பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 4 மே, 2010

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்

திருமதி P.சுசிலா மற்றும் TMS பாடிய மிக இனிமையான பாடல். கேட்டு, பாடி மகிழுங்கள்.

ஏழை பங்காளன் (1963)
இயக்கம்:கே. ஸங்கர்

இசை: கெ. வீ. மகாதேவன்

நடிப்பு: ஜெமினி கணேசன், ராகிணி
 

 
http://www.divshare.com/download/11266019-f8a


 
மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..

பகலை முழு இரவாய் எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்...
மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..
பகலை முழு இரவாய் எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்...
மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..
நீராடும் இன்பம் நிழலாடும்... நிழலாடும் இளமை சதிராடும்
நீராடும் இன்பம் நிழலாடும்... நிழலாடும் இளமை சதிராடும்...
சதிராடும் எண்ணம் உறவாடும்...சதிராடும் எண்ணம் உறவாடும்...உறவாடும் கண்கள் உறங்காது...உறங்காது...

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..

புனலாடும் மலரில் வண்டாடும்..வண்டாடும் இன்ப பண்பாடும்...
புனலாடும் மலரில் வண்டாடும்..வண்டாடும் இன்ப பண்பாடும்...
பண்பாடும் நெஞ்சில் கணலாடும்..பண்பாடும் நெஞ்சில் கணலாடும்..
கணலாடும் கண்கள் உறங்காது...உறங்காது...
மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..
கண்ணோடும் ஆசை முன்னோடும்...முன்னோடும் கால்கள் தள்ளாடும்...
கண்ணோடும் ஆசை முன்னோடும்...முன்னோடும் கால்கள் தள்ளாடும்...
தள்ளாடும் உள்ளம் துணை நாடும்...தள்ளாடும் உள்ளம் துணை நாடும்...
துணை நாடும் கண்கள் உறங்காது... உறங்காது...

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..

பகலை முழு இரவாய் எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்...

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்..

சனி, 1 மே, 2010

முகத்தை பார்த்ததில்லை...அன்பு மொழியை கேட்டதில்லை

மே மாதத்தின் முதல் பாடலாக MGR மற்றும் சரோஜா தேவி, ஜெயலலிதா நடித்து, கே.வி.மாகதேவன் இசையமைப்பில் 1967 இல் வெளிவந்த இந்த பாடலை கேட்கலாம். இது TMS, P.சுசிலா குரல்களில் ஒலிக்கும் இனிமையான பாடல்.

திரைப் படம்: அரச கட்டளை (1967)
இயக்கம்: M.G.சக்ரபாணி
இசை: K.V. மகாதேவன்
நடிப்பு: M.G.R, ஜெயலலிதா, சரோஜா தேவி




http://www.divshare.com/download/11230035-016



முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

சுகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

சுகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

பாதி இரவில் தூக்கம் விழிக்கும்
பாவம் அனல்போல் மேனி கொதிக்கும்
பாதி இரவில் தூக்கம் விழிக்கும்
பாவம் அனல்போல் மேனி கொதிக்கும்

அருகில் இருக்கும் துணையை எழுப்பும்
உறங்கும் தலைவன் உடலை திருப்பும்
அருகில் இருக்கும் துணையை எழுப்பும்
உறங்கும் தலைவன் உடலை திருப்பும்

முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்
எரியும் விளக்கின் திரியை குறைக்கும்
திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்
எரியும் விளக்கின் திரியை குறைக்கும்

மெல்ல நெருங்கும் சொல்ல தொடங்கும்
முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்
மெல்ல நெருங்கும் சொல்ல தொடங்கும்
முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்

சுகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

மயக்கம் கலையும் மௌனம் நிலவும்
குளிர்ந்த மேனி காற்றில் உலரும்
மயக்கம் கலையும் மௌனம் நிலவும்
குளிர்ந்த மேனி காற்றில் உலரும்

களைப்பும் தோன்றும் கண்கள் மூடும்
காலை விடிந்தால் நீரில் ஆடும்
களைப்பும் தோன்றும் கண்கள் மூடும்
காலை விடிந்தால் நீரில் ஆடும்

முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன