பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

விழிகளில் கோடி அபிநயம்

திருமதி P சுசீலா அவர்களுக்கு பிறகு K S சித்ரா அவர்கள் S P B யுடன் இணைந்தாலே பாடல் சுகம்தான். அதிலும் இசையமைப்பாளர் V S நரசிம்மன் ஒரு மௌனமான வெற்றியாளர். அவருடன் இவர்கள் இணைந்தால்.... விருந்துதான். ஒரு காலத்தில் அழகான அம்பிகா.

திரைப் படம்: கண் சிமிட்டும் நேரம் (1988)
இயக்கம்: கலைவாணன் கண்ணதாசன்
நடிப்பு: கார்த்திக், அம்பிகா
இசை: V S நரசிம்மன்
குரல்கள்: S P B, K S சித்ரா


http://asoktamil.opendrive.com/files/Nl8xNzQ0NDM3OF9RTnRsa19jNjU3/VizhigalilKodiAbinayam-S.P.B.Chitra.mp3





ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிருவிழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்

இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே
வந்தால் என்ன
என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்
இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே
வந்தால் என்ன
என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்

உறவுக்கு ஒன்றான காலம் இது
உரிமைக்கு நான் தந்த பாலம் இது
கண்ணில்
ஒரு மின்னல்
புது கவிதைகள் படிக்கட்டும்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிருவிழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்

மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே
சொன்னால் என்ன
பொன்னான என் வாழ்வில்
நன்னாள் இதே
மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே
சொன்னால் என்ன
பொன்னான என் வாழ்வில்
நன்னாள் இதே

ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
இன்பம் இனி என்றும்
புது சுரங்களும் பிறக்கட்டும்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிருவிழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

விழிகளில் கோடி அபிநயம்

கருத்துரையிடுக