பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு ven mugilE konsa neram

ஒரு காதல் பெண்ணின் ஆற்றாமையை அழகாக மிக மென்மையாகவும் சாதாரண வார்த்தைகளாலும் சொல்லக் கூடிய பக்குவம் கொண்டவர் கவிஞர் ஆத்மநாதன். மிக சொற்ப பாடல்களே எழுதியிருந்தாலும் அனைத்தும் சிறப்பான பாடல்கள். அந்த ஆற்றாமையை குரலில் பிரமாதமாக வடித்திருக்கிறார் சுசீலா அம்மா அவர்கள்.

திரைப் படம்: விக்ரமாதித்தன் (1962)
இசை: S ராஜேஸ்வரராவ்
பாடியவர்: P சுசீலா
இயக்கம்: T R ரகுநாத்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி
பாடல்: ஆத்மநாதன்












வெண் முகிலே

வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு



சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு

இல்லை என்னையேனும் அங்கழைத்து செல்லு

சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு

இல்லை என்னையேனும் அங்கழைத்து செல்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

வெண் முகிலே



உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு

உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு

உயிர் அங்கே உடல் இங்கே உயிர் அங்கே உடல் இங்கே

உள்ளதென்றும் சொல்லு

உருவிழந்து மகிழ்விழந்து கருகுவதாய் சொல்லு

உருவிழந்து மகிழ்விழந்து கருகுவதாய் சொல்லு

உணர்விழந்து போகுமுன்னே ஓடி வரவும் சொல்லு

ஓடி வரவும் சொல்லு



வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

வெண் முகிலே



ஆடும் மயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு

ஆடும் மயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு

அழகு நிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு

வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு

நான் வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு

வருவதற்குள் நீ விரைந்து வந்து பதிலும் சொல்லு

வந்து பதிலும் சொல்லு



வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

வெண் முகிலே

1 கருத்து:

ravi சொன்னது…

hai
http://sports.dinamalar.com/2014/09/1411181811/AsianGames50meterPistolJituRaiIndia.html

கருத்துரையிடுக