Want This Widjet

Sunday, 18 March 2012

தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை


கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல். பாடும் நிலா பாலுவும் பின்னர் நாளில் தனிப் பாடலாக அதே வீரியம் குறையாமல் பாடி இருக்கிறார். பலர் கேட்டிருக்கலாம். இதுவரை கேட்காதவர்களுக்காக இதோ இரு பாடல்களும்.

திரைப் படம்: மணியோசை (1963)
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: கல்யான் குமார், விஜயகுமாரி
இயக்கம்: P மாதவன்



http://www.divshare.com/download/16972903-980

S P B குரலில்



http://www.divshare.com/download/16972910-c0b

தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணியோசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சின் மணியோசை
இது உறவினை கூறும் மணியோசை
இவன் உயிரினை காக்கும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

அருமை மகனே என்றொரு வார்த்தை
வழங்கும் கோவில் மணியோசை
அண்ணா அண்ணா என்றோர் குரலில்
அடங்கும் கோவில் மணியோசை
இது ஆசை கிழவன் குரலோசை
அவன் அன்பினை காட்டும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

Friday, 16 March 2012

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்சை உசுப்புது


மென்மையான இசையும் குரல்களும் பாடலுக்கு பக்க பலமாக உள்ளன.

திரைப் படம்: திருமதி பழனிச்சாமி (1992)
பாடியவர்கள்: S P B, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சத்யராஜ், சுகன்யா
இயக்கம்: R சுந்தர்ராஜன்





http://www.divshare.com/download/17015687-682



http://www.divshare.com/download/17015699-e5b

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவதில் நாணம் விட்டு
நான் ஒரு கிறக்கத்திலே
கதை படிக்கிற நேரம்
சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிஷமும் நானும் பண்ண
ஆனந்த குளத்தினிலே
அலை அடிக்கிற காலம்
உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்
கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில்வரை காத்து கிடந்தேன்
வாலிபம் தவம் இருந்த வேளை வந்ததையா
இள மனசு இனி உன்னைத்தான் விடுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
முன் கதவை தாப்பா போட
மல்லியப்பூ வாசம் கூட
மாப்பிள்ளை மனசுக்குள்ளே
மடை திறந்தது ஆசை
அங்கே இங்கே கிள்ளக் கிள்ள
ஆசையிலே துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் செல்லும்
வளை குலுங்கிடும் ஓசை
என்ன செய்ய வேகம் வருது
உன்னை அள்ள மோகம் வருது
வஞ்சிப் பொண்ணு வாழ குருத்து
வித்தைகளை கட்டு படுத்து
போதையை கிளப்புதடி பூவே உன் வனப்பு
விரல் நுனி தான் உடல் முழுதும் படுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது

Sunday, 11 March 2012

உலகமெங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசையின்றி பேசும் மொழி


மக்கள் திலகத்துடன் அழகான பாரதி இணைந்து இனிமையான பாடலை, காதலுக்கு உண்மையான மரியாதையை கொடுத்திருக்கிறார்கள்.

திரைப் படம்: நாடோடி (1966)
இயக்கம்: B R பந்துலு
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: T M S, P சுசீலா




http://www.divshare.com/download/16998773-80c



http://www.divshare.com/download/16998777-4cf

உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு

கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடி சென்ற ஆண்டுகள் கோடி
ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடி சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கலைகள் தேடி கலந்தவர் கோடி
கோடி மனிதர் பேசிய பின்பும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடி சென்று சேர்வது காதல்
தேடி சென்று சேர்வது காதல்
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

Friday, 9 March 2012

காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு


எப்போதுமே திருமதி ஜமுனாராணியின் பாடல்களில் அவரது குரல் கம்பீரமாக ஒலிக்கும். அதுவும் இந்தப் பாடலில் கம்பீரமும் காதலும் இழைந்தோடும் அற்புதம் இனிமை.

திரைப் படம்:  தெய்வப்பிறவி (1960)
பாடியவர்: K ஜமுனாராணி
இசை: R ஸுதர்சனம்
நடிப்பு:  சிவாஜி, பத்மினி
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு









ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
எங்கள் காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு

காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
பொல்லாதது 
பொல்லாதது  மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு

மாலை பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
மாலை பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
பொல்லாதது
பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு 

Wednesday, 7 March 2012

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்டச் சொல்லித்தந்தாரு.


மென்மையான பின்னனி இசையில் அழகான குரல்கள் இசைக்கும் பாடல்

திரைப் படம்: ஒருவர் வாழும் ஆலயம் (1988)
இசை: இளையராஜா
குரல்கள்: மலேசிய வாசுதேவன், சித்ரா
பாடல்: பொன்னடியான்
நடிப்பு: பிரபு, அம்பிகா
இயக்கம்: ஷண்முகப் பிரியன்




http://www.divshare.com/download/15733769-d48




http://www.divshare.com/download/15733428-2db

மலையோரம்
விளையாடும்
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்த
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத்தானே சேரனும் நீயே
ஆ ஆ ஆ ஆ

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

தந்த தனதனதந்தந்ததன தானனா
திகிட தகிததித தகிடதோம் தகிடதோம்
தக்கி திம்மி தக்க ஜனு தக்க திம்மி தக்க ஜனு
தந்த தனதனதந்ததந்த தானாதானா
தக்க திம்மி தக்க ஜனு தகிடதோம் தகிடதோம்
தகிட தகிட தகிட தகிட தகிட

காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆடிடும் பூவும் ஆசையைத்தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
ஆ ஆ ஆ ஆ

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

Monday, 5 March 2012

கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி


இனிமைத் தமிழிலில் அழகானக் குரல்கள்.

திரைப் படம்: மன்னாதி மன்னன் (1960)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர்கள்:P சுசீலா, T M S
நடிப்பு: பத்மினி, M G R
இயக்கம்: எம். நடேசன்




http://www.divshare.com/download/16945139-1bd



http://www.divshare.com/download/16945221-b9f

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ
சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ
இந்த பத்தரை மாற்று பாவை மேனி பங்கையம் ஆகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
புது பண் பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா


காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கலந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா


அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ
உயர் செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனயோ
மந்தளிர் போலும் எழில் மேனி மின்னுவதெப்படியோ
ம்
ம்
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

நீல வானும் நிலவும் போல கூடுவோம்
நல்ல இன்பமென்னும் படகிலேறி ஆடுவோம்
நீல வானும் நிலவும் போல கூடுவோம்
நல்ல இன்பமென்னும் படகிலேறி ஆடுவோம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். (ஏமாறும் முன்)


நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!! இணைத்துள்ள விளம்பரத்தை பாருங்கள்.

தொலைபேசியில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஜாதகம் பார்க்க ரூபாய் 100, ஆனவர்களுக்கு ரூபாய் 150 என்கிறார்கள். ஆனால் நேரில் போனால் 5 மணி நேர காத்திருப்புக்கு பின் ஜோசியரின் உதவியாளர் லிஸ்ட் போடுகிறார் ரூபாய் ஆயிரத்துக்கு. இது 10 நிமிடங்கள்தான். முன் பணம் கொடுத்துவிட்டால் நாளை மீண்டும் வந்து 5 மணி நேரம் காத்திருந்து பார்த்தால் எல்லாவற்றையும் விரிவாக விளக்கிவிடுவாராம். இதையே நாங்கள் காத்திருக்காமல் வந்த உடன் உதவியாளர் சொல்லி இருந்தால் எங்களுக்கு நேரமாவது மிச்சமாகி இருக்குமே என்றால் அதெல்லாம் நடுவில் யாரையும் கூப்பிடக்கூடாது. பக்திமயமாக சாமிகள் இருக்கும் அறையில்தான் ஏமாற்றலாம் என்கிறான்கள். பொதுவாக நாம் போனவுடன் கூட்டததை பார்த்தவுடன் நமக்கு தோன்றுவது இவர் நன்றாக பார்ப்பார் போலிருக்கு அதான் இவ்வளவு கூட்டம் என்பதுதான். அதற்காகவே யாரையும் வீட்டுக்கு அனுப்பாமல் இப்படி சோதித்து அனுப்புகிறார்கள். நானும் 5 மணி நேரம் வீணாக போனாலும் பரவாயில்லை. இவனிடம் ஜோசியம் பார்க்க வேண்டாம் என்று சத்தம் போட்டு விட்டு வந்தேன். நாம் சத்தம் போடுவதையும் இரண்டு வேளையாட்க்கள் லாவகமாக அடுத்த ஏமாளிகளுக்கு கேட்காத வண்ணம் வேளியில் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆக திட்டமிட்டுதான் ஏமாற்றுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். அப்புறம் உங்கள் பாடு.