பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா maamarathu pooveduththu manjam ondru

ஷோபா சந்திரசேகரனின் தம்பி S N சுரேந்தர்க்கு சிபாரிசின் மூலம் சில பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தாலும் பெரும்பாலுமான பாடல்கள் இனிமையாக அமைந்துவிட்டன. அந்த வரிசையில் இந்தப் பாடல்.

திரைப் படம் : ஊமை விழிகள் (1986)
பாடியவர்கள்: B H சசிரேகா, S N சுரேந்தர்
பாடல்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
நடிப்பு: விஜயகாந்த், சரிதா
இயக்கம்: R அரவிந்த்ராஜ்









மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம்
விரைவில் அரங்கேறிடும்
மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா


ஹோஹோஹோஹோஹஓஹோ
ஹொய்யா
ஹோஹோஹோஹோஹஓஹோ
ஹொய்யா

கூந்தலில் பூச்சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது
ஆ ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கூந்தலில் பூச்சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது
கூடவந்தா நாணம் தடுக்குது

கடலோடு பிறந்தாலும்
இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும்
இந்த மனமும் ஏங்குது
மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா

சித்திர பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்து விரல் அணைக்கத்தானம்மா

முத்து ரதம் எனக்குத் தானம்மா
சித்திர பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்து விரல் அணைக்கத்தானம்மா
முத்து ரதம் எனக்குத்தானம்மா

உனக்காக உயிர் வாழ
இந்த பிறவியெடுத்தது
உயிரோடு உயிரான
இந்த உறவு நிலைத்தது

மாமரத்து பூ எடுத்து
மங்கை என்னை தேடிவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி ஓடி வா
கண்ணா புது நாடகம்
விரைவில் அரங்கேறட்டும்

மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடலாம்
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடலாம்

1 கருத்து:

பால கணேஷ் சொன்னது…

மனோஜ் கியானின் இசை கொஞ்சம் இ ந்திப் படங்களின் சாயலில் அமைந்திருந்தாலும் கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தன. இதுவும் அப்படியே.... மிக ரசிக்க வைத்த பாடல்.

கருத்துரையிடுக