பின்பற்றுபவர்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2011

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது என் கனவில் இந்த பூ பூத்தது


நல்ல இனிமையான பாடல் ஒன்று இன்றும்.
இந்த திரைப் படத்தினை பற்றிய மற்ற விபரங்கள் தெரியவில்லை.

திரைப் படம்: சொந்தம் 16 (1989)
குரல்கள்: சித்ரா, மனோ
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: மோகன்



http://www.divshare.com/download/15622608-2a1

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்த பூ பூத்தது
நீதான் கண்மணி நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
உன் கனவில் இந்த பூ பூத்தது
நீதான் கண்ணனே நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்
ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது உன்னை நான் பார்த்தது

காதலன் வந்தொரு மன்மத மந்திரம் காதினில் ஓதிட
வாடாதோ தேகம்தான்
ஆ ஆ ஆ ஆ ஆ வாடிய வேளையில் வாலிப மேகமும் வேர்களில் நீர் விட
தீராதோ தாகம்தான்
கொடுத்தால் எடுத்தால் சுகம் கோடி காணலாம்
கொடுத்தால் எடுத்தால் சுகம் கோடி காணலாம்
ஆ ஆ ஆ தோள்கள் மீது சாயும்போது தேவை இல்லை பூ மஞ்சம்

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்த பூ பூத்தது
நீதான் கண்ணனே நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்
ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது உன்னை நான் பார்த்தது

ஆ ஆ ஆ ஊர்வசி மேனகை போல் ஒரு பூனகை காட்டிடும் தேவதை
நீதானோ சொல்லம்மா
ஆ ஆ ஆ ஓர் புறம் குளிர்ந்திட ஓர் புறம் கொதித்திட
ஏக்கங்கள் தாக்குது ஏந்தானோ அம்மம்மா
மண நாள் வரலாம் ஒரு மாலை சூடலாம்
மண நாள் வரலாம் ஒரு மாலை சூடலாம்
மீண்டும் மீண்டும் தீண்டும்போது பாய்வதென்ன தேன் வெள்ளம்

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்த பூ பூத்தது
நீதான் கண்மணி நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்த பூ பூத்தது இந்த பூ பூத்தது


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன் (2 versions)


திரு தாஸ் அவர்கள் விரும்பிய பாடல். அவருக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பிடித்த பாடல்தான். அழகான தென்றல் வீசும் பூ மணக்கும் பின்னனி இசையும் குரல்களும் நம்மை வசீகரிக்கின்றன. காதலையும் சோகத்தையும் கேட்டும், பார்த்தும் மகிழ்வோம்.

மன்னிக்கவும். சில விபரங்களை தவறாக கொடுத்துவிட்டேன். இதோ சரியான தகவல்கள்.
திரைப் படம்: போலிஸ்காரன் மகள் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்கள்: P B S, S ஜானகி
பாடல்:  கண்ணதாசன்
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: முத்துராமன், விஜயகுமாரி



சோகமாக பாடியது:















இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள்
உன் மனதுக்கு கரும்பாவாள்
இன்று அலை கடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
எனும் வேதனை கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரி தானா

இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்து விட்டாள்
என அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரி தானா
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்


 சோகத்தில்.....


இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

வண்ண மலர்களில் சருகானாள்
அவள் அனலிடை மெழுகானாள்
பெரும் அலை கடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ

இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள்
அவள் கவலையை தீராயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

அவள் உறவினை மறந்துவிட்டாள்
இந்த உலகத்தை வெறுத்துவிட்டாள்
தினம் கனவுக்கு துணைப் போனாள்
அவள் கவலையை தீராயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள்
அவள் கவலையை தீராயோ




ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

மழைக் கால மேகங்கள் மறைக்காத நேரங்கள்

இசையமைப்பாளர் ஷ்யாம் இசையில் சோக கீதமும் நெஞ்சை நிரடும் இனிமை கீதமாய் ஒலிக்கிறது.

திரைப் படம்: கள் வடியும் பூக்கள் (1983)
இசை: ஷ்யாம்
பாடியவர்: K J Y
பாடல்: வாலி
நடிப்பு: நிழல்கள் ரவி, நளினி
இயக்கம்: V கார்த்திகேயன்













மழைக் கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ

எதிர் பார்க்கும் கண்கள் இங்கே
எனை கொஞ்சும் தென்றல் எங்கே
நினைக்காத பெண்ணை நான்
மறக்காமல் வாழ்கிறேன்

மழைக் கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ

இனிமை  ஈ.......ஈ.....ஈ.......ஈ
அஹா ஆ  அஹாஅ ஆ...அ அஹா
இனிமை
நாம் சேர்ந்த நேரம் இனிமை
தனிமை
நான் வாடவும்
போராடவும் ஏன் வந்ததோ

உனக்காக ஏங்கவோ
உள் மூச்சு வாங்கவோ

உனக்காக ஏங்கவோ
உள் மூச்சு வாங்கவோ

பொழுது நான் பாடினேன்
நீ கேட்கவில்லையோ

மழைகால மேகங்கள்

நிழலோ
நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
நிழலோ
நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
வருமோ என் வானத்தில்
உன்னால் ஒரு அருணோதயம்

நெடுங்காலம் ஆகுமோ
நிறைவேறக் கூடுமோ

நெடுங்காலம் ஆகுமோ
நிறைவேறக் கூடுமோ
விரகத்தில் பாடினேன்
நீ கேட்டதில்லையோ

மழைக் கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே

சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் அருமையான இசையில் இந்தப் பாடல். காட்சியும் பிரமாதமாக இருக்கும்.

திரைப் படம்: நீலவானம் (1965)
பாடியவர்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, தேவிகா
வசனம்: K பாலசந்தர்
இயக்கம்: P மாதவன்










ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடி சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையை சொல்லுங்களேன்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடி சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையை சொல்லுங்களேன்

வருஷந்தோரும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
வருஷந்தோரும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆடலாம்
ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடி சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையை சொல்லுங்களேன்
ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம்
கால தேவன் கோவில் மீது பாச தீபம் காணுவோம்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடி சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையை சொல்லுங்களேன்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே

சனி, 27 ஆகஸ்ட், 2011

மகிழம் பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கிப் போனேன்


இது ஒரு வெளிவராத திரைப்பட பாடல். வழக்கமான பாடல்தான் என்றாலும் பாடலின் மென்மையும் குரல்களின் இனிமையும் மனதை சுண்டி இழுக்கிறது.

திரைப் படம்: புதிய அடிமைகள் (1980 என்று நினைக்கிறேன்)
இசை: இளையராஜா
குரல்கள்: K J Y, P சுசீலா
பாடல்: கங்கை அமரன்









மகிழம் பூவே
உன்னை பார்த்தேன்
மகிழம் பூவே உன்னை பார்த்தேன்
மயங்கி போனேன்
நினைத்து பார்த்தேன்
நெஞ்சம் ஏங்கி
உருகி போனேன்

மகிழம் பூவே உன்னை பார்த்தேன்
மயங்கி போனேன்

ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே
ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே

உள்ளம் உன் மேலே பாய்ந்து தாவும் தன்னாலே

தென்றலை போல் என்னுடலை தீண்ட கூடாதோ
காவல் தாண்ட கூடாதோ

மோகம் கொண்ட மேகம் போல
நீயும் வந்தால் ஆகாதோ

மகிழம் பூவே உன்னை பார்த்தேன்
மயங்கி போனேன்

பொன்னை போல உன் மேனி
பூவை நீயே என் ராணி
பொன்னை போல உன் மேனி
பூவை நீயே என் ராணி

ஆசை ராஜாவே நாளும் வாச ரோஜாவே

வாழ்க்கையென்னும் பாதையிலே சேர்ந்து போவோமே
நாமும் வாழ்ந்து பார்ப்போமே
யாரும் காணா சொர்க்கம் தன்னை நாமும் இங்கே காண்போமே

மகிழம் பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கிப் போனேன்
நினைத்துப் பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகிப் போனேன்
மகிழம் பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கிப் போனேன்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட

இசை தந்த குயிலாக, குயில் தந்த குரலாக திருமதி P சுசீலா அவர்கள் P B ஸ்ரீனிவாஸுடன் பாடும் இனிமைப் பாடல்.
திரைப்படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிகர்கள்: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
பாடல் வரிகள்: வாலி









மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

குழல் தந்த இசையாக... இசை தந்த குயிலாக... குயில் தந்த குரலாக நான் பாடுவேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...



உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக...ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன்...

விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

கை விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...



இளங்காதல் வயதாலே தனியாகினேன்..அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்....



இமை மூடி தூங்காமல் போராடினேன்...உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்...



கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...



கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்... உன் மடிமீது தலை சாய்த்து இளைபாறினேன்...



அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்..அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்...



கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை

அரிதான பாடலாகி போனது. பெண்ணுக்கும் அணைக்கும் உவமை காட்டி வித்தியாசமாய் அமைந்த பாடல்.


திரைப் படம்: தபால்காரன் தங்கை (1970)
குரல்கள்: T M S, P சுசீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, முத்துராமன், வாணிஸ்ரீ
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்







கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை

காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்
காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்
காதல் பெருக்கெடுத்தால் காதல் பெருக்கெடுத்தால்
புகலிடம் பெண்ணிடம்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை

பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது - அணை
பழுதில்லாமல் காலங்களை வென்றது
பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது - அணை
பழுதில்லாமல் காலங்களை வென்றது

அந்த கால பெண்மை போன்ற அணை இது - குலம்
அழுத்தமாக வாழ வைக்கும் துணை இது
அந்த கால பெண்மை போன்ற அணை இது - குலம்
அழுத்தமாக வாழ வைக்கும் துணை இது

கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை

காவிரியின் கெண்டை என்ன துள்ளுது - உன்
கண்ணை பார்த்து சொந்தம் என்று சொல்லுது
தேக்கிய நீர் திறந்து விட்டால் வெள்ளமே -ஆசை
தேக்கியதை திறந்து விட்டால் வேகமே
சோழன்..
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் என் கண்ணனை

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் காணும் எழிலெல்லாம் கொண்டவன்


கண்ணன் பாடல்கள் வரிசையில் பொதுவாக கண்ணதாசன் கொடி நாட்டிய காலத்தில் வாலி புகுந்த ஆரம்பக் கால பாடல். சாதாரண எளிதான வார்த்தைகளில் இலக்கியம் போல ஒரு பாடல் இயற்றிவிட்டார். அதற்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள் இசையமைப்பாளரும் பாடகரும்.
மென்மையாக அமைதியாக ஒரு பாடல்.

திரைப் படம்: கல்யாண ஊர்வலம் (1970)
இசை: M G ராதாகிருஷ்ணன்
பாடல்: வாலி
குரல்: P சுசீலா
நடிப்பு: நாகேஷ்,K R  விஜயா
இயக்கம்: K S சேது மாதவன்










எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்

இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான்
அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான்
இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான்
அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான்
மாந்தரெல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான்
மாந்தரெல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான்
தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்
தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்
எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்

பாலரோடு கோபாலன் விளையாடுவான்
இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான்
பாலரோடு கோபாலன் விளையாடுவான்
இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான்

முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்
முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்
அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான்
அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்
எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
எந்தன் கண்ணன் கண்ணன்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

காதல் ஜோதி அணையாதது கண் கண்ட கனவெல்லாம் கலையாதது

ஆரம்ப கால SPBயின் குரல் இனிமை தனிதான். தங்கு தடங்கல் இல்லாத பாடலின் ஓட்டம் அருமை. நினைவை விட்டு அகலாத  ஒரு அபூர்வ பாடல்.

திரைப் படம்: காதல் ஜோதி (1970)
இசை: T K ராமமூர்த்தி
குரல்கள்: S P B, P சுசீலா
நடிப்பு: ரவிசந்திரன், ஜெய்ஷங்கர், காஞ்சனா
இயக்கம்: திருமலை மகாலிங்கம்
 










ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காதல்
ம் ம் ம் ம்
ஜோதி
ம் ம் ம் ம் ம்
காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
கலையாதது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
உறவாடுது

நீர் கொண்ட மேகம் பொதுவானது
நிலம் பார்த்து நீரை பொழியாதது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

குளிர் கொண்ட காற்று நடை போடுது
கொடி கொண்ட பூவில் குடியேறுது
மை வைத்த கிண்ணம்தான் விழியல்லவா
நானும் மன வாசல் நுழைகின்ற வழியல்லவா
இள நெஞ்சமா
மலர் மஞ்சமா
இதழோரமா
சுவை கொஞ்சமா

காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
உறவாடுது

அன்பென்ற பாடல் உருவானது
அரங்கேற்ற வேண்டும் பொழுதானது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அழகென்ற மேடை எதிர்ப்பார்க்குது
வாவென்று ஜாடை வரவேற்குது
புது வெள்ளம் அணை தாண்டி விழும் அல்லவா
பாவை பூ மேனி நீராட வருமல்லவா
இடை துள்ளுமா
நடை பின்னுமா
இது போதுமா
இனும் வேணுமா

காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
உறவாடுது
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சின்னஞ்சிறு கண் மலர் செம்பவழ வாய் மலர்

இதோ மற்றொரு தாலாட்டு பாட்டு. மற்றெல்லாப் பாட்டிலும் வித்தியாசமாக நாட்டின் பொருளாதாரத்தையும் குழந்தைக்கு ஊட்டுகிறார். அதே சுவை மாறாமல் இசையமைத்து பாடலை பாடி இருக்கிறார்கள். பாடலின் ஆரம்பம் முதல் முடிவு வரை இனிமை, இனிமை இனிமைதான்.

திரைப் படம்: பதி பக்தி (1958)
நடிப்பு: சிவாஜி, ஜெமினி, அஞ்சலி தேவி, சாவித்திரி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இயக்கம்: பீம் சிங்க்









ம் ம் ம் ம் ம் ம் ம்

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவழ வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
ஆரிரோ..ஆராரோ

பாப்பா உன் அப்பாவை பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடி தனில் சாய்ந்தால் தான் தூக்கமோ
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
தாமரை கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
குப்பை தனில் வாழும் குண்டு மணிச் சரமே
குங்குமச் சிமிழே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
ஆரிரோ..ஆராரோ

ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ
எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ
நாளை உலகம் நல்லோரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்
மாடி மனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
ஆரிரோ..ஆராரோ

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவழ வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
ஆரிரோ..ஆராரோ
ஆரிரோ..ஆராரோ
ஆரிரோ..ஆராரோ
ஆரிரோ..ஆராரோ


சனி, 20 ஆகஸ்ட், 2011

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்

நல்ல இனிமையான அபூர்வ பாடல் ஒன்று

திரைப் படம்: குளிர் கால மேகங்கள் (1986)
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: அர்ஜுன், சாதனா சர்கம்
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்கள்:  SPB, வாணி ஜெயராம்










இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்

சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்
இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

இது ஒரு இளமை நாடகம்
இணைந்தது இருவர் ஜாதகம்
நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மூங்கில் மரங்களில் ஏழு ஸ்வரங்களில்
பாடல் எழுதிடும் காற்று
மேனி தீண்டுமோ
மனதில் ஒரு மோகம் தோன்றுமோ

தோளைத் தழுவிய ஆடை நழுவிட
தோகை அழகினை பார்க்க
ஏக்கம் ஆனதோ
இரவினில் தூக்கம் போனதோ

வாலிபம் வாட்டும்போது
வேரொரு நரகம் ஏது
பூவுடல் வாடும்போது
தென்றலை நீ விடு தூது

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது
மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

இது ஒரு இளமை நாடகம்
இணைந்தது இருவர் ஜாதகம்
நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

நேற்று இரவினில் நீண்ட கனவினில்
நீயும் நெருங்கிட கண்டேன்
மோகம் விளைந்தது வியர்வை வர
தேகம் நனைந்தது

காலை விடியலில் காணும் கனவுகள்
நாளை பலித்திடும் கண்ணே
மாலை சூடலாம் முதல் இரவில்
லீலை காணலாம்

நாயகன் நீயும் தாங்க
வாய் இதழ் தேனை வாங்க
ஆனந்த கங்கை பொங்கும்
அழகிய தேகம் எங்கும்
இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

இது ஒரு இளமை நாடகம்
இணைந்தது இருவர் ஜாதகம்
நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கண்ணில் என்ன கார் காலம் கன்னங்களில் நீர்

நல்ல இனிமையான ரஜினியின் படத்திலிருந்து ஒரு இனிமையான சோகப் பாடல். காணொளியுடன்.


திரைப் படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
இயக்கம்: பாலு மகேந்திரா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S P B, ஜானகி
பாடல்: வைரமுத்து
தயாரிப்பு: A V M சரவணன்














கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா ஞாயமா பெண்ணே.. ஹோ..

கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்

நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிறையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்

கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் என்று வரும் ஆனந்தம்
பூவுக்குள் பூகம்பம் என்று வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா ஞாயமா பெண்ணே.. ஹோ..

கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்

புதன், 17 ஆகஸ்ட், 2011

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

கர்னாடக இசை அடிப்படையில் அமைந்த அருமையான பாடல் மற்றும் குரல்கள்.


திரைப் படம்: மழலைப் பட்டாளம் (1980)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: லக்ஷ்மி
நடிப்பு: விஷ்ணுவர்த்தன், சுமித்திரா




கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

பருவங்கள் சென்றாலும் கண்ணன்
அவன் கவி ராஜ சங்கீத மன்னன்
அவன் கவி ராஜ சங்கீத மன்னன்


என் பேரில் சுகமான ராகம்
ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம்
என் பேரில் சுகமான ராகம்
ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம்
நீ மழை நாளில் விளையாடும் மோகம்
என்ன வயதென்று தோன்றாத வேகம்
கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு காரிகை வடிவத்திலே
பருவங்கள் சென்றாலும் ராதை
அவள் கவிராஜ சங்கீத மேதை


வாராத செல்வங்கள் தாய்மை
அவை ஆனாலும் என் உள்ளம் ஊமை
கண்முன்பு அழகான ஆண்மை
நான் கல்லல்ல கனிவான பெண்மை
பண்பாடு என்பார்கள் சிலரே
இதில் பெண்பாடு கண்டோர்கள் எவரே
என் பாடு நான்தானே அறிவேன்
உயர் அன்போடு மனம்போல இணைவேன்
கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே


மலை மீது அடித்தாலும் காற்று
அது கடல் மீது தவழ்ந்தாலும் காற்று
வயதோடு வந்தாலும் காதல்
அது வயதாகி வந்தாலும் காதல்
உலகத்தில் சில நூறு எழுத்து
ஆனால் உறவுக்கு பல கோடி கருத்து
உன் வாழ்வை நீயாக நடத்து
இதில் ஊரென்ன சொன்னாலும் திருத்து

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு காரிகை வடிவத்திலே

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்

இந்த பாடலை நினைவு படுத்தியதற்க்கு திரு தாஸ் அவர்களுக்கு நன்றி. ஏற்கனவே தரமேற்ற தயாராய் இருந்த பாடல்கள்தான் ஆனாலும் மற்ற பாடல்கள் இதை பின் தங்க வைத்துவிட்டது.


இது நாள் வரை நானும் நடிகவேள் ராதா அவர்கள் புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை என்ற பாடலுக்கு மட்டும்தான் வாய் அசைத்து நடித்திருக்கிறார் என்று நினைத்தேன்.

தாலாட்டு பாடல்களில் இந்தப் பாடல் ஒரு தனி இடத்தை பிடித்தது

திரைப் படம்: பங்காளிகள் (1961)
இசை: V தச்சிணாமூர்த்தி
குரல்: P சுசீலா
பாடல்: மருதகாசி
இயக்கம்: ராமகிருஷ்ணா
நடிப்பு: ஜெமினி, அஞ்சலி தேவி





பாடியவர்: திருச்சி லோகநாதன்


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ம் ம் ம் ம் ம் ம் ம்
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே
மனம் மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

உனது மாமன் வருவார்
அணைத்து இன்பம் பெறுவார்
உரிமையெல்லாம் தருவார்


ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ
உனது மாமன் வருவார்
அணைத்து இன்பம் பெறுவார்
உரிமையெல்லாம் தருவார்
அந்த அரிய நாள் வரும்
சுகம் பெருகும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்


சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

ஏழைக் கண்ட தனமே
மனம் இளக செய்யும் அழகே
ஏழைக் கண்ட தனமே
மனம் இளக செய்யும் அழகே
வாழைக் குருத்து போலே
நீ வளரும் நாள் வரும் குலம்
தழைக்கும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
தாய் அன்பு உன்னை காக்கும்
தாய் அன்பு உன்னை காக்கும்
நீ அழுவதேனடா
உறங்கி அமைதி காணடா

அழுவதேனடா
அமைதி காணடா

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்






சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்த காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே மனம்
மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்

நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
தாய் அன்பு உன்னை காக்கும்
தாய் அன்பு உன்னை காக்கும்
நீ அழுவதேனடா
உறங்கி அமைதி காணடா

அழுவதேனடா
அமைதி காணடா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் (இரண்டு பாடல்கள்)

மென்மையான பின்னனி இசையும், அளவான கவிதையும், புரிந்து உணர்ந்து பாடிய குரல்களும் பாடலுக்கு சிறப்பு. இன்று இரண்டு பாடல்களில்
T M S உம் திருமதி P சுசீலா அம்மாவும் இணைந்து பாடியதும் அடுத்து சுசீலா அம்மா தனித்து சோகமாக பாடியதும் இடம் பெற்றுள்ளது. இரண்டுமே அருமையாக கையாளப்பட்டிருக்கிறது. இணைக் குரல்கள் பாடிய பாடல் நீண்ட தேடுதலுக்குப் பின் எனக்கு கிடைத்தது. நான் இந்தப் பாடலைக் கேட்டே 20/25 வருடங்கள் ஆகியிருக்கலாம் என நினைக்கிறேன். என்றும் அழியாத பாடல்கள். அபூர்வமாகி போனது இன்று.


திரைப் படம்: எங்க வீட்டு பெண் (1965)
பாடல்: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்
நடிப்பு : A V M ராஜன், விஜய நிர்மலா
இயக்கம்: B நாகி ரெட்டி




கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நானம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
ஆசை என்பது நாடகமா
அதில் ஆண்மை என்பது அவசரமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
பூவிருக்கும் கூந்தலிலே நான் இருந்தால் ஆகாதா
பால் மணக்கும் பெண்ணழகை பார்த்திருந்தால் போதாதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
இன்னொரு நாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா
அன்று வரை பொறுத்திருந்தால் அந்த மனம் கேளாதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்

ஒருவருமே பார்க்காமல் ஒன்று தந்தால் ஆகாதா
தனிமையிலே தவறு செய்தால் தன் மனமே பார்க்காதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
ஆசை என்பது நாடகமா
அதில் ஆண்மை என்பது அவசரமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்

சோகத்தையும் அழகாக இசைத்திருக்கிறார் திருமதி சுசீலா அவர்கள். மனதை வருடும் சோகம்.



கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்

காதல் என்பது நாடகமா - அதில்
கண்ணீர் என்பது காவியமா

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்

சாலையிலே விதி வழியே சந்தித்தாள் ஒரு வழியே
சாலையிலே விதி வழியே சந்தித்தாள் ஒரு வழியே

தனிவழியே அவனை விட்டு தன் வழியே போகாதே

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்

எங்கே நீ போனாலும் அவன் முகமே தோன்றாதோ
எங்கே நீ போனாலும் அவன் முகமே தோன்றாதோ

எவ்விடம் நீ சென்றாலும் அவன் குரலே கேளாதோ

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்

இவன் மனைவி இவளெனவே எழுதிவிட்டான் இறைவனடி
இவன் மனைவி இவளெனவே எழுதிவிட்டான் இறைவனடி

அவன் எழுதும் ஒவியத்தை அழித்தவர்கள் இல்லையடி

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
காதல் என்பது நாடகமா - அதில்
கண்ணீர் என்பது காவியமா

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி

அருமையான இசையில் அமைதியான, அழகான, மென்மையான ஒரு பாடல்.


திரைப் படம்: கல்யாண ஊர்வலம் (1970)
இசை: M G ராமகிருஷ்ணன்/ பார்த்தசாரதி அய்யங்கார்
குரல்கள்: K J யேசுதாஸ், S ஜானகி
பாடல்: வாலி
நடிப்பு: நாகேஷ், ஸ்ரீகாந்த், K R விஜயா
இயக்கம்: K S சேது மாதவன்
http://www.divshare.com/download/15510771-a4d







கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்துவர
கல்யாண ஊர்வலமோ...கல்யாண ஊர்வலமோ..

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகை செண்டு கொஞ்சும்
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகை செண்டு கொஞ்சும்

காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும்
இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்துவர
கல்யாண ஊர்வலமோ...கல்யாண ஊர்வலமோ..

நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே எடுத்து செல்வாள் அந்த அன்பு மகள்
புது மணையில் புகுந்து மணவரையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ..கல்யாண நாள் வருமோ..


ஆயிரம் காலத்தை கடந்து விழி நீரினை கண்கள் மறந்து
ஆயிரம் காலத்தை கடந்து விழி நீரினை கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
இளம் பருவ மழையில் இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ..கல்யாண ஊர்வலமோ....

சனி, 13 ஆகஸ்ட், 2011

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும்

நல்ல இனிமையான காதல் கீதம்.


திரைப் படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)

இயக்கம்: C V ஸ்ரீதர்

குரல்: S P B, வாணி ஜெயராம்

பாடல்: வாலி

இசை: இளையராஜா

நடிப்பு: மோகன், லதா




Upload Music - Play Audio -






குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன

என் மனம் வாடியதென்ன



ஒரு மாலையிடவும் சேலை தொடவும்

வேளை பிறந்தாலும் அந்தி மாலை பொழுதில்

லீலை புரியும் ஆசை பிறக்காதோ



குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன

என் மனம் வாடியதென்ன





மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு

மேனி மீது எழுதும் மடல் தான் உறவு

தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்



அதுவரையில் நா……..ன்.. அதுவரையில் நான்

அனலில் மெழுகோ

அலைக் கடலில் தான் அலையும் படகோ



குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன

பூவிதழ் தேடியதென்ன

என்னிடம் நாடியதென்ன



ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்

வேளை பிறக்காதோ அந்த வேளை வரையில்

காளை உனது உள்ளம் பொறுக்காதோ



காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க

கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க.

இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே



பிறர் அறியாமல் ல் ல் ல் பிறர் அறியாமல்

பழகும் போது

பயம் அறியாத இதயம் ஏது



வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்

ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்

உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்



சுதி விலகாமல் இணையும் நேரம்

சுவைக் குறையாமல் இருக்கும் கீதம்





குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன

என்னிடம் நாடியதென்ன



ஒரு மாலையிடவும் சேலை தொடவும்

வேளை பிறந்தாலும்

அந்த வேளை வரையில்

காளை உனது உள்ளம் பொறுக்காதோ

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தலைவா நான் வரவா தனிமை என்னை அழைக்குது முதல் முறையா


இந்தப் பாடல் திரு தேவாவின் ஏதோ ஒரு பழைய பாடலை ஞாபகப்படுத்துகிறது. (கொஞ்ச நாள் பொறு தலைவா.....) மறந்து போய் நகல் எடுத்திருப்பார் போலிருக்கிறது.  எப்படியோ போகட்டும். பாட்டு நல்லாத்தான் இருக்கு.



திரைப் படம்: காந்தி பிறந்த மண் (1995)

நடிப்பு: விஜயகாந்த், ரேவதி, ரவளி

இயக்கம்: R சுந்தரராஜன்

குரல்கள்: S ஜானகி, குழந்தை வேலன் (யாரிவர்???? நல்ல குரல்)





ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா



தலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா

தலை முதல் பாதம் வரை

தழுவி இனி புதுப்புது சுகம் தர வா

தங்கக் கொலுசு என்னை தழுவிய போது

தன்னந் தனிமையில் தவிக்குது மாது

தஞ்சம் தஞ்சம் இனி தவிப்பது ஏது



தலைவா நான் வரவா

தழுவி இனி புதுப்புது சுகம் தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்



நெத்தியில் வச்ச பொட்டு நான் உனக்காக

மத்ததை நான் சொல்ல வா உனக்காக

கார்த்திகை போனதும் மார்கழி மாசம்

மேளத்த கொட்டி வந்து தோளுல சாயும்

தலைமுறை காண தலையணை வேணும்

தலைவனே அதுக்கொரு பதில் தர வேணும்

நித்தம் நித்தம் இந்த பூவை சூட



தலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா

தலை முதல் பாதம் வரை

தழுவி இனி புதுப்புது சுகம் தரவா



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பட்டப்பகல் நிலவு போல நானிருந்தேன்

உன்னோட பார்வை பட்டு பௌர்ணமி ஆனேன்

தொட்டில் கட்டி அந்த வானத்து மேலே

நிலவுடன் நான் விளையாடவும் வேணும்

மறுநாள் இதுபோல் நான் வர வேணும்

மறுபடி நீ வர மாதங்கள் ஆகும்

போதும் போதும் இந்த பார்வை போதும்



தலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா

தலை முதல் பாதம் வரை

தழுவி இனி புதுப்புது சுகம் தரவா

தங்கக் கொலுசு என்னை தழுவிய போது

தன்னந் தனிமையில் தவிக்கிறேன் நானு

தஞ்சம் தஞ்சம் இனி தவிப்பது ஏது



தலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா

தலை முதல் பாதம் வரை

தழுவி இனி புதுப்புது சுகம்

புதன், 10 ஆகஸ்ட், 2011

இளமையின் உறவிலே என்ன சுகம்

வழக்கமான P சுசீலா, ஜெயசந்திரன் குரல்களில் இனிமையான ஷங்கர் கணேஷ் இசையில் ஒரு பாடல்.


திரைப் படம்: இன்ஸ்பெக்டர் மனைவி (1976)
நடிப்பு: முத்துராமன், ஜெயசித்ரா
இயக்கம்: S ராஜேந்திர பாபு









இளமையின் உறவிலே
என்ன சுகம்

இருவரும் இணைவதில்
என்ன சுகம்

இளமையின் உறவிலே
என்ன சுகம்

இருவரும் இணைவதில்
என்ன சுகம்

முதலிலே தொடுவதில்
என்ன சுகம்

விதி மூடாமல்
தேட சொல்லும்
சொந்தம் பந்தம்
என்ன சுகம்

இளமையின் உறவிலே
என்ன சுகம்

இருவரும் இணைவதில்
என்ன சுகம்

தேன் வெண்ணிலா
இந்த சின்ன பெண்ணிலா

தெய்வ திருவிழா
உங்கள் வண்ண கண்ணிலா

மஞ்சம் சிரிக்கின்றதே

நெஞ்சை இழுக்கின்றதே

தொடங்கவா
என்றும் தொடரவா

தொடங்கவா
என்றும் தொடரவா

இளமையின் உறவிலே
என்ன சுகம்

இருவரும் இணைவதில்
என்ன சுகம்

பூ என்பது
என்ன காயுமானது

காய் என்பது
பின்பு கனியுமானது

அன்பு உருவானது

ஆசை மரமானது

கொஞ்ச நாள்
இருவர் கொஞ்சும் நாள்

இளமையின் உறவிலே
என்ன சுகம்

இருவரும் இணைவதில்
என்ன சுகம்

ல ல ல லா லல்ல லலா

சேய் ஆனவள் பின்பு
செல்வி ஆனவள்

தாரமானவள் இன்று
தாயுமானவள்

கண்ணே கதை என்னம்மா
கண்ணன் கதை சொல்லம்மா

பொறுங்களேன்
கொஞ்சம் பொறுங்களேன்

இளமையின் உறவிலே
என்ன சுகம்

இருவரும் இணைவதில்
என்ன சுகம்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும்

திருமதி சுசீலா அவர்களின் பாடலுக்கு என்ன கருத்து சொல்வது? எல்லாமே அருமைதான். ஆரம்ப இசையே மனதை மயக்கும்.


திரைப் படம்: பாச மலர் (1960).
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, ஜெமினி
இயக்கம்: பீம் ஸிங்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்: P சுசீலா



ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திரு வாய் மொழியாலே ...
திரு வாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
திரு வாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

மகாராணி உனைத் தேடி வரும் நேரமே

நல்லதொரு இனிமையான பாடல்


திரைப் படம்: ஆயிரம் வாசல் இதயம் (1980)
குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சுதாகர், ராதிகா
இயக்கம்: A ஜெகன்னாதன்



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ ஆ அ
மகாராணி உனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மகாராணி உனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்

பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்

வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்

கை வந்து தொட்டது மெல்ல
காமத்து பாலுரை சொல்ல
இளமை பயிலும் தினம்
மகாராணி எனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பார் வழி பனி துளி பூவிதழ் சேருமோ
பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாதமோ
சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே

தென் பாண்டி முத்துகள் போலே

என்னென்ன கோலங்கள் மேலே

ரசிக்கும் கவிதை மனம்

மகாராணி எனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

மகாராணி உனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே


ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா

நடிகை பாரதி பாடிய முதல் பாடல். கொஞ்சம் அங்கே இங்கே தடுமாற்றம் இருந்தாலும் T M S ஈடுகட்டிவிடுகிறார். இனிமையாக இருக்கிறது.


திரைப் படம்: சினேகிதி (1970)
இசை: M S சுப்பையா நாயுடு
இயக்கம்: மல்லியம் ராஜகோபால்
நடிப்பு: ஜெமினி, பாரதி




http://asoktamil.opendrive.com/files/Nl8zODUxNjE0Ml9icHpLUV9kZWQw/thanga%20nilavey.mp3









ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஹாஹா ஹா ஹ்ஹோ ஹோ ஹோ ல ல ல
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
ஹூஹூம்
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா

நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா
ஹூஹூம்
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா

கண்கள் பேசி கலந்து வாழும் குடும்ப வாழ்க்கை போலவே
ஹா ஹா ஹா ல ல ல ல
கண்கள் பேசி கலந்து வாழும் குடும்ப வாழ்க்கை போலவே
கனிவு பொங்கும் கவிதை ஒன்றை உலகில் காண முடியுமா

உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில்
ஹா ஹா ஹா ஹாஹா
உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில்
உள்ளம் என்ற வெள்ளக் காட்டின் இன்பம் தாங்க முடியுமா
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா

ஆடைத் தொட்டு இழுக்கும் போது போதும் போதும்
ம் ம் ம்ஹூம்
ஆடைத் தொட்டு இழுக்கும் போது போதும் போதும் என்பதில்
ஆசை இல்லை என்பதாக அர்த்தம் காண முடியுமா
மூடிவைத்த மனதின் உள்ளே மோதும் இன்ப நினைவிலே
மூடிவைத்த மனதின் உள்ளே மோதும் இன்ப நினைவிலே
வேண்டுமென்ற அர்த்தம் இன்றி வேறு காண முடியுமா

தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
தனிமை காண முடியுமா

சனி, 6 ஆகஸ்ட், 2011

கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...

நல்ல இனிமையான பாடல். எல்லோரும் காதலிக்கும் போது செய்யும் சத்தியம்தான். ஆனால் கவிஞர் இனிமையாக செய்திருக்கிறார். அதையும் இனிமை குறையாமல் இசையமைத்து பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: ராதா (1973)

இயக்கம்:  A C திருலோகசந்தர்
இசை: ஷங்கர் கணேஷ்
குரல்கள்: S P B, சுசீலா
நடிப்பு: முத்துராமன், பிரமிளா






கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...

கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...



உயிர் காதல் மீது ஆணை..காதல் மீது ஆணை.. வேறு கை தொடமாட்டேன்...

கை தொடமாட்டேன்...



கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...

பச்சை புல்லில் மெத்தை விரித்து..பஞ்சவர்ண கிள்ளை இரண்டு இச்சை தீர கட்டிபுறண்டு விளையாடும் போது...



பட்ட பகல் நேரமென்று பெட்டை மயங்க...



ஆசைக்கென்ன வெட்கமென்று ஆணும் நெருங்க...



இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ...

இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ...



கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...



உயிர் காதல் மீது ஆணை..காதல் மீது ஆணை.. வேறு கை தொடமாட்டேன்...

கை தொடமாட்டேன்...



கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...



பனியிட்ட முத்தம் மலரில்...கனியிட்ட முத்தம் கிளையில்...முகில் இட்ட முத்தம் மலையில் நான் பார்க்கிறேன்...



கட்டழகன் இட்ட முத்தம் பட்டு இதழில்...



தித்திக்கின்ற காலம் வரும் பள்ளியறையில்...



மணப் பந்தல் மாலையெல்லாம் வரவேண்டுமோ...

மணப் பந்தல் மாலையெல்லாம் வரவேண்டுமோ...

கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

மதனோர்சவம் ரதியோடு தான், அழகோவியம் உயிரானது.. 2 பாடல்கள்

S P B மற்றும் வாணி ஜெயராமுக்கு சவாலான பாடலாக அமைந்தது.
V குமார் அவர்களின் இசையில் அற்புதமான பாடல். அடுத்து தொடரும் பாடல் ஆதித்யா இசையில் முந்தைய பாடலின் சாயலில் வருகிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது!!!


திரைப் படம்: சதுரங்கம் (1978)

இயக்கம்: துரை

நடிப்பு; ரஜினி, ஜெயசித்ரா










மதனோர்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்

உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான்

மீன் ஆடும் கண்ணில் விழுந்து
நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில்
நீராடவோ
மீன் ஆடும் கண்ணில் விழுந்து
நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில்
நீராடவோ

புரியாத பெண்மை இது
பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை
என்னென்ன லீலை
மதனோர்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்

கார் கால மேகம் திரண்டு
குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு
சதிராடுது
கார் கால மேகம் திரண்டு
குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு
சதிராடுது
ஓ ஓ ஓ
அலங்கார தேவி முகம்
அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம்
ஒரு கோடி இன்பம்

மதனோர்சவம்
ம் ம் ம் ரதியோடு தான்
ஆ ஆ ஆ ரதி தேவியோ
பதியோடு தான்



திரைப் படம்: ரோஜா மலரே (1997)

இசை: ஆதித்யன்
பாடல் வரிகள்: T M ஜெயமுருகன்
பாடியவர்: S P B
நடிப்பு: முரளி, ரீவா









அழகோவியம் உயிரானது..
புவிமீதிலே நடமாடுது..
கவி ஆயிரம் மனம் பாடுது..
புது காவியம் அரங்கேறுது..
லவ்லி லிசா...மோனலிசா...
லவ்லி லிசா...மோனலிசா...

அழகோவியம் உயிரானது..
புவிமீதிலே நடமாடுது..

என் கவியானவள், கண்ணில் வந்து கலையானவள்
என் கனவானவள், நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள்..நிலையானவள்
என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும்
தினம் தினம் மணம் தரும்
லவ்லி லிசா...மோனலிசா...

ஹா ஹா ஹா ஹா....அழகோவியம் உயிரானது..

என் உயிரானவள், புனிதம் ஆன உறவானவள்
என் வாழ்வானவள், வசந்தம் தந்து நிறைவானவள்
புதிரானவள்..புகழ்மான் அவள்
மனதாள்பவள்..ஆஹ் ஆஹ் ..மலர் என்னவள்
அவள் ஒரு தனித்துவம்
அதில் ஒரு தனி சுகம்
லவ்லி லிசா...ஹே ஹே மோனலிசா...

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்...

அழகோவியம் உயிரானது..
புவிமீதிலே நடமாடுது..
கவி ஆயிரம் மனம் பாடுது..
புது காவியம் அரங்கேறுது..
லவ்லி லிசா...மோனலிசா...

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே

என்னமாய் ஒரு தாலாட்டு? பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. குழந்தை விளையாடவும், சாப்பிடவும் தூங்கவும் ஒரே பாடலில் கவிதை படைத்திருக்கிறார் கவிஞர். அருமையான குரல் தேர்வு மற்றும் இசையமைப்பு. கண்ணொளியுடன்


திரைப் படம்: பாவை விளக்கு (1960)
கதை: அகிலன்
இயக்கம்: சோமு
நடிப்பு: சிவாஜி, சௌகார் ஜானகி
குரல்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி






 நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
அதைக் காணும் போது மனசுக்குள்ளே எத்தனைக் களிப்பு
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

கையசைத்துக் காலசைத்துக் கண் சிமிட்டும் கனியே
கண்ணுறங்காய் நீ சிறிது ஓடுகுள்ளே தனியே
வையகத்தில் சிறகடித்து பறக்க போகும் கிளியே
வையகத்தில் சிறகடித்து பறக்க போகும் கிளியே
வடிவழகே குலம் தழைக்க வந்துதித்த கொடியே
வடிவழகே குலம் தழைக்க வந்துதித்த கொடியே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத

எட்டி எட்டி வட்ட நிலா உன்னை பார்க்குதே
உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்கு கேக்குது
எட்டி எட்டி வச்ச நிலா உன்னை பார்க்குதே
உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்கு கேக்குது
சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
அந்த சந்திரனை விளையாடக் கூப்பிடு அம்மா
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத

புதன், 3 ஆகஸ்ட், 2011

தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மங்கை

மெல்லிய மென்மையான பின்னனி இசையுடன் ஒரு இனிமையான சமீபத்திய பாடல் கண்ணொளியுடன்.


திரைப் படம்: தந்துவிட்டேன் என்னை (1991)
நடிப்பு: விக்ரம், ரோகிணி
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்கள்: மனோ, S ஜானகி







தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் என்னாளும் உன் ராஜாங்கமே
ஹா ஹா ஹா ஹா ஹா
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ


ஆடை மூடி பேச வந்து
ஆடும் தென்றல் காற்று நீ
ஆசையோடு பூத்தது இந்த ரோஜா
மேடை மீது பாட வந்த
வேந்தன் உன்னை பார்த்ததும்
தேகம் முல்லை தோட்டம் ஆகும் ராஜா
பூவை நெஞ்சில் பூட்டி வைத்த
வைரம் கையில் வந்தது
பாவை உள்ளம் தாழ் திறந்து
பாடல் ஒன்று தந்தது
வெள்ளி ரதம் வருமா
வீதியில் சுகமா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் என்னாளும் உன் ராஜாங்கமே
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ


மேகம் என்னும் தேரில் ஏறி
ஊரைச் சுற்றிப் பார்க்கலாம்
மேள தாளம் கேட்கும் நல்ல நேரம்
பூமி எங்கும் பூக்கள் கொண்டு
வானவில்லில் கோர்க்கலாம்
காம தேவன் கோபம் இங்கு தீரும்
ராஜ ராஜ ராதை
இந்த ராணி ராகம் பாடினாள்
ராக தேவன் தந்த அன்பு
மாலை ஒன்று சூடினாள்
வெள்ளி மழை விழுமா
வீணையில் ஸ்வரமா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.


தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் என்னாளும் உன் ராஜாங்கமே
ஹா ஹா ஹா ஹோஹோ ஹா ஹா ஹா ஹா
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

உன்னை நினைக்கையிலே..கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி

இந்தப் பாடலை தரம் ஏற்றும் வேளையில் முன்னர் T F M என்கின்ற மின் இதழிலில் வந்த செய்தி ஒன்று ஞாபகம் வருகிறது.

கவிஞர் வைரமுத்து பதில்கள்
உங்கள் பார்வையில் டி.எம்.எஸ்.?
கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டுக் கலை இலக்கிய அரசியலில் தவிர்க்க முடியாத குரல்! வெண்கலத் தாம்பாளத்தில் தங்கப்பழம் வைத்துத் தந்ததுமாதிரி தன் வெண்கலக்குரலில் தங்கத்தமிழ் கொடுத்தவர் டி.எம்.எஸ். இத்தனைக்கும் அவர் தாய் மொழி தமிழ் இல்லை.

மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னருக்குப் பட்டு அங்கவஸ்திரம் அணிந்து கொள்வதில் மட்டுப்படாத ஆசை. அதனால் பட்டு நெசவு செய்யும் தேர்ந்த குடும்பங்களைக் கூர்ஜரத்திலிருந்து (குஜராத்) கொண்டு வந்து கோயிலைச் சுற்றிக் குடியமர்த்தினார்.

அவர்கள் சௌராஷ்ட்ர சமூகத்துப் பெருமக்கள். அப்படிப் பட்டுநெசவு செய்யும் கூட்டத்திலிருந்து பாட்டு நெசவு செய்ய வந்தவர் டி.எம்.எஸ்.

அன்று கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதரின் தீவிர பக்தர் சௌந்தரராஜன். அவரது தொடக்ககாலப் பாடல்களில் தியாகராஜபாகவதர் பாணியை விட்டு முற்றும் விடுதலையாக முடியவில்லை அவரால். ‘தூக்கு தூக்கி’, ‘மந்திரிகுமாரி’ _ ‘மலைக்கள்ளன்’ _ ‘மதுரை வீரன்’ வரைக்கும் பாகவதரின் நகலாகவே பாடினார் டி.எம்.எஸ். அதில் வியப்புமில்லை; பிழையுமில்லை. தியாகராஜ பாகவதரைப் போல முன் நெற்றியில் முடி ஏறி இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக்கால ரசிகர்கள் சுவரில் உரசித் தலையைத் தேய்ப்பார்களாம். பாகவதரைப் போலப் பாடவேண்டுமென்று தன் இயல்பான கம்பீரக்குரலில் மூக்கொலி கலந்து பாடிய டி.எம்.எஸ். ஐம்பதுகளின் இறுதியில் அதிலிருந்து விடுபட்ட போது அசல் டி.எம்.எஸ். அவதரித்தார்.

எம்.ஜி.ஆர். _ சிவாஜி என்ற இரு துருவ நட்சத்திரங்களுக்கும் தன் குரலை அவர் பொருத்திக் காட்டியபோது இவரும் ஒரு நட்சத்திரமானார்.

மனிதக்கூட்டம் கடந்துபோகும் சகல உணர்ச்சிகளின் மீதும் டி.எம்.எஸ்.ஸின் அடர்ந்த குரல் ஆளுமை செய்திருக்கிறது.

‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா’ இப்போது கேட்டாலும் மனசு பதினாறு வயது நோக்கிப் பயணம் போகிறது. ‘அச்சம் என்பது மடமையடா’ போருக்குப் போ மகனே என்று புலன்களைத் திருகிவிடுகிறது. ‘உள்ளம் என்பது ஆமை _ மயக்கம் எனது தாயகம் _ அண்ணன் காட்டிய வழியம்மா _ போன்ற பாடல்களில் தண்ணீரில் மிதக்கும் தாமரைகளைப் போல டி.எம்.எஸ்.ஸின் கண்ணீரில் மிதக்கின்றன வார்த்தைகள். ‘உலகம் பிறந்தது எனக்காக’ நலிந்த மனதுக்கு நம்பிக்கையூட்டுகிறது.

ஆரபி _ கானடா _ சாருகேசி மோகனம், கல்யாணி, சிந்துபைரவி போன்ற ராகங்களை உழைக்கும் மக்களின் வயல்வெளிக்கு அழைத்துச் சென்றது அவர் குரல்.

தமிழில் அரைமாத்திரைகூட தேயாத உச்சரிப்பு _ நடிகர்களின் பாவனைக்கு ஏதுவாக ஏற்பாடு செய்து கொடுக்கும் பாவம் _ தனக்குள்ளிருக்கும் நடிகனைக் குரலுக்குள் கொண்டுவரும் ரசவாதம் _ நடிகர்களின் உடலுக்கும் முகத்துக்கும் ஏற்பத் தன் குரலின் அலைவரிசையை மாற்றிக் கொள்ளும் அற்புதம் _ இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகியல் அறியாத குழந்தை அவர் என்பதால் அவரைக் கண்டு சற்றே ஒதுங்குதல் சரியாகாது.

இப்படியரு கலைஞன் அமைவது மீண்டும் அரிது. காது படைத்தவர்களே! வாழும்போதே கொண்டாடுங்கள் அந்த ஆலய மணிக்குரல் நாயகனை
From: s ramaswamy on Wed Oct 31 12:39:09 2007.


திரைப் படம்: கல்யாணிக்கு கல்யாணம் (1959)
இசை: G ராமனாதன்
இயக்கம்: A S A சாமி
நடிப்பு: பிரேம் நஸிர், ராகினி
பாடல்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்


உன்னை நினைக்கையிலே..
உன்னை நினைக்கையிலே..
..
உன்னை நினைக்கையிலே..
கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி..
உன்னை நினைக்கையிலே..
பொன்னை உருக்கிய வார்ப்படமே
பொன்னை உருக்கிய வார்ப்படமே
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே..
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே
சந்தனக் காட்டு புது மலரே
உன்னை நினைக்கையிலே..
வட்டக் கருவிழி மங்கையே
வட்டக் கருவிழி மங்கையே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வட்டக் கருவிழி மங்கையே
ஒளிக் கொட்டும் நிலவுக்கு தங்கையே
வட்டக் கருவிழி மங்கையே
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே
இன்பக் காவிய தேன் அள்ளி ஊட்டுதே
உன்னை நினைக்கையிலே..
கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி..
உன்னை நினைக்கையிலே..



திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மாலை சூட வந்த மங்கை அந்த மங்கை

திரு G தேவராஜன் இசையில் மறக்க முடியாத ஒரு பாடல்.


திரைப் படம்: விஜயா (1973)
குரல்கள்: T M S, B S சசிரேகா
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி
இசை: G தேவராஜன்
இயக்கம்: வியட்னாம் வீடு சுந்தரம்



மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர் போன்ற முன் கை
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை

மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர் போன்ற முன் கை
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

பருவம் சில காலம் ஏங்கும்
கொஞ்சம் பதுங்கியே பின்பு வாங்கும்
இரண்டும் சமமாக தாங்கும்
அந்த இனிமை சுகத்தோடு தூங்கும்
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

என்ன இறைவா உன் படைப்பு
அதில் எங்கும் அழகே உன் சிரிப்பு
சின்ன இதழ் என்ன இனிப்பு
அது தேடும் சுகம் என்ன துடிப்பு

மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர் போன்ற முன் கை
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

ஆண் பெண் உறவென்ற பேதம்
அது அடக்க முடியாத கீதம்
இன்ப சுகம் ஒன்று வரவு
என் இளமைதான் அங்கு செலவு
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

இதற்கு இது வேண்டுமென்று
அவன் படைத்த இடம் கூட ஒன்று
அதற்குள் விளையாடி சென்று
நான் அமைதி பெற வேண்டும் இன்று

மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ
ஆலம் தளிர் போன்ற முன் கை
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ