பின்பற்றுபவர்கள்

திங்கள், 29 அக்டோபர், 2012

சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே


S A ராஜ்குமாரின் முதல் படம். S P B, வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலில் S P B அவர்களின் குரல் அட்டகாசம். இனிமை தேன் வழிந்தோடுகிறது. இந்த அறிமுக இசையமைப்பாளரை
S P B நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறார் தனது குரலால்.

திரைப்படம் : சின்ன பூவே மெல்ல பேசு
பாடியவர்கள் : S P B, வாணி ஜெயராம்
இசை/ பாடல் வரிகள் : S A ராஜ்குமார்
நடிப்பு: ராம்கி, சபிதா ஆனந்த், பல்லவி, பிரபு
இயக்கம்: ராபர்ட் ராஜசேகர்



சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

ஹா ஆ ஆ ஆ
ஆனந்த ராகங்களில் நான் ஆலாபனை செய்கிறேன்
வா ஆ ஆ ஆ
நான் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

ஆ ஆ ஆ ஆ ஆ
பொன்மாலை வேளைகளில் உன் வாசல் நான் தேடினேன்
ஹா ஆ ஆ ஆ ஆ
கண்ணென்னும் ஓடங்களில் கரை தேடி தான் ஓடினேன்
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல்... நன்றி சார்...

கருத்துரையிடுக