பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ இந்தக் கட்டுக் கரும்பினை


தனது தோழியின் வருங்காலக் கணவனை தோழி கேலி செய்வதும், அதற்கு அவன் காதலி அழகாக பதில் சொல்வதும் நல்ல தமிழில் ஒரு புதிய கவிஞரின் பாடலில் இனிமையான இசையில் வருகிறது.

திரைப் படம்: இதயத்தில் நீ (1963)
குரல்கள்: P சுசீலா, L R ஈஸ்வரி
பாடல்: மாயவ நாதன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, தேவிகா
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்



http://www.divshare.com/download/15724571-b40


சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ
யார் நின்றவரோ...
யார் வந்தவரோ..
சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ
யார் நின்றவரோ...
யார் வந்தவரோ..

தென்றல் அழைத்து வர - தங்கத்
தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே - இடம்
தந்த என் மன்னவரே

சித்திரப் பூவிழி வாசலிலே அவர்த்தான்
நின்றவரே - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்தவர்
தான் என்னவரே
யார் நின்றவரோ - அவர்
தான் என்னவரே

கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ - இந்தப்
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ
கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ - இந்தப்
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ

உன்னை
மட்டும் அருகினில் வைத்து தினம் தினம்
சுற்றி வருபவரோ - - நீ
கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ - கலை
முற்றும் அறிந்தவரோ - காதல்
மட்டும் தெரிந்தவரோ

சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ

வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ - பசும்
பொன்னிற் புதியதைக் கண்ணன் எனப்
பெயர் சொல்லித் துதிப்பதுவோ
வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ - பசும்
பொன்னிற் புதியதைக் கண்ணன் எனப்
பெயர் சொல்லித் துதிப்பதுவோ

ஒளி
மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ - இல்லை
தன்னைக் கொடுத்தென்னைத் தன்னில் மறைத்தவர்
வண்ணப் புதுமலரே - அவர்
நெஞ்சம் மலரணையே  - மனம்
எங்கும் நிறைந்தவரே
ஓ..ஓ....ஓ..ஓ...

சித்திரப் பூவிழி வாசலிலே அவர்த்தான்
நின்றவரே - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்தவர்
தான் என்னவரே
யார் நின்றவரோ - அவர்
தான் என்னவரே

1 கருத்து:

Packirisamy N சொன்னது…

Dear Sir

I love the good old songs from your blog. I am looking for the song " kaalam namakku thozhan". I think film name is "peththa manam pithtu" If you have could you please give us to enjoy.
Thanks.

Packirisamy N

கருத்துரையிடுக