பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நிலவோடு வான் முகில்

கணீர் குரலோனுடன் A P கோமளா இணைந்து பாடிய அருமையானப் பாடல். எம் ஜி யாரும் பத்மினியும் படத்தில் இனிமையான காட்சி. மனம் குளிரும் இசையும் பாடல் வரிகளும்.

திரைப் படம்: ராஜ ராஜன் (1957)
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், A P கோமளா
இசை: K V மகாதேவன்
பாடல் வரிகள்: Ku. Sa கிருஷ்ண மூர்த்தி
இயக்கம்: T V சுந்தரம்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி


http://asoktamil.opendrive.com/files/Nl8xODA2OTQ3N19LR0JGeF82Njk3/Nilavodu%20Vaan%20mugil.mp3








நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே

எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்பக் கதை பேசுதே
இனிதாகவே இன்பக் கதை பேசுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே

புதுப் பாதைதனை காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
புதுப் பாதைதனை காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா
மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
என்னாளும் பிரியாத நிலை காணுவோம்
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
என்னாளும் பிரியாத நிலை காணுவோம்

ஓ ஓ ஓ

நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக