பின்பற்றுபவர்கள்

மனோபாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனோபாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 செப்டம்பர், 2012

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது


அமைதியான சூழலில் கேட்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் வரிகளை விழுங்காத இசை. P சுசீலாவின் தேன் போன்ற குரல் வளமை இன்னமும்.

திரைப் படம் : என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான் (1989)
குரல் :  P சுசீலா
பாடல் : மூ.மேத்தா
இசை : இளையராஜா
நடிப்பு : விஜயகாந்த்,  சுகாசினி
இயக்கம்: மனோபாலா


மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல

மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

புதன், 1 ஆகஸ்ட், 2012

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

வழக்கமான இனிய ஜெயசந்திரன் குரல் தேனொழுகும் சுனந்தா குரலுடன். பாடலின் ஒரு சில வரிகளில் ஒரு vibration இருப்பதை கவனியுங்கள். இனிமை.


திரைப் படம்:என் புருசந்தான் எனக்கு மட்டும்தான் (1989)
இயக்கம்: மனோபாலா
நடிப்பு: விஜயகாந்த், சுஹாஸினி, ரேகா
இசை: இளையராஜா







பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ஓம் மாங்கல்யம் தந்துனா நென

மமஜீவன ஹெதுனா

கந்தெ பத்ரானி ஷுபகே

த்வம் தீய ஷரதம் ஷுபம்

மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்

கைதீண்டினால்தான் கல்யாணி பாடும்

எழுதாத புது இலக்கியம் உயிர் காதலில் விளையும்

இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்

மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே

பாயை விரித்திடும் பாட்டு படித்திடும் கான கருங்குயிலே

ஆசை குளத்தினில் நீந்தி குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாடெழுதும் வண்ணப் புறா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி

நான் கொண்ட கண்கள் நாளாச்சி தூங்கி

நிறுத்தாமல் மலர் கணைகளை விடும் வாலிபம் இதுதான்

அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்

பிள்ளை பிறந்ததும் பள்ளியறைக் கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே

கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே

மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா