பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

சக்கை போடு போட்ட படம். பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மொழி  மாற்றம்  பெற்றது.
இரண்டு பெண் குரல்களுமே இதமாக ஒலிக்கும் பாடல். அருமையான சங்கீதம்.
இப்பாடலை எழுதியவர் உடுமலை  நாராயணக் கவி என நினைக்கிறேன்.


படம்: பெண் (1954)
இயக்கம்: M V ராமன்
நடிப்பு: ஜெமினி, அஞ்சலிதேவி, வைஜயந்தி மாலா
பாடியவர்கள்: M S ராஜேஸ்வரி, T S பகவதி
இசை: R சுதர்சனம்




http://www.divshare.com/download/15019287-90c



சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா



இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா

இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா

இதயம் தனையறிந்தே மனம் கனிந்தே அருகிலே வா வா



சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா

தண்டை ஒலி இசையை கேட்டதில்லையோ வா வா வா

அந்த சத்தத்திலே போதை கொண்டதில்லையோ வா வா வா

கெண்டை நிகர் விழியைக் கண்டதில்லையோ வா வா வா

கெண்டை நிகர் விழியைக் கண்டதில்லையோ வா வா வா

அந்த சிரிப்பிலே இன்பம் கொண்டதில்லையோ அருகிலே வா வா வா



சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா



இதய வீணையை மீட்டி விட்டாயே வா வா வா

அந்த இனிய நாதமென் உடலை வாட்டுதே வா வா வா

புது புது அழகாய் போற்றுகிறாயே வா வா வா

புது புது அழகாய் போற்றுகிறாயே வா வா வா

மது மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா

மது மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா



சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக