பின்பற்றுபவர்கள்

சனி, 30 நவம்பர், 2013

இரவும் நிலவும் வளரட்டுமே

இனிமையான சங்கதிகளுடன் மிக சிரமமான பாடல். நடிப்பால் இமயங்களும் குரலால் இமயங்களும் வழங்கியுள்ள இனிமை கீதம்.

திரைப் படம்: கர்ணன் (1964)
நடிப்பு: சிவாஜி, N T ராம ராவ், சாவித்திரி, தேவிகா
குரல்கள்: டி எம் எஸ், P சுசீலா
இயக்கம்: B R பந்துலு
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNjM5NDg5MV8wV1NEbV9kODQ5/Iravum%20Nilavum.mp4









ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

தரவும் பெறவும் உதவட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும்
வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

வியாழன், 28 நவம்பர், 2013

வா வா என் வீணையே

எஸ் பி பியின் அருமையான இழுத்த இழுப்புகளுக்கு ஈடு கொடுத்து பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். அழகான இனிமையான பாடல். கமழும் நடிப்பில் பிண்ணியெடுத்திருக்கிறார்.


திரைப் படம்: சட்டம் (1983)
பாடல்: வாலி
இசை:கங்கை அமரன்
நடிப்பு: கமல், மாதவி
இயக்கம்: K விஜயன்
பாடியவர்கள்: SP  பாலசுப்ரமணியன் , வாணி ஜெயராம்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNTY1OTAzM19RQVVJNV81MjQ4/vaa%20vaa%20en%20veenaiye.mp3








வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா
கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

வா வா வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா ல லா

தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே
உன்தன்  ஞாபகம் கூட
தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே
உன்தன் ஞாபகம் கூட

துணை தேடுதோ
தனிமை துயர் கூடுதோ

அணை மீறுதோ
உணர்ச்சி அலை பாயுதோ

நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தானோ

வா வா உன் வீணை நான்
த ன னா
விரல் மீட்டும் வேளை தான்
த ன னா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா
கிள்ளாத முல்லையே
வந்தாள் உன் எல்லையே
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ என் மனம்
இன்ப நாடகம் போட
சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ என் மனம்
இன்ப நாடகம் போட

இரவாகலாம் இளமை
அரங்கேறலாம்

உறவாடலாம் இனிய
ஸுரம் பாடலாம்
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்கையில் ஆசைகள் தீரும்

வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா
மீட்டாமல் காதல் ராகம்
ஹோ ஹோ ஹோ

கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா

வா வா உன் வீணை நான்
ல ல ல
விரல் மீட்டும் வேளைதான்
ல ல ல ல 

திங்கள், 25 நவம்பர், 2013

சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா (இரண்டு பாடல்கள்)

சுசீலா அம்மா தாலாட்டு பாடுவதைக் கேட்க வேண்டும். குரலில் என்ன ஒரு இனிமை, மேன்மை? இன்றைக்கு அவர் இந்தப் படத்தில்
சந்தோஷமாக பாடியதும் சோகமாக பாடியதுமாக இரண்டு
பாடல்களை பாடல் காட்சிகளோடு பதிந்திருக்கின்றேன். கேட்டு ரசித்துவிட்டு உங்கள் கருத்துகளை வழங்கவும்.

அது இருக்கட்டும் ஒரு புறம்.
இந்த சின்ன சின்ன பாப்பாவை வைத்து ஆரம்பமாகும் பாடல்கள் எத்தனை? அத்தனையும் எப்படி இவ்வளவு சிறப்பாக அமைந்தது?

சின்ன சின்ன ரோஜா  சிங்கார ரோஜா,
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா,
நேற்று நீ சின்ன பாப்பா,
சின்ன சின்ன பாப்பா வா பா என்று பல பாடல்கள்.

திரைப் படம்: ராணி யார் குழந்தை (1972)
பாடியவர்: P சுசீலா
இசை: T V ராஜு
பாடல்: தெரியவில்லை (பாடலின் போக்கைப் பார்த்தால் கண்ணதாசனாக இருக்கலாம்).
இயக்கம்: D யோகானந்த்
நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மி



http://asoktamil.opendrive.com/files/Nl8yNjA5NjcxNF9aTFAwUl85ZjA1/Chinna%20Chinna%20Papa-Rani%20Yaar%20Kulanthai.mp3






ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
கண்ணான கண்ணே
என் ஆசைப் பெண்ணே
பொன்னே பூவே
தாலேலோ
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா

தாயும் பெண்ணே
தமிழும் பெண்ணே
நீயும் பெண்ணம்மா
ஆ ஆ ஆ ஆ
தாயும் பெண்ணே
தமிழும் பெண்ணே
நீயும் பெண்ணம்மா
ஆ ஆ ஆ ஆ

சந்தன சிலையே
குங்குமச் சிமிழே
உன் மொழி தேனம்மா
உன் மொழி தேனம்மா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா

சிந்தாமணியில்
சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மா
ஆ ஆ ஆ ஆ

சிந்தாமணியில்
சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மா
ஆ ஆ ஆ ஆ

சித்திரை நிலவே
முத்திரை தருவே

http://asoktamil.opendrive.com/files/Nl8yNjA5NzAzMl9GVGRaRF8yMWVk/chinnachinnapaapa-sad-RaniYaarKuzhanthai.mp3








சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
கண்ணான கண்ணே
என் ஆசைப் பெண்ணே
பொன்னே பூவே
தாலேலோ
ஆராரோ ஆரி ராரிரரோ
ஆராரோ ஆரி ராரிரரோ

சந்தன சிலையே
குங்குமச் சிமிழே
உன் மொழி தேனம்மா
உன் மொழி தேனம்மா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா

சிந்தாமணியில்
சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மா
ஆ ஆ ஆ ஆ


சித்திரை நிலவே
முத்திரை தருவே
நித்திரைக் கொள்ளம்மா
நித்திரைக் கொள்ளம்மா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா

உறவுக் கொள்ளாமல்
ஒன்றைப் பெறாமல்
உனக்கு நான் அன்னையம்மா
ஆ ஆ ஆ ஆ
உண்மைகள் யாவும்
ஊமைகள் ஆனால்
மௌனமே அழுகையம்மா
மௌனமே அழுகையம்மா
ஆராரோ ஆரி ராரிரரோ
ஆராரோ ஆரி ராரிரரோ




சனி, 23 நவம்பர், 2013

பாரிஜாதம் பகலில் பூத்ததே

இளையராஜாவின் வழக்கமான பாடல். பாடும் குரல்களில் இனிமை சொட்டுகிறது.

திரைப் படம்: நிலவு சுடுவதில்லை (1984)
இசை: இளையராஜா
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: S ஜானகி, K J யேஸுதாஸ்
இயக்கம்: K ரெங்கராஜ்
நடிப்பு: சிவகுமார், ராதிகா

http://asoktamil.opendrive.com/files/Nl8yNjA5NDc2MV83UUk4eV8zZjQz/Parijadham%20Pagalil.mp3






பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள வின்மீனை அள்ளி வந்து
மாலை கட்ட சொல்லாதோ கண்கள் ரெண்டு

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே

என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே

இளம் பூவே 
இளம் பூவே
மனம் நீராடிடும்
வேளை சுக வேளை

மலர் மேலே
இளம் காற்றாடிடும் சோலை
புது சோலை

அன்பே இங்கே வா வா என்னருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே

ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
எங்கும் சிந்தாத சிந்தாமணி
ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி

அலை போலே 
அலை போலே
மனம் விளையாடிடும் நாளே
திருநாளே

நதி போலே என்னை நீ நாடலாம்
மானே இளம் மானே

அன்பே இங்கே வா வா என்னருகினில்

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள வின்மீனை அள்ளி வந்து
மாலை கட்ட சொல்லாதோ கண்கள் ரெண்டு

ல ல ல ல ல ல

வெள்ளி, 22 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்

எனது 55 வயது வாழ்வில் முதன் முறையாக திரையரங்கில் திரைப் படம் முடிந்தவுடன் மக்கள் ஹோ எனக் கத்திகொண்டு திரையரங்கின் வாசலைத்தேடி ஒருத்தரை ஒருத்தர் தாண்டிக் கொண்டு ஓடிய காட்சி இன்றுதான் கண்டேன். அவ்வளவு அருமையான படம். சொந்த தயாரிப்பாக இருந்தால் செல்வரங்கனின் அப்பன் காசு எள்ளுதான். அடுத்தவன் தயாரிப்பாய் இருந்தால் செல்வரங்கனின் இரண்டாம் உலகம் பார்ட் 2 எடுத்தால் தலையில் துண்டு நிச்சயம்.
இயக்குனர் வீட்டில் ஒரு 10 ஆங்கிலப் பட டி வி டி இருந்திருக்கும் போல. தெருவில் உள்ள ஈர சாணியெல்லம் பொறுக்கி வந்து காலால் மிதித்து நம் முதுகில் வரட்டி அடித்திருக்கிறார். எஸ் பி பி, வைரமுத்து, ஆரியா, அனுஷ்கா உழைப்பெல்லாம் வீணாக்கி இருக்கிறார். இசையைப் பற்றி சொல்லவேண்டாம்.
ஏதோ ஒரு படம் பெரும் பொருட்செலவில் வெளி நாடுகளில் போய் எடுத்தால் ரசிகர்கள் அப்படியே உச்சி குளிர்ந்து ஆடுவார்கள் என்ற நினைப்பு போலிருக்கிறது.
இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும். இவனுங்களுக்கும் ஃபைனான்ஸ். பண்ணுகிறாங்களே அவனுங்களை சொல்லனும்.

வியாழன், 21 நவம்பர், 2013

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

சிலர் சிரிப்பதையும் சிலர் அழுவதையும் கொண்டே கவியரசர் பல பாடல்களை புனைந்திருந்தாலும் ஒவ்வொரு பாடலும் அதனதன் வகையில் சிறந்த பாடல்களே. முத்தான கவிதை வரிகள் நிறைந்த பாடல்.

திரைப் படம்: பாவ மன்னிப்பு
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, தேவிகா, ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: A பீம்சிங்
குரல்: டி எம் எஸ்


http://asoktamil.opendrive.com/files/Nl8yNTYyODk0Ml9rbUIyU180YWI4/Yaaro%20Manmathan%20-%20Rajathi%20Rojakili%20Tamil%20Song%20-%20YouTube.mp3





சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத்தேடி அலைகின்றார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

காலம் ஒரு நாள் மாறும்

நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

செவ்வாய், 19 நவம்பர், 2013

யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ

கங்கை அமரன் இசையில் கேட்பது போல உள்ளது இந்தப் பாடல். சந்திர போஸ் இசை என்பது நம்பமுடியவில்லை. பல  இடங்களை ராகம் தொட்டு வருகிறது பல பட்டறைப் போல். ஏதோ S P B அவ்வப் போது  பாடலை காப்பாற்றியுள்ளார்.


திரைப் படம் : ராசாத்தி ரோசாக்கிளி (1985)
இசை: சந்திரபோஸ்
குரல்: எஸ் பி பி
பாடல்: வைரமுத்து என நினைக்கிறேன்
இயக்கம்: S தேவராஜ்
நடிப்பு: ராஜேஷ், சுலக்ஷ்னா, சுரேஷ், நளினி

http://asoktamil.opendrive.com/files/Nl8yNTYyODk0Ml9rbUIyU180YWI4/Yaaro%20Manmathan%20-%20Rajathi%20Rojakili%20Tamil%20Song%20-%20YouTube.mp3






யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
மானோ பொன்மணி
நகை இல்லா சிலைதானோ
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ
யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ

தாழம் பூபோல் செவியிலே
தவழ்ந்து ஆடும் வகையிலே
வானில் மின்னும் வெள்ளி மீன்போல்
வைரத்தோடு பதிக்கிறேன்
பாவை வண்ண கோவை
இதழ் பவளம் மெல்ல திறக்குமோ
யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ

நீல மேக குழலிலே
பூவைச்சூடும் பொழுதிலே
வெள்ளை பிறைப்போல் நெற்றிமீது
வண்ண திலகமிடுகிறேன்
பார்வை இசை கோர்வை
புது பாடல் ஒன்று படிக்குமோ

யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ

யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் 

ஞாயிறு, 17 நவம்பர், 2013

உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல

சட்டென்று கேட்டவுடன் மனதை பற்றிக் கொள்ளும் ஒரு சாதாரண பாடல்.  எப்படி இப்படி என்பது புரியவில்லை. படத்தினை பற்றின மற்ற விபரங்கள் இல்லை. பல பாடல்கள் கலந்தடித்து ஒரு பாடலாகத் தெரிகின்றது. எது எப்படியோ மனதை கவரும் வகையில் உள்ளது.

திரைப் படம்: எங்கள் தாய் (1973)
நடிப்பு: சாவித்திரி, அசோகன்
இயக்கம்: மல்லியம் ராஜகோபால்
இசை: M S விஸ்வனாதன்,
பாடியவர்கள்: S ஜானகி, ராஜேஷ் (டி எம் எஸ் போல முயற்சித்திருக்கிறார்)

http://asoktamil.opendrive.com/files/Nl8yNTgwMjgwM181QVhtMl82ODNi/UNKATHAI%20KODU%20ORU.mp3



உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தில் முதல் பாதி சொல்ல

நீ சொல்லித்தர நான் பிள்ளை எல்லை அல்ல
வரும் வார்த்தை மட்டும் அன்பின் எல்லை அல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தில் முதல் பாதி சொல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல

நீ அனுமதித்தால் நான் ஆரம்பிப்பேன்
நீ ஆரம்பித்தால் நான் அனுமதிப்பேன்
நீ அனுமதித்தால் நான் ஆரம்பிப்பேன்
நீ ஆரம்பித்தால் நான் அனுமதிப்பேன்

ஒரு நாளென்ன ஒரு பொழுதென்ன
நாம் நெருங்கி நெருங்கி மயங்கும் பொழுதில் ஒரு தடை என்ன

உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தில் முதல் பாதி சொல்ல

பால் கொதிப்பது போல் பெண் கொதிப்பதென்ன
தேள் துடிப்பது போல் கண் துடிப்பதென்ன
இது ஏனென்று இல மான் இன்று
உன்னை தொடர்ந்து தொடர்ந்து தழுவும் பொழுதில் வருவதில் என்ன
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல

வான் மழைத்துளி போல் நான் பொழிந்திடவோ
தேன் மலர் சரம் போல் நான் குளிர்ந்திடவோ
இதழ் ஓரத்திலே மது சாரத்திலே
நாம் விழுந்து விழுந்து எழுந்த போதில் ஒரு சுகம் என்ன

உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தில் முதல் பாதி சொல்ல

வெள்ளி, 15 நவம்பர், 2013

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்

 நன்றி www.koodal.com/tamil/research/articles.asp?id=264&content=tamil&name=tamil-online
முத்தமிழில் ஒன்றான நாடகத்தினின்று வளர்ந்த வடிவம் திரைப்படம். கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் களிப்பு நல்கும் திரைப்படம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இயைந்ததாகக் காணப்படுகிறது. இது கல்வியறிவு முழுவதும் பெறாத கிராமங்களில் கூடத் தனது கவர்ச்சியினால் வெகுவிரைவில் வளர்ந்தது. இங்ஙனம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புராணக் கதைகளைத் திரைப்படமாக்கி அதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். புதுவையில் பிறந்த சுப்புரத்தினம் தமிழ் பயின்று புலவராகத் திகழ்ந்தார். பாரதியின் நட்பால் தன்னைப் பாரதிதாசனாக்கிக் கொண்டு பாடு பொருளில் புதுநடை கண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பால் தனது படைப்புகளைப் புரட்சிகரமாக்கி வந்தார். பாரதிதாசன் தமிழனாய், தமிழாசிரியனாய், புரட்சிக்கவிஞனாய் வாழ்ந்த காலத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகக் கால்தடம் பதித்தார். புதுவைக்குயிலின் இனிய கானங்கள் பாடல்களாகத் திரைவானில் ஒலிக்கத் தொடங்கின. கவிஞரின் எழுத்துப் புலமை அறிந்தோர் தம் படத்திற்குத் திரைக்கதை, உரையாடலையும் எழுத அவரை அழைத்தனர். அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் வளையாபதி என்னும் படத்திற்குத் திரைக்கதை உரையாடல் (ஒரு பாடல்) எழுதினார். பாரதிதாசன் எழுதிய இப்படத்தின் திரைக்கதை உரையாடலைக் கட்டுரை புரப்பாகக் கொண்டது இக்கட்டுரை. பாரதிதாசன், மூலக்கதையை எவ்வாறு திரைக்கதையாக்குகிறார் என்பதையும், எவ்வாறு கதை மாற்றம் பெறுகின்றது என்பதையும், திரையில் பாரதிதாசனின் தமிழ்ச்சுவை எப்படி உள்ளது என்பதையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வளையாபதி - மூலக்கதை: ஐம்பெருங்க காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. அழகிய விருத்தங்களாலான இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. அபிதான சிந்தாமணி, நவகோடி நாராயணன் வளையல் வியாபாரம் செய்யும் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன். அவனைப் பற்றிப் பாடிய தமிழ்நூல் வளையாபதி என்கிறது. நவகோடி நாராயணன் வளையாபதி காப்பியத் தலைவன், வைசிய புராண முப்பத்தைந்தாவது சருக்கத்தில் அமைந்த வளையாபதியின் மூலக்கதை, நவகோடி நாராயணன் எனும் வைர வாணிகன் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை மணந்தான். அதனால் வணிகர் குலத்தினர் அவனை வெறுத்தனர். அப்பெண்ணைப் பிரிந்து அயல்நாடு சென்று பொருளீட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் தன் குலத்துப் பெண்ணொருத்தியுடன் வாழ்ந்து வருகிறான். முன்பு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை வளர்ந்து, தந்தையை அறிந்து வணிகர் அவையினரால் நாராயணன் மகனே இவன் என முறை வழங்கப்பெற, தன் தாயைத் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான். திரைக்கதை அமைப்பு: காப்பியக் கதையைத் திரைக்கதையாக மாற்றித் திரைக்கதைக்கென உரையாடலையும் தீட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். செல்வம் கொழித்த காவிரிப் பூம்பட்டினத்தில் நவகோடிப் பொன்னுக்கு அதிபதியாக நேர்மையான வாணிபனாக வாழ்ந்து வருபவன் வளையாபதி. தன் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆறு வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமையாலும் ஊர்மக்களின் கேலிக்கு உள்ளானதையும் மனதில் கொண்டு மனமுடைந்த வளையாபதி சத்தியவதி என்பவளை விரும்பி இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஊருக்கு வருகிறான். ஆத்திரமும் வருத்தமும் அடைந்த முதல் மனைவி சுந்தரி சத்தியவதியைப் பழி தீர்க்க அவளை ஒழுக்கங்கெட்டவள் எனத் தன் கணவனை நாடகமாடி நம்ப வைக்கிறாள். கருவுற்ற நிலையில் கணவனாலும் தந்தையாலும் விரட்டியடிக்கப்பட்ட சத்தியவதி தற்கொலைக்கு முயல, அவளை மூதாட்டி ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவள் அரவணைப்பில் உத்தமன் என்னும் ஆண் மகனைப் பெற்று வளர்க்கிறாள். வளர்ந்த உத்தமன் காவிரிப்பூம்பட்டினத்துப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இதற்கிடையில் சுந்தரியின் தம்பி சாத்தானின் காதலி அல்லிக்குப் பிறந்த குழந்தையைத் தம் குழந்தையென வளையாபதியிடம் கூறி அவனை நம்ப வைக்கிறாள் சுந்தரி. உத்தமன் படிக்கும் பள்ளியில் வளையாபதி மகன் அழகனும், படிக்க, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. உத்தமன் யார் என்பதை சுந்தரி, சாத்தான் அறிகின்றனர். சுந்தரி சாத்தான் மூலம் சத்தியவதியைக் கொல்ல முயல்கிறாள். தாயைக் காப்பாற்றிய உத்தமன் தந்தை மீது வழக்கு தொடர்கிறான். வழக்கில் உத்தமன் வளையாபதி மகன் என்பதும் அல்லியின் மகனே அழகன் என்பதும் தெரிய வருகிறது. சத்தியவதி கணவருடன் சேர்கிறாள். தன்னை வளையாபதியும் சத்தியவதியும் மன்னிக்கும்படிக் கூறிய சுந்தரி தற்கொலை புரிகிறாள். வளையாபதி, சத்தியவதி உத்தமனுடன் வாழ்கின்றனர். இதுவே வளையாபதியின் திரைக்கதை. கதை மாற்றம்: மூலக்கதையில் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறான் நவகோடி நாராயணன். மகன் தன் தந்தையைக் கண்டுபிடித்து வாணிகர் அவையினரால் தான் நாராயணன் மகனென ஏற்றுக் கொள்ளப் பெறுகிறான். தன் தாயைத் தந்தையிடம் சேர்க்கிறான். திரைக்கதையில் வளையாபதி குழந்தை இன்மையால் தன் மனத்திற்குப் பிடித்த பிற்பட்ட குலப்பெண்ணை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவன் மகன் உத்தமன் தன் தந்தையின் தவறை உலகுக்கு உணர்த்தி தக்க பாடம் புகட்டித் தன்னை அவன் மகன் என உலகறியச் செய்கிறான். பாத்திரப்படைப்பு: திரைக்கதை அமைப்பிற்கேற்ப கதை மாந்தர்கள் படைக்கப்பட்டால்தான் படமும் சிறக்கும். அந்த வகையில் கதைப் போக்கிற்கேற்ப வளையாபதியில் பதினெட்டு பாத்திரங்களை படைத்துள்ளார் பாரதிதாசன். படைப்புக்கு பாங்கு கொண்ட பாரதிதாசன் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப பாத்திரப் பெயர்களையும் சூட்டியுள்ளார். வளையாபதி எனும் படத்தின் பெயரே கதை நாயகனுக்கு நேர்மை, சத்தியம் தவறாத பெண் சத்தியாவதி உண்மையும் நேர்மையும்கொண்ட அவள் மகன் உத்தமன் வளையாபதியின் மைத்துனன் வஞ்சகன். அவன் பெயர் சாத்தான். ஏனைய பாத்திரப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக சுந்தரி, அல்லி, அழகன், வேம்பு என்றிவ்வாறு படைத்துள்ளார். தலைமைப் பாத்திரங்களாக வளையாபதி, சத்தியவதி, சுந்தரி, உத்தமன் ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர். உரையாடல் திறன்: திரைப்படத்தின் மூல ஆதாரம் கதை, திரைக்கதை, உரையாடல் திரைக்கதை, உரையாடலில் மட்டும் கவனம் கொண்டு கதாசிரியர்கள் எழுதி வந்தனர். அவர்கள அப்பணிக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இன்றைய தமிழ் சினிமாவின் நிலையே வேறு. இசையும் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரையாடல் (வசனம்) முக்கியத்துவம் பெற்ற காலத்தில் பாரதிதாசன் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி வந்தார். அத்திம்பேர், அம்மாமி எனும் தமிழ் மறைந்து, தமிழ் சினிமாவில் தமிழுக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் நம் பாரதிதாசன். வளையாபதி உரையாடல் மனித வாழ்க்கையில் கலந்திருந்த தினசரி மக்கள் பேசும் எளிய அழகு தமிழில் அமைந்துள்ளது. இயற்கைத் தன்மையுடன் தமிழ் வார்த்தைகளைப் படைத்துள்ளார் பாவேந்தர். எதுகையும், மோனையும், உவமை நயமுமாய் கதைக்கும் காட்சிக்கும் தக்க வகையில் எழுதப்பெற்ற வளையாபதி உரையாடலின் துளிகள் (சில) இங்கே சான்றுகளாக, குழந்தை இன்மையால் மனமுடைந்த கணவரிடம் பேசுகிறாள் சுந்தரி, சுந்தரி : அத்தான் எதிர்காலம் பலன் தராதா? வளையாபதி : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா? பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா? வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகை தருமா? சுந்தரி : நம்பிக்கை வையுங்கள் அத்தான்! வளையாபதி : நம்பிக்கை உன்னிடத்திலா? தேக்கு மரத்தில் சந்தனம்! வெற்றுச் சிப்பியில் முத்து....! சுந்தரி : (கண்ணீருடன்) நான் மலடி! வெற்றுச் சிப்பி! தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச்சிப்பி நண்பர் மகள் சத்தியவதியிடம் அவளை மணப்பதாகக் கூறுகிறான் வளையாபதி அப்போது இருவரது உரையாடல். சத்தியவதி : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா? வளையாபதி : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா? சத்தியவதி : ஆனாலும் .... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள். வளையாபதி : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்! என் பெயர் வளையாபதி அப்பா வீட்டிற்கு வந்த சத்தியவதியைப் பார்த்து யாரோடு வந்தாய் அம்மா என்கிறார். சத்தியவதியோ கண்ணில் பெருகும் நீரோடு கதியற்றவள் என்ற பேரோடு என்கிறாள். வேலைக்காரி வேம்பின் பேச்சு சுவையாக உள்ளது என்பதை வேம்பு உன் பேச்சு கரும்பு என்கிறாள் சத்தியவதி. வணிகர் குலத்தினர் சத்தியவதியை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்கின்றனர். அதற்கு வளையாபதியோ உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியுமா? என்று கணவன் மனைவி உறவுப் பிணைப்பையும், வேலைக்காரி கூறும் அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க என்னும் கூற்றில் காப்பியத்தன்மையையும் பாரதிதாசன் எழுதிய உரையாடலில் காண முடிகிறது. இவ்வுரையாடலுடன் ஒரு பாடலுடன் வளையாபதி திரைப்படம் 1952ல் திரைக்கு வந்தது. கூடவே புலமையுடையோரின் பாராட்டுக் கடிதங்களும் பாரதிதாசனுக்கு வந்தன. முடிவுரை: பாட்டுக்கவி பாரதிதாசனின் திரைக்கதை, உரையாடல் கதைப்போக்கிற்கென கதைமாந்தர் பண்பு நலனுடன் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் சிறந்த சொல்லாட்சி, நடை, எதுகை, மோனையுடன் பழகு தமிழில் அமைந்துள்ளது. இசைப்புலமையும் இயற்றமிழும் கொண்டு விளங்கிய பாவேந்தர் திரைத்தமிழிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. வளையாபதி திரைக்கதை, உரையாடல் அதற்குத் தக்கச் சான்றாகும். நன்றி: கட்டுரை மாலை




டி எம் எஸ் அவர்களுக்கு இது ஆரம்ப கால பாடல். ஆகையால் நன்றாக அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது.
ஜமுனா ராணி ரொம்பவும் இலகுவாக பாடியிருக்கிறார்.

இசை S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம் என்றாலும் இந்தப் பாடலுக்கு சுநதரம் இசையமைத்திருப்பதாக அறிகிறேன்.

கொஞ்ச காலம் பின்னரும் இதே மேட்டில், டி எம் எஸும், சுசிலா அம்மாவும் ஒரு பாடல் பாடியிருக்கின்றனர். இப்போது நினைவுக்கு வரவில்லை.

திரைப் படம்: வளையாபதி (1952)
குரல்கள்: டி எம் எஸ்,  K ஜமுனா ராணி
பாடல்: பாரதிதாசன்
இசை: S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம்
நடிப்பு : G முத்துகிருஷ்ணன் , சுந்தரியாக T A. ஜெயலக்ஷ்மி, சத்யவதியாக சௌகார் ஜானகி, உத்தமனாக ராமகிருஷ்ணா
இயக்கம்: T R சுந்தரம்


http://asoktamil.opendrive.com/files/Nl8yNTcyMjk3MF9EenZCQV83ZGEz/Kulungidum%20poovilellaam.mp3




குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அரும்பாய் முல்லைக் கொடி ஓடி தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

ஆதலால் இன்ப வாழ்வு கைக் கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்

சேர்ந்தே இன்பமெல்லாம் வாழ்ந்தே வாழ்ந்திடிவோம்
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்
ஓ ஓ
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்

என் போல் பாக்யவதி யாருமில்லை உலகினிலே
இன்பம் இன்பம் நம் இரண்டு மனம் ஒரு மனமே

ஓ ஓ ஓ ஓ ஓ

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே






புதன், 13 நவம்பர், 2013

தொட வரவோ தொந்தரவோ

தெலுங்கு  படம் தமிழாக்கப் பட்டது என்றாலும் இனிமையும்  சுவையும் நகைச்சுவையும் மாறாமல் தயாரிக்கப் பட்டது. பாடல்களில் சுந்தரத் தெலுகு வாடை அடித்தாலும், பாடலை பாடிய ஜாம்பவான்களின் குரல்களால் பாடல் நமது மனதில் தனியிடம் பிடிக்கின்றது.

திரைப் படம்: இரு நிலவுகள் (1978)
இசை: ராஜன்-நாகேந்த்ரா
பாடல்: வாலி என நினைக்கிறேன்
குரல்கள்: S ஜானகி, S P பாலசுப்ரமணியம்
இயக்கம்: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
நடிப்பு: கமல், ஜெய சுதா

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkyMzMyOV9vNFpQNV9kZDc4/Thoda%20varavo%20Thontharavo%20-Iru%20Nilavugal-.mp3






தொட வரவோ
தொந்தரவோ
தொட வரவோ தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ
இடையோர் அழகோ சிறு நூல் அளவோ
ஆஹா அள்ளிடவோ

ஹா ஹா
தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ
தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ

தொட வரவோ
ஹா
தொந்தரவோ
ஹா
உனதுளமே
ஹா
சம்மதமோ

மலரே நீ என்னை
இளமை அரசாள
எதிர் நின்ற யுவ ராணியோ
மடி மேலே வந்து
விழியால் மது வார்க்க
இதுதான் பொழுதல்லவோ

நான் தானே கள்ளு
அருகே வா அள்ளு
எனை வாங்க நீ இல்லையோ
பூஜை செய் என்று
பூவே முன் வந்து
மடியில் சாய்கின்றதோ

நீயோ என் ஊஞ்சல்
நானே பூந்தென்றல்
நெஞ்சில் நின்றாடத் தான்

தொட விடவோ தொடர்ந்திடவோ

உனதுளமே சம்மதமோ
ஹா ஹா
இடையோர் அழகோ சிறு நூல் அளவோ
ஹா
அள்ளிடவோ

தொட வரவோ தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ

தொடங்கிடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ

ஹா ஹா
ஆ ஆ
ஹே ஹே
ஆ ஆ
ஹே ஹே
ஆ ஆ ஆ
ஹோ ஹோ ஹோ ஹோ

குளிரில் நான் வாட
தவித்தேன் நீ கூட
அம்மாடி ஆசை மழை
மழையே பனி வாடை
வசமே மணல் வாடை
நீ வா காதல் மன்னா

மனதே என் மேடை
அழகே என் வீணை
பாட்டாக என் மோகினி
விழியால் என் அன்பை
விலை கொண்ட பூவை
இடையோ தேடும் எனை

நீயோ தாலாட்ட
ஏதோ தேன் ஊட்ட
நானே துணையாகவோ

தொட வரவோ தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ

இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ

தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ

தொட வரவோ
தொந்தரவோ
உனதுளமே
சம்மதமோ

தொட வரவோ
ம்
தொந்தரவோ
ஹா ஹா
உனதுளமே
ஹா ஹா ஹா
சம்மதமோ
ம் 

தொட வரவோ
தொந்தரவோ
உனதுளமே
சம்மதமோ

திங்கள், 11 நவம்பர், 2013

வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி

கால்களில் தாளம் போட வைக்கும் ஒரு முத்தான சந்திர போஸ் பாடல். மிக சாதாரணமாக எடுக்கப்பட்ட படம். தமிழகத்தில் வெற்றி நடைக் கொண்டு ஓடியது எனலாம்.
இளமையும் இசையும் போட்டியிட்டு வருகிறது.

திரைப் படம்: பாட்டி சொல்லைத் தட்டாதே (1988)
இசை: சந்திர போஸ்
நடிப்பு: மனோரமா, S S சந்திரன், பாண்டியராஜன், ஊர்வசி
இயக்கம்: ராஜசேகர்
பாடியவர்கள்: S P B, K S சித்ரா
பாடல்: வைரமுத்து என நினைக்கிறேன்






ட ட ட ட டா டா டான்
ட ட ட ட டா டா டான்

வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
உன்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
என்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

உள்ளத்தில் தொட்ட இன்பம் தீரவில்லே
உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்லே

பாவைக்கு அந்த இன்பம் தூரமில்லை
பாலுக்கு ஆடை ஒன்னும் பாரமில்லை

அம்மாடி அப்போது யாருமில்லே
செந்தாழம் பூவுக்கு சேலையில்லே

ஆபத்து வந்தாலே பாவமில்லை
ஆணென்ன செஞ்சாலும் கேள்வி இல்லே

தேன் கையில் ஒட்டாமே தேன் எடுக்கத் தெரியலே

வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
என்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

என்னென்ன ஆனதின்னு தோனவில்லை
கற்பனை பண்ணக் கூட ஞானமில்லே

கற்பனைக் காதலுக்கு தேவையில்லே
கைத் தொட்டு சொல்லித் தாரேன் வாடிப் புள்ளே

என்னை நீ காப்பாற்றும் காரணமா
என்றாலும் எல்லைகள் மீறனுமா

அம்மாடி நான் என்ன சூனியமா
அப்பப்பா நான் கூட ஞானியம்மா

ஆளானப் பெண்ணையெல்லாம் ஆதரிக்கத் திட்டமா
வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
உன்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
என்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு


சனி, 9 நவம்பர், 2013

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

Ballad of a Soldier, ஒரு போர் வீரனின் பாட்டு என்ற ருஷிய படத்தின் தழுவல்.

வழக்கம் போல K V மகாதேவனின், ஆழ் மனதை துருவிச் செல்லும் பாடல். எளிமையான பாடல் வரிகளும் இசையும் B வசந்தா அவர்களின் மென்மையான குரலும் மனதை நெகிழ வைக்கிறது.
இப் பாடல் காட்சியில் நடித்திருக்கும் நடிகை  தேவிகாவும் அழகாக கச்சிதமாக நடித்திருப்பார். இனிமையான பாடல்.


திரைப்படம்: தாயே உனக்காக (1966)
பாடியவர்: B வசந்தா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்

இயக்கம்: P புல்லையா,
நடிப்பு: சிவாஜி, பத்மினி, தேவிகா, ஜெயலலிதா 


http://asoktamil.opendrive.com/files/Nl8yNDk3MzAwM19Od0wzeV83ZDdh/Yesu%20Nathar%20pesinaal-thaye%20unakkaga.mp3







இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பார்வையிலே பழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்

திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் 
அதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

வியாழன், 7 நவம்பர், 2013

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

மோட்சத்தை காட்டும் பாடல்!!! பாடிய குரல்களின் இனிமையும் அசாதாரணமான இசையும் மனதை வசீகரிக்கிறது.

தேவார பாடலின் அடிப்படையில் பாடலாசிரியர் கவிதை அமைத்திருக்கிறார்.

ஆண்டாள் பெருமாளை பார்த்து பாடியது போன்று, இது ஒரு மங்கை சிவனை, கங்கை கொண்டானை, பிறைத் திங்கள் கொண்டானை பார்த்து பாடியதோ?

படக் காட்சி கிடைத்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்.

திரைப் படம்: கண்மலர் (1970)

குரல்கள்: பாலமுரளி கிருஷ்ணா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

பாடல்: வாலி

இசை: கே வி மகாதேவன்

நடிப்பு: ஜெமினி கணேசன், B சரோஜா தேவி

இயக்கம்: பட்டு


http://asoktamil.opendrive.com/files/Nl8yMzY5MjQ3OF90YmM4Q183NDlj/othuvaar%20un%20peyar%20othuvaar.mp3








தோடுடைய செவி யன் விடையேறியோர் தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மல ரான்முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே.
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
எங்கள் ஆதாரமான இடம் உனது திரை
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
இவையாவையும் கொண்டான் உந்தன் மாலையும் கொண்டான்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்




செவ்வாய், 5 நவம்பர், 2013

காலம் எனக்கொரு பாட்டெழுதும்

இந்தத் திரைப் படம் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். இந்த நிலையில் எங்கே நான் பாடல் காட்சிக்கு அலைவது?
அழகான தங்க வரிகளைக் கொண்ட பாடல்.

நிழல்கள் படத்தில் வரும் 'இது ஒரு பொன் மாலை பொழுது' என்ற பாடல் இந்த சாயலில் உள்ளதோ?

திரைப் படம்: பௌர்ணமி
பாடியவர்: S P B

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDA5MDEyN19ZNzU4a18xZTBh/kalam%20enakkoru.mp3




ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹே ஹே ஹே

காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீர் அலைகள்
தாவி பாயும் நினைவலைகள்

காலம் எனக்கொரு பாட்டெழுதும்

கைகளை போல் ஒரு நண்பன் இல்லை
கால்களை போல் ஒரு சொந்தம் இல்லை
உழைப்பதை போல் ஒரு இன்பம் இல்லை
இதை உணர்ந்தவர் வாழ்வில் கவலை இல்லை

காலம் எனக்கொரு பாட்டெழுதும்

எங்கே உருவம் அசைந்தாலும்
அங்கே நிழலும் சதிராடும்
என் இதயம் எங்கே இருந்தாலும்
அது உறவை தேடி இசை பாடும்


காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீர் அலைகள்
தாவி பாயும் நினைவலைகள்

காலம் எனக்கொரு பாட்டெழுதும்

ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹே

ஞாயிறு, 3 நவம்பர், 2013

நதியில் ஆடும் பூவனம்

இளையராஜாவின் அருமையான முயற்சிகள் வடிகாலாக அமைந்த படம். அவ்வளவாக மக்களிடம் படம் சென்றடையவில்லை என்று நினைவு.

தோல்வியடைந்த வெற்றியடைந்த படமா என சொல்லமுடியவில்லை. பாடல்களை பொருத்த வரை நம் மனதினை கொள்ளைக் கொண்ட பாடல்கள்.

இந்தப் பாடலில் இசையும் பாடியவர்களும் இசையமைப்பும் ஒரு எல்லைக்கே போய்விட்டதெனலாம்.
S P Bயும் S ஜானகி அம்மாவும் அப்படியே உருகிப் பாடியிருக்கிறார்கள்.

திரைப் படம்: காதல் ஓவியம்  (1982)
நடிப்பு: கண்ணன், ராதா
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம், Sஜானகி
இசை: இளையராஜா  
பாடல்: வைரமுத்து
இயக்கம்: பாரதிராஜா  

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzM4NTgyN19XVlFVdV83ZGNi/Nathiyil%20aadum%20poovanam.mp3







அவித்யா  நாமன் தஷ்த் திமிர மிகிர தீப நகரி
ஜடா நாம் சைந்தன்ய ஸ்தபக மகரந்த
ஸ்ருதி ஜரி கரித்ராடாம்  சிந்தாமணி
குணநிக்கா ஜன்ம ஜலதோவ்
விமக்னாநாம் தம்ஷ்ரா முரரிபு வராஷ்ய பவதி

ஹா ஹா ஹா ஹா

நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்


குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை

அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்மதேவன் சாதனை

தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறிக்கச் சொல்லும் காமனை

எதிர்த்து நின்றால் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எதிர்த்து நின்றால் வேதனை

அம்பு தொடுக்கும் போது நீ துணை
சோதனை
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஸ ரி நி ச
ப ம ரி க
ஸ ரி நி ச
ப ம ரி க
ம க ப ம
ம க நி ச
நி ச ப ம
ம க நி ச

ஸ ஸ ஸ ஸ ஸஸரி நி நி த த
தா த தா த த த நி ப ப த த

றி ம த நி த ப நி த
றி ச நி த பா ம ம க
தா ப ம நி நி த ப
ஸ நி தப ஸ ஸ ரி ரி க க ம ம ப ப
ஸா ஸ நி நி த த ப ப ம
ணி ரி க மா ப

சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே

உதயகானம் போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே

இரவு முழுதும் கீதமே

நிலவின் மடியில் ஈரமே

விரல்கள் விருந்தை கேட்குமே

ஒரு விளக்கு விழித்து பார்க்குமே

இதழ்கள் இதழை தேடுமே

ஒரு கனவு படுக்கை போடுமே
போதுமே
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்

வெள்ளி, 1 நவம்பர், 2013

முத்தைத் தரு பத்தித் திருநகை

எனதினிய நண்பர்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.



ஷண்முகப் பிரியா ராகத்தில் அமைந்த இந்தப்  பாடகர் திலகம் டி எம் எஸ் ஒரே டேக்கில் பாடி முடித்ததாக சரித்திரம்.
இந்தப் பாடலை இப்படி வரிவடிவில் எழுத வாய்ப்பு கொடுத்த கிணற்றுத் தவளை நண்பர்களுக்கு நன்றி. இங்கே தவறுதலாக இடம் பெற்று இருக்கும் இலக்கணப் பிழைகளை உயர்தமிழ் அறிஞர்கள் மன்னித்து ஆதரிக்க வேண்டும்.
பாடல் வரிகளை எடுத்து எழுதவே இப்படி என்றால் பாடியவரின் திறமையை என்னவென்று சொல்லா?????

T R பாப்பா இசையமைத்த இந்தப் பாடலை, அருள்திரு கிருபானந்த வாரியார் உதவியுடன் டி எம் எஸ் இலக்கண சுத்தமாக பாட பயிற்சி எடுத்து பின் பாடியதாக 'தி ஹிந்து' சொல்கிறது.
தமிழ் திரை உலகப் பாடல்களில் ஒரு உன்னதனமானப் பாடல் இதுவாகும்.

திரைப் படம்: அருணகிரிநாதர் (1964)
இசை: G R ராமநாதனும் T R பாப்பாவும் இணைந்து வழங்கியுள்ளனர்
நடிப்பு: டி எம் எஸ், B S சரோஜா (அருணகிரியின் சகோதிரியாக), M R ராதா, சாரதா
இயக்கம்: ராமண்ணா
பாடல் அருளியது: ஸ்வாமி அருணகிரிநாதர்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzgwNjkxMF9lTVVjVF9lOWNl/Muthai%20Tharu%20-%20Arunagirinathar.mp3






முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிரை சத்தி சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முருகா

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிரை சத்தி சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிரை சத்தி சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பதுமூ வர்க்கத்த மரரும் அடிபேண

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பதுமூ வர்க்கத்த மரரும் அடிபேண

பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக

பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக

பத்தர்க்க் இரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

பத்தர்க்க் இரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நித்தப்பதம் வைத்துப் பைரவி
திக்கொக் கணடிக்கக் கழுகொடு கழுதாட

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நித்தப்பதம் வைத்துப் பைரவி
திக்கொக் கணடிக்கக் கழுகொடு கழுதாட

திக்குப் பரி நட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக எனவோத

திக்குப் பரி நட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக எனவோத

கொத்துப் பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகு குகு
குத்திப் புதை புக்குப் பிடி என முது கூகை

கொத்துப் பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகு குகு
குத்திப் புதை புக்குப் பிடி என முது கூகை

கொட்புற்ற ரெழ நட்பற்ற ரௌனரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

கொட்புற்ற ரெழ நட்பற்ற ரௌனரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே