பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

சுகம் சுகமே... தொடத் தொடத்தானே...சொந்தம் வரும் பின்னே..


மறைந்த திரு மலேசிய வாசுதேவனின் கணீர் குரலில் அழகான பாடல்.

திரைப் படம்: நான் போட்ட சவால் (1980)
குரல்கள்: மலேசிய வாசுதேவன், வாணி ஜெயராம்
இசை: இளையராஜா
இயக்கம், பாடல் வரிகள்: புரட்சி தாசன்
நடிப்பு: ரஜினி, ரீனா



http://www.divshare.com/download/15638774-5eb



சுகம் சுகமே...
தொடத் தொடத்தானே...
சுகம் சுகமே...ஹேய்
தொடத் தொடத்தானே...
சொந்தம் வரும் பின்னே...
தொடும் முன்னே...சுகம் கண்ணே...
நெஞ்சில் வெட்கமா...கொஞ்ச வேண்டுமா
ஞாயமா...

சுகம் சுகமே...ஹேய்
தொடத் தொடத்தானே...
சொந்தம் வரும் பின்னே...
தொடும் முன்னே...சுகம் கண்ணா...
இந்த பக்கம் வா...இன்பம் அல்லவா
அன்பே...வா...

சுகம் சுகமே.......

துள்ளத் துள்ள காதல்...
அள்ளிக் கொள்ள ஆசை
தூக்கம் இல்லை என்றால்...அது தகுமா...
மோகனப் புன்னகை கண்டேன்...
முத்துச் சரம் கண்டு நின்றேன்
தேன் மழை போல் என வாலிப நாள் வருமா ஆ.....

சுகம் சுகமே...ஹேய்
தொடத் தொடத்தானே...
சுகம் சுகமே.......

வஞ்சித் தொடர்ந்தாளே...
வாச மலர் போலே...
பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா...
செங்கதிர் செம்மல் கண்டேன்...
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்
பஞ்சணை பால் பழம் நீ தரும் நாள் வருமா ஆ....

சுகம் சுகமே...ஹேய்
தொடத் தொடத்தானே...
சுகம் சுகமே.......

லலலலா ஆ ஆ...லலலலா  ஆ ஆ...
லலலலா ஆ ஆ... லலலலா ஆ ஆ...

அந்தி வெய்யில் மாலை
ஆற்றங்கரை சோலை
விந்தை என்ன என்றால் விடை வருமா
பொங்கிய தாமரை கண்டேன்
பொன்முகம் கண்டேன் நின்றேன்
அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா..ஆ....

சுகம் சுகமே...ஹேய்
தொடத் தொடத்தானே...
சொந்தம் வரும் பின்னே...
தொடும் முன்னே...சுகம் கண்ணே...
இந்த பக்கம் வா...இன்பம் அல்லவா
அன்பே...வா...

சுகம் சுகமே.......

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

மலேசியா பாடிய டூயட் பாடல்களில் ஒரு சிறந்த இனிய பாடல் இது. சூப்பர் ஸ்டாருக்கு மலேசியா குரல் தான் மிகவும் பொருத்தம். சிறுவயதில் நான் ரசித்து பார்த்த திரைப்படம்.

கருத்துரையிடுக