பின்பற்றுபவர்கள்

வியாழன், 16 ஜூன், 2011

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

லேசான சோகம் கலந்த நெஞ்சினை கிள்ளி விட்டு சென்ற பாடல்.

திரைப் படம்: புது கவிதை (1982)
இசை: இளையராஜா
குரல்: மலேஷியா வாசுதேவன்
நடிப்பு: ரஜினி, ஜோதி
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வைரமுத்து



http://www.divshare.com/download/15106980-6d5



வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ..
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ..
சோகம் போகும் உன் கண்கள் போதும்..
சின்ன பாதம் நடந்ததால்..
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது..ஹோ..

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே.

என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது..
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டு சென்றது.
பாவை பூவை காலங்கள் காக்கும்..
அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன்..
சிரித்து வாழ்த்துவேன் ஹோ..

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தலைவர் படத்தில் இடம் பிடித்த பாடல்...

என்றும் இனிமை இது மக்கள் மனதில்...
பகிர்வுக்கு நன்றி...

Raashid Ahamed சொன்னது…

மலேசியா வாசுதேவன் - ஒரு மகத்தான திரைப்பாடகன். எதார்த்தமாக எந்த சிரமமும் இல்லாமல் இவர் பாடுவது கேட்க இனிமையானது.

Ram சொன்னது…

Beautiful song forever..
Raja and Rajini rocks...
Maleysia vasudevan gives his melody...

கருத்துரையிடுக