஹா ஹா
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே
சொல்லித் தெரியனுமா
காதல் சொல்லித் தெரியனுமா
நான் சொல்லித் தெரியனுமா
காதல் கண்ணால் என்மேல்
வெண்பா பாடும்
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே

கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
வண்ணக்கிளி உனக்கு
அத்தான் வண்ணக்கிளி உனக்கு
வண்ணக்கிளி உனக்கு
பேசும் கண்ணால் என் மேல்
வெண்பா பாடு
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு

இனிப்பான நேரம்
பனிச் சோலையோரம்
எனை நாடி வரும் இன்பக்
கலைக் கோவில் நீ
எழுதாமல் உருவான
சிலையாகும் நீ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கலைக் கோவில் நெஞ்சின்
கவிப் பாடி கொஞ்சும்
அழகே என் பேரின்ப
கலை வாசல் நீ
அறம் கூறும் பொருள் இன்ப
வழிகாட்டி நீ

ஹா
ம்

ஆஹா கற்கண்டு
அபிமானம் கொண்டு
அன்பால் என் மேல்
வெண்பா பாடும்
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே

வன ராணி சோலை
நகைப் பூவைக் கண்டேன்
பனிவான புகழ் மாலை
தனை சூடுதே
புனல் மேகம்
மலையோடு சிலையாகுதே

ஹா ஹா ஆ ஆ
கூவாத சோலை
பூவே நீ வா வா
புது வாழ்வின்
முதல் பாடல் நாம் பாடுவோம்
புது வாழ்வின்
அலங்காரப் பண்பாடுவோம்
ஹா ஹா ஆனந்தம்
இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய்
வாழ்வோம்
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
ஹா ஹா ஆனந்தம்
இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய்
வாழ்வோம்
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
ஹா ஹா ஆ ஆ ஆ
ஹா ஹா ஆ ஆ ஆ
ஹா ஹா ஆ ஆ ஆ










ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்

பொதிகை தென்றலை பெண்ணாக வர்ணித்து கவிஞர் அருமையாகப் பாடியிருக்கிறார். இது போன்ற கவிதைகளும் அதற்கேற்றார் போன்று தகுந்த இசையும் கலந்து பாடல் வருவது மிகவும் அபூர்வமே.
இசையும், பாடல் வரிகளும், பாடிய குரல் வளமும் மனதை பொதிகை தென்றலை போலவே வருடிச் செல்கின்றது.

திரைப் படம்:  தங்க ரத்தினம் (1960)
இசை: T R பாப்பா அல்லது K V மகாதேவன்
பாடியவர்:  C S ஜெயராமன்
எழுதியவர்: கு சா கிருஷ்ணமூர்த்தி என்கிறது spicyonion.com
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
இயக்கம்: M A திருமுகம்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTA2ODg5M18zelJNQl80YjRk/santhana%20pothigaiyil%20thendral%20enum.mp3






சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்
ஆ ஆ ஆ ஆ ஆ
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்
வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்

சொந்தமுடனே என்னை தொட்டு தொட்டு பேசுராள்
சொந்தமுடனே என்னை தொட்டு தொட்டு பேசுராள்
சொந்தமுடனே என்னை தொட்டு தொட்டு பேசுராள்
தூய மணம் சுமந்து தொடர்ச்சியாக வீசுராள்
தமிழ் தூய மணம் சுமந்து தொடர்ச்சியாக வீசுராள்

சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணால்
வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்

அல்லி கொடியாளுடன்
அல்லி கொடியாளுடன் அழகு நடம் ஆடுராள்
அல்லி கொடியாளுடன் அழகு நடம் ஆடுராள்
அருவி அணங்குடனே ஆலாலோம் பாடுராள்
அருவி அணங்குடனே ஆலாலோம் பாடுராள்
அருவி அணங்குடனே ஆலோல பண் பாடுராள்

முல்லை கொடியால் முகத்தை முத்தமிட்டு ஓடுராள்
முல்லை கொடியாள் முகத்தை முத்தமிட்டு ஓடுராள்
முல்லை கொடியாள் முகத்தை முத்தமிட்டு ஒடுராள்
மூவேந்தர்க்கும் செல்வி என்ற முறையை கொண்டு நாடுராள்
மூவேந்தர்க்கும் செல்வி என்ற முறையை கொண்டு நாடுராள்
முறையை கொண்டு நாடுராள்
சேர சோழ பாண்டியராம் மூவேந்தர்க்கும் செல்வி என்ற
முறையை கொண்டு நாடுராள்

சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன்

மு க. முத்துவின் இன்னுமொரு இனிய பாடல்.

திரைப் படம்: இங்கேயும் மனிதர்கள் (1975)
நடிப்பு: மு க முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா
இசை: T S நடேஷ் (யாரிது)
பாடல்: தெரியவில்லை
இயக்கம்: A L நாராயணன்
பாடியவர்கள்: மு க  முத்து, S ஜானகி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNDYxMDUwOF8xRDg2VF8xYjky/Mottu%20Virinthathu[128].mp3





மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இங்கு ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன்
தேனை அள்ளிக் சுவைத்தேன்
ஆசைக் கொண்ட உள்ளம் தன் ஆவல் தன்னைச் சொல்லும்
என் மன மாளிகை உன் வசமானது எடுத்தேன்
நான் என்னைக் கொடுத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

ஹோ ஹோ ஹோ ஹோ
ல ல ல ல ல

அழகோவியம் ஒன்று நடமாடுது
அது அலையாடும் நதியோரம் கதை பேசுது
அழகோவியம் ஒன்று நடமாடுது
அது அலையாடும் நதியோரம் கதை பேசுது

இள நெஞ்சில் அரங்கேறும் புது நாடகம்
இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
இள நெஞ்சில் அரங்கேறும் புது நாடகம்
இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

மின்னல் இடை ஆட
இன்பம் தன்னை தேட
மின்னல் இடை ஆட
இன்பம் தன்னை தேட

என்னாளும் சுகம் காணும் நமதுள்ளமே

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

செவ்வானமே சிந்தும் மழையாகுமே
உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே
செவ்வானமே சிந்தும் மழையாகுமே
உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே

மது ஊறும் இதழோரம் நீ தேடி வா
இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா
மது ஊறும் இதழோரம் நீ தேடி வா
இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா

எண்ணம் ஒன்று சேரும்
கண்ணும் கண்ணும் மோதும்
எண்ணம் ஒன்று சேரும்
கண்ணும் கண்ணும் மோதும்
என்னாளும் சுகம் காணும் நமதுள்ளமே

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இங்கு ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன்
தேனை அள்ளிக் சுவைத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்


புதன், 18 செப்டம்பர், 2013

காற்று வந்தால் தலை சாயும்...நாணல்...

காத்திருந்த கண்கள் திரைப் படத்தின் அனைத்து பாடல்களுமே அருமையான பாடல்கள். அனைத்துமே அப்போது நல்ல வெற்றிப் பெற்ற பாடல்கள்.
ஆனால் என்ன... இப்போது போல அப்படி முழுமையாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் பாராட்டப் பட்டால் அந்தப் படத்தை இன்னிசை மழை, புயல் என்று சொல்லிக் கொள்ளவில்லை.
சொல்லிக் கொள்ளத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.
பாடல்கள் வெற்றிப் பெற்றே அந்தப் புகழை படத்திற்க்கும், இசைக்கும்,  தயாரிப்பாளருக்கும் பெருமைகளை வாங்கித் தந்தது.

நாணல்...நானம் என்று சுசீலா அம்மாவின் குரலில் வார்த்தைகள் தேனாய் வழிகின்றன.
அபூர்வமான பாடல் இல்லையென்றாலும் அருமையான இந்தப் பாடலை கேட்டு மகிழ்வோம்.

திரைப் படம் : காத்திருந்த கண்கள் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா



http://asoktamil.opendrive.com/files/Nl8xMDQxMDg4NF96ZDdxVl9jYzBj/Kaatru%20Vanthal%20thalai.mp3





காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்
ஆற்றினிலே கரை புரளும்
வெள்ளம்
ஆசையிலே கரை புரளும்
உள்ளம்

ஆடைத் தொட்டு விளையாடும்
தென்றல்
ஆசைத் தொட்டு விளையாடும்
கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான்
வேதம்
இருவராக படிக்கச் சொல்லும்
காதல்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

மழை வரும் முன் வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்
மோகம்
மழை வரும் முன் வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்
மோகம்
ஓடி வரும் நாடி வரும்
உறவு கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்
மானும்
பாடி வரும் பருவ முகம்
பக்கம் வந்து நின்றவுடன்
பாசதோடு சேர்ந்துக் கொள்வேன்
நானும்
நானும்
நாமும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

அஞ்சி அஞ்சி நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும்
கண்ணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும்
கண்ணம்
கொஞ்சி வரும் வஞ்சி முகம்
கோபுரத்துக் கலசமென
அந்தி வெயில் நேரத்திலே
மின்னும்
மின்னி வரும் நேரத்திலே
மேனி கொண்ட பருவத்திலே
முன்னிருந்தால் தோற்றுவிடும்
பொன்னும்
உள்ளம்
துள்ளும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

திங்கள், 16 செப்டம்பர், 2013

இரு விழியின் வழியே நீயா வந்து போனது

இளையராஜாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
வித்தியாசமான கவிதை வரிகள். வழக்கமான பாடல் வரிகளையும் சொற்களையும் தவிர்த்திருக்கிறார் கவிஞர்.
மனம் குளிர ஒரு பாடல்.


திரைப் படம்: சிவா (1989)
பாடியவர்கள்: S P B, K S சித்ரா
இசை: இளையராஜா
இயக்கம் : அமீர்ஜான் (தயாரிப்பு: K பாலசந்தர் )
பாடல்: புலமைபித்தன்
நடிப்பு: ரஜினி,  ஷோபனா






ல ல ல ல ல ல லாலாலலா
ல ல ல ல ல ல லாலாலலா

இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது

விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

தொட்டிலிடும் இரு தேம்மாங்கனி
என் தோளிலாட வேண்டுமே

கட்டிலிடும் உன் காமன் கிளி
மலர் மாலை சூட வேண்டுமே

கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கிறேன்

கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்

கார் கால மேகம் வரும்

கல்யாண ராகம் வரும்

பாடட்டும் நாதஸ்வரம்

பார்க்கட்டும் நாளும் சுகம்

விடிகாலையும் இளமாலையும்

இடை வேளையின்றி இன்ப தரிசனம்

விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது

விழியின் வழியே நீயா வந்து போனது

இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

உன் மேனியும் நிலக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்

ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்

எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்

இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்

தென்பாண்டி முத்துக்களா

நீ சிந்தும் முத்தங்களா

நோகாமல் கொஞ்சம் கொடு

உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்

விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது

ல ல ல ல ல ல லாலாலலா
ல ல ல ல ல ல லாலாலலா

சனி, 14 செப்டம்பர், 2013

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்

ஆராதனா 1969இல் வெளிவந்த ஹிந்தி திரைப் படம். இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து சூப்பர் ஹிட் ஆனது.  அதுவே  சிவகாமியின் செல்வன் என்ற பெயரில் தமிழில் வந்து சிவாஜி கணேசனின் இஷடத்திற்கு கதை வளைக்கப்பட்டு பப்படம் ஆனது. 

யாதோங்கி பாராத் என்ற இந்தி படமும் எம் ஜி யாரின் கைங்கரியத்தால் தமிழில் நாளை நமதேவாக பெட்டியில் முடங்கியது. 
ஹாத்தி மேரே சாத்தி என்ற உலக சூப்பர் ஹிட் படம் நல்ல நேரமாக எம் ஜி யார், விஜயா எனும் இரண்டு இளம் நடிகர்கள் நடித்து, தமிழில் எடுக்கப்பட்டு ஊத்தி மூடப் பட்டது.

நல்ல வேளையாக தமிழில் யாரும் ஷோலே என்ற ஹிந்தி படத்தை முயற்சிக்கவில்லை என நினைக்கிறேன். ஜெமினி, முத்துராமன் போன்றவர்களை நடிக்க வைத்து  நம்ம ஆட்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருப்பார்கள்.போகட்டும்,

ஆராதனா படத்தில் மிகப் பிரபலமான இந்தப் மேட்டில் வந்தப் பாடலை  K V மகாதேவன் சற்றும் சுவை குறையாமல், நமது இசைக் குயில்களின் வாயிலாக வழங்கியிருக்கிறார்.

இங்கே ஒரிஜினல் ஹிந்தி பாடலையும் இணைத்திருக்கிறேன். 

திரைப் படம்: அருணோதயம் (1971)
குரல்கள்:  S P B, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி
இயக்கம்:தெரியவில்லை 

ஹிந்தியில்.....



தமிழில்......






எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா 
திருவிழா

சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல
பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா

போகச் சொன்னது கால் போகும்போது
கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது
பேசச் சொன்னது வாய் பேசும்போது
நாணம் வந்து மூடச் சொன்னது
தழுவச் சொன்னது கை தழுவும்போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தழுவச் சொன்னது கை தழுவும்போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தயக்கம் வந்தது பெண்ணின்
பழக்கம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

இன்று நாளை எந்த நாளும் 
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா
திருவிழா

அன்ன வாகனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதனம்
தர்ம தரிசனம் அதை தலைவன் மட்டும்
பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்
கன்னி மோகனம் என்னை கட்டிக் கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னி மோகனம் என்னை கட்டிக் கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
என்ன காரணம் நெஞ்சின்
எண்ணம் காரணம்
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா 
திருவிழா

ஆஹ ஹ ஹ ஓஹோ ஓஹோ  ம் ம் ம் 

வியாழன், 12 செப்டம்பர், 2013

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்



இந்தப் பாடலை ஞாபகப் படுத்திய நண்பர், பதிவர் திரு ஜனா அவர்களுக்கு நன்றி.
வாழ்க்கையின் பாடம் கூட காதலின் பாடமும் இணைந்து அற்புதமாக கவி பாடியுள்ளார்கள்.
என்ன ஒரு இனிமையானப் பாடல்? கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
 
திரைப் படம்: இவன் அவனேதான் (1960)
இசை: எம். ரங்கராவ் ( G ராமநாதன் இல்லியோ?)
பாடல்: வில்லிப்புத்தூரான் 
பாடுபவர்கள்: S ஜானகி, திருச்சி லோகநாதன். 
இயக்கம்: T G ராஜ் 
நடிப்பு: உதய குமார், பண்டரிபாய்


 
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
மாசிலா காதல் பேசுதே சேர்ந்து
மாமலை தேடும் வான் வெகு தூரம்
நாமதைக் காண ஏது ஆதாரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையைப் பார் இது காதல் அத்தாட்சி
கிளைக் கனத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே
ம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
காதலின் தாபம் தணித்திட வேண்டி
கரைதனை தாவி வரும் அலை பாராய்
தென் திசைக் காற்றின் வேகத்தினாலே
திரை நதி மோதும் அது கரை மேலே
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
பொன் வண்டு பூவை தாவியே ஓடி
புதுக் காதல் கீதம் பாடுதே நாடி
தேனுண்ணும் வண்டு தான் பசி கொண்டு
பூ மலர் கண்டு கத்துது மண்டு
ஹுஹூம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
 
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்


 

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ


காதல் பாடலானாலும் சற்று கனமான கவிதை வரிகள். பாடகர்கள் இலகுவாக பாடி சென்றுவிட்டார்கள்.
இந்தப் பாடல் வரிகள் எனக்கு கலங்கரை விளக்கம் படத்தில் இடம்பெற்ற பொன்னெழில் பூத்தது என்ற பாடலை நினைவுபடுத்துகிறது.
இந்த இரு பாடல்களிலும் தமிழை கையாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குறியது. நல்ல கற்பனை.

கீழ்க் கண்ட பதிவில் இந்தப் பாடலை அக்கு வேறு ஆணி வேறாக.... என்னவொறு கலா ரசிகன் இவர்? வாலியே வியந்து போவார் போல ...
http://tamil-blog-india.blogspot.com/2010/01/blog-post_7375.html

திரைப் படம்: சந்த்ரோதயம் (1966)
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
இயக்கம்: K சங்கர்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா


http://asoktamil.opendrive.com/files/Nl8xNjE4Mjc5N19NMHZIUF83MzI4/ChandrOdhayam%20oru%20pen.mp3






சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

குளிர் காற்றுக் கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ

குளிர் காற்றுக் கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ

நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருள் அல்லவோ

என்னாளும் பிரியாத உறவல்லவோ

இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ

சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ

என் கோவில் குடிக் கொண்ட சிலையல்லவோ

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடலில்லையே

துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே

என் மேனி உனதன்றி எனதில்லையே

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ

மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ

கண் ஜாடை கவிச் சொல்ல இசை பாடவோ

இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை


M B ஸ்ரீனிவாசன் தமிழ் திரை உலகினுக்கு வழங்கிய எல்லா பாடல்களுமே இனிமையானது, சுகமானது. அந்த வரிசையில் மோகனக் குரல்கள் பாடும் இந்தப் பாடல்.

திரைப் படம்: எடுப்பார் கைப் பிள்ளை (1975)
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், சுபா
இசை: M B ஸ்ரீனிவாசன்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMDY5NTk5MV9iMml0UV9lMWQ0/ponnum%20mayngum%20-eduppar%20kai%20pillai.mp3






பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்

பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்

என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும்
அன்பு விளக்கு

உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும்
சொந்தம் எனக்கு

என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும்
அன்பு விளக்கு

உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும்
சொந்தம் எனக்கு

ஒரு புது மாளிகை
அதில் ஒரு மேனகை
தேவனைத் தேடுகின்றாள்

அதிசய மேனகை
இடையினில் மேகலை
ஆடிட வாடுகின்றாள்

ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள்
சந்திக்க ஓடி வந்தேன்

சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள்
சந்திக்க ஓடி வந்தேன்

சாமத்து பூஜையின்
ஆரம்ப தினத்தை
சிந்தித்து தேடி வந்தேன்

சிந்தித்து தேடி வந்தேன்

பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை
தனில் தெய்வம் விளங்கும்

பால் நிலவில்
இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட

பால் நிலவில்
இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட

பகலோ

ம் ம் ம்

இரவோ

ஹோ ஹோ ஹோ

பகலோ
இரவோ
எதுவோ
அறியோம் பஞ்சணை உறவாட
பஞ்சணை உறவாட

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்

இனிமையான பாடல். S P Bயின் ஆரம்ப காலப் பாடல். இன்று வரை அவரின் இனிமை மாறா குரல் வண்ணம். திருமதி சுசீலா அம்மாவுடன் இணைந்து தேனில் நனைந்த பலாவாக இனிக்கிறது.

நல்ல நடிகையான விஜயலலிதா பின்னர் காபரே நடிகை ஆக்கப் பட்டது நமது துரதிர்ஷ்டமே.


திரைப் படம்: மாப்பிள்ளை அழைப்பு (1972)
இயக்குனர்: T R ரகுநாத்
நடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயலலிதா
இசை:  V குமார் என்கிறது விக்கிப்பீடியா
பாடல்: வாலி
குரல்கள் : S P B, P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl85OTMxNTg2X1ZoVnNZX2QxNjQ/Ullathil%20Nooru%20ninaithen-%20Mappillai%20Azhaippu.mp3






உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னை தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டுத் தழுவ

கையோடு என்னை அள்ளி
கன்னா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ படாதோ நான் துயில

அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி

முந்தி வரும் ஆசையிலே நெருங்கி

போக போக அத்தனையும் விளங்கி

நடக்கட்டும் கதை இன்று தொடங்கி

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்று
கண்ணோட்டம் சென்றதென்ன
என்னை தேடி

பூந்தோட்டம் தன்னைக் கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்தேன் இங்கு
உனைத் தேடி

புத்தகம் போல் பூவை உன்னை புரட்ட

பள்ளியறை பாடங்களை புகட்ட

முக்கனியும் சர்க்கரையும் திகட்ட

முப்பொழுதும் இந்த சுகம் இனிக்க

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னை தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

புதன், 4 செப்டம்பர், 2013

வைகைக் கரை காற்றே நில்லு

அப்போதைய சகலாகலா வல்லவரின் பாடல், படம், இசையில் மனம் உருக வைக்கும் காதல் சோகம் இழையும் பாடல். சரியான குரல் தேர்வு.
அந்தக் காலக் கட்டத்தில் இது போன்ற பாடல்கள் இளைஞர்களை பித்து பிடித்து அலைய வைத்தது.

படம்: உயிருள்ள வரை உஷா
இசை, இயக்கம், பாடல்: டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
நடிப்பு: டி. ராஜேந்தர், நளினி, கங்கா





வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே 
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே 
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு


மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவள் நிலை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே 
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு





திங்கள், 2 செப்டம்பர், 2013

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா

இனிமையானப் பாடல். டி  எம் எஸ், ஜமுனா ராணியுடன் மிக மென்மையாக பாடியிருக்கிறார். அபூர்வமான பாடல்.

திரைப் படம்: எதையும் தாங்கும் இதயம் தவறு தங்க ரத்தினம்
இசை: T R பாப்பா
பாடியவர்: டி  எம் எஸ், ஜமுனா ராணி
எழுதியவர்: ஆத்ம நாதன்?? தெரியவில்லை!

http://asoktamil.opendrive.com/files/Nl8xOTk2MjcxNF9Pa1BqbV9mMWU3/Jalamellam%20theriethu%20aaha.mp3





ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

பொய்க் கோபம் கொள்ளுவதும்
ம்
போவென்று தள்ளுவதும்
ஹும்
கைக்கார ஆண்கள் செய்யும்
மெய்க் காதல் சாகசமே

தேடும் போது ஓடுவதும்
ஹும்
ஓடும் போது தேடுவதும்
வாடிக்கையாய் பெண்கள்
நெஞ்சில் வளர்ந்திருக்கும் சாகசமே
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

கன்னத்தைக் கிள்ளுவதும்
கண்ணாலே கொல்லுவதும்
கன்னியரை மயக்க ஆண்கள்
கைக் கொள்ளும் சாகசமே

கரும்பாக பேசுவதும்
காதல் வலை வீசுவதும்
எறும்பாக ஆணை பெண்கள்
இழுக்கச் செய்யும் சாகசமே
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் பார்வையிலே
அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மணம் வீசிடுமே
குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் பார்வையிலே
அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மணம் வீசிடுமே

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா