பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

போய் வா நதியலையே இவள் பூச்சூடும்


T K கலா குழந்தைக் குரல் இல்லாமல் பெண் குரலாக அதுவும் முதல் பாடல் டூயட் பாடலாக திரு K J யேஸுதாஸுடன் இணைந்து பாடிய பாடல். இனிமையான இளமை குரல்கள். காதுக்கினிய பாடலாக புரட்சித் தலைவரின் படத்திலிருந்து.

திரைப் படம்: பல்லாண்டு வாழ்க (1975)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: எம் ஜி ஆர், லதா
இயக்கம்: K சங்கர்
பாடல்: நா காமராசன்



http://asoktamil.opendrive.com/files/Nl84NjY5NjgxX2ZzS2FNXzQ1ODc/Poi%20vaa%20nathi%20alaye.mp3





போய் வா நதியலையே 
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா

வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

போய் வா நதியலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா

வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்
பனி வாடை காலம் உனை காண வேண்டும்

நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்
மழை கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்

இது போதும் என்று தடுமாறி

இடம்மாறி மாறி சுகம் தேடி


இது போதும் என்று தடுமாறி

இடம்மாறி மாறி சுகம் தேடி



உறவாடும் போது சரிபாதி ஆகி

உயிர் காணும் இன்பம் பல கோடி

போய் வா நதியலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா


வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

பூமிக்கு நீர் கொண்டு வா



நுரை பூவை அள்ளி அலைசிந்த வேண்டும்
அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்

வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு
மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்

மெதுவாக வந்து இதழ் மோதி

பதமாக அன்பு நதியோடி


மெதுவாக வந்து இதழ் மோதி

பதமாக அன்பு நதியோடி



மண மேடை கண்டு புது மாலை சூடி

குல மங்கை வாழ நலம் பாடி

வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தலைவர் 'தூள்' கிளப்பிய பாடல்...

கே. பி. ஜனா... சொன்னது…

ஆஹா அருமையான பாடல்!

பார்த்தீர்களா?: கவிதையின் பாடம்
http://kbjana.blogspot.com/2013/03/blog-post.html

பெயரில்லா சொன்னது…

இந்த பாடலின் இசையமைப்பு நன்றாக இருக்கும் சார்.

Unknown சொன்னது…

நல்ல பாடல்

கருத்துரையிடுக