பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

காற்று வரும் காலம் ஒன்று..நதி ஊற்று வரும்

இனிமையான இரு குரலிசை. இதில் S ஜானகி அவர்களின் குரல் இனிமையோ இனிமை. இசையும் மேல் நாட்டு பாணியில் சிறப்பாக இருக்கிறது.


திரைப் படம்: நானும் மனிதன் தான் (1964)
இசை: G K வெங்கடேஷ்
குரல்கள் P B S, S ஜானகி
இயக்கம்: A S ராவ்
நடிப்பு: C L ஆனந்தன், சந்திரகாந்தா



http://www.divshare.com/download/14543493-477


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
காதல் வரும் ம் ம் ம் பருவம் ஒன்று..
காதல் வரும் பருவம் ஒன்று..
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
வானில் வரும் நிலவும் ஒன்று..
அதில் வளர்ந்து வரும் சுகமும் ஒன்று..
கண்ணிரெண்டின் காட்சி ஒன்று..
கடவுள் அவன் ஆட்சி ஒன்று..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
ஆசையுடன் நெருங்கி வந்து..
அணைத்திடவே துடித்ததுண்டு..
அன்றொரு நாள் அருகில் நின்று..
அழகுடனே சிரித்ததுண்டு..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அன்புக் கரம் தந்து நம்மை அணைத்திட
ஓர் அண்ணா உண்டு..
நம்மை அணைத்திட ஓர் அண்ணா உண்டு..
கருணைக் கரம் தந்து என்னை
காத்திட நீ கண்ணா உண்டு..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
காதல் வரும் பருவம் ஒன்று..
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..

1 கருத்து:

Seenivasan Rengaraju சொன்னது…

இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல்களில் இப் பாடலுமொன்று. ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் உயர்ந்த இசையில் பிபி ஸ்ரீனிவாஸ் எஸ் ஜானகி இணைந்து பாடிய அருமையான,இனிய பாடல். இப்போது கேட்டாலும் மனம் இனிக்கிறது.

கருத்துரையிடுக