பின்பற்றுபவர்கள்

சனி, 15 ஜூன், 2013

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி

ஹிந்தி திரையுலகின் கனவுக் கன்னி ஹேமமாலினியின் முதல் திரைப் படம் இது. ஒரு பாடலுக்கு மட்டுமே தலைக் காட்டினார். பின்னர் வெண்ணிற ஆடைக்காக 1965ல் ஸ்ரீதர் அவரை மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என ஒதுக்கிவிட்டார். 1968 ல் முதல் இந்தி படத்தில் நடித்தவர் பின்னர் பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்கவே இல்லை

கணீர்க்குரலோன் சீர்காழியும் ஈஸ்வரியும் பாடியுள்ள இந்தப் பாடலை இயக்கி இருந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். 
பாடலின்  ஆரம்ப இசையே மனதை அள்ளிக் கொண்டு போகும். 


திரைப்படம்: இது சத்தியம் (1963)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
நடிப்பு: அசோகன், சந்திர காந்தா 
இயக்கம்: தெரியவில்லை 




ஒஹோ  ஹோ யாஹு யாஹு
ஒஹோ  ஹோ யாஹு யாஹு
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி 
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
தேருக்கு முன்னாலே காளை கட்டி
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேராத மனசுக்குப் பாலமாகும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலுவென  இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேராத மனசுக்குப் பாலமாகும்

சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்

ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்

அது  அங்குமிங்கும் ஓடாம அடுத்தத நாடாம 
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்

ஆஹா கொள்ளையோ கொள்ளையென்று உள்ளமே மதுவுண்டு
தள்ளாடித் தள்ளாடி நடமாடும் 
ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி 
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலுவென  இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்


சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவைக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 

இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக