பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 மார்ச், 2011

பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...


மீண்டும் S P Bயின் அழகான பாடல் ஒன்று.


திரைப் படம்: அன்னப் பறவை (1980)
இசை: R ராமானுஜம்
இயக்கம்: A பட்டாபிராமன்
நடிப்பு: ஸ்ரீகாந்த், லதா





http://www.divshare.com/download/14450652-7eb



ஹா ஹா ஹா ஹா ம் ம் ம் ம் ஹா ஆ ஆ ஆ
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது..
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...
ஆ ஆ ஆ ஆ ஆ
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது..
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...
இடை என்ன இடையோ கொடி வந்த மலரோ..
அழகே உயிரே பூச்சரமே...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...ஓ ஓ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது..
மூடு பனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது..
ஆ ஆ ஆ ஆ ஆ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது..
மூடு பனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது..
இனியென்ன தடையோ இனிக்கின்ற கனியோ..
வருவாய் தருவேன் இதழ் ரசமே..
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...





துளித் துளித் துளித் துளி மழைத் துளி..

இனிமையான பாடல். வாலிப வயதில் ஒரு வித கிறக்கத்தை உண்டு பண்ணிய பாடல் இந்த பாடல்.

முரட்டு சிவகுமாரை கன்னட மஞ்சுளா வசியம் பண்ணும் பாடல். திருமதி P சுசீலா அவர்களும் அதே இளமை ததும்ப பாடி இருக்கிறார்.

திரைப் படம்: புது வெள்ளம் (1975)
இசை: M B  ஸ்ரீனிவாசன்
இயக்கம்: K விஜயன்
குரல்: P சுசீலா



http://www.divshare.com/download/14370271-997


துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..
ஹா..துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..

இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்..
இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்..
ஆ ஆ ஆ ஆ ஆ
பூமிக்கு தீர்ந்தது தாபம்..
இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்..
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா...
ல ல ல ல லலல...
ம் ம் ம் ம் ம் ம்..

நான் வாழ்வது வேறொரு உலகம்..
அங்கு நீயின்றி எனக்கது நரகம்..
நான் வாழ்வது வேறொரு உலகம்..
அங்கு நீயின்றி எனக்கது நரகம்..
என்னை வாட்டுது வாலிப விரகம்...
என்னை வாட்டுது வாலிப விரகம்...
அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்..
ல ல ல ல ல ல ஆ ஆ ஆ ஆ..
ஹா ஹா ஹா ஹா..
ம் ம் ம் ம் ம்..
துளித் துளித் துளித் துளி மழைத் துளி..

இங்கு சில்லென வீசிடும் காற்று..
என்னை கொல்வது ஏனென்று கேட்டு..
உந்தன் கையெனும் போர்வையை போட்டு..
உந்தன் கையெனும் போர்வையை போட்டு..
கொஞ்சம் கதகதப்பை நீ ஏற்று..
துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..
ஹா..துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
ல ல ல ல ல ல ஆ ஆ ஆ ஆ..
ஹா ஹா ஹா ஹா..
ல ல ல ல ல..
ம் ம் ம் ம் ம்..

புதன், 30 மார்ச், 2011

வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா

ஒரு குடும்பப் பெண்ணின் நல்ல எதிர்ப்பார்ப்புக்களை அழகாக வடித்திருக்கிறார்கள் .


திரைப் படம்: வாழ நினைத்தால் வாழலாம் (1978)
பாடியவர்: S ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்



http://www.divshare.com/download/14335048-844

வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,
உலகமே புகழ்ந்ததே, அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே,

கண்ணனோடு ராதை என்றார், ராமனோடு சீதை என்றார்,
அருகு போல வேர்கள் கண்டோம், மூங்கில் போல சொந்தம் கொண்டோம்,
எனை உனக்கென ஈசன் வைத்தான், இலை மறைவினில் பாசம் வைத்தான்
நமது வீட்டு ராகம், உலகம் எங்கும் பாட்டு
வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,

ஆறு ஒன்று ஓடும்போது கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால் நம்மை போல வாழ வேண்டும்
இது இறைவனின் காதல் கட்டில், ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை, தலைவி என்னும் வீணை
வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,

செவ்வாய், 29 மார்ச், 2011

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா

மீண்டும் ஒரு இளமையான இனிமையான பாடல் எஸ் பி பி யிடமிருந்து. அதே கொஞ்சல், குறும்புகளுடன். இனிய தென்றலே எஸ் பி பி இனிமையாக பாடி வா வா என்று அழைக்கலாமா?


திரைப் படம்: அம்மா பிள்ளை (1990)
இசை: சங்கர் கணேஷ்
பாடல்: வாலி
நடிப்பு: ராம்ஜி, சீதா
இயக்கம்: R C சக்தி



http://www.divshare.com/download/14435325-a83








இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஓ ஓ ஓ ஓ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

தரையில் வந்த சொர்க்கம் எனத் தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும் அது அழகின் ஆலயம்
பவளம் போலும் தேகம் அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும் நல்ல அமுத பாத்திரம்
இளமை என்னும் நாவல் அவள் தான் அவள் தான்
கனவில் அதை நாளும் படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

கருமையான கூந்தல் நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்
அசைந்து மெல்ல அசைந்து என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல் இவள் இடை காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து என்னை அணைக்கச் சொன்னது
நடந்தால் வண்ண பாதம் சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் எந்தன் நெஞ்சம் தவிக்கும் தவிக்கும்
இதை நான் எங்கு சொல்வது

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஓ ஓ ஓ ஓ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

ஞாயிறு, 27 மார்ச், 2011

மலர்கள் நனைந்தன பனியாலே...மலர்கள் நனைந்தன பனியாலே

பாடலாசிரியர்கள் கண்ணதாசனும் வாலியும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஆண் பென் உறவை கொச்சைப் படுத்தாமல் அழகாக கவி நயத்துடன் வெளிப் படுத்துவதில் வல்லவர்கள். அந்த வரிசையில் இந்த பாடல் ஒரு பெண்ணின் முதல் இரவுக்கு பின் அவள் அந்த இரவின் உறவை ரசித்து பாடுவதாக அமைந்தது. குரலும் இசையும் கவிதையுடன் இணைந்து ஒலிக்கின்றது


திரைப் படம்: இதயக் கமலம் (1965)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ரவிசந்திரன். K R விஜயா:
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்: P சுசீலா




http://www.divshare.com/download/14405876-d41






மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே