பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 மார்ச், 2015

மார்கழியில் குளிச்சு பாரு ...margzhiyil kulichchi paaru...

தங்கர் பச்சானின் ஒன்பது ரூபா நோட்டு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். சமீபத்தில் என் மனதை தொட்டு சென்ற பாடல்களில் இது ஒன்று. உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.

திரைப்படம்: ஒன்பது ரூபாய் நோட்டு (2007)
இசை: பரத்வாஜ்
பாடல்: வைரமுத்து
நடிப்பு: சத்யராஜ், அர்ச்சனா
இயக்கம்: தங்கர் பச்சன்











மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்

மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் 

உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்

பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் 

வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்

சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்

மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் 


என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்

இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன்

துறவிக்கு வீடு மனை ஏதும் இல்ல

ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல

சில்லென காத்து சுற்றோட ஊற்று

பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம்

போதுமடா போதுமடா போதுமடா சாமி

நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்

மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்


காசு பணம் சந்தோசம் தருவதில்ல

வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல

போதுமுன்னு மனசு போல செல்வமில்ல

தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல

வேப்பமர நிழலு வீசிலடிக்கும் குயிலு

மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்

போதுமடா போதுமடா போதுமடா சாமி

அட என்னப்போல சுகமான ஆளிருந்தா காமி


மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்

மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்

உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்

பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் 

வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்

சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்

வியாழன், 26 மார்ச், 2015

வானம் இங்கே மண்ணில் வந்தது....vanam inge mannil


சங்கர் கணேஷ் பாடல்கள் பெரும்பாலுமானவை 

ஹிந்தியிலிருந்தோ மற்ற மொழிகளில் இருந்தோ எடுத்து 

கையாண்டதாக இருக்கும். ஆனால் இனிமையான 

பாடல்களை காப்பி அடித்திருப்பார்கள். தாசரியின் படப் 

பாடல்கள் கொஞ்சம் கண்டிப்பானவை. நன்றாக இருந்தால் 

மட்டுமே பாடலை ஏற்றுக் கொள்வார். அந்த வகையில் இந்தப்

படப் பாடல்கள். தெலுங்கில் சிவரஞ்சனி எனும் படத்தின் 

தமிழாக்கம் இது.


இயக்கம்: தாசரி நாராயண ராவ்

நடிப்பு: ஸ்ரீப்ரியா, மோகன்பாபு

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், ஜானகி

பாடல்: கண்ணதாசன் அல்லது புலமைபித்தன்














வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

ஆகாயம் காணாத நட்சத்திரம்

உன் அங்கத்தில் நாண் சூடும் முத்துச்சரம்

ஹ ஹ ஹ ஹ

நாள்தோரும் மறைவாக நான் பார்க்கவோ

சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்க்கவோ

ஆகாயம் காணாத நட்சத்திரம்

உன் அங்கத்தில் நான் சூடும் முத்துச்சரம்

ஹ ஹ ஹ ஹ 

நாள்தோரும் மறைவாக நான் பார்க்கவோ

சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்க்கவோ

இன்ப வேதனை அது தராமல்

இன்ப வேதனை அது தராமல்
உள்ளமிது ரெண்டும் தள்ளாடும்

வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

ஆனந்த நீராடும் நிலை என்னவோ

அதில் அறுபத்து நான்கென்னும் கலை என்னவோ

ஹ ஹ ஹ ஹ 

எல்லாம் ஒரு நாளில் நீ காணவோ

உன் இளமேனி தாங்காமல் போராடவோ

ஹ ஹ ஹ ஹ 

ஆனந்த நீராடும் நிலை என்னவோ

அதில் அறுபத்து நான்கென்னும் கலை என்னவோ

ஹ ஹ ஹ ஹ 

எல்லாம் ஒரு நாளில் நீ காணவோ

உன் இளமேனி தாங்காமல் போராடவோ

இன்ப கங்கையில் இரு ஓடங்கள்

இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
போகட்டும் கரை காணட்டும்

வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

ஹ ஹ ஹ 

ஞாயிறு, 22 மார்ச், 2015

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி..Solladi abirami....

டி எம்  எஸ், கண்ணதாசன், மகாதேவன் மற்றும் சுப்பையா அனைவரும் சேர்ந்து, சிறந்து படைத்திருக்கும் ஒரு MASTER PIECE இது. அபிராமி அந்தாதியில் தொடங்கி கண்ணதாசனின் கவிதையில் பிரமாதம்.

திரைப்படம்: ஆதி பராசக்தி (1971)
நடிப்பு: S V சுப்பையா, ஜெமினி, ஜெயலலிதா
இசை: கே.வி. மஹாதேவன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
இயக்கம்:K S கோபாலகிருஷ்ணன்

பாடல்: கண்ணதாசன்









 
மணியே
மணியின் ஒலியே
ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே
அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே
அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை
நின் பத்மபாதம் பணிந்த பின்னே

சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி

நில்லடி முன்னாலே
நில்லடி முன்னாலே
முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
சொல்லடி அபிராமி

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ
இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ
சொல்லடி அபிராமி

வாராயோ
ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ
வாராயோ
ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே

பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட
வாராயோ
ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட
இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
இரு கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட
மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
எழில் வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஞாயிறு, 15 மார்ச், 2015

ஓடி விளையாடு பாப்பா...Odi vilaiyadu pappa..

அப்பப்பா என்ன ஒரு பாடல். உண்மையான அக்கறையுடன். அந்தப் பாடலுக்கு நடித்திருக்கும் இவர்களும் குரல் கொடுத்திருக்கும் சீர்காழியும் இசையும் மனதை நிகழச் செய்கிறது. இன்றைக்கேல்லாம் எது இது போல பாடல்கள்?

திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் (1961)
இசை: G ராமநாதன்
இயக்கம்: B R பந்துலு
நடிப்பு: சிவாஜி, பத்மினி, ஜெமினி
பாடல்: சுப்ரமணிய பாரதியார்
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்













ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே
பாப்பா சின்னஞ் சிறுகுருவி போலே
நீ திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு
நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
கொத்தித் திரியுமந்தக் கோழி
அதைக் கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய்
அதற்க் கிரக்க படவேணும் பாப்பா
பாலைப் பொழிந்துதரும் பாப்பா
அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான்
அது மனிதருக்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை
நெல்லு வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு
இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
பொய்சொல்லக் கூடாது பாப்பா
என்றும் புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா
ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால்
நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும்
நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு
துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா
தாய் சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி
நீ திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற
எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா
நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதை தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த இந்துத்தானம்
அதை தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா
தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்
இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு
நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத இந்துத்தானம்
இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும்
தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்
வைரமுடைய நெஞ்சு வேணும்
இது வாழும் முறைமையடி பாப்பா

திங்கள், 9 மார்ச், 2015

மார்கழித் திங்கள் மதி....Maargazhi thingal mathi

மார்கழி மாதம் மட்டும்தான் கேட்கணுமா என்ன? என்றைக்கு கேட்டாலும், P சுசீலா அம்மாவின் குரலும் K V மகாதேவனின் இசையும் மனதை கொள்ளைக் கொள்ளும்.

திரைப் படம்: திருமால் பெருமை  (1968)
இசை: K V மகாதேவன்
பாடல்: ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: சிவாஜி கணேசன், K R விஜயா
இயக்கம்: A P நாகராஜன்






மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

திங்கள், 2 மார்ச், 2015

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி..nenjukku mugame kannaadi...

இனிமையான பாடல். டி எம் எஸ் மிக அலட்சியமாக பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. திறமை இருக்குது மிக சாதாரணமாக பாடினார். ஆனால் அதே அடக்கத்துடன் சுசீலாம்மா சிறப்பாட பாடியிருக்கிறார்.
திகட்டாத பாடல்.

திரைப் படம்: மாடி வீட்டு மாப்பிள்ளை (1967)
பாடியவர்கள்: டி.எம்.சௌந்திர ராஜன், பி.சுசீலா
இசை: டி.சலபதி ராவ்
நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா
இயக்கம்: S K ஆனந்தசாரி
பாடல்: கண்ணதாசன்








நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

ஊரறியாமல் மறைத்த போதும்
ஊரறியாமல் மறைத்த போதும்
ஓடும் விழிகள் தள்ளாடி

நெஞ்சுக்கு
உன் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

சபையறியாமல் நடக்கும்
அது தலை முதல் கால் வரை அளக்கும்
சபையறியாமல் நடக்கும்
அது தலை முதல் கால் வரை அளக்கும்
இடை இடையிடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழைகள் பசி போல் இருக்கும்
இருக்கும்

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

ஆசையை பல நாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்
ஆசையை பல நாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்

ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
அது ஆண்களுக்கெங்கே இருக்கும் இருக்கும்

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும் போது
பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும் போது

கண்ணுக்கு திரை  கிடையாது
அது கலந்த பின் விலகுவதேது ஏது

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி