பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்


திரு பக்கிரிசாமி அவர்களின் விருப்பப் பாடல். அருமையான பாடல். ஏழை தாய் தந்தையரின் தாலாட்டு.

திரைப் படம்: பெத்த மனம் பித்து (1973)
இசை: V குமார்
பாடல்: பூவை செங்குட்டுவன்
நடிப்பு: முத்துராமன், ஜெயா
இயக்கம்: S P முத்துராமன்



http://www.divshare.com/download/15742580-a2d


காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
பொன்னூஞ்சல் இல்லை 
பூமெத்தை இல்லை 
நீ வந்த வேளையிலே 
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் 
பூமெத்தை தானே தந்தை மனம் 
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் 
பூமெத்தை தானே தந்தை மனம் 
ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம் 
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா 
மஞ்சமடா… மஞ்சமடா ! 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
செல்ல‌மகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள் 
ஏழையுடன் வந்தாளடா 
ஸ்ரீராம‌ன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு 
பெருமைகள் வேறேத‌டா 
பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌ 
பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌ 
த‌ன் சொந்த‌ம் வெறுத்தாளடா 
தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌
ப‌ர‌ம‌னுட‌ன் துணை நின்ற‌ 
பார்வ‌தியும் பெண்தானடா 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
த‌னிம‌ர‌மாய் நின்ற‌வ‌னை
த‌ழுவுகின்ற‌ பூங்கொடியாள் 
சுக‌மென்ன‌ க‌ண்டாள‌டா 
கொடியுண்டு மரமுண்டு
குழ‌ந்தையெனும் க‌னியுண்டு 
குறையென்ன‌ க‌ண்டேன‌டா 
உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை
நான் தீர்க்கும் முன்னாலே 
உன்க‌வலை கொண்டேன‌டா 
க‌ண்ண‌னாக‌ நீயிருக்க‌ ம‌ன்ன‌னாக‌ அவ‌ர் இருக்க‌ 
க‌வ‌லைக‌ள் என‌க்கேத‌டா 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ ஆராரிராரிராரோ

திங்கள், 19 செப்டம்பர், 2011

முதல் முத்த மோகம் இது என்ன மாயம் காணாத பேரின்பம்


இனிமையான இசையமைப்பில் இனிமையான குரல்களுடன் ஒரு நல்ல இனிமையான பாடல். மென்மையான பின்னனி இசையும் குரல்களும் நெஞ்சை அள்ளுகின்றது.

திரைப் படம்: புதிர் (1986)
குரல்கள்: K J Y, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: முரளி, சந்தியா
பாடல்: மு மேத்தா









முதல் முத்த மோகம் இது என்ன மாயம் 
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது.. சுவை..சுகம்..நான் கண்டேன்
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும் 
தேவை இந்த பாவை என்று ஆசை தேடுதே
பூவை சூடும் பூவை மீது மாலை போடுதே
மோதல் காதலானதே ராகம் தாளம் சேருதே
பூந்தேரோடும் பாதையில் மான் நீராடுதோ
நான் காணாத மோகமே ஏன் போராடுதோ
தேகம் எங்கும் தாகம் இன்பத் தேனில் ஊறும் வேகம்.... சுகமே
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
கண்ணில் நாணும் மின்னல் உந்தன் கையில் நாணுதே
கைகள் தீண்டும்போது தேகம் பெண்மை காணுதே
காதல் ராஜகோபுரம் காண வேண்டும் சீக்கிரம்
நீ தூங்காத ராவிலே நான் தாலாட்டுவேன்
நீ தாலாட்டும் பாடலை நான் பாராட்டுவேன்
கீதம் பாடும் வானம்பாடி நானும் நீயும் ஆனோம்... புதுமை

முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது..சுவை..சுகம்..நான் கண்டேன்
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்