பின்பற்றுபவர்கள்

திங்கள், 24 டிசம்பர், 2012

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ

காதலில் ஒரு நிமிடப் பிரிவைக்கூட தாங்கி கொள்ளமுடியாது. அந்தப் பிரிவின்  வலியை அழுத்தமாக பதிவு செய்த பாடல் . கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட சிறந்த பாடலிது .

திரைப் படம்: படகோட்டி (1964)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
குரல்கள்: T M S, P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NDcxOV80eldEWV9lMGFk/Paatukku%20Pattu-Padagotti.mp3





பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீ போய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீ போய்
தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக
எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு
இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில
என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே
ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே
நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே
நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு மீன் புடிக்க
வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே
போய் எழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரி எடுத்து
வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே
ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே
என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க

தாமரை அவளிருக்க இங்கே
சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே
நீதான் ஓடிப்போய் தூது சொல்லு

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே
நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக