பின்பற்றுபவர்கள்

சனி, 26 நவம்பர், 2016

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி

இனிமையான பாடல். டி எம் எஸ் அவர்களின் குரல் ஜெயஷங்கர் பாடுவது போலவே அமைந்திருக்கும். காதைக் கிழிக்காத இனிய பின்னணி இசை.

திரைப்படம்: மகனே நீ வாழ்க (1969)

பாடியவர்கள்: டி எம் எஸ், P. சுசீலா

இசை: M. S விஸ்வநாதன்

இயக்கம்: M. கிருஷ்ணன்

நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மி.

பாடல்: தெரியவில்லை



Free Music - Podcast Hosting -






ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக