பின்பற்றுபவர்கள்

புதன், 26 செப்டம்பர், 2012

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது


அமைதியான சூழலில் கேட்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் வரிகளை விழுங்காத இசை. P சுசீலாவின் தேன் போன்ற குரல் வளமை இன்னமும்.

திரைப் படம் : என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான் (1989)
குரல் :  P சுசீலா
பாடல் : மூ.மேத்தா
இசை : இளையராஜா
நடிப்பு : விஜயகாந்த்,  சுகாசினி
இயக்கம்: மனோபாலா


மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல

மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

திங்கள், 24 செப்டம்பர், 2012

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்


மென்மையான பின்னனியில் இனிமையான ஸங்கதிகளை தேவையான இடத்தில் புகுத்தி பாடலை மேலும் இனிமையாக்கியிருக்கிறார் இசைதேவன்.

திரைப் படம்: வள்ளி (1993)
இசை: இளையராஜா
குரல்: ஸ்வர்னலதா
பாடல் : வாலி
இயக்கம்: K நட்ராஜ் (ரஜினி என்கிறார்கள் சிலர்)
நடிப்பு: ரஜினிகாந்த், ப்ரியாராமன்



ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்று பட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கனத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

சனி, 22 செப்டம்பர், 2012

தனிமையிலே..தனிமையிலே இனிமை காண முடியுமா

சில பாடல்களில் திருமதி சுசீலா அம்மா குரலில் தேனொழுகும். அந்தவகையில் இது ஒன்று. இசையின் இனிமையோடு போட்டி போட்டுக் கொண்டு பாடும் குரல்கள். இணைந்து வரும் சோகப் பாடலும் ஒரு இனிமைதான்.


திரைப் படம்: ஆடிப் பெருக்கு (1962)
இசை:  A M ராஜா
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
பாடல்: கண்ணதாசன்




தனிமையிலே தனிமையிலே

இனிமை காண முடியுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா

தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
இந்த அவணியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

வியாழன், 20 செப்டம்பர், 2012

யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ


சமீபத்திய பாடல்கள் வரிசையில் தமிழ் நாட்டின் ஆங்கில கவிஞர்கள் போல் இல்லாமல் ஆங்கிலம் கலக்காமல் வந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று. நல்ல குரல்களுடன் இனிமை இசையில். 9 நேலாலு என்ற தெலுங்கு படத்தின் டப்பிங்க். தெலுங்கில் இந்தப் படம் 15 நாட்களில் எடுத்து முடிக்கப் பட்டதாக சொல்கிறார்கள்.

திரைப் படம்: கண்டேன் சீதையை (2001)
பாடிய குரல்கள் (தனித் தனி பாடல்கள்) : ஹரிணி, உன்னி கிருஷ்ணன்
இயக்கம் :  க்ராந்தி குமார்
இசை: V S உதயா
நடிப்பு: விக்ரம், சௌந்தர்யா










 ம் ம் ம் ம் ம் ம்
யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள்
புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எரிகிறதே
வண்ணத்துப் பூச்சிகள்
வானவில்லை சூடியதோ
வாலிப திரைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில்
சேர்ந்திட கூடும்
திசை மாறும் போதும்
தென்றலே பூக்களை மோதும்
யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே


நி நி நி ச ச ச நி ச நி ச நி ப
ப ம ப நி ப
ரி ம ப நி ப ம ரி ச நி
நி ச நி ச ம ரி ச நி ச

முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
சம்சிக்க சிக்கிதா சம்சிக்க சிக்கிதா

முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
ஆடை மறைவில் ஓடை மீன் கள்
பரதம் தான் ஆடுதோ
ஓடும் முகிலை தேடிப் பிடித்து
வானம் முகம் மூடுதோ
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அலைபோலே வந்து பாடுதே காவடி சிந்து
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அணைப் போட்டால் கூட
ஆனந்தம் மௌனம் இன்று


யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே

தான தனனா  தான
தான தனனா தான


புது புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடி போலே வந்ததோ
சம்சிக்க சிக்கிதா சம்சிக்க சிக்கிதா

புது புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடி போலே வந்ததோ
சிட்டுக்குருவி சிறகை வாங்கி
பறக்க தான் தோன்றுதோ
வெட்ட வெளியில் எட்டுப் போட்டு
ஓடத்தான் தோன்றுதோ
சந்தோஷப் போர்க்களம் ஆரம்பம்
மழை கொட்டும் போதும்
வானத்தைப் பார்த்திட தோன்றும்
சந்தோஷப் போர்க்களம் ஆரம்பம்
மல்லிகைப் பூவில் ஆடைகள்
தைத்திட தோன்றும்


யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள்
புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எரிகிறதே
வண்ணத்துப் பூச்சிகள்
வானவில்லை சூடியதோ
வாலிப திரைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில்
சேர்ந்திட கூடும்
திசை மாறும் போதும்
தென்றலே பூக்களை மோதும்
யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள்
புகை வண்டி ஓட்டியதோ






செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வாசக் கருவேப்பிலையே என் மாமன் பெத்த மல்லிகையே


இசைக்காகவும், பாடல் picturization காகவும் பாடலை ரசிக்கலாம், ஆனால் பாடல் வரிகள் என்னமோ எனோதானோதான்.

திரைப் படம்: சிறையில் பூத்த சின்ன மலர் (1990)
குரல்கள்: ஜானகி, அருன்மொழி
இசை: இளையராஜா
பாடல்??: புலமைபித்தன்
இயக்கம்: அமிர்தம்
நடிப்பு: விஜயகாந்த், நிஷாந்தி





வாசக் கருவேப்பிலையே
என் மாமன் பெத்த மல்லிகையே

வாசக் கருவேப்பிலையே
என் அத்தை பெத்த மன்னவனே

ஊத குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

ஊத குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

வாசக் கருவேப்பிலையே
என் மாமன் பெத்த மல்லிகையே

நெலவு சேலை கட்டி நடக்குது பொன்னா
உலக அதிசயத்தில் இப்படி ஒன்னா

நடந்தா தென் மதுரை பாண்டியன் போல
நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை

நன்றி கெட்ட சேலை
அது வேனா விட்டுருடீ

கண்ணே உந்தன் சேலை
இனி நான் தான் கட்டிக்கடி

எட்டி நில்லு சாமி
நீ தொட்டா ஒட்டிக்குவே

தொட்டில் ஒன்னு போட
ஒரு தோது பண்ணிக்குவே

இப்போதே அம்மாவா நீ ஆனா
என் பாடு என்னாகும் வாம்மா

வாசக் கருவேப்பிலையே
என் அத்தை பெத்த மன்னவனே

ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல
உதடும் முள் முருங்க பூத்தது போல

கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்
கண்டதும் இளசுக்கெல்லாம் வந்திடும் மோகம்

எந்த பொண்ணு கையும் என்னை இன்னும் தொட்டதில்ல
இன்று மட்டும் கண்ணே நம்ம கற்பும் கெட்டதில்ல

கற்பு உள்ள ராசா நான் உன்ன மெச்சிக்குறேன்
கட்டிக்கைய்யா தாலி உன்ன நல்லா வெச்சிக்குறேன்

கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்
கையோடு கை சேர்த்து போவோம்

வாசக் கருவேப்பிலையே
என் அத்தை பெத்த மன்னவனே

வாசக் கருவேப்பிலையே
என் மாமன் பெத்த மல்லிகையே

ஊத குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

ஊத குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

வாசக் கருவேப்பிலையே
என் அத்தை பெத்த மன்னவனே

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே


பாரதியாரின் இந்தப் பாடலை பல இசையமைப்பாளர்கள் பல திரைபடங்களில் கையாண்டிருந்தாலும் எல்லோரும் பாடலின் சுவை கெடாமல் கொடுத்திருக்கிறார்கள்.
இது மறைந்த பாடகி ஸ்வர்னலதா தமிழிலில் முதன்முதலாக திரைபடத்திற்காக பாடிய பாடல். அழகாக பாடியுள்ளார்.

திரைப் படம்: நீதிக்கு தண்டனை (1987)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்:  S A சந்திரசேகர்
நடிப்பு: நிழல்கள் ரவி, ராதிகா
பாடலை இயற்றியவர்: சுப்ரமணிய பாரதியார்



சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே
தேனே ஆடி வரும் தேனே
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

உச்சி தனை முகர்ந்தால் கறுவம் ஓங்கி வளருதடி
உச்சி தனை முகர்ந்தால் கறுவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மேனி சிலிர்க்குதடி
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி

சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்

இது வெளிவராத படங்களில் ஒன்று.
இனிமையான இசையில் இதே வரிகளைக் கொண்ட பாடலை SPB, ஆஷா போன்ஸ்லே பாடியது, முன்னமே நமது இழையில் கொடுத்திருக்கிறேன். அதை கேட்க இதை சுட்டுங்கள்.





பாடல் வரிகளின் தரத்தை பார்த்தால் இது கங்கை அமரன் பாடல் போல தெரிகிறது. மன்னிக்கவும் நான் தவறாகவும் இருக்கலாம்.

திரைப் படம்: கண்ணுக்கொரு வண்ணக் கிளி (1991)
இசை: இளையராஜா
இயக்கம்: R சுந்தரராஜன்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU1Njc3OF9yR2djbF83NTJi/unnai%20naan%20parkaiyil%20KJY.mp3





உன்னை நான் பார்க்கையில்

ஊமையாய் போகிறேன்

வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

பொன்மானைப் பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ

விண்மீனைக் கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ

என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள்

உன் பார்வையில் பொன்மணி பாடும் ராகங்கள்

நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம்

நீ அல்லவோ எந்தன் காதல் வரம்

நீ மங்கையா ஆசையின் கங்கையா

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்


எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம்

என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் ராகம்

ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள்

ஓர் பார்வையில் வந்ததே அந்த எண்ணங்கள்

உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன்

உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன்

என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம்

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

புதன், 12 செப்டம்பர், 2012

பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து


ஷோபாவின் இனிமையான நடிப்பில் அழகான திரைப் படம். K V மகாதேவன் தனது இறுதி காலங்களில் இசையமைத்தப் படங்களில் இதுவும் ஒன்று. அப்போது அவர் இசையில் வாணி ராணி, எங்கள் தங்க ராஜா ஆகிய படங்களின் இசை தாக்கம் இதில் அதிகமாக இருந்தது.

திரைப் படம்: ஏணி படிகள் (1979)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: ??
நடிப்பு: சிவ குமார், ஷோபா




பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

ஏறாத ஏணி தனில் ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்
என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள்
அந்த காலம் வரும்
அவள் ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பால்
கலை வண்ண தாரகை என வருவாள்
அது நடக்கும் என நினைக்கும்
மனம் நாள் பார்த்து தொடங்கி விடும்

பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த
வண்ண தோகை அவள்
ஸங்கீத ஞானம் உண்டு பாடல் நடத்த
வானம்பாடி அவள்
அவள் பூவிழி சிரிப்பினில் பூலோகம் மயங்கும்
பொல்லாத புன்னகை கலங்க வைக்கும்
நல்ல புகழும் பெரும் பொருளும்
அவள் அடைகின்ற காலம் வரும்
பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

என்னைத் தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள்
அதில் தயக்கம் இல்லை
எப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள்
மறு விளக்கம் இல்லை
அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ் தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவும் இல்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
இது என் நாளும் குறைவதில்லை

பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆ ஹா ஹா ஆ ஆ

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது


அமைதியான, அழகானப் பாடல். ஜயன், மலையாள ஸ்டண்ட் நடிகர். நடிக்க ஆரம்பித்த காலத்திலேயே ஒரு ஸ்டண்ட் காட்சியில் விபத்தில் இறந்தார்.


திரைப் படம்: பூட்டாத பூட்டுக்கள்

இசை: இளையராஜா
குரல்: S ஜானகி
இயக்கம்: K மகேந்திரன்
நடிப்பு: ஜயன், சாருலதா
பாடல்: பஞ்சு அருணாசலம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MTg0N19mUjhsZF9hZDJk/Aanantham.mp3






ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது

ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவா
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது
அன்போடு பாசம் சேர்ந்திட ஊரும் பேரும்
வாழ்ந்திட
வாழை போல வாழ்கவே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

பாலூட்டும் போது நான் பார்க்கவா
தாலாட்டும்போது நான் தூங்கவா
மலரும் அரும்பு மடி மீது
இனிக்கும் கரும்பு
கொடுத்தாயே
இணைந்த சொந்தமே
கொண்டாடும் நேரம் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

சனி, 8 செப்டம்பர், 2012

மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்


என்னதான் இன்றைய தலைமுறைக்கு சிவாஜியின் நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றாலும், அவர்,  நடிப்பில் சக்கரவர்த்தி என்பதை நிரூபிக்க இது போன்ற பல பாடல்கள் உள்ளன. இன்றைய கதா நாயகர்கள் பலர் திரை கதையில் அழுதால் நமக்கு சிரிப்புதான் வருகிறது.
இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் ஒரு நல்முத்து.

திரைப் படம்: ராஜபார்ட் ரங்கதுரை 1973
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: P சுசீலா, T M S
நடிப்பு: சிவாஜி, உஷா நந்தினீ
இயக்கம்: P  மாதவன்



http://www.divshare.com/download/19483163-a4e

மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்

அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம்
அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம்
வாசலில் தோரணம் உன்னை வரச்சொல்லும் தோழிகளாம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆஹா ஆஹா ஹேஹே ஓஹோ ஓஹோ
மோகம் முன்னாக ராகம் பின்னாக
முழங்கும் சங்கீதக் குயில்கள்
மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்
தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும்
தழுவும் சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
தலை
இடை
கடை
என
தினம்
வரும்
சுகம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ

பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி
பதிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன் மான் இப்போது அம்மான் உன் கையில்
பெண்மான் என்னோடு பழகு
கண் வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி
முடிந்தால் நீராட விலகு
புது
மது
இது
இதன்
ரசம்
தரும்
சுகம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே

வியாழன், 6 செப்டம்பர், 2012

மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஒடும் ஆசை வழி


இந்தப் பாடல் தமிழில் சித்ரா அவர்களின் முதல் பாடல் என்பதாக பதிவாகி உள்ளது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தமிழிலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். எனக்கு பல பெண் பாடகிகளின் குரல்கள் பிடித்தாலும், சுசீலா அம்மாவுக்கு பின் இவர் அவரது இடத்தை நிறைத்ததாகவே உணர்கிறேன்.

திரைபடம்: கீதாஞ்சலி (1985)
நடிப்பு: முரளி, நளினி
இயக்கம்: R சுந்தரராஜன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
குரல்கள்: இளையராஜா, K S சித்ரா



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாட வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே

வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க

நான் ஒரு பூவோ நீ பறிக்க
நால் வகை குணமும் நான் மறக்க

மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே

மடி மேல் கொடி போல் விழுந்தேனே

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாட வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே


ஏந்திய வீணை நான் இருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ராத்திரி நேர ராகம் இது
பூவொடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதை தான் படிப்பேன் நாள் முழுதும்
படித்தால் எனக்கும் இனிக்காதோ

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்


மீண்டும் நமது T ராஜேந்தர். மறக்ககூடியவரா அவர். மற்றவரின் இயக்கத்தில்
T ராஜேந்தர் எழுதி இசையமைத்த பாடல். உயர்ந்த கவிதை வரிகளுடன் ஒரு இனிமையானப் பாடல்.

திரைப் படம்: கிளிஞ்சல்கள் 1981
குரல்கள்: S ஜானகி, Dr கல்யாண்
பாடல், இசை: விஜய  T ராஜேந்தர்
நடிப்பு: மோகன், பூர்ணிமா ஜெயராம்
இயக்கம்: துரை



http://www.divshare.com/download/19482124-b71



ப பப ப பப ல ல ல ல
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
Julee I love you
ஹா ஹா ஹா ஹா
Julee I love you
ஹா ஹா ஹா

ப ப பம் ப ப பம் ப ப பம் ப ப பம்
Julee I love you
ஆஹா ஆஹா ஆஹா
Julee I love you

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம்
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம்
மன வீணயிலே நாதமீட்டி
கீதமாக்கி நீந்துகின்ற தலைவா
இதழ் ஓடையிலே வார்த்தை என்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
Julee I love you
ஹா ஹா ஹா
Julee I love you
ஆஹ் ஆஹ் ஆஹ்

பப ப ப
நினைவென்னும் காற்றினிலே
மனம் என்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனம் என்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

மது மாலையிலே மஞ்சள் வெய்யில் கோலமென
நெஞ்சம் அதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென்ன
உள்ளம் அதில் நீ பொங்க
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ்
Julee I love you
Julee I love you
ஹா