பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

ஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

 S P B மற்றும் P சுசீலா குரல்களில் மிக அமைதியான ஒரு மெல்லிசை பாடல்

படம்: தொட்டதெல்லாம் பொண்ணாகும் (1975)

இசை: விஜயபாஸ்கர்
இயக்கம்: R விட்டல்
நடிப்பு: ஜெய்சங்கர், ஜெயசித்ரா 



http://www.divshare.com/download/13198157-d0f






ஆஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஒ

ஓஹோ ஓ ஓ ஓ ஓ

ஆவணி மலரே ஐப்பசி மழையே

கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

ஆவணி மலரே ஐப்பசி மழையே

கார்த்திகை விளக்கின் தனி ஒளியே



கோவில் குங்குமம் குறு நகைச் சங்கமம்

பூவின் இதழ் தொடும் பொன் மேகமே

மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம்

தூது கொண்டோடும் புது ராகமே

உனக்கொரு மனம் உண்டு

எனக்கதில் இடம் உண்டு

மறக்கவும் முடியாத பந்தம்

ஓ ஓ ஓ ஒ ஒ ஓ ஓ ஓ ஒ ஒ

ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

அழகு வழியும் இளமை வெண்ணிலா

உருவம் எடுத்த பருவம் அல்லவா

ஆவணி மலரே ஐப்பசி மழையே

கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

கன்னி இடையினில் மின்னும் மேகலை

என்னை அழைத்தது என்ன சொல்ல

காதல் மன்னனை தேடும் கண்களை

பேசும் சங்கதி என்ன சொல்ல

பனி தொடும் பாதமும்

மலர் தொடும் கூந்தலும்

என்னை தொடும் ஆனந்தமும்

என்ன சொல்ல

ஓ ஓ ஓ ஒ ஒ

ஓ ஓ ஓ ஒ ஒ

உடலும் மனது உனது சொந்தமே

இரவும் பகலும் மலரும் மஞ்சமே

ஆவணி மலரே

ஐப்பசி மழையே

கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

1 கருத்து:

கரோக்கி இசை அலைகள் சொன்னது…

ஆஹா அஹா எத்தனை இனிய பாடல் சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல். எப்போதாவது விவித பாரதியில் போடுவார்கள். எனக்கு பிடித்த பாடல்களில் டாப்10 வரிசையில் இதுவே முதல் பாடல்

கருத்துரையிடுக