பின்பற்றுபவர்கள்

வியாழன், 19 டிசம்பர், 2013

இலங்கையின் இளங்குயில்

இன்று இலங்கையில் 4 நாட்களாக சுற்று பயணத்தில் இருக்கிறோம். இன்னேரத்தில் இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நல்ல அழகான ஊர் கண்டி.


திரைப் படம்: பைலட் பிரேம்நாத் ()
பாடியவர்கள்: டி எம் எஸ், வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
இயக்கம்:A C திருலோகசந்தர்
நடிப்பு:  சிவாஜி, ஸ்ரீதேவி, மாலினி பொன்சேகா


http://asoktamil.opendrive.com/files/Nl8yNzU2MTIyOF95NmlYR18xNzZj/ilangayinilankuyil.mp3








இலங்கையின் இளங்குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

நாடென்ன மொழியென்ன
உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன
உள்ளங்கள் உறவாட
ஏடென்ன எழுத்தென்ன
எண்ணங்கள் பறிமாற
இலங்கையின் இளங்குயில்
உன்னோடு இசை பாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்
நீதான் என் துணவனென்றால்
நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால்
நூறு ஜென்மம் நானெடுப்பேன்

விலகாத சொந்தமிது
பலகால பந்தமிது
விலகாத சொந்தமிது
பலகால பந்தமிது
இணை சேரும்
நூலிழை போல்
இணைந்தேன்
உன் நூலிடை மேல்
இலங்கையின் இளங்குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

அன்பு தெய்வம் கௌதமனின்
அருள் கூறும் ஆலயங்கள்
வளரும் நம் உறவுகளை
வாழ்த்துகின்ற வேளையிது

கடல் வானம் உள்ளவரை
கணம் தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம்
திகட்டாத மோஹன ராகம்

இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக