பின்பற்றுபவர்கள்

புதன், 23 மே, 2012

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி பார் என்றது


சமீபத்தில் கேட்டதில் ஒரு அழகான பாடல். இந்த பெண் குரல் என்னை மிகவும் கவர்ந்தது.

திரைப் படம்: வசீகரா (2003)
இயக்கம்: K செல்வ பாரதி
இசை: S A ராஜ்குமார்
பாடல்: பா விஜய் மற்றும் நா முத்து குமார் என்கிறார்கள்.
குரல்கள்: ஸ்ரீனிவாசன், மகாலக்ஷ்மி அய்யர் 
நடிப்பு: விஜய், ஸ்னேகா 





நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குதான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்

நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்

கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில் 
உன் முத்தம்தானே பற்றிக் கொண்ட முதல் தீ 
கிள்ளும் போது எந்தன் கையில் கிடைத்த 
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சரணம்

அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை 
காலமுல்ல காலம் வரை
நீதான் எந்தன் முதல் குழந்தை
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறு முறை பார் என்றது

காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பரவும்
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தட்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்
காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும்
அது ஊசி ஒன்றைஉள்ளுக்குள்ளே அனுப்பும் 
இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே 
தூசி போல நாம் அலைவோம்

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறு முறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குதான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக