பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு


திரு தாஸ் அவர்களின் தேர்வு இந்தப் பாடல். நல்லதொரு பாடல். நமக்கும் பிடித்த பாடல்தான். அவர் இந்த பாடலை விரும்பியதை அவரது சொந்த கருத்துக்களுடன் இங்கே


படம்: முத்தான முத்தல்லவோ (1976)
பாடியவர்கள்: கோவை சௌந்தரராஜன், B சசிரேகா
கவிஞர் : வாலி
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்

நடிப்பு: முத்துராமன், சுஜாதா
இயக்கம்: R விட்டல்


பாடகர் பாடும் போது எம்.எஸ்.வியின்   சாயல் இருப்பதை கவனியுங்கள்.அது தான் எம்.எஸ்.வியின் சிறப்பு. சொல்லி கொடுக்கும் போது பாடகர்கள் அவரின் தாக்கத்திற்கு உட்பட்டு விடுவார்கள்.பெரும்பாலும் எல்லா பாடகர்களும் அவரின் ஆளுமைக்கு உட்பட்டு விடுவர்.இதற்க்கு பல பாடகர்களின் பாடல்களையும்  உதாரணமாக காட்டலாம்.இந்த சிறப்பு எம்.எஸ்.விக்கு  மட்டும் உரியது.
சசிரேகாவும் மிக அற்புதமாக குரல் கொடுத்துள்ளார்.பொதுவாக வசந்தா என்ற பாடகியே ஹம்மிங்க் செய்வார்.சசிரேகா வின் குரல் அபாரமாக உள்ளது.






http://www.divshare.com/download/15837617-3ef















புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
காணக்காண ஏக்கம் காளை என்னை தாக்கும்
காணக்காண ஏக்கம் காளை என்னை தாக்கும்
கட்டி வச்ச ஆசை எட்டி எட்டி பாக்கும்
கட்டி வச்ச ஆசை எட்டி எட்டி பாக்கும்
புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு

தந்தானே தானா தந்தானே தந்தானே நானெ நா ஆ
தந்தானே நானெ நா ஆ தந்தானே நானெ நா ஆ
மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மாங்குயில் பூங்குயில் பாட்டிசைக்க
ஓஹோ ஹொ ஹொய்யா ஹா ஹா ஹா ஹா
மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மாங்குயில் பூங்குயில் பாட்டிசைக்க
சரங்கட்டி வச்சேன் மாலையிட
அடி சம்மதம்மா சொல்லு கூடவர
சரங்கட்டி வச்சேன் மாலையிட
அடி சம்மதம்ம சொல்லு கூடவர
கட்டு சேவல் இங்கே பெட்டை கோழி அங்கே
ஒண்ணை ஒண்ணு கண்டு ஒட்டிகொள்வதென்று

புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு

மலரடி நோகும் பாத்து நட
மாமணி பூங்கரம் சேத்து நட
ஓஹோ ஹொ ஹொய்யா ஹா ஹா ஹா ஹா
மலரடி நோகும் பாத்து நட
மாமணி பூங்கரம் சேத்து நட
இடமுண்டு இங்கே நாத்து நட
நல்ல நெல்மணி மெல்ல பூத்து வர
இடமுண்டு இங்கே நாத்து நட
நல்ல நெல்மணி மெல்ல பூத்து வர
மஞ்சள் வெய்யில் வந்து மாலை நேர சிந்து
சொல்ல சொல்ல இன்னும் என்னன்னவோ பண்ணும்

புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு

தந்தானே தானா தந்தானே தந்தானே நானெ நா ஆ
தந்தானே நானெ நா ஆ தந்தானே நானெ நா ஆ

புதன், 28 செப்டம்பர், 2011

கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ பனியோ பூங்கிளியோ

அருமையான குரலும் இசையும் கூடிய பாடல்.

திரைப் படம்: பகலில் ஓர் இரவு (1979)
இசை: இளையராஜா
குரல்: ஜெயசந்திரன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீதேவி
இயக்கம்: I V சசி



http://www.divshare.com/download/15781712-171


கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ

ஆடாத தேர் கோலம் நடை போட்டதோ
ஆடாத தேர் கோலம் நடை போட்டதோ
அறியாத உள்ளம் என்று மலராகுமோ
வடிவமோ கன்னிகோலம்
வாலிபம் பூமழை
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ

பூங்கோதை மௌனம் தான் பரிபாஷையோ
பூங்கோதை மௌனம் தான் பரிபாஷையோ
புரியாத ஜாடை என்ன மரியாதையோ
துடிப்பிலே பிள்ளைதானோ
கோதையின் பாவமோ
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ

திங்கள், 26 செப்டம்பர், 2011

சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே

மீண்டும் S P Bயின் குரல் வளம் பாடலை தூக்கி நிறுத்துகிறது.

திரைப் படம்: சந்தனக் காற்று (1990)
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: மணிவண்ணன்
நடிப்பு: விஜயகாந்த், கௌதமி



http://www.divshare.com/download/15785077-4f4

சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண் பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே
ஓ ஓ பூமகள் மடி மேலே
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண் பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே
ஓ ஓ பூமகள் மடி மேலே

வானத்து மேலே மேகப் பறவை
ஊர்வலம் போகின்றது
வருகின்ற மேகம் சூரியன் முகத்தில்
ஓவியம் வரைகின்றது
மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்கு
தூக்கம் கலைகிறது
ஓ ஓ மூலை முடுக்கில் ஓலை இடுக்கில்
சூரியன் நுழைகிறது
மண்ணிலெல்லாம் ஓ ஓ பொன்னொளியே ஓ ஓ
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண் பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே
ஓ ஓ பூமகள் மடி மேலே

ஆயிரம் கோடி ஆசைகள் சுமந்து
நான் இங்கே வந்தேனே
வாவென்று என்னை பூக்களின் கூட்டம்
வாழ்த்திடக் கண்டேனே
நாட்டை உயர்த்தி நாமும் உயர
சேவைகள் செய்வோமே
ஓ ஓ நாளையப் பொழுது
நமக்கென விடியும்
நம்பிக்கை கொள்வோமே
பிள்ளைகளே ஓ ஓ
முல்லைகளே ஓ ஓ

சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண் பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே
ஓ ஓ பூமகள் மடி மேலே
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

முத்து போலே மஞ்சள் கொத்து போலே முழு நிலவே நீ பிறந்தாய்

கணீர் குரலோன் திரு சீர்காழி S கோவிந்தராஜன் சூலமங்கலத்துடன் இணைந்து புரட்சித் தலைவருக்காக ஒரு தாலாட்டு பாடி இருக்கிறார். என்னமாக கவிதை புனைந்திருக்கிறார் கவிஞர்? ஈடான இசையமைப்பு.


திரைப் படம்: சபாஷ் மாப்பிள்ளை (1961)
இசை: K V மகாதேவன்
நடிப்பு:  M G R, மாலினி
இயக்கம்:  S ராகவன்
பாடல்: மருதகாசி



http://www.divshare.com/download/15784139-bb5





முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது
கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது

தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உனை பெற்ற அன்னை பெருமைக் கொள்ளும் நிலையை தந்தது

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே
கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே
கண்ணைக் காக்கும் இமையை போல் உன்னை வாழ்விலே
கண்ணைக் காக்கும் இமையை போல் உன்னை வாழ்விலே
காலமெல்லாம் காத்திருந்து மகிழுவோமடா

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

அவசரமா அவசரமா ஆசை அத்தான் அவசரமா

பழைய பாடல் ஒன்று இன்று. அரிய பாடல். என்ன இனிமையான குரல். அன்பு மனைவியும் நல்ல மருமகளுமானவள். இன்றைய பெண்களிடம் எதிர் பார்க்க முடியாத குணாம்சம்.

திரைப் படம்: படித்த மனைவி (1965)
இயக்கம்: N கிருஷ்ணசாமி
குரல்: P சுசீலா
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
இசை: K V மகாதேவன்



http://www.divshare.com/download/15774997-10c

ஹோ ஹோ ஹோ ஹோ
ம் ம் ம் ம் ம் ம் ம்
அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே
அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே
அவசரமா அவசரமா

அம்மா போல அடக்கமான
பெண்ணும் வேண்டுமா
உங்கள் அருமையுள்ள
அப்பா போல பையன்
அம்மா போல அடக்கமான
பெண்ணும் வேண்டுமா
உங்கள் அருமையுள்ள
அப்பா போல பையன்

சும்மா சும்மா
உங்களைப் போல்
குறும்புகள் செய்யும்
சும்மா சும்மா
உங்களைப் போல்
குறும்புகள் செய்யும்
துறுதுறுப்பும் துடிப்பும் உள்ள
பிள்ளை வேண்டுமா
அவசரமா அவசரமா

பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா
பெற்றவர்கள் மனமறிந்து நடக்க வேண்டாமா
பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா
பெற்றவர்கள் மனமறிந்து நடக்க வேண்டாமா
அத்தை எனக்கு தலை வாரி பூ முடித்தார்கள்
அத்தை எனக்கு தலை வாரி பூ முடித்தார்கள்
அம்மாவைப் போல் வளையல் பூட்டி அனுப்பி வைத்தார்கள்
அவசரமா அவசரமா

தெய்வத்தை நான் இதுவரையில் கண்டதுமில்லை
அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன்
தெய்வத்தை நான் இதுவரையில் கண்டதுமில்லை
அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன்
மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன்
மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன்
விலைமதியா அன்பு வரம் வாங்கி வந்தேன்

அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே

வியாழன், 22 செப்டம்பர், 2011

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி நான் சரணமடியோ உனது மடியில்

இரு மலையாளக் குரல்கள் தமிழிலில் குயிலாக ஒலித்திருக்கிறது.


திரைப்படம்: சுப முகூர்த்தம் (1983)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், கல்யாணி மேனன்
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: S V சேகர், சுலோசனா
இயக்கம்: ரகு










நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி

நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி

மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் சுட்டதும் என்ன மாயங்களோ
மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் சுட்டதும் என்ன மாயங்களோ
உனது அணைப்பிலே உடல் சிலிர்த்தது
எனது நினைவிலே கடல் எழுந்தது
மூடும் ஆடையிடு சுமையென ஆடும் வேளையிடு
மூடும் ஆடையிடு சுமையென ஆடும் வேளையிடு
மேலாடை தாங்கட்டுமா...கொஞ்சம் நானாடை ஆகட்டுமா

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி

சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தன கிண்ணம் தந்தனமென்னும் பாவங்களோ
சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தன கிண்ணம் தந்தனமென்னும் பாவங்களோ
நிலவின் ஒளியிலே துகிலிடு என
நினைவு மயங்கியே அதை எடுத்திட
காதல் நீலாம்பரி இரவினில் கண்ணே நீ பாடடி
காதல் நீலாம்பரி இரவினில் கண்ணே நீ பாடடி
வானத்து நட்சத்திரம்...வந்து காணட்டும் மெத்தை சுகம்

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்

லா லா லலல லலல லலல ல ல ல 

தீம் திர நன திர ந தீர நன தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

மெல்லிசையும் கர்னாடக இசையும் கலந்துகட்டி பாடலை வடித்திருக்கிறார். நல்ல கவிதை வரிகள்.

திரைப் படம்: ஆகாய கங்கை (1982)
பாடல்: மு மேத்தா
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: கார்த்திக், சுஹாசினி
இயக்கம்: மனோபாலா



http://www.divshare.com/download/15757570-179





தீம்..
ம்..
திர நன
ம்...ம் ம் ம்
தீம் திர நன திர ந தீர  நன

தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
திர நா...திர நா..
தொடரும்... கதையோ
திர நா...திர நா..
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட...
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ..

முக வாசல் மீது தீபம்
இரு கண்கள் ஆனதோ..
ம்..ம்..ம்.. ம்  ம்  ஆ...ஆ...ஆ..
முக வாசல் மீது தீபம்..
இரு கண்கள் ஆனதோ..
மண வாசல் கோலமே தினம் போடுதோ...
ஆ....ஆ...
துணையாகும் தேவியை கொடி தேடுதோ...
ஆ.....ஆ
புன்னகையோ... பூ மழையோ...
பொன் நடையோ.. தேர் படையோ
வரமோ... வருமோ
நான் வளம் பெற

தீம் திர நன திர நன தீம் திர நா
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

திர ந திர நா..
திர நா...திர நா
திர நா.. நா...நா திர நன
தீம் திராஅ நன திர ந தீம் திர நாஆ

ப ரி நி ரி ச
நி த நி ப
க ம ப நி த நி
ப நி த ப

க ம ப நி நி
ஆ ஆ...
ம ப நி நி
ஆ...ஆ
ப நி ச ரி ரி
ஆ ஆ.
நி ச க த த

ப நி ச ரி ரி
நி ரி ச நி ட ச நி ட
க ம ப ம ம க ம ப ம ம
க ம க ம

ஆ....ஆஓ...

நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
ஆ ஆ..ஆ ஆ...ஆ ஆ..ஆ
நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
இனி மை விழி நாட்டியமோ
எனை வாட்டுமோ...
ஏன் தொலைவோ...நீ நிலவோ.
ஆ ஆ.ஆ.....ஆ...ஆ...
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட

தீம் திர நன... திர நன
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
தொடரும்... கதையோ
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட..
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

புதன், 21 செப்டம்பர், 2011

ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி


முதல் நான்கு வரிகள் குழந்தையை பார்த்து பாடுவது போல அமைந்து பின்பு வரும் வரிகளில் காதலியை வர்ணிக்கிறார் கவிஞர். ஜெயசந்திரன் குரலில் பாடல் அருமை.

திரைப் படம்: ஒரே முத்தம் (1980)
இயக்கம்: C K|முகிலன்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய்கணேஷ், சுமித்ரா
குரல்: ஜெயசந்திரன்



Free Music - Audio Hosting - Rajaa Ponnu adi






ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

உனக்காகத்தானே பொன்னோடமே
உன்னோடுதானே கல்யாணமே
நமக்காகத்தானே நதியோட்டமே
நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே
மனம் வெள்ளைதான்
உடை வெள்ளைதான்
மனம் வெள்ளைதான்
உடை வெள்ளைதான்
ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான்
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதையெழுது
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா
சிங்காரப் பூவை நான் சூட்டவா
கல்யாணத் தேரில் நாம் போகலாம்
கற்பூர தீபம் நான் ஏற்றவா
பொன்னாரமே வெண்மேகமே
பொன்னாரமே வெண்மேகமே
புது வாழ்வு காண்கின்ற என் கீதமே

காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதையெழுது
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்


திரு பக்கிரிசாமி அவர்களின் விருப்பப் பாடல். அருமையான பாடல். ஏழை தாய் தந்தையரின் தாலாட்டு.

திரைப் படம்: பெத்த மனம் பித்து (1973)
இசை: V குமார்
பாடல்: பூவை செங்குட்டுவன்
நடிப்பு: முத்துராமன், ஜெயா
இயக்கம்: S P முத்துராமன்



http://www.divshare.com/download/15742580-a2d


காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
பொன்னூஞ்சல் இல்லை 
பூமெத்தை இல்லை 
நீ வந்த வேளையிலே 
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் 
பூமெத்தை தானே தந்தை மனம் 
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் 
பூமெத்தை தானே தந்தை மனம் 
ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம் 
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா 
மஞ்சமடா… மஞ்சமடா ! 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
செல்ல‌மகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள் 
ஏழையுடன் வந்தாளடா 
ஸ்ரீராம‌ன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு 
பெருமைகள் வேறேத‌டா 
பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌ 
பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌ 
த‌ன் சொந்த‌ம் வெறுத்தாளடா 
தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌
ப‌ர‌ம‌னுட‌ன் துணை நின்ற‌ 
பார்வ‌தியும் பெண்தானடா 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
த‌னிம‌ர‌மாய் நின்ற‌வ‌னை
த‌ழுவுகின்ற‌ பூங்கொடியாள் 
சுக‌மென்ன‌ க‌ண்டாள‌டா 
கொடியுண்டு மரமுண்டு
குழ‌ந்தையெனும் க‌னியுண்டு 
குறையென்ன‌ க‌ண்டேன‌டா 
உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை
நான் தீர்க்கும் முன்னாலே 
உன்க‌வலை கொண்டேன‌டா 
க‌ண்ண‌னாக‌ நீயிருக்க‌ ம‌ன்ன‌னாக‌ அவ‌ர் இருக்க‌ 
க‌வ‌லைக‌ள் என‌க்கேத‌டா 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ ஆராரிராரிராரோ

திங்கள், 19 செப்டம்பர், 2011

முதல் முத்த மோகம் இது என்ன மாயம் காணாத பேரின்பம்


இனிமையான இசையமைப்பில் இனிமையான குரல்களுடன் ஒரு நல்ல இனிமையான பாடல். மென்மையான பின்னனி இசையும் குரல்களும் நெஞ்சை அள்ளுகின்றது.

திரைப் படம்: புதிர் (1986)
குரல்கள்: K J Y, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: முரளி, சந்தியா
பாடல்: மு மேத்தா









முதல் முத்த மோகம் இது என்ன மாயம் 
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது.. சுவை..சுகம்..நான் கண்டேன்
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும் 
தேவை இந்த பாவை என்று ஆசை தேடுதே
பூவை சூடும் பூவை மீது மாலை போடுதே
மோதல் காதலானதே ராகம் தாளம் சேருதே
பூந்தேரோடும் பாதையில் மான் நீராடுதோ
நான் காணாத மோகமே ஏன் போராடுதோ
தேகம் எங்கும் தாகம் இன்பத் தேனில் ஊறும் வேகம்.... சுகமே
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
கண்ணில் நாணும் மின்னல் உந்தன் கையில் நாணுதே
கைகள் தீண்டும்போது தேகம் பெண்மை காணுதே
காதல் ராஜகோபுரம் காண வேண்டும் சீக்கிரம்
நீ தூங்காத ராவிலே நான் தாலாட்டுவேன்
நீ தாலாட்டும் பாடலை நான் பாராட்டுவேன்
கீதம் பாடும் வானம்பாடி நானும் நீயும் ஆனோம்... புதுமை

முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது..சுவை..சுகம்..நான் கண்டேன்
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்