பின்பற்றுபவர்கள்

சனி, 29 ஜனவரி, 2011

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

 இந்த பாடல் இளையராஜாவின் Master piece என்றே சொல்லலாம். சரியான வேகத்தில் தேவையான இசைகருவிகளுடன் மிகச் சரியான குரல்களை சேர்த்து பாடலை மிக அழகாக பின்னி இருக்கிறார். சரணம் வழக்கம் போல மயிலே குயிலே என்றிருந்தாலும் பல்லவி நன்றாக இருக்கிறது. இடையில் சந்தங்களும் அருமை. மொத்தத்தில் இது போல பாடல்கள் கேட்க சுகம்தான்.


திரை படம்: ஒருவர் வாழும் ஆலயம் (1988)
இயக்கம்: ஷண்முக ப்ரியன்
பாடல்: பொன்னடியான்
குரல்கள்: மலேஷிய வாசுதேவன், சித்ரா
நடிப்பு: சிவகுமார், பிரபு, அம்பிகா,




http://www.divshare.com/download/13905282-ca8

 மலையோரம்...விளையாடும்...

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

ஆ அப்புறம்..

விளையாட்டச் சொல்லித்தந்த

ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே


பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத்தானே சேரனும் நீயே
ஆ ஆ ஆ ஆ...

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
தந்தனதன தான ந தானன
தகிட தகிடததோம் தடததோம் தக்கதிம்மி தக்கதிமி தக்க ஜிமி தக்க ஜிமி
தந்தனதன தான ந தானன
தக்க திமி தக்கதிமி தரிகிடதோம் தரிகிடதோம் தகிட தகிட தகிட

காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே

ஆடிடும் பூவும் ஆசையைத்தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
ஆ ஆ ஆ ஆ...

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

உண்மை தான். மயிலே, குயிலே, எசப்பாட்டு. கண்ணுமணி, பொன்னுமணி போன்ற வார்த்தைகளை திரும்ப, திரும்ப பல பாடல்களில் உபயோப்படுத்தியதாலேயே, இசைஞானியின் நிறைய அற்புதமான பாடல்கள், சாதாரணமான பாடல்களாக போய்விட்டன.

சுதர்ஷன் சொன்னது…

நல்ல பாடல் ..பகிர்வுக்கு நன்றி :)

கருத்துரையிடுக