பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா


திருமதி சுசீலாம்மா  பாடினால்  விமர்சிக்க இடமே இல்லை. அவ்வளவு
பாடல்களும்  உயிரை  உருக்கும்  விதமாக  இனிமையாக  பாடி இருப்பார். இந்த பாடலும் அதற்கு விதிவிலக்கில்லை. எந்த  விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், நடிப்பவர் பாடுவது போல  பாடும்  சிறப்பு  அவருக்கு மட்டுமே  சொந்தம்.

திரைப்படம்: பூவும் பொட்டும் (1968)
இசை: R. கோவர்த்தன்
நடிப்பு: முத்துராமன், A V M ராஜன், பாரதி, ஜோதி லக்ஷ்மி
பாடிய குரல்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: தாதா மிராஸி



Upload Music - Share Audio -






எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
கண்ணன் வழங்கும் இந்த உறவு
தென்றல் போல வானம் போல என்றும் வளர
பள்ளியறையில் மெல்ல நடந்து
கண்ணன் வரும் நாள் என்று வருமோ
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
சீதை மடியில் ராமன் இருந்தான்
ராமன் வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பது காதல் வடிவம்

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா



சனி, 26 நவம்பர், 2016

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி

இனிமையான பாடல். டி எம் எஸ் அவர்களின் குரல் ஜெயஷங்கர் பாடுவது போலவே அமைந்திருக்கும். காதைக் கிழிக்காத இனிய பின்னணி இசை.

திரைப்படம்: மகனே நீ வாழ்க (1969)

பாடியவர்கள்: டி எம் எஸ், P. சுசீலா

இசை: M. S விஸ்வநாதன்

இயக்கம்: M. கிருஷ்ணன்

நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மி.

பாடல்: தெரியவில்லை



Free Music - Podcast Hosting -






ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

வெள்ளி, 18 நவம்பர், 2016

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு.. Naloru medai pozhuthoru




திரைப்படம்: ஆசை முகம் (1965)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு

கணீர் என்ற  குரலில் தெளிவான  ஆர்பாட்டம் இல்லாத பாடல். கருத்து மிக்க  பாடல். இன்று அல்ல  எந்த  காலகட்டத்து பொருத்தமான  பாடல்.









நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில் கோழைகள் தலைவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்?
பிறந்தால் யாருக்கு லாபம்?
பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம்
இருந்தால் ஊருக்கு லாபம்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால் கோபுரமாவதில்லை
கோபுரமாவதில்லை
குருவிகளெலாம் உயரப் பறந்தால் பருந்துகள் ஆவதில்லை
பருந்துகள் ஆவதில்லை
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல

திங்கள், 24 அக்டோபர், 2016

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது.... Unnai thotta kaatru vandhu


SPBயின்  ஆரம்ப  கால  பாடல்களில்  இதுவும்  ஒன்று. இதிலும் அவரை ஹம்மிங்  மட்டுமே  பண்ண  வைத்திருக்கிறார்  இசையமைப்பாளர். கூட சுசீலாம்மாவின்  இனிமையான  மென்மை குரலில்  கவிதையை  இசைக்க வைத்திருக்கிறார். அருமை. கேட்க  கேட்க  திகட்டாத  பாடல்.

படம்: நவக்கிரகம் (1970)
இசை: V. குமார்
நடிப்பு: சிவக்குமார், லக்ஷ்மி
குரல்கள்:  SPB, P. சுசீலா
பாடல்: கவிஞர் வாலி



Upload Music - Audio Hosting -








ஆஹா ஆஹா ஆ ஆ
ஹும்ம்ம் ஹும்ம்ம்ம்
ஹா ஹா ஹா ஆ ஆ ஆ

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது
உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது

ஹஹா ஒஹோ ஆ ஹா

உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது

இந்த நேரம் பார்த்து நானம் வந்து கோலமிட்டது
கொஞ்ச நாள் வரையில் பொருத்திருக்க ஆணையிட்டது

ஹஹா ஒஹோ ம்ம்ம்ம் லலாஆ

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது

மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது

ஹ ஹா ஆ ஆ.. ஓ ஓ..ஹோ  ஹோ   .ஹோ  ஹோ. ஆஆஆ

மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித்துளியாய் எனது தோளில் மீது இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்து பார்க்குது
அதுவே போதும் என்ற பெண்மை இன்று கேட்டுக்கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா


நீண்ட நாட்களுக்கு பிறகு, முக நூல் நண்பர்கள் சிலரின் விருப்பமாக இன்று இந்த பாடலை எனது பிலாகில் பதிவிடுகிறேன்.
திரைப்படம்: நீ பாதி நான் பாதி (1991)
 நடிப்பு: ரகுமான், கெளதமி
இசை: மரகதமணி
இயக்கம்: வசந்த்

இந்த பாடல் கருத்தும், பாடல் வரிகளும் முழுக்க கொடுத்து உதவியவர்கள்... myspbblogspot.in.
எனது  நன்றிகள்  அவர்களுக்கு. கேட்க்காமல்  கையாண்டதுக்கு மன்னிக்கணும்.. கோவை ரவி சார்..


சேற்றில் முளைத்த (யப்பாடி... இப்போதுதான் தமிழில் எழுதும் திருப்தி கிடைக்கிறது!) செந்தாமரை போன்று ஒரு அழகான பாடல். பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!.
ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :) 

இம்மாதிரிப் பாடல்களைக் கேட்கவைக்க வேண்டுமென்றால் குரலில் தேனொழுக வேண்டும். "பிடி பாலுவை" என்று பிடித்துக்கொண்டு வந்து மரகதமணி பாட வைத்திருப்பார் போல. மனுஷர் 'பாட வேண்டுமே' என்றா பாடுவார்?. வெளுத்து வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். மரகதமணியும் பாலுவும் சேர்ந்து கொண்டு நமக்கு விளையாட்டு காட்டியிருக்கிறார்கள்.
ஆ... இன்னொரு முக்கிய ஆளும் விளையாட்டுக் காட்டியிருக்கிறார் - அவர் ஒளிப்பதிவாளர். ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு அதிகமான காட்சிகள் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். சில நொடிகளே நீடிக்கும் ஏகப்பட்ட "கட் ஷாட்"கள். அழகான விளம்பரப் படம் போல வர்ணமயமாக பலவித உடைகளில் ரகுமானும் கெளதமியும் வருவார்கள் - இயல்பான செய்கைகளுடன். ஸ்வரங்களை அழகாகப் பாடியது போதாதென்று "நிவேதா"வைக் குழைத்துக் குழைத்து பாலு பாடியிருக்கிறார் பாருங்கள். இந்த மாதிரியெல்லாம் எனக்குப் பாடத் தெரிந்தால் வீட்டில் சப்பாத்திக் கட்டையெல்லாம் பறக்க விடுவேனா?


  Download Music - Embed Audio - ஸஸஸ


ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ ஸரிகமகரீக ஸாரிதாஸ பாதகா நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
ஸரிகமா பதநிஸ ஸநிதப மகரிஸ ஸரிகமா பதநிஸ ஸநிதப மகரிஸ நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிதபா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிவேதா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிதபா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிவேதா
காரிஸ ரிரிரி ரிஸநி ததத (உ) தாபம ககக ஸரிகதபா ரிஸரிக ஸா காரிஸரிதப மபக நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா
ஸாஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ ஸரிகமகரீக ஸாரிதாஸ பாதகா நிவேதா
ஸாஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா.........