பின்பற்றுபவர்கள்

வியாழன், 11 செப்டம்பர், 2014

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க kumari pennin ullathile kudiyirukka naan

 இந்தப் பாடலில் முதிர்ந்த இந்த நடிகர் நடிகைகளிடம் இருந்த Enthus மற்றும் ஒரு ஈடுபாடு (Dedication) இன்றைய இளம் நடிகர் நடிகைகளிடம் ஏனோ மிஸ்ஸிங். அது அவர்கள் குறையா அல்லது பாடலின் குறையா அல்லது இயக்குனர் குறையா....நம்முடைய குறையா?
பாடலின் ஆரம்ப இசையே நமது கற்பனைக்கு எட்டாத ஒரு இனிமை.கேட்க கேட்க அலுக்காத பாடல்.

படம்: எங்க வீட்டுப் பிள்ளை (1965)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா

இயக்கம்: சாணக்கியா
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
பாடல்: வாலி












குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 
குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் 

வாடகை என்ன தர வேண்டும்

குமரிப் பெண்ணின் கைகளிலே 

காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு 

குடியிருக்க நீ வர வேண்டும்

குமரிப் பெண்ணின் கைகளிலே 

காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு 

குடியிருக்க நீ வர வேண்டும்

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 

குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் 

வாடகை என்ன தர வேண்டும்

ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ


குமரிப் பெண்ணின் கைகளிலே 
காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு 

குடியிருக்க நீ வர வேண்டும்

திங்கள் தங்கையாம் 

தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம் 

தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்


அவள் உன்னைக் கண்டு 

உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக் கண்டு 

உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்


நான் அள்ளிக் கொள்ள 

அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
 
நான் அள்ளிக் கொள்ள
அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்


கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 

குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் 

வாடகை என்ன தர வேண்டும்

பூவை என்பதோர் 

பூவைக் கண்டதும்
தேவை தேவையென்று வருவேன்


இடை மின்னல் கேட்க 

நடை அன்னம் கேட்க
அதை உன்னைக் கேட்டு 

நான் தருவேன்

கொடுத்தாலும் என்ன 

எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது


அந்த அழகே வராமல் 

ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம்

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 

குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் 

வாடகை என்ன தர வேண்டும்

குமரிப் பெண்ணின் கைகளிலே 

காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு 

குடியிருக்க நீ வர வேண்டும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

குட் நைட்
குட் நைட் 

1 கருத்து:

கருத்துரையிடுக