பின்பற்றுபவர்கள்

வியாழன், 25 செப்டம்பர், 2014

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ nee ninaitha neremellaam

இனிமை பாடல். வழக்கமான இளமைக்கால எஸ் பி பியின் குரல். படக் காட்சியுடன் இப்போது.

திரைப் படம்: பெண்ணை நம்புங்கள் (1973)
நடிப்பு: A V M ராஜன், ஜெயந்தி
இசை: V குமார்
இயக்கம்: P V ஸ்ரீநிவாசன்????
பாடல்: தெரியவில்லை



Embed Music - Play Audio -










நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்ச கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்ச கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
முடிவுரையில்லாத காவியமோ
முடிவுரையில்லாத காவியமோ
முதலிரவென்றாலே நாடகமோ

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

மாலை தந்த மன்னன் தோளில்
முத்துப் கிள்ளைத் தொத்திக் கொண்டாட

மாலைமுதல் காலைவரை
மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

மாலை தந்த மன்னன் தோளில்
முத்துப் கிள்ளைத் தொத்திக் கொண்டாட

மாலைமுதல் காலைவரை
மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

அஞ்சாறு சின்னம் தந்து
ஆறாத கன்னம் ரெண்டு

அன்னேரம் என்னாகுமோ
மென்மேலும் புண்ணாகுமோ

நான் நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமே
நான் எது கேட்டாலும் தரவேண்டுமே

வானம் பூமி யாவும் மாறும்
வாழும் காதல் நாளும் மாறாது

தேவனுக்கே தேவியென்று
தெய்வம் தந்த சொந்தம் போகாது

கண்ணோடு உன் வண்ணமே
கொண்டாடும் உன் எண்ணமே

உன்னோடு என் உள்ளமே
பின்னோடும் என்னாளுமே

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக