பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சொல்லி தரவா சொல்லி தரவா இடை மூடும் மேலாடை தடை அல்லவா

இன்று ஒரு வித்தியாசமான இசையில், அழகான வரிகளுடன் ஒரு பாடல். SPBயும் ஒருவித கிறக்கத்துடன் பிரமாதமாக B S சசிரேகாவுடன் இணைந்து பாடியிருக்கிறார்,

அன்பர்களுக்கும் இந்த பாடல் பிடித்து போகும் என்று நம்புகிறேன்.

திரைப் படம்: உழவன் மகன் (1987)
இசை: மனோஜ் கியான்
மடிப்பு: விஜயகாந்த், ராதிகா



http://www.divshare.com/download/13934742-24a


ம் ம் ம் ம்
ஒல்லி தரவா
சொல்லி தரவா சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா
சொல்லி தரவா சொல்லி தரவா

சில்லென்று காற்றே நீ வழி போகும் நேரம்
நில்லென்று நான் கூற ஏன் இந்த நாணம்

சொல்லி தெரியாத கலை இன்று கண்டேன்
சொல்ல தெரியாதா சிலையாகி நின்றேன்

கண்மணி உந்தன் கருவிழி பேசும் கதைகள் புரிகிறது
வெண்பனி தூவும் விடியல் வரையில் அதுவும் தொடர்கிறது

சொல்லி தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம்

சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை துணை அல்லவா
துணை சேர என் நாணம் தடை அல்லவா
தடை சொல்லும் பெண்ணுக்கு வழி சொல்லவா
வழி சொல்லும் உன் பாடல் புதிதல்லவா

சொல்லி தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம்

சொல்லி தரவா

இரவென்றும் பகலென்றும் அறியாத உறவு
யார் இங்கு தந்தாலும் சுகம் தானே வரவு

இன்னும் ஏன் இங்கு தடை மீற தயக்கம்
இல்லை வேரெங்கும் இடை மீறும் மயக்கம்

அச்சம் நாணம் அறிந்தது புரிந்தது
காதல் விளையாட்டு
மிச்சம் மீதி இருந்ததும் மறைந்தது
காமம் சொல் கேட்டு


சொல்லி தரவா

சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா

ட ட ட டா
சொல்லி தரவா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக