இனிமை இந்த பாடலை பாடிய குரல்களால் வந்தது. S P B மற்றும் S ஜானகியின் வழக்கமான நெளிவு சுளிவுடனான குரல்கள். மென்மையான பின்னனி இசையும் பாடல் வரிகளும் வசீகரம்.
திரைப் படம்: அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (1982)
இயக்கம்: R சுந்தரராஜன்
நடிப்பு: கபில்தேவ், சுலோசனா
இசை: K V மகாதேவன்
பாடல்: வாலி
தானாக வீடு தேடி தலைவன் வந்த போது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தானாக வீடு தேடி தலைவன் வந்த போது
சரியாக கவனியாமல் இருப்பதும் ஆகாது
சரியாக கவனியாமல் இருப்பதும் ஆகாது
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி
கன்னல் சுவை விருந்து அவர் உண்ண வேண்டாமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கன்னல் சுவை விருந்து அவர் உண்ண வேண்டாமா
களிப்பினிலே சொர்க்கத்தையும் காணவேண்டாமா
தன்னை மறந்தே அவரும் மயங்க வேண்டாமா
தன்னை மறந்தே அவரும் மயங்க வேண்டாமா
உன் தலைவி அதை பார்த்து மனம் மகிழ வேண்டாமா
உன் தலைவி அதை பார்த்து மனம் மகிழ வேண்டாமா
இளையராஜாவின் இனிமையான மென்மையான பின்னனி இசையில் உமா ரமணனின் குயில் குரலில் அழகானப் பாடல்
திரைப் படம்: என்னருகில் நீ இருந்தால் (1991)
குரல்கள்: மனோ, உமா ரமணன்
இசை: இளையராஜா
நடிப்பு: குரு ஆதித்யன், பேபி ப்ரியங்கா (யாரோ புதியவர்கள்)
இயக்கம்: சுந்தர் K விஜயன்
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
தேடாத நேரமில்லையே
தீராத காதல் தொல்லையே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும்
மாலை நேர பூக்களே ஆவல் மீறி பார்க்குதே
வானம் காதல் வீதிதான் வானம்பாடி பாடுதே
இரவெல்லாம் உன் உறவோடு எண்ணாத சொர்க்கலோகம்
கதை பேசும் பெண்ணின் கண்ணில் கவிதை தென்றல் வீசும்
நினைவில் ஊஞ்சல் ஆடும் விரகதாபம் மேலும் மேலும் ஏறும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும்
நாணம் மூடும் மௌனமே கூறும் காதல் வேதமே
காதல் தேவன் பேசினால் காலம் ஊமை ஆகுமே
ஈதழ் மேலே என் இதழ் சேர பெண் உதவி செய்ய வேண்டும்
மடிமேலே தலை சாய என் மனது உன்னை கேட்கும்
கேள்வி என்ன கண்ணே நான் என்றும் உந்தன் சொந்தமே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
தேடாத நேரமில்லையே
தீராத காதல் தொல்லையே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும்
திரைப் படம்: என்றும் அன்புடன் (1992)
இயக்கம்: பாக்யநாதன்
நடிப்பு: முரளி, ஹீரா, சித்தாரா
இசை: இளையராஜா
குரல்கள்: மனோ, S ஜானகி
பாடல்: பொன்னடியான்
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
என்னை இழந்தேன்
செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன்
சிந்தும் கவியில்
ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
நீயும் நானும் சேர்ந்ததற்கு
காதல்தானே காரணம்
காதல் இங்கு இல்லை என்றால்
வாழ்வில் ஏது தோரணம்
தீபங்களை மெல்ல மெல்ல
ஏற்றிச் செல் அன்பே அன்பே
கீதங்களைச் சொல்ல சொல்ல
ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில் ஆடி
உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவெனும் தேரில்
வெகு வெகு தூரம் போகலாம்
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
பூங்குருத்து பூங்கழுத்தில்
பூ தொடுத்து சூடினேன்
பூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன்
இன்பம் என்றால் என்ன வென்று
உன்னிடத்தில் கண்டு கொண்டேன்
இன்னும் என்ன உண்டு என்று
சொர்க்கம் வரை செல்கிறேன்
அறு சுவையோடு புது விருந்தாக சுகம் பரிமாறும் தேவியே
தலை முதல் பாதம் சுகம் தரும் வேதம்
படித்திட தூண்டும் ஆவியே
ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
என்னை இழந்தேன்
செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன்
சிந்தும் கவியில்
ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
இனிமையான பாடல், இளம் ஜோடிகளுடன். அருமையான பின்னனி இசை. K J யேஸுதாஸ் அவர்களின் சோக கீதத்தில் பாடல் வரிகளில் எந்த மாற்றமும் இன்றி சிம்பிலாக முடித்துவிட்டார்கள். பாடல் ஆசிரியர் ஏமாந்தவர் போலிருக்கிறது
திரைப் படம்: நினைக்கத் தெரிந்த மனமே (1987)
இசை: இளையராஜா
குரல்கள்: K J யேஸுதாஸ், சித்ரா
நடிப்பு: மோகன், ரூபினி
இயக்கம்: சுரேஷ்
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போதும் காயங்களும் ஆறியதேன்
ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் வந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும் மயங்குவதேனோ என் மனது
இரு நெஞ்சின் துன்பம் இது காதல்தான் அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
மாலை நன் நேரம் மாறிடவேண்டாம் மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிடவேண்டாம் கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும் சந்திரன் அங்கே வந்திடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும் கடலினில் கூட அலை நிற்கட்டும்
உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
ல ல ல ல ல ல ல ல ல
திரு கணேஷ் அவர்களின் விருப்பப்பாடல். நல்ல இனிமையான பாடல்.
திரைப் படம்: சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977)
குரல்கள்: S P B, P சுசீலா
பாடல்: வாலி
இசை: இளையராஜா
நடிப்பு: சிவகுமார், ஸ்ரீதேவி
http://www.divshare.com/download/15919260-7b4
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ் கவிதை பாடினான்
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
தமிழ் கொண்ட வைகை போலே திருமேனி நடை போட
கார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட
பனி போல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடை போட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடை போட
மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ
வா மெல்ல வா
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ
கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட
மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக
ஊடல் என்னும் ஒரு நாடகம்
கூடல்தனில் அரங்கேறிடும்
வா நெருங்கி வா
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ் கவிதை பாடினான்
இனிமையான இசையில் புரட்சி தலைவரின் பல பாடல்களில் ஒன்று.
திரைப் படம்: தேடி வந்த மாப்பிள்ளை (1970)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இயக்கம்: B R பந்துலு
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதி தோற்றம்தானோ
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதி தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன
என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
வெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண்படும் வேளையில் கைபடுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்
இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம்
என் தோட்டம்
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன
கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும்
மிதப்பது யாராட
புது மழை போலே நீரோட
அதிசய நதியில் நானாட
நீ ஆட
ஆஹா தேனோட
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன
என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ
ஹோ ஹோ ஹோ
ந ந ந ந ந ந ந
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள்
முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
தையாரே தைய தைய தையா
தையாரே தைய தைய தையா
தரையில் நடந்த நான்
வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான்
பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
ஆ ஆயியயே அயியா அயியயா
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள்
முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அச்சாரம் அப்போ தந்த முத்தாரம்
அத அடகு வைக்காம காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
வெற்றி மாலை போட்டானைய்யா கெட்டிகார ராசா
முத்து போல கண்டானங்கே மொட்டு போல ரோசா
சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா
காணாதத கண்டேன் அப்போ ஆனானையா பாசா
என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதும் ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு
அட வாயா மச்சானே யோகம் இப்போ உண்டாச்சு
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
ம் ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மெட்டுபோடும் செந்தாழம்பூ கெட்டி மேளம் போட
எட்டி பாக்கும் ஆவாரம்பூ வெட்கதோடு ஊட
அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுகுள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானைய்யா கூட
சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்ட வரும் எப்போதும்
அட வாய ராசாவே ஐயா இப்போ உன்னேரம்
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அச்சாரம் அப்போ தந்த முத்தாரம்
அத அடகு வைக்காம காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
பழம்பெரும் நடிகர், பாடகர் திரு டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் வாரிசுகள் எடுத்த படம்.
T R M அவர்களின் மகள் திருமதி சாவித்திரி மகாலெஷ்மியும் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்தப் படம் வெளிவராத திரைப் படங்கள் வரிசையில் சேர்ந்துவிட்டது போல தெரிகிறது.
எப்படியோ வழக்கமான பாடல் வழக்கம் போல இனிமை.
திரைப் படம்: அனு (1982)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெயதேவி, ராஜா (இருவரும் புதியவர்கள் போலிருக்கு)
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள்
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள்
மாரிகால மேகம்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள்
மாரிகால மேகம்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள்
வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள்
வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள்
படக் காட்சி படி இது தாலாட்டு பாடல் அல்ல. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுகிறார். ஆனால் பாடல் தாலாட்டுக்கு உதவும். மென்மையான அன்னையின் குரலில் திருமதி சுசீலா அவர்களின் குரல் இனிமை.
திரைப் படம்: அவர் எனக்கே சொந்தம் (1977)
குரல்: P சுசீலா
இசை: இளையராஜா
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீவித்யா
பாடல்: பஞ்சு அருணாசலம்
இயக்கம்: பட்டு
அழகானப் பாடல் ஆனால் காணொளியில் பார்க்கும் போது நடிகர் சுரேஷுக்கு மலேஷிய வாசுதேவன் குரல் பொருந்தாதது போல தோன்றுகிறது. அவர் கொஞ்சம் மென்மையாகப் பாடியிருக்கலாம்
திரைப் படம் : ஆகாய தாமரைகள் (1985)
குரல்கள் : மலேஷியா வாசுதேவன், S P சைலஜா
இசை : இளையராஜா
நடிப்பு: சுரேஷ், ரேவதி
இயக்கம்: V அழகப்பன்
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
நீர் அருவிகள் ஓர் நதியென ஏன் நடக்கிறது
மாங்கடலென்னும் தன் துணைவனைத் தான் கலந்திடவே
செந்தாழம்பூ கார்க்காலம் வந்ததும்
கூத்தாடுதே யாரை கண்டு
மின்னல் என்னும் தன் காதல் நாயகன்
வானத்திலே மின்னக்கண்டு
அதில் கதை கோடி உண்டு
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்
நாம் இணைந்திடவே
உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே
என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்
உன் கண்களே சொல்கின்றதே
உன் கூந்தலில் பூச்சூடும் பூவிது
உன் மார்பிலே சாய்கின்றதே
மனம் சதிராடும் காலம்
ஆனந்த வெள்ளத்திலே ஆனந்த வெள்ளத்திலே
தேன் சுவைதனை பூ மணம்தனை யார் பிரித்திடுவார்
யார் பிரிப்பினும் வெண் நிலவினை வான் பிரிந்திடுமோ
ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்
என்னாளுமே மாறாதைய்யா
நெஞ்சுகுள்ளே உண்டாகும் பந்தங்கள்
என்னாளுமே நீங்காதம்மா
கண்ணா அதுதானே காதல்
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
ஆ ஆ ஆ
நெஞ்சோரம் இன்னேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
நெஞ்சோரம் இன்னேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது
இங்கு வேர்வை ஆறானது
பார்வை வேறானது
இங்கு வேர்வை ஆறானது
சேலை தொடு
மாலை இடு
இளமையில் தூது விடு
காதல்
சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும்
கனிரசம்
என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும்
கனிரசம்
நெஞ்சிலோர் வேதனை
இனி தேனில் ஆராதனை
நெஞ்சிலோர் வேதனை
இனி தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வையிடு
மன்மத சேதி கொடு
பாடு
சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
ஆ ஆ ஆஹா ஆஹா
சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சமீபத்திய பாடல்களில் ஒரு புதிய இசையமைப்பாளரின் அழகான பாடல். என்னை பொருத்தவரை திரு உண்ணிகிருஷ்ணன் குரலை அன்றே இந்த பாடலைப் போல உடைத்து பாடி இருந்தால் இன்னும் கொஞ்சம் காலம் திரை இசை உலகில் இருந்திருப்பார். மூக்கினால் பாடுவது போல பாடுவார் என்பது எனது கருத்து. கேட்க் இனிமையான பாடல்.
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ ஆ ஆ ஆரெழு நாட்கள் போகட்டும்
ஆ ஆ ஆ அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளி கொள்ளக் கூடாது
லலலா
பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாலே பார்த்தால் போதுமோ
ஆ ஆ ஆ பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாலே பார்த்தால் போதுமோ
ஆ ஆ ஆ கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ ஆ ஆ ஆரெழு நாட்கள் போகட்டும்
ம் ம் ம் ம் அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளி கொள்ளக் கூடாது
முத்துசரம் வாழும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
பத்து தரம் வாங்கி கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
முத்துசரம் வாழும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
பத்து தரம் வாங்கி கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
முத்தம் இடலாம் கொஞ்சம் பொறுத்தால்
சத்தம் இடுவேன் இங்கு கொடுத்தால்
லலலல...
ல ல ல ல ல ல
சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்
சந்திக்கும் வேளை ஏனம்மா
ஆ ஆ ஆ..பட்டங்கள் பெற்றால் போதுமோ
பண்பாடு மாறிப் போகக் கூடுமோ
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ ஆ ஆ ஆரெழு நாட்கள் போகட்டும்
ஆ ஆ ஆ அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளி கொள்ளக் கூடாது
பண்பான காதலை அதே பண்புடன் வெளிப் படுத்தும் பாடல் வரிகள். இனிமையானப் பாடல்.
திரைப் படம்: மக்களை பெற்ற மகராசி 1957
இசை: K V மஹாதேவன்
குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ், சரோஜினி
இயக்கம்: A P நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, பானுமதி, நம்பியார், M N ராஜம்
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ