பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 21 ஜூன், 2013

எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

நானும் கேட்டிராத பாடல். இந்தப் பாடலின் மெட்டில் இதற்கு பிறகு ஒரு பாடல் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.



 


திரைப்படம்: ஆலய தீபம் (1984)

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இயக்கம்: C V ஸ்ரீதர் 
நடிப்பு: ஜெயஷங்கர், சுஜாதா, ராஜேஷ், சுரேஷ், இளவரசி.
















எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு




ஹா ஹா ஹா ஹா  ஆஆஆ
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு


கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட

மோகம் தாளாமல் நானே மாற
என்னை பாராட்டு நான் ஏமாற
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

 உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு

ஹா ஹா ஹா ஹா   ஆஆஆ

வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணின் தீபம் போதும்
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணின் தீபம் போதும்

காதல் யாகங்கள் செய்யும் போதும்
தேகம் உண்டாக்கும் தீயே போதும்
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை
என்னைச் சூடாக்கும் ஈரப்பார்வை

பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை
உந்தன் நோய் தீர ஏதோ தேவை
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு
ஹா ஹா ஹா ஹா   ஆஆஆ



புதன், 19 ஜூன், 2013

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

தெளிந்த நீரோடை போல் கருத்துள்ள ஒரு பாடல். இதில் உள்ள எழுத்துக்களின் விளக்கம் நமக்கு எல்லோருக்கும் தெரிந்தே நாம் இன்னமும் இல்லாத இடத்தில் நமக்கான பொருளைத தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். விதி வலியது.

(எனக்கொன்னும் ஆகவில்லை நண்பர்களே....சொன்னால் நம்புங்கள்!!)

நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான்

இவர்கள்தான் இன்றைக்கு  நம் நாட்டில் அதிகம்.


நல்ல, அர்த்தம் பொதிந்த பாடல். சீர்காழியின் கம்பீரமானப் பாடல்.

படம் : திருவருட் செல்வர் (1967)
இசை : K V மஹாதேவன்
பாடியது : சீர்காழி S கோவிந்தராஜன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி
இயக்கம்: A P  நாகராஜன்
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTE2Nzc2OV9hZ2haQ19lMDFk/Irukkumidathai%20vittu.mp3







இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளி  விட்டு
தொட்டிலை ஆட்டிவிட்டு
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே
அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே


 

திங்கள், 17 ஜூன், 2013

தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்

திரு மருதூர் கோபாலகிருஷ்ணன், சத்யா பாமா ஆகியோருக்கு இலங்கையில் கண்டி அருகே நாவலபட்டியாவில் பிறந்தவர்கள் சக்கர பாணி, ஒரு பெண் குழந்தை மற்றும் எம் ஜி யார். அந்தப் பெண்  குழந்தை  சிறிய  வயதில் இறந்து போனது.

தந்தையார் மாஜிஸ்ட்ரேட் ஆக வேலை செய்தவர்.
அவரது இறப்புக்குப பின் சொந்த ஊரான கேரளாவில் அவரது தந்தையின் இன்னொரு மனைவியுடன் தங்க வந்தார்கள். அங்கே அவரது கொடுமை தாங்காமல், ரங்கூன் சென்றார்கள். பின்னர் தமிழ் நாட்டில் ஈரோடில் வந்து குடியிருந்தார்கள். அங்கிருந்து விரைவில் கும்ப கோணம் சென்றார்கள். அங்கே ஏழ்மை காரணமாக மூவரும் அங்கே இயங்கிக் கொண்டிருந்த நாடக ட்ரூப்பில் சேர்ந்தார்கள்.

M G R க்கு திரைப் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. பார்கவி என்ற பெண்ணை மணந்தார். அவர் 3 மாதங்களில் நோய்வாய்பட்டு இறந்தார். பின்னர் சதானந்தவதியை மணந்தார். அவரும் விரைவில் இறந்தார்.

பின்னர் அவரது வாழ்வில் வந்தவர் V N ஜானகி. இவர் தனது முந்தய கணவரை விலக்காமல் (கணபதி பட்) M G Rய் மணந்தார் என்கிறார்கள்.

பின்னர் M G R வாழ்க்கை வரலாறு பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இதுவரை நான் கூறிய M G R இன் வரலாறும் எந்த அளவுக்கு சரியானது என்பது எனக்குத் தெரியாது. இது எம் ஜி யாரின்  பேரன் M G C B பிரதீப்  அவரது  இணைய  தளத்தில் ஆங்கிலத்தில் உள்ளதின்
தமிழாக்கம்.  ஏதாவது தவறு இருப்பின் அவரைப் பற்றிய முழு விபரம் தெரிந்தவர்கள் என்னை மன்னிப்பார்களாக.

நன்றி: M G R பேரன் M G C B Pratheeb.-mgrperan.blogspot.com

padagoti_reserve


 M G R காதல் வாகனம் என்ற திரைப் படத்தில்.

M G R அவர்களின் முதல் மனைவி தங்கமணி பார்கவி

MGR அவர்களின் அட்டகாசமானப் பாடல்களில் ஒன்று.
இசை, பாடும் குரல்கள், நடிப்பு, பாடல் வரிகள், பட பிடிப்பு, கலர், நடன அமைப்பு என எதிலும் குறை சொல்ல முடியாத ஒரு பாடல்.

"ஆயிரம் சுகமல்லவா
ஹோய்
ஆயிரம் சுகமல்லவா" எனச் சொல்ல வைக்கும் பாடல்.

திரைப் படம்: படகோட்டி (1964)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T பிரகாஷ்ராவ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDczMjk0N19oeTEza184YTFj/thottal%20poo%20malarum.mp3





தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை

நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை
ஹோய்
ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை
ஹோய்
இளமை முடிவதில்லை

எடுத்துக்கொண்டாலும்
கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை
ஹோய்
பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பக்கம் நில்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை
ஹோய்
பித்தம் தெளிவதில்லை

வெட்கமில்லாமல்
வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை
ஹோய்
சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லவா
ஹோய்
பாவை முகமல்லவா

அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா
ஹோய்
ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

ஆஹா ஹா ஆஹா ஹா  ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹ ஹ ஹ ஹா 

சனி, 15 ஜூன், 2013

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி

ஹிந்தி திரையுலகின் கனவுக் கன்னி ஹேமமாலினியின் முதல் திரைப் படம் இது. ஒரு பாடலுக்கு மட்டுமே தலைக் காட்டினார். பின்னர் வெண்ணிற ஆடைக்காக 1965ல் ஸ்ரீதர் அவரை மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என ஒதுக்கிவிட்டார். 1968 ல் முதல் இந்தி படத்தில் நடித்தவர் பின்னர் பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்கவே இல்லை

கணீர்க்குரலோன் சீர்காழியும் ஈஸ்வரியும் பாடியுள்ள இந்தப் பாடலை இயக்கி இருந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். 
பாடலின்  ஆரம்ப இசையே மனதை அள்ளிக் கொண்டு போகும். 


திரைப்படம்: இது சத்தியம் (1963)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
நடிப்பு: அசோகன், சந்திர காந்தா 
இயக்கம்: தெரியவில்லை 




ஒஹோ  ஹோ யாஹு யாஹு
ஒஹோ  ஹோ யாஹு யாஹு
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி 
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
தேருக்கு முன்னாலே காளை கட்டி
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேராத மனசுக்குப் பாலமாகும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலுவென  இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேராத மனசுக்குப் பாலமாகும்

சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்

ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்

அது  அங்குமிங்கும் ஓடாம அடுத்தத நாடாம 
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்

ஆஹா கொள்ளையோ கொள்ளையென்று உள்ளமே மதுவுண்டு
தள்ளாடித் தள்ளாடி நடமாடும் 
ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி 
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலுவென  இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்


சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவைக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 

இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்

வியாழன், 13 ஜூன், 2013

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்

அப்போதைய பாடல்களில் கதாநாயகன் சோகமாகவோ, தத்துவமாகவோ பாடும் போது நாயகி எப்படித்தான் பின்னாலேயே அவர்களுக்கு தெரியாமல் வருவார்களோ தெரியவில்லை. இதேபோல இன்னொரு பாடல்

http://asokarajanandaraj.blogspot.com/2012/01/b.html

எப்படியோ பாடல் தத்துவ பூர்வமாக பார்க்கத்தக்கதாக உள்ளது. விஷயமுள்ள பாடல்.

திரைப் படம்: டில்லி மாப்பிள்ளை (1968)
நடிப்பு: ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ
இயக்கம்: தேவன்
இசை: K V மகாதேவன்
பாடல்: வாலி
குரல்: டி எம் எஸ்

http://asoktamil.opendrive.com/files/Nl85OTMxMjE1X0FCUk1XXzNjZTg/AANDAVAN%20ORU%20NAAL%20KADAI%20VIRITHAN%20-[128].mp3







ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையை சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையை சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்

பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கி கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கி கொண்டார்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையை சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒரு சிலர் மேலுக்கு விலை கேட்டார்

எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை
எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை

அன்பை வாங்கிட எவரும் இல்லை